Wednesday, January 5, 2011

மனதின் தந்திரம்

அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு.ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை.அது இயல்பு தானே.எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும் அதன் மீது ஆசை எழுவது இயல்பு.மனம் அப்படித்தான் செயல் படும்.மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு.அது உங்களைத் தூண்டிவிடும்.பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்.
எப்போது எது தடுக்கப் பட்டாலும் அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்.அது ஒரு அழைப்பு போல.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது.அங்கே வேறு யாரும் இல்லை.ஆனால் கதை என்ன சொல்கிறது?சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது.இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்.
சாத்தான் ஒரு பலிகடா தான்.அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு.சாத்தான் தூண்டினான்;மயக்கி ஏமாற்றி விட்டான் என்று சொல்லி விட்டால்,நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா?ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ,தடுக்கப் பட்டதனால்தான்.மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது.ஆனால் கதை அழகானது.
மனமே சாத்தான்.தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு.மனமே பாம்பு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment