Tuesday, January 25, 2011

தலை சுத்தும் படங்கள்??























--
Regards,
Yoganandhan Ganesan


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, January 19, 2011

பல்வலி

தேமுஜின் என்பவனுக்குக் கடுமையான பல்வலி.பல்லைத்  தான் பிடுங்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லி விட்டார்.உடனே அவன் குதிரை மீதேறி பக்கத்திலுள்ள காட்டிற்குள் சென்றான்.நீண்ட நேரம் பயணம் செய்ததில் பல்வலி கொஞ்சம் குறைந்திருந்தது.ஆனால் இப்போது அவனுக்குக் கடுமையான  பசி.சாப்பிட  ஏதாவது கிடைக்குமா என்று தேடி காட்டினுள் அலைந்தான்.அப்பகுதியின் ஆளுநர் வேட்டைக்காக வந்து அங்கு ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தார்.அவருடைய ஆட்கள் தேமுஜின்னைக் கண்டு,சந்தேகத்தில் கைது செய்து ஆளுநரிடம் கொண்டு வந்தனர்.தேமுஜின்,தான் ஒரு  தவறும் செய்யாதவன் என்று கூறியும் ஆளுநர் ஏற்றுக் கொள்ள வில்லை.''நீ தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது'' என்று கூறிவிட்டார்.தேமுஜின் சொன்னான்,'உங்களுக்கு விருப்பப்பட்ட தண்டனையைக் கொடுங்கள்.ஆனால் என்னைச் சாப்பிட மட்டும் வைத்து விடாதீர்கள்.ஏதாவது சாப்பிட்டால் நான் இறந்து விடுவேன்.'''சாப்பிடுவதனால் யாராவது இறப்பார்களா?''என்று ஆளுநர் கேட்டார்.தன்னுடைய அழுகிய பல்லைக் காட்டி தேமுஜின் சொன்னான்,'ஒரு மந்திரவாதி எனக்கு இந்தப் பல்லைக் கட்டி விட்டார்.இது அழுகிய பல் போல தோற்றமளித்தாலும் இது இருப்பதால் எனக்குப் பசியே எடுக்காது.அதை மீறி எதையாவது நான் சாப்பிட்டால்,அதுவும் குறிப்பாக,ஆட்டிறைச்சி,இனிப்புகள்,பழ  ரசங்கள்,ஆகியவற்றை சாப்பிட்டால் என் வயிறு வெடித்துவிடும்.'உடனே ஆளுநர்,''இதை நான் உண்மையாவென சோதித்துப் பார்க்க வேண்டும்,''என்று கூறி,கைதிக்கு  சிறப்பான உணவு வகைகளை அளித்திட  ஆணையிட்டார்.வகைவகையான உணவுகள் பரிமாறப்பட்டன.''சாப்பிடு,''என்று கட்டளையிட்டார் ஆளுநர்.சாப்பிடக்கூடாது என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு மிக கவனமாக முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் பின்னர் வேகமாகவும் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடன் பாசாங்கு செய்து இறந்தவன் போல கீழே விழுந்தான்.''வயிறு வெடித்து இறந்து விட்டான்,''என்று ஆளுநர் நினைத்தார்.உடனே அவர்,தன்னுடைய பல் மருத்துவரை வரவழைத்து,அந்தப் பல்லை பிடுங்கச் செய்தார்.மருத்துவர் ,'இது ஒரு அழுகிய பல்தான்.இதில் வேறு விசேசம் ஏதும் இல்லை.'என்றார்.ஆளுநரோ தன ஏமாற்றத்தை வெளிக்காட்டாது,,''அதை சுத்தம் செய்து வையுங்கள் எதற்கும் உபயோகப்படும்,''என்று சொல்லிவிட்டு வீரர்களைப் பார்த்து,''இவனை மலைச்சரிவில்  உருட்டி விடுங்கள்.''என்றார்.வீர்கள் அவனைத்தூக்கி எரியும் தருணத்தில் அவன் திமிறிக் குதித்து தன குதிரையின் மீதேறிவிரைந்து தப்பித்தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எதிர்மறை எண்ணம்

'நேர்மறையான சிந்தனைகளின் அதிசயக்கத்தக்க முடிவுகள்'என்ற தலைப்பில் டாக்டர் பீலே என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.அதில் அவர் சொல்கிறார்,''நம் வாழ் நாள் முழுவதும்  நமக்குத் தேவையில்லாத பயங்களைக் கொண்டுள்ளோம்.முக்கியமில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.ஒவ்வொருவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அஞ்சுகிறோம்.ஆனால் உண்மையில் யாரும் அப்படிக் கவனிப்பதில்லை.''ஒரு இளைஞன் ஒரு நாள் பீலேயிடம் சொன்னான்,'என்னுடைய மூக்கு நீளமாக இருப்பதால் யாருக்கும் என்னைப் பிடிப்பதில்லை.'''அவ்வாறு உன் மூக்கைக் கண்டுஉன்னை வெறுப்பவர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட முடியுமா?''என்று பீலே அவனிடம் கேட்டார்.இளைஞன் ஆறு பேரின் பெயர்களைத் தெரிவித்தான்.டாக்டர் பீலே அந்த ஆறு பேருக்கும் தனித்தனியே தொலை பேசி மூலம் பேசினார்.இளைஞனிடம்  வித்யாசமான,குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள் என்பது பற்றி விசாரித்தார்.ஒருவன் சொன்னான்,'அவன் நட்பில் சிறந்தவன்.'அடுத்தவன் சொன்னான்,'அவன் கணக்கில் புலி.' ஒரு பெண் சொன்னாள்,'அவன் பிரமாதமாக நடனம்ஆடுவான்.'யாருமே  அவனுடைய மூக்கைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.டாக்டர் தன்னுடைய விசாரணை முடிவை அந்த இளைஞனிடம் இவ்வாறு தெரிவித்தார்,''உன்னுடைய மூக்கைப் பற்றி எதிர் மறையான எண்ணம் கொண்டிருக்கும் ஒரே நபர் நீ தான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீயா,நானா?

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
முதியவர் : லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு.
மனைவி : அதை  அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி.
முதியவர் :சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு.
மனைவி :ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?
முதியவர்  : சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு.
மனைவி :உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக்  கொடுத்து விடுவோம்.
முதியவர் :(கோபத்துடன்)இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்?நீயா,நானா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கதர்

'கதர்' என்பதுஒரு அரபு மொழிச்சொல்.அதற்கு கெளரவம் என்று பொருள்.சுதந்திரப் போராட்ட வீரரான முகம்மது அலி கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை காந்தியடிகளுக்குப் போர்த்தி,''இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்''என்றார்.அதன் பின் தான் இத்துணிக்கு  கதர் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏன்வருகிறது?

கொட்டாவி,ஏப்பம்,விக்கல்,பொறை,இருமல் இவை ஏன் வருகின்றன?
இவை எல்லாமே நம் உடல் செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகளே.
கொட்டாவி: நமக்குக் களைப்பு ஏற்படும் போதும்,மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல்.
ஏப்பம் : நாம் உண்ட உணவில் அதிகப்படியான புரதப் பொருட்கள் இருந்தாலும்,புளிப்புப் பொருட்கள் இருந்தாலும் இவற்றைச் சிதைக்கும் பொழுது ஏற்படும் வாயுவை வெளியேற்றும் ஒரு செயல்.
விக்கல் :உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல் பட முடியாத போது ஏற்படும் ஒரு சுவாசச் சிக்கல்.
பொறை :உணவுப் பாதையில் செல்ல வேண்டிய உணவு சுவாசப் பாதையில் நுழைந்து பாதை மாறுவதால் ஏற்படும் விளைவு.
இருமல் : சுவாசப் பாதையில் ஏற்படும் ஒரு வித உறுத்தல் இருமலாக வெளி வருகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யாரிடம் முறையிட?

ராமபிரான் வனவாசத்தின் போது காட்டில் சென்று கொண்டிருக்கையில் தனது அம்பையும் வில்லையும் தரையில் நட்டுவிட்டு அருகிலிருந்தகுளத்தில் நீர்  அருந்துவதற்காக இறங்கினார்.மீண்டும் அவர் கரை ஏறி வந்த போது தனது வில் ஒரு தவளையை ஊடுருவிச்சென்றுதுளைத்திருந்ததைப் பார்த்தார்.தவளையின் உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது.இதைக்  கண்ட ராமபிரான் மிகவும்வருந்தினார்.அவர் தவளையிடம்,''நீ ஏதாவது சப்தம் செய்திருக்கக் கூடாதா?அப்போது நீ இங்கிருப்பது எனக்குத் தெரிந்திருக்கும்.உனக்கு இந்தக் கதி வந்திருக்காதே,''என்று கேட்டார்.அதற்குத் தவளை பதில் சொன்னது,'ராமா,எனக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது,ராமா,என்னைக் காப்பாற்று!என்று சொல்லி உன்னைச் சரணடைவேன்.ஆனால் நீயே இப்போது என்னைக் கொல்லும்  போது நான் யாரிடம் சொல்லி முறையிடுவேன்?'
                                             பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தலை சுற்றுவது ஏன்?

நாம் வேகமாக சுழன்றாடினால் தலை சுற்றுவது போல் தோன்றுவதேன்?
நம்முடைய காதுகளில் ஒலியின் அதிர்வை அறியும் அங்கவடி எலும்புகள் காது சிப்பியிலுள்ள திரவத்தில் மிதக்கின்றன.இந்தத் திரவப் பகுதியில் ஏற்படும் மெல்லிய ஒலி அலைகளே நாம் செய்திகளைக் கேட்க உதவுகிறது. நாம் வேகமாகச் சுழன்றாடும் போது நம் காதுக்குள் மேலே குறிப்பிட்ட திரவப் பகுதியில் சீரற்ற அலைகள் ஏற்படுகின்றன.இந்த உணர்வுகள் மூளையை அடைந்து நமக்கு ஒரு குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.இதனால் தான் ஒரு சில நொடிகள் நம் தலை சுழலுவது போலவும் நம் உடல் சம நிலை பெறாமல் இருப்பது போலவும் தோன்றுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஞாபக சக்தி

ஒரு கிழவன்,தன மரணப் படுக்கையில்,தன மனைவியை அழைத்து,''நான் இறப்பதற்கு முன் சிலவற்றை உன்னிடம் சொல்ல வேண்டும்.அதாவது பக்கத்தில் உள்ள தையல்காரன் நமக்கு பத்தாயிரம் ரூபாயும்,பக்கத்து வீட்டுக்காரர் ஐயாயிரம் ரூபாயும்,என் தம்பி இருபதாயிரம் ரூபாயும் தர வேண்டும்.இவைகளை மறந்திடாமல் ஞாபகமாகக் கேட்டு வாங்கு.''என்றான்.இதைக் கேட்ட அவன் மனைவி மிக மகிழ்ச்சியுடன் ,தன பிள்ளைகளிடம் கூறினாள்,'உங்கள் அப்பா மிக நல்ல மனிதர்.அற்புதமானவர். சாகும் தருவாயிலும் அவரது ஞாபக சக்தி எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்று பாருங்கள்.'அந்தக் கிழவன் மீண்டும் பேசினான்,''நான் ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டேன்.நம்முடைய வீட்டு சொந்தக்காரருக்கு நான் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.''இதைக் கேட்ட மனைவி,'ஒ, சாகப்போற நேரத்தில் இவரது மன நிலை சரியாய் இல்லை.ஏதேதோ உளறுகிறார்.'என்று கத்தினாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குற்ற உணர்வு

குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை  அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன.ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம்.மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்.
தவுறு செய்வது மனித இயல்பு.அதே போல் மன்னிப்பதும் மனித இயல்பு தான்.நீங்கள் உங்களையே முதலில் மன்னித்துக் கொள்ள வேண்டும்.அப்படி உங்களையே உங்களுக்கு மன்னிக்கத் தெரியாவிட்டால்,பிறரை உங்களால் எப்படி மன்னிக்க முடியும்?
உமர்கயாம் என்ற சுபி புலவர்,தன்னுடைய 'ரூபையாத்'என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தில்,''நான் குடிக்க விரும்புகிறேன்,ஆட விரும்புகிறேன்,பாட விரும்புகிறேன்.நீங்கள் கருதும்  சகல  பாவங்களையும் செய்ய விரும்புகிறேன்.ஏனெனில் கடவுள் கருணை உள்ளவர்.அவர் என்னை நிச்சயம் மன்னிப்பார்.என்னுடைய பாவச் செயல்களை அவருடைய கருணையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.''என்கிறார்.உமர்கயாம் ஞானம் அடைந்தவர்.மிகவும் தெளிவான ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்.அவர் சொன்னதில் உள்ள முக்கிய கருத்து,''நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்''என்பதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அப்பா எங்கே?

'உங்கப்பா எங்கே?'என்று ஒரு பெரியவர் கேட்க,பெண் பதில்
 சொன்னாள்,''வீட்டில் நிறைய பிணம் சேர்ந்து விட்டதால் அதை விற்கப் போயிருக்கிறார்.''பெரியவர் கேட்டார்,'ஓஹோ,கருவாடு விற்கப் போயிருக்கிறாரா?'
அடுத்து நின்ற பெண்ணிடம் அவளுடைய அப்பா பற்றி விசாரிக்க அவள் சொன்னாள்,''எங்கப்பா சுட்ட பிணத்தை மீண்டும் சுட சுட்ட பிணத்தைஎல்லாம் எடுத்துக் கொண்டு விற்கப் போயிருக்கிறார்.'' பெரியவரும்,'அப்படியா,அடுப்புக்கரி விற்கப் போயிருக்கிறாரா?சரி,நான் பிறகு வருகிறேன்.'என்று கூறிச் சென்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அழகான பெருக்கல்

கீழேதரப்பட்டுள்ள பெருக்கல்களில் ஒருசிறப்பம்சம்உள்ளது.விடையில்வரும் எண்கள் எல்லாம் ஒரே எண்கள் திரும்பவும் வருகின்றன.அதுவும் வரிசையாக வருகின்றன.(same figures in the same order starting in a different place as if written round the edge of a circle)
142857 X2= 285714
142857 X3 =428571
142857X4 =571428
142857 X5 =714285
142857 X6=857142

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாங்க சிரிக்கலாம்

'எப்படிங்க வாழ்க்கை?'
''மாமூல் வாழ்க்கைதானுங்க.''
'அப்போ சம்பளம் அப்படியே மிச்சம்னு சொல்லுங்க.'
**********
'முட்டைக்கு நடுவில என்ன இருக்கு?'
''மஞ்சள் கரு தான்.''
'இல்லை,ட் என்னும் எழுத்து தான்.'
**********
''ஒரு ஐம்பது பைசா காணாமல் போனதற்காக இருட்டில் தேடிக்கிட்டு இருக்காயே,காலையில் தேடக்கூடாதா?'
''அட,காலையிலிருந்து தான் தேடிக்கிட்டிருக்கேன்.''
**********
புலவர்: உங்கள் கடையிலே ரவா வாங்க வேண்டும் என்பது என் பேரவா.நான் வரவா?இல்லை என் பையனை அனுப்பித்தரவா?
கடைக்காரர்: ஒரே தொந்தரவா  போச்சு.
**********
தாய்: மகனே,உன்னை உளுந்தும் பெருங்காயமும் வாங்கக் கடைக்கு அனுப்பினால் நீ கீழே விழுந்து பெருங்காயத்துடன்    வந்திருக்கிறாயே?
**********
''புளிரசம் வைக்கவா,மிளகு ரசம் வைக்கவா என்பதில் உனக்கும் உன் மாமிக்கும் ஏற்பட்ட சண்டை என்னாச்சு?''
'அக்கம் பக்கத்தில வந்து சமரசம் செஞ்சாங்க.'
**********
''இங்கு சப்தம் செய்யாதீர்கள்''என்று ஒரு அரசு அலுவகத்தில்  ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.குறும்புக்காரர் ஒருவர் அதன் பக்கத்திலேயே,'இல்லையென்றால் நாங்கள் எழுந்து விடுவோம்.'என்றுஎழுதி வைத்தார்.
**********
காதல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்ட தந்தை கேட்டார்,''அவனிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?''மகள் ஆச்சரியத்துடன் கேட்டாள்,''இதே கேள்வியைத்தான் அப்பா அவரும் கேட்டார்.'
**********
''கண்ணே, என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காகத்தான் என்னைக் காதலிக்கிறாயா?''
'இல்லை,என்னிடம் பணம் இல்லை என்பதற்காகத்தான் காதலிக்கிறேன்.'
**********
விபத்தில்  நினைவிழந்த கணவன்,நினைவு வந்ததும் கேட்டான்,''நான் சொர்க்கத்தில் இருக்கிறேனா?''மனைவி சொன்னாள்,'நான் இங்கே இருக்கிறேன் தெரியவில்லையா?'

**********
''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நனையும் குழந்தை.

கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன முதுகையே கூடாரமாக்குவாள்.அப்படியும் அக்குழந்தை நனையும்,தாயின் கண்ணீர்த்துளிகளால்.
                                                    --மேனாட்டுக் கவிதை ஒன்றிலிருந்து

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

புத்திசாலித்தனம்

பட்டதாரி இளைஞர் ஒரு அரசியல்வாதி நிர்வாக அதிகாரியாக இருந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று கேட்க,
அரசியல்வாதி:உன்னால் ஒரு லட்சம் ரூபாய் தர முடியுமா?
இளைஞன்:முடியாது ஐயா.
அரசியல்வாதி: கொடுத்தால் உன்னை ஒரு நிர்வாகி ஆக்குவேன்.சரி,உன்னிடம் முனைவர் பட்டம் இருக்கிறதா?
இளைஞர்: இல்லை ஐயா.
அரசியல்வாதி: இருந்தால் ஒரு கல்லூரியில் உன்னை ஒரு பேராசிரியர் ஆக்குவேன்.உனக்கு நடிக்கத் தெரியுமா?
இளைஞன்:தெரியாது ஐயா.
அரசியல்வாதி: தெரிந்தால் உன்னை நடிகனாக்கலாம்.உன்னிடம் புத்திசாலித்தனம் இருக்கிறதா?
இளைஞன்:நிறைய இருக்கிறது ஐயா.
அரசியல்வாதி:அடடே,அது மட்டும் இல்லாதிருந்தால் உன்னை அரசியல்வாதியாக ஆக்கலாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம்பவில்லை

அரசியல்வாதிகள் பயணம் செய்த ஒரு பேருந்து ஒரு மரத்தில் மோதி பின் ஒரு விவசாயியின் வயலுக்குள் கவிழ்ந்தது.அந்த நிலத்துக்கு சொந்தக்காரரான விவசாயி என்ன நடந்தது என்று பார்க்கப் போனார்.ஒரு பெரிய குழியைத் தோண்டி அனைவரையும் புதைத்துவிட்டு வயலுக்குள் சற்றுத் தள்ளியிருந்த தன வீட்டிற்குச்  சென்றார்.சிறிது நேரம் கழித்து போலீஸ்காரர்கள் வந்தார்கள்.கவிழ்ந்த பேருந்து மட்டும் கிடந்தது.பயணிகள் யாரையும் காணவில்லை.அவர்கள் விவசாயி வீட்டுக் கதவைத்தட்டி விசாரித்தனர்.பயணிகளான அரசியல்வாதிகள் அனைவரையும் புதைத்துவிட்டதாக விவசாயி அவர்களிடம் சொன்னார்.எல்லோருமா இறந்து விட்டார்கள் என போலீஸ் அதிகாரி கேட்டார்.''நான் வரிசையாக ஒவ்வொருவராய் புதைத்து வந்தேன்.ஒரு சிலர் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள்.ஆனால் நான் நம்பவில்லை.உங்களுக்குத் தெரியாதா என்ன? அரசியல்வாதிகள் எப்படிப் பொய் சொல்வார்கள் என்று?''என்றார் விவசாயி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தந்திரம்

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு,இளைஞர்கள் சிலர்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது.ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,''நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன்.எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,'' என்றார்.இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்!தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!அவர்கள் தினசரி விளையாடினார்கள்.ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான்  கொடுத்தார்.மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.நான்காவது வாரம்,தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.''வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா?இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.''என்று கூறிச் சென்று விட்டனர்.பெரியவருக்கு இப்போது பரம திருப்தி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உயர்ந்தவர் யார்?

மகா விஷ்ணு : நாரதா,பெரியது எது?
நாரதர் :பூமி.
விஷ்ணு :உலகில் முக்கால் பாகம் நீர்.கால் பாகம் தானே நிலம்?
நாரதர் :தண்ணீர் தான் பெரியது.
விஷ்ணு :அகத்தியர் தவத் தீயை அணைக்க ஏழு கடலையும் குடித்தாராமே?
நாரதர் :அகத்தியர் தான் பெரியவர்.
விஷ்ணு :இவ்வளவு பெரிய வானில் அவர் ஒரு சிறு நட்சத்திரம் தானே?
நாரதர் :வானம் தான் பெரிது.
விஷ்ணு :வானமே,என் ஒரு பாத அடிதானே?
நாரதர் :பிரபோ,நீங்கள் தான் பெரியவர்.
விஷ்ணு :நீ கூறினாயே,நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று இந்த பஞ்ச பூதங்களால் ஆனா என் பக்தன் தான் உயர்ந்தவன்.அவனதுஉள்ளத்தில் தானே நான் பிடிபட்டுக் கிடக்கிறேன்?ஆக பக்தன் தானே உயர்ந்தவன்?
நாரதர் :ஆம்,பிரபு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாழை

வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை.
இலை :வாழை இலையில் சாப்பிட்டால் மந்தம் வராது;உடலுக்கு நல்லது.
பூ :குடல் கிருமிகளை அழிக்கவல்லது.
பிஞ்சு :வயிற்றுக் கடுப்பை அகற்றும்.
காய் :உடல் சூட்டைத் தணிக்கும்.
கனி :மலச்சிக்கலைக் களையும்.
தண்டு :சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.
பட்டை :தீப்புண்ணை ஆற வைக்கும்.
சாறு :பாம்புக்கடி விஷத்தை முறியடிக்கும்.
நார் :பூத்தொடுக்க உதவும்
         வாழையைப்போல் பிறருக்கு உதவியாக வாழ்க என்பதைத்தான்  வாழையடி வாழையாக வாழ்க என்கிறார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மரியாதை

ஒரு ஞானியைத் தேடி வந்த இளைஞன் அவரிடம்,''நான் உங்களுக்கு சீடனாக விரும்புகிறேன்.அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.''
ஞானி ;உள்ளே வா,இப்போது உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
இளைஞன் ;சொல்லுங்கள்,செய்யக் காத்திருக்கிறேன்.
ஞானி ;கொஞ்ச நேரம் என் உடம்பில் ஏறி மிதிக்க வேண்டும்.
இளைஞன் ;நீங்கள் பெரிய ஞானி.உங்கள் கால் தூசுக்கும் நான் ஈடாக மாட்டேன்.உங்கள் மேல் என் கால் படுவதா?
ஞானி ;இப்போது எனக்கு உடல் வலி....
இளைஞன் ;அதற்காக என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால்  உங்கள் புனிதமான உடலை நான் மிதிக்க மாட்டேன்.
ஞானி ;என் உடலை மிதிக்க நீ மறுக்கிறாய்.ஆனால் என் வார்த்தைகளை மிதிக்கிறாய்.குருவை மதிப்பவனாக நீ எப்படி ஆக முடியும்?
இளைஞன் குழம்பினான்.
குரு தெளிவுபடுத்தினார்;மரியாதைக் குறைவாகத் தோன்றும் செயல்கள் எல்லாம் மரியாதைக் குறைவான செயல்கள் அல்ல.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அத்தான்

அம்மான் சேய் அதாவது மாமாவின் குழந்தை,அம்மாஞ்சி ஆயிற்று.
அத்தை மகன் அத்தான் என்றாயிற்று.
நொய்து என்றால் லேசான என்று பொருள்;அரிசியை விட நொய்தாக இருப்பதால் நொய் அரிசி என்று ஆனது.
அதைவிடச் சிறியது குறு நொய்;அதுவே குருணை ஆயிற்று.
**********
அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் ஆகும்.
மடம் என்பது,அனைத்தும் அறிந்தும்,தெரியாதது போல் அடக்கமாக இருப்பது.
நாணம் என்பது வெட்கம்.
பயிர்ப்பு என்பது பிற ஆடவரின் ஸ்பரிசம் அருவருப்பைத் தருவது ஆகும்.
பெண்ணின் இலக்கணமாக முன்னாளில் கருதப்பட்டவை இவை.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழி -10

கசப்புச் சொற்களும்,கடுமையான சொற்களும் சொல்பவன் பக்கத்தில் நியாயமில்லை என்பதைப் பறை சாற்றுகின்றன.
**********
அடுத்தவன் தோள் மீது ஏறி சவாரி செய்பவனுக்கு அடுத்த ஊர் அருகிலிருந்தால் என்ன?தொலைவில் இருந்தால் என்ன?
**********
வாழ்க்கை என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் போது,வாழ்க்கை முடிந்து விடுகிறது.
**********
சகிப்புத்தன்மை என்பது,சமயோசித உணர்வால் அடக்கப்பட்ட கோபமே தவிர வேறொன்றுமில்லை.
**********
நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டு.
நண்பனைத் துறப்பதில் அதை விட நிதானம் காட்டு.
**********
நாணயம் தயாரிக்கப்பட்ட போதே மனித நாணயம் தவறிப் போய்விட்டது.
**********
பொறுமை கசப்பு;ஆனால் அதன் கனி இனிப்பு.
**********
ஒரு பிழையை உணர்ந்து நீங்கள் திருந்த மறுக்கும் போது தான் அது தவறாகிறது.
**********
குழந்தைகளைக் கழுதைகள் ஆகவும் ,ஒன்றுக்கும் மதிப்பில்லாதவராகவும்  நீங்கள் கருதினால்,உங்கள் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று அர்த்தம்.
**********
வெற்றி  என்பது குறிக்கோள் அன்று ;அது ஒரு பயணமே.
**********
வேலை மனிதனைக் கொல்லாது;கவலைதான் கொல்லும்
**********.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏற்றுக்கொள்ளாதது

புத்தர் ஒரு முறை தனது சீடர்களுடன் ஒரு ஊருக்குள் சென்றார்.அந்த ஊர் மக்கள் பல்வேறு பலகாரங்களைக் கொண்டு வந்து அவரை எடுத்துக்   கொள்ளச் சொன்னார்கள்.ஆனால் அவரோ,எதையும் எடுத்துக் கொள்ளாமல் புன்முறுவலோடுபோய்விட்டார்.அடுத்த ஊர் வந்தது.அந்த ஊர் மக்களோ புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டினர்.அப்போதும் அவர் புன்  முறுவலோடு சென்று விட்டார்.ஒரு சீடர் கேட்டார்,'சுவாமி,அவ்வளவு பேர் அவதூறாகப் பேசினார்களே,பதிலுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டீர்களே?உங்களால் எப்படி முடிகிறது?'புத்தபிரான் சொன்னார்,''நாம் முதலில் சென்ற ஊர் மக்கள் கொடுத்த பலகாரம் எதையும் ஏற்கவில்லை  அல்லவா?அதே போலத்தான் இந்த ஊர் மக்கள் கொடுத்ததையும் நான் ஏற்கவில்லை.அங்கே வயிறு ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.இங்கே மனம் ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.அவ்வளவுதான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நல்ல தம்பி

அறிஞர் அண்ணா அவர்களின் 'நல்லதம்பி' கதையை என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்துப்  படம் வெளி வந்ததும்,அண்ணாவைப் படம் பார்க்க அழைத்தார் என்.எஸ் கே.படம் பார்த்து முடித்த பின் அண்ணா என்.எஸ் கேயைக் கேட்டார்,''கிந்தனார் கதா காலேட்சபம்,மது விலக்குப் பிரச்சாரம் இவற்றுக்கிடையே என் கதையை எப்படி நுழைத்தீர்கள்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சரிகமபதநி

கர்நாடக சங்கீதத்தில் சரிகமபதநி பற்றிய ஒரு விளக்கம்;
ச-சட்ஜமம்  --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம்    --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.\
ம -மத்யமம்  --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம்  --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
             -நாராதீய சிட்சா என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சரியான பையன்

ஒரு கருமியான பணக்காரன் சாகும் தருவாயில் இருந்தார்..அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்..மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு.''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,''சபாஷ்,நீதான் சரியானபையன்.ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வீண் செலவு

மரணப் படுக்கையில் தந்தை. சுற்றிலும்  அவருடைய  மூன்று  பையன்கள். மூத்தவன் சொன்னான்,''அப்பா இறந்ததும்,மிகப் பிரமாதமாகச் செலவு செய்து அடக்கம் செய்ய வேண்டும்,''இரண்டாம் மகன் சொன்னான்,''ரொம்ப ஆடம்பரம் வேண்டாம்.சுமாராகச் செய்யலாம்.''மூன்றாம் மகன் சொன்னான்,''அப்பாவே  இறந்த பின் வீண் செலவு எதற்கு? சிக்கனமாகச் செய்யலாம்.''மரணப் படுக்கையிலிருந்த தந்தை சிரமப்பட்டுப் பேசினார்,''பிள்ளைகளே,கட்டிலுக்கு  அடியில் என் கைத்தடி இருக்கிறது.அதை எடுத்துக் கொடுத்தீர்களேயானால்  நான் மெது மெதுவே நடந்து சுடு காட்டிற்குச் சென்று விடுவேன்.அங்கு சென்றதும் நான் இறந்து விடுவேன்.உடனே செலவு ஏதும் இன்றி நீங்கள் அடக்கம் செய்யலாம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

புத்திசாலி

'ஒரே ஒரு ரூபாய் வைத்து,அதற்குள் எள்,புண்ணாக்கு,எண்ணெய்,விறகு  இத்தனையும் வாங்கிக் கொடுத்து மீதிச் சில்லரையும் தருபவர் தான் என் கணவர்,'என்றாள் ஒரு அழகான இளம்பெண்.கல்யாணம் நடக்குமா என்று கவலை கொண்டார் அவள் தந்தை.ஒருவன் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய்,அரை ரூபாய்க்கு ஒரு விவசாயியிடம் எள் செடி வாங்கிக் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீதி காசையும் கொடுத்தான்.பின் அவன் விளக்கம் சொன்னான்,''இச்செடியில் எள் இருக்கிறது.எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது.புண்ணாக்கும் இருக்கிறது.எள் செடி காய்ந்தால் விறகு.''புத்திசாலி கணவனைக் கண்டுகொண்டாள் அந்தப் பெண்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தையல்காரன்.

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு.அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து,சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை குட்டையாக இருந்தது.அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான்,''இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி.இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும்.கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.''சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது.இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு,''கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள்.சரியாக இருக்கும்.இவ்வளவு நல்லதுணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.'' என்றான் சம்பாச்சு.வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான்.வழியில் ஒருவன் அவனைப் பார்த்து,'இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது.இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.'என்றான்.சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம்.''எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,
 ''எனக்கு எப்படித் தெரியும்  என்றா கேட்கிறீர்கள்?சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நஷ்டம்

நீசனுக்கு நீ செய்யும் நூறு உபகாரங்களும்  நஷ்டம்.
மூடனுக்கு அளிக்கும் நூறு புத்திமதிகளும் நஷ்டம்.
கேளாதவனுக்கு  சொல்லும்  நூறு நல்லுபதேசங்களும்  நஷ்டம்.
அறிவில்லாதவனுக்கு அளிக்கும் நூறு ஞானோபதேசங்களும் நஷ்டம்.
பாத்திரமில்லாதவனுக்கு அளிக்கும் நூறு  தானம் நஷ்டம்.
நன்றியற்றவர்களுக்கு செய்யும் நூறு உதவி நஷ்டம்/
குணம்ற்றவர்களுக்குக் காட்டும் நூறு கருணை நஷ்டம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரித்து சிரித்து

ஒரு இடத்தில் காந்தி,ஜான்சி ராணி ,வீர சிவாஜி ஆகியோரின் சிலைகள் இருந்தன.அந்த வழியே போன ஒருவரிடம் காந்தி சிலை சொன்னதாம்,''இதோ பாரப்பா,அவங்க இரண்டு பெரும் ஜம்முன்னு குதிரை மேலே உட்கார்ந்திருக்காங்க!எனக்கும் ஒரு குதிரை தரக்கூடாதா?''வந்த ஆள் சிலை பேசுகிறதைப் பார்த்து ,ஒரு மந்திரியிடம் போய் சொல்லி அவரை அழைத்து வந்தார்.காந்தி சிலை கேட்டதாம்,''என்னப்பா,ஒரு குதிரையை நான் கேட்டால் ஒரு கழுதையைக் கூட்டி வந்திருக்கிறாயே!''
**********
அமெரிக்க விஞ்ஞானி; நாங்கள் ஒரு கருவி கண்டு பிடித்துள்ளோம்.அதன் முன்னால் யாரும் பொய் பேச முடியாது.
இந்திய விஞ்ஞானி; இது ஒன்றும் புதிதில்லை.இந்தியர்களாகிய நாங்கள் அந்த மாதிரிக் கருவியைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்.
**********
நோயாளி ; ஒரு வாரமா உடம்பு சரியில்ல,டாக்டர்.
டாக்டர் ; ஒரு வாரமா ஏன்இங்கு வரலை?
நோயாளி ; அதான் சொன்னேனே,உடம்பு சரியில்லையின்னு.
**********
''மூணு பேர் ஆத்தில குதிச்சு நீந்தினாங்க..அதில ஒருத்தர் முடி தான் நனைந்து இருந்தது.''
'அது எப்படி?'
''மீதி ரெண்டு பேர் தலையும் வழுக்கை.''
**********
நாவலாசிரியர் ; தெரியுமா உனக்கு?கொஞ்ச நேரத்துக்கு முன்னால்
புத்தகம்  வாங்க வந்த ஒருவன் அந்தக் கடையிலிருந்து நான் எழுதிய நாவல் ஒன்றைத் திருடிக் கொண்டு போய் விட்டானாம்.
மற்றவர்; அதற்கான் தண்டனையை அவன்  சீக்கிரம் அனுபவிப்பான்.
**********
''நேத்து ராத்திரி டி.வி.இல வானிலை  அறிக்கை கேட்டாயா?''
;நான் கேட்கலை.அவங்கதான் சொன்னாங்க.'
**********
''அறுபதடிஉயர ஏணியிலிருந்து விழுந்து விட்டேன்.நல்ல வேளை,சிறு காயம் கூட இல்லாமல் தப்பிச்சிட்டேன்.'
'ஆச்சரியமா இருக்கே,எப்படி?'
''நான் விழுந்தது ஏணியின் இரண்டாவதுபடியிலிருந்து தானே!''
**********
முதலாளி/; கோழிப் பண்ணையில் வேலைக்கு வந்தால் கோழி முட்டையைத் திருட மாட்டாயே?
தொழிலாளி;கேட்டுப் பாருங்க எசமான்,நான் முன்னே வேலை பார்த்த கப்பல் கம்பெனியிலே ஒரு கப்பலைக் கூடத் திருடினதில்லீங்க.
**********
ஒரு விவசாயி வங்கிக்கு சென்று,இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டான்.'உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன?"என்று அதிகாரி கேட்டார்.''இருபது மாடுகள் ''என்றான் விவசாயி.கடன் கொடுக்கப் பட்டது.சில மாதங்கள் கழித்து விவசாயி நிறைய பணத்துடன் வங்கிக்கு வந்து,கடனை அடைத்தான்.மீதிப் பணத்துடன் புறப்பட்ட அவனை பார்த்து அதிகாரி,'கையிலிருக்கும் பணத்தையும் இந்த வங்கியிலேயே போட்டு விடுங்களேன்.'என்றார்.சந்தேகப் பார்வையுடன் விவசாயி கேட்டான்,''உங்களிடம் எத்தனை மாடுகள் உள்ளன?''
**********
யாருக்கும் சுலபமாகப் பணம் கொடுக்காத வட்டிக் கடைக் காரர் ஒருவரிடம் கடன் வாங்க வந்தார் ஒருவர். வட்டிக் கடைக்காரர் ஒரு சோதனை வைத்தார்.'என் கண்ணில் ஒன்று போலிக்கண்.அதை சரியாகக் கண்டு பிடித்தால் கடன் தருகிறேன்.'என்றார்.வந்தவர் சரியான விடையை சொல்ல,வட்டிக் கடைக்காரர் அதிசயத்துடன்,'எப்படி சரியாகச் சொன்னீர்கள்?'என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''அந்தக் கண்ணில் தான் கொஞ்சம் கருணை இருப்பதாகத் தெரிந்தது.''
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீ யார் கேட்க?

மேல் மாடியில் இருந்தவர்கள் எப்போதும் இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.கீழ்ப் பகுதியில் இருந்த முல்லா,''ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?எங்களால் தூங்க முடியவில்லை.''என்றார்.மேல் மாடியில் இருந்தவர்கள் சொன்னார்கள்,''நாங்கள் வாடகை கொடுக்கிறோம்;என்ன வேண்டுமானாலும் மேல் மாடியில் செய்வோம்.நீ யார் அதைக் கேட்க?'' உடனே முல்லா,கீழே வந்து வீட்டின் கீழ்ப் பகுதியைக் கடப்பாரையால் இடிக்க ஆரம்பித்தார்.உடனே மேல் மாடிக்காரர்கள் கேட்டார்கள்,''கீழ் பகுதியை இடித்தால் மேல் பகுதியும் விழுந்து விடுமே?ஏன் இடிக்கிறீர்கள்?''முல்லா சொன்னார்,''கீழ்ப் பகுதிக்கு நான் வாடகை கொடுக்கிறேன்;கீழ்ப் பகுதியில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.அதைக் கேட்க நீ யார்?''மேல் மாடிக்காரர்கள் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்தார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

செய்யாதீர்கள்

அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள்;
அதற்குள் ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.
அழகான உருவங்களுக்கு ஏங்காதீர்கள்;
அங்கே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது.
வறுமையில் வாடுபவர்களைக் கேலி செய்யாதீர்கள்;
அங்கே வாழ்க்கைத்தரம் வணங்கிக் கொண்டிருக்கிறது.
பணக்காரன் வீட்டுப் படிக்கட்டில் ஏறாதீர்கள்;
அங்கே அவமரியாதை காத்துக் கொண்டிருக்கிறது.
மேதைகளை அளவுக்கு மீறிப் புகழாதீர்கள்;
அங்கு மேதைத்தன்மை  அத்தோடு முடிந்து விடுகிறது.
                                                  --கண்ணதாசன்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கள்

கள்ளுக்கு போதை உண்டு.கள்ளை உண்டால் தான் போதை வரும் என்பதல்ல.கள் என்ற சொல்லுக்கே போதை வரும்.சான்றாக,'நீ'என்று சொல்பவரை நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள்,அவருக்கு உடனே எவ்வளவு போதை வருகிறதென்று!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிம்பன்சி

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சர்க்கஸ் கம்பெனி மிகச் சிறப்பாகக் காட்சிகளை நடத்தி வந்தது.அதிலும் ஒரு சிம்பன்சி குரங்கின் அட்டகாசமான ஆட்டங்கள் அந்தக் காட்சிக்கே  பெரும் சிறப்பைத் தந்தது.திடீரென அந்தகுரங்கு இறந்து விட்டது.கம்பெனியின்மேனேஜர் முதலாளிக்கு ஒரு தந்தி கொடுத்தார்,''சிம்பன்சி இறந்து விட்டது.அதற்குப் பதிலாக வேறொன்று மாற்றவா அல்லது நீங்கள் வரும் வரை காத்திருக்கவா?''

கச்சேரி 
கச்சேரியில் மிருதங்க வித்துவான் பாடகருடன் ஒத்துழைக்கவில்லை.கச்சேரி  முடிந்தவுடன் பாடகர் சொன்னார்,''அவன் என் பாட்டுக்கு எங்கே வாசித்தான்?அவன் பாட்டுக்கு வாசித்துக் கொண்டே போனான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் -9

''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்று கேட்பார்கள்.ஆனால் புகழ்ந்து சொல்வதைத் தான் விரும்புவார்கள்.
**********
''இளமையாக இருக்கிறீர்களே,''என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால் உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
**********
பணம் என்பது ஆறாவது அறிவு;அது இல்லாவிட்டால் ஐந்து அறிவும் வீண்.
*********
பிறக்கும் போது எல்லோருமே பைத்தியம் தான்.சிலர் கடைசி வரை அப்படியே இருந்து விடுகிறார்கள்.
**********.
பணம் என்பது கடல் நீர்.குடிக்கக் குடிக்க தாகத்தை அதிகமாக்குவது தான் அதன் தன்மை.
**********
தனி மரம் தோப்பாகாது.ஆனால் அது ஒரு தோப்பு உருவாக துணை புரிகிறது.
**********
ஓடுவதில் பயனில்லை;நேரத்தில் புறப்படுவது தான் முக்கியம்.
**********
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
**********
நம்முடைய முக்கிய  குறைபாடு என்னவென்றால்,நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக,அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறோம் என்பது தான்.
**********
மனித இனத்தை மாற்ற வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள்;தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாருமே சிந்திப்பதில்லை.
**********
நழுவாமல் எதிர் நோக்குங்கள்.எந்தப் பிரச்சினையும் சின்னதாகி விடும்.
முள்ளை மெல்லத் தொட்டால் குத்தும்.அழுத்திப் பிடித்தால் நொறுங்கி விடும்.
**********
பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவது பன் மடங்கு மேல்.
**********
துரதிருஷ்டம் இரண்டு வகை;ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்;மற்றது பிறர்க்கு வரும் அதிருஷ்டம்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தியாகி

ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு கல்லின் மேல் அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான் ஒரு சலவைத் தொழிலாளி.''அழுக்கடைவது துணி;அதை வெளுக்கும் போது அடிபடுவது நீ.ஆஹா,உன் தியாகமே தியாகம்.,''என்று கல்லைப் புகழ்ந்தது கழுதை.''மன்னியுங்கள்.துணி வெளுக்கப்படும் போது நானும் வெளுக்கப்படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.,''என்றது கல்.அசடு வழிந்தகழுதை முணுமுணுத்தது,''பிழைக்கத்தெரியாத தியாகி.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சந்தர்ப்பம்

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான்.''என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன்.நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள்.ஒரு மனிதனை வெற்றிப்பாதையில்  செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்,''என்று சொன்னான்.அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு ,''ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள்''என்று ஆவலுடன் கேட்டான்.அதற்கு அவன்,''நல்லது,இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?''என்று கேட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அடிப்பது யார்?

வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள்.;;இது நம்முடைய தகப்பனார்களுக்குத் தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே?''என்றான் ஒருவன்.''அதனாலென்ன,நாம் அவர்களைத் திரும்பி அடித்தால் போயிற்று.''என்றான் மற்றவன்.''நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும்,தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?''என்றான் முதல்வன்.''சரி,அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி.நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்.''என்றான் மற்றவன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆற்றில் விழுந்த அழகி

அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில்  இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குறிப்பு

ஒரு கிராமத்தில்ஒரு வைத்தியன் எந்த நோயாளியின் வீட்டிற்கு வைத்தியத்திற்குப் போனாலும் அந்த வீட்டு ஜன்னலில் ஒரு சிறு கல்லை எடுத்து வைத்து விட்டுத்தான் மருந்து கொடுப்பான்.''என்னிடம் மருந்து சாப்பிடும் நோயாளி கல்லால் அடித்தாலும் சாக மாட்டான் என்பதற்கு அடையாளமாகத்தான் இப்படிக் கல்லை வைக்கிறேன் ''என்று கூறுவான்.ஒரு முறை ஒரு நோயாளி இறந்து விட்டான்.நோயாளியின் தாயார் வைத்தியரிடம் சண்டைக்குப் போனாள்.''நீங்கள் கல் வைத்தும் என் மகன் இறந்து போய் விட்டானே!''''உங்கள் வீட்டு ஜன்னலில் கல் வைத்ததன் பொருள் என்னவென்றால்,உங்கள் மகன் உங்கள்தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விடுவான்,பிழைக்க மாட்டான் என்று குறிப்பிடத்தான் கல்லை வைத்தேன்.''என்றான் சாமர்த்தியசாலியான வைத்தியன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எது ஞானம்?

''ஞானத்தில் சிறந்த ஞானம் எது?''என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது. ''இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பது தான்.''என்று ஞானி கூறினார்.;;அந்த ஞானம் தங்களுக்கு எப்படி வந்தது?''என்று கேட்டதற்கு ஞானி சொன்னார்,''கழுதையைப் பார்.உமக்குப் புரியும்.''கேட்டவருக்குப் புரியவில்லை.ஞானி விளக்கினார்,''இந்தக் கழுதை  தினமும் தன முதுகில் கனமான அழுக்கு மூடைகளை ஆற்றுக்குக் காலையில் சுமந்து செல்கிறது.மாலையில் அழுக்கு நீங்கிய துவைத்த துணிகளை ஆற்றிலிருந்து சுமந்து வருகிறது.ஆனால் கழுதை போகும் போது அழுக்கு மூடைகளை சுமந்து செல்கிறோமே என்று வருத்தம் அடைவதும் இல்லை.திரும்பும் போது சுத்தமான துணிகளைச் சுமந்து வருகிறோம் என்று மகிழ்ச்சி அடைவதும் இல்லை.இதைப் பார்த்துத் தான் நான் ஞானம்அடைந்தேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உணர்வு

ஒரு பிச்சைக்காரன்,தினசரி பிச்சை எடுக்கும் போது பலர் கேலி செய்தனர்.அவனைத் தாழ்வாகப் பேசினர்.ஏளனம் செய்தனர்.அப்போதெல்லாம் அவனுக்கு மிகவும் அவமானமாகவும் மனம் பாதிக்கவும் செய்தது.அதிர்ஷ்டவசமாக சில நாட்களில் அவன் ஒரு ராஜா ஆகி விட்டான்.உலகின் எல்லா இன்பங்களும் கிடைக்கப் பெற்றன.அப்போது அவன் பழைய பிச்சைக்காரன் போல ஒரு நாள் திரியத் திட்டமிட்டு அவ்வாறே மாறு வேடம் புனைந்து நகருக்குள் சென்று பிச்சை கேட்டான்.இப்போதும் பலர் கேலி செய்தனர்.ஏளனம் செய்தனர்.ஆனால் அவனுக்கு இப்போது அவமான உணர்வு ஏற்படவில்லை.மனம் பாதிக்கப் படவில்லை.ஏனெனில் அவனுடைய உள்ளுணர்வில் தான் ராஜா என்பதும் தனக்கு இந்த தேசமே சொந்தம் என்ற எண்ணங்களும் இருந்தன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வீடு செல்ல

புகை வண்டி நிலையத்திலிருந்து சாமான்களுடன் வந்த ஒரு கஞ்சன் செலவில்லாமல் வீட்டிற்குச் செல்ல யோசனை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வண்டி வருவதைக் கண்டதும்  மயக்கம் வந்தவர் போல கீழே விழுந்தார்.ஆம்புலன்ஸ் டிரைவர் அவரைத் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பின்னர் வீட்டில் சாமான்களுடன் அவரை பத்திரமாக இறக்கிச் சென்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அவசரம்

ஒருவன் பத்தாவது மாடியிலிருந்த தனது அலுவலகத்தில் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாரோ பதட்டத்துடன்,'முருகா,உன் பெண்  விபத்தில் சிக்கி இறந்துவிட்டாள்,'என்று சப்தம் போட்டுச் சொன்னார்கள்.உடனே அவன்,'இனி வாழ்வதில் அர்த்தமில்லை,'என்று கூறிக் கொண்டே பத்தாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே  கீழே குதித்துவிட்டான்.அவன் ஆறாவது மாடியைக் கடக்கும் போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.''ஐயோ,எனக்குத்தான் பெண் குழந்தை கிடையாதே!''என்று கத்தினான்.நான்காவது மாடி அருகில் செல்லும் போது தான் அவன் உணர்ந்தான்,''அடடா,எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!''தரையில் சென்று விழும் தருணத்தில் தான் அவனுக்குப் புரிந்தது,''நான் என்ன செய்வேன்,என் பெயர் முருகன் இல்லையே!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, January 18, 2011

செம கடி........,,

இட்லி சாப்டா இருக்குமா????
சாப்டா எப்படி இட்லி இருக்கும்???
வயித்துக்குள்ள போயிடாதா???

———————————-

காகம் ஏன் தண்ணீர்ல இருக்கிறது இல்ல???
அது தான் கரையுமே???
பின்ன எப்படி இருக்கும்???

—————————————-

காதலர்கள் ஏன் பொய் சொல்லுறாங்க???
அவுங்க 'மெய்' மறந்து காதலிகிரான்கலாம்…

—————————————–

வெயிட் இல்லாத ஹவுஸ் எது??
'லைட் ஹவுஸ்'…

—————————————–

உன் பேரு என்ன??
முனுசாமி…

உனக்கு எத்தனை குழந்தைகள்??
மூணு சாமி….

—————————————–
அதிஷ்டம் இல்லாத நகரம் எது???
லக்நோ

—————————————–

எதுக்கு பசங்கள கேட்ல உக்கார வச்சு எக்ஸாம் எழுத வச்சு இருக்காங்க??
அது 'entrance exam'



--
Regards,
Yoganandhan Ganesan


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, January 13, 2011

அதிசய பெருக்கல்

கீழே உள்ள பெருக்கல்களைப் பாருங்கள் இடது புறமும் வலது புறமும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்கள் இடம் பெற்றுள்ளன.
51249876 X3=153749628
32547891X6=195287346
16583742X9=149253678

கீழே உள்ள வித்தியாசமான பெருக்கலைப் பாருங்கள்.இடது புறத்தில் உள்ள எண்கள் வலது புறத்தில் அப்படியே திரும்பி இருக்கின்றன.
10989 X 9 =98901.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெண்டைக்காய்

கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில்  கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள் .அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான். வெண்டைக்காயைப் பார்த்ததும்மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?''என்றாள்.கணவனுக்கு மயக்கம்வந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எப்போது வரலாம்?

ஒருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலித்தான்.அவளிடம் தன விருப்பத்தைக் கூற நினைத்தான்.அவள் தினசரி கடை வீதி வழியே செல்வதுண்டு.அனால் கூடவே அவளுடைய தந்தையும் வருவார்.அவர் வராத  ஒரு நாள் பார்த்து அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.பல நாள் காத்திருந்ததன் பலனாக ஒரு நாள் அவள் தனியே வந்தாள்.நேரடியாக விசயத்தைச் சொன்னால் அதில் என்ன ஆவல் நிறைவேறும்?எனவே அவளைப் பார்த்து சொல்கிறான்:
ஒரு மரம் ஏறி,ஒரு மரம் பூசி 
ஒரு மரம் பிடித்து,ஒரு மரம் வீசிப் 
போகிறவன் பெண்ணே,உன் 
வீடு எங்கே?
அதன் பொருள்:ஒரு மரமாகிய பாதக் குறட்டுக் கட்டையின் மேலே ஏறி
(அந்தக் காலத்தில் செருப்பு மரத்தாலானதாக இருக்கும்.) ஒரு மரமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டு,ஒரு மரமாகிய கைத்தடியைப் பிடித்துக் கொண்டு,ஒரு மரமாகிய பனை ஓலை விசிறியை  வீசிக் கொண்டு செல்பவரின் பெண்ணே,உன் வீடு எங்கே இருக்கிறது?
அவன்பேசிய பேச்சின்  உட்கருத்தை அவள் புரிந்து கொண்டாளா? புரிந்து கொண்டதனால் உடனே பதில்  இதோ சொல்லி விட்டாளே!
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே 
அவன் ஒரு நிமிடம் யோசித்தான்.அவனும் புரிந்து கொண்டான்.அதாவது அவள் வீடு பால் விற்கும் இடையன் வீட்டிற்கும்,பானை செய்யும் குயவன் வீட்டிற்கும் நடுவிலேயும்,ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்,நூலைக்  கொண்டு நெசவு செய்யும் நெசவாளியின் வீட்டிற்கும் அருகில் இருக்கிறது.
அடுத்து அவன்,அவள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்று கேட்கிறான்.
அவள் சொல்கிறாள்:
இந்த ராஜா செத்து 
அந்த ராஜா பட்டம் 
கட்டிக் கொண்டு மரத்தோடு மரம் 
சேர்ந்த பிறகு வந்து சேர்
 அதாவது கதிரவன் மறைந்து,சந்திரன் உதயமான பிறகு,வீட்டில் உள்ளவர்கள்  கதவைச் சாத்தும் போது,கதவு நிலையும் கதவும் சேர்ந்து விடும்.அந்த சமயத்தில் அதாவது நள்ளிரவில் வருவாயாக என்று தெரிவிக்கிறாள் காதலி.
இனிப்பேச்சு எதற்கு?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தாமதம்

சாலையின் நடுவில் பெயிண்ட் கொடு போட ஒருவர் நியமிக்கப் பட்டார்.முதல் நாள் ஐந்து கிலோமீட்டர் தூரமும்,இரண்டாம் நாள் மூன்று கிலோமீட்டர்தூரமும்,மூன்றாம் நாள் ஒரு கிலோ மீட்டர் தூரமும் அவர் பெயிண்ட் கொடு போட்டார்.நாளுக்கு நாள் வேலை தாமதமாவதைக் கண்ட அதிகாரி,அந்த ஆள் மீது நம்பிக்கை இருந்த போதும் கூப்பிட்டுக் கண்டித்தார். பெயிண்டும் கையுமாக நின்ற அந்த வேலையாள் சொன்னார்,''அதை ஏன் கேக்குறீங்க?நானும் நாளுக்கு நாள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தான் உழைக்கிறேன்.ஆனால் பெயிண்ட் டப்பா இருக்கிற தூரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதே!ஒவ்வொரு தடவையும் இவ்வளவு தூரம் போய் பிரஷ்ஷில் தொட்டுக் கொண்டு வர வேண்டியிருக்கிறதே!அதுதான் காரணம்.''அதிகாரிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆடிப்பெருக்கு

ஆடி பதினெட்டு அன்று அதிகாலை.காவிரியின் கரையிலிருந்த ஒரு மரம்,காவிரியைப் பார்த்து,''நீ ஏன்இன்று இப்படிப் பெருக்கெடுத்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது.காவிரி சொன்னது,''பொழுது விடிந்ததும் பாவங்களைப் போக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பயங்கரமான பாவிகள் எல்லாம் என்னிடம் ஓடி வரப் போகிறார்கள்.அவர்கள்வருவதற்கு முன் தப்பித்து விட வேண்டும் என்று தான் நான் பயந்து ஓடுகிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முதன்மையான பரிசு

பகைவனுக்கு        --மன்னிப்பு.
நண்பனுக்கு           --இதயம்
குழந்தைக்கு           --நன்னடத்தை
தந்தைக்கு               --மரியாதை.
தாய்க்கு                   --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும்       --தாராள மனப்பான்மை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கறுப்பு ஆடு

மூன்று விஞ்ஞானிகள் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.வழியில் வயலில் ஒருகறுப்பு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
முதல் விஞ்ஞானி; இந்த கிராமத்தில் எல்லா ஆடுகளும் கறுப்பாக இருக்கும் போலிருக்கிறது.
இரண்டாம் விஞ்ஞானி; அதெப்படிச் சொல்ல முடியும்?இங்கிருக்கும் ஆடுகளில் சில கறுப்பு என்ற முடிவுக்கு வேண்டுமானால் நாம் வரலாம்.
மூன்றாம் விஞ்ஞானி; இந்த கிராமத்தில் இந்த ஆட்டின் நாம் காணும் ஒரு பக்கம் நிச்சயம் கறுப்பு என்று உறுதியாகச் சொல்லலாம்.
மெத்தப் படித்தால் இப்படித்தான்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொம்மை

ஏழை ஒருவனின் குழந்தை. தன தாயிடம் சொன்னது,''அம்மா,எனக்கு இந்த மண் பொம்மை வேண்டாம் .பார்,எல்லாம் உடைந்து இருக்கிறது.பக்கத்து வீட்டு அண்ணன் நல்ல நல்ல பொம்மைகள் எல்லாம் வைத்திருக்கிறான்.அது போல பொம்மைகள் வாங்கித்தா.''அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் அந்த  ஏழைத்தாய்.
பக்கத்துவீடு ஒரு பணக்காரரின் வீடு.அந்த வீட்டுப் பையனைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப் பெண்.விளையாட வித விதமான பொம்மைகள். விளையாடிக் கொண்டிருந்த பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான்,''ஆயா,எனக்கு இந்த பொம்மையெல்லாம் வேண்டாம்.பக்கத்து வீட்டுத் தம்பி அழகான மண் பொம்மைகள் வைத்து விளையாடுகிறான்.எனக்கு அது போல பொம்மைகள் வேண்டும்'' என்று கூறி அழ ஆரம்பித்தான்.அவன் அழுகையை அடக்க வழி தெரியாது திகைத்து நின்றாள் வேலைக்காரப்பெண்.
பொன்னென்றும் மண்ணென்றும் வேறுபாடு அறியாக் குழந்தை,பொன்னுக்கும்,மண்ணுக்கும் போராடுகிறது வளர்ந்த பின். என்றென்றும் குழந்தையாய் இருந்தால்  இவ்வுலகில் ஏனிந்த சண்டை,ஏனிந்த வேற்றுமை?
                                                             மூலம் ;ஒரு இந்திக் கவிதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

காற்று

காற்று 
தெற்கிலிருந்து வீசினால்    --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால்   --வாடை
கிழக்கிலிருந்து வீசினால்   ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால்     ---மேலை

பூ 
மலர்வதால்    --மலர்.
விரிவதால்     ---வீ
பூப்பதால்          --பூ
வாடுவதால்    --அலர்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பயனிலை

தமிழ் ஆசிரியர் திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொடர்ந்து பாடம் கேட்ட சீடர் ஒருவர்,பலமுறை சொல்லிக் கொடுத்தும் பாடம் சரியாகக் கேட்காமல் ஒரு நாள்,''எழுவாய்,பயனிலை என்றால் என்ன?'' என்று கேட்டார். பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே அவர்,''நீ இங்கிருந்து எழுவாய்!உன்னால் ஏதும் பயனிலை,''என்றதுமே சீடன் ஓடி விட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வகுத்தல்

ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள்.சிறு வயதில் எங்களுக்கு ஒரு பிரச்சினை.நாங்கள் மூவரும் இரு நூறு ஆடுகளை மேய்க்க வேண்டியிருந்தது.எங்களுக்குள் அதனால் அடிக்கடி சண்டை வந்தது.''நண்பன் சொன்னான்,''மூன்று பேர் இருநூறு ஆடுகளை மேய்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம்!சரி,பின் என்ன செய்தீர்கள்?அவன் சொன்னான்,''எங்கள் அப்பா மேலும் நூறு ஆடுகள் வாங்கினார்.அதன் பின் தான் பிரச்சினை முடிந்தது.''நண்பன் அதிர்ச்சி அடைந்தான்.''இருநூறு ஆடு மேய்ப்பதே சிரமம்.அதிலே மேலும் நூறு ஆடுகள் வாங்கியபின் எப்படி பிரச்சினை தீரும்?மேலும் சிரமம் கூடத்தானே செய்யும்?''என்று நண்பன் கேட்க அவன்சொன்னான்,''மூன்று நூறை மூன்றால் வகுப்பது எளிதல்லவா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜலதோஷம்

காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாவம்

ஒரு நாட்டில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அதனால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு முனிவர், ஒரு யானைப் பாகனைப் பார்த்து,''உண்ண ஏதாவது உணவு இருந்தால் கொடு,''என்று கேட்டார்.''நான் எச்சில் படுத்தியஉணவு தான் இருக்கிறது,''என்றான் பாகன்.''பரவாயில்லை,அதையே கொடு,''என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டார் முனிவர்.''இந்தாருங்கள்,இந்தத் தண்ணீரைக் குடியுங்கள்,''என்றான் பாகன்.;;அது எச்சில்,நான் குடிக்க மாட்டேன்,''என்றார் முனிவர்.''உணவுக்கு இல்லாத எச்சில்,தண்ணீருக்கு மட்டும் எப்படி வந்தது?''என்று கேட்டான்,பாகன்.முனிவர் சொன்னார்,''வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை.இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர்போயிருக்கும்.ஆனால் தண்ணீர் எங்கும் கிடைக்கும்.''
ஒரு தடவை தவறு செய்து விட்டால் தொடர்ந்து தவறு செய்தால் என்ன என்று நாம் நினைப்பதால் தான் பாவங்கள் அதிகரிக்கின்றன.வேறு வழியின்றி,நிர்பந்தத்தால் தவறு செய்தால் அது பாவமில்லை.நிர்ப்பந்தம் இல்லாத போது,வேண்டுமென்று தவறு செய்வது தான் பாவம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயல்பு

மனிதனின் இயல்பு;
முப்பது வயதில்  --முறுக்கு
நாற்பது வயதில் --நழுவல்
ஐம்பது வயதில்  --அசதி
அறுபது வயதில்--மறதி
எழுபது வயதில்  --ஏக்கம்
என்பது வயதில்  --தூக்கம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிளிப்பேச்சு

வீட்டின் வரவேற்பறை. உச்சியில் ஊஞ்சல் கட்டப்பட்டு ஒரு கிளி.அந்தக் கிளியின் ஒரு காலில் பச்சை நிற நூலும்,மறுகாலில் சிவப்பு நிற நூலும் கட்டப்பட்டுக் கீழே தரை வரை தொங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்ததும் வீட்டுக்காரர் பச்சை நூலை ஒரு சுண்டு சுண்டினார்.உடனே கிளி,''வாங்க!வாங்க!வணக்கம்!சௌக்கியமா?''என்றது. விருந்தாளி விடை பெற்றுச் செல்லும் போது வீட்டுக்காரர் சிவப்பு நூலை சுண்டினார்.உடனே கிளி,''போயிட்டு வாங்க!அடிக்கடி வாங்க!நன்றி,''என்றது.விருந்தாளி வியந்து கூவினார்,''என்ன ஆச்சரியம்!பச்சை நூலை இழுத்தால் கிளி வரவேற்றுப் பேசுகிறது!சிவப்பு நூலை இழுத்தால் விடை கொடுக்கிறது!இரண்டையும் சேர்த்து இழுத்தால் என்னாகும்?''கிளி அவசரமாகக் கத்தியது,''அறிவு கெட்ட முட்டாளே,கீழே விழுவேன் !''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மூவருக்கு இரு கால்

ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.வழியிலே ஒருவனைக் கண்டு,
''ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து 
வேலியைப் படல் கட்டுகிறவனே!
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?''என்று கேட்டான்.
அதற்கு அவன் விடை சொல்கிறான்,
''அவள் செத்து மூன்று நாள் ஆச்சு;
அவளைக் கொன்றவன் செத்து 
ஆறு நாள் ஆச்சு;
அவளைச் சுட்டவன் செத்து 
ஆறு மாசம் ஆச்சு'' என்று சொன்னான்.
நெசவுகாரன் ஒருவன் தேற்றா மரத்தின் கீழ் பாவு போட்டிருந்தான்.அவனைப் பார்த்து தான் கணவன் கேட்கிறான்.'ஆற்றுக்குப் பகை' என்றது,கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத்  தரும் தேற்றா மரத்தை. மனிதர்,வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின் பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை,'வேலிக்குப் படல் கட்டுகிறவனே'என்று குறிப்பிட்டான்.தன மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும்,வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை,'மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ'என்று கேட்கிறான்.
அவள் இடையில் ஓரிடத்தில்  தண்ணீர் குடித்த போது, அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் இறந்தாள்.ஊரார்,ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு அவளைத் தர்மத்திற்கு எரித்து விட்டார்கள்.இதையே அந்த நெசவுகாரன்,அவள் செத்து மூன்று நாள் ஆச்சு.அவளைக் கொன்றவன்  (பாம்பு )செத்து ஆறு நாள் ஆச்சு.அவளைச் சுட்டவன் (மரம்) செத்துஆறு மாசம் ஆச்சு''என்று குறிப்பிடுகிறான்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கடவுள் அருள்

மழையில் ஒரு மதப் பெரியவர் ஓடி வருவதைக் கண்ட முல்லா,''பெரியவரே,கடவுள் மக்கள் மீது கொண்ட கருணையினால் பெய்விக்கும் மழையைக் கண்டு ஓடினால் அது கடவுளை அவமதிப்பதாகும்,''என்றார்.பெரியவரும் உடனே மழையில் நனைந்து சென்று மறு நாள் காய்ச்சலால் அவதிப்பட்டார்.பிறகு ஒரு நாள் மழையில் நனைந்து முல்லா ஓடி வருவதைக் கண்ட அப்பெரியவர்,''என்ன முல்லா,எனக்கு புத்திமதி கூறிவிட்டு நீ மட்டும் மழையைக் கண்டு ஓடி வருவது கடவுளை அவமதிப்பதாகாதா?''என்று கேட்டார்.அதற்கு முல்லா,''ஐயா,கடவுளின் அருள் தான் மழை.நான் நனைவதற்கு அஞ்சிஓடவில்லை.ஆனால்  கடவுள்  அருள்  பெற்ற மழையை மிதிக்கக் கூடாதே என்று தான் வேகமாக ஓடுகிறேன்.''என்றாரே பார்க்கலாம்!பெரியவர் வாயடைத்துப்போனார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தகுதி

முதல் முதலாக  ஒரு இளைஞன்ஒரு வேலைக்கான நேர் முகத் தேர்வுக்குப் போனான்.தேர்வுக்குழுவின் தலைவர் கேட்டார்,''ஏதாவது ஒரு குறிப்பிட்ட தன்மையுள்ள வேலையை விரும்புகிறாயா?''இளைஞன் சொன்னான்,''நல்லது,முடியுமானால் கம்பெனியின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருக்க விரும்புய்கிறேன்.''தலைவருக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது.அவர் கேட்டார்,''உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?'  இளைஞன் அமைதியாகக் கேட்டான்,''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

புத்திமதி

மசூதியிலிருந்து ஒரு ஞானி திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஒரு குடிகாரன் கையில் ஒரு இசைக் கருவியுடன் வழியில் போவோர் வருவோரை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான்.ஞானி அவனுக்குப் புத்திமதி சொல்ல,அவன் தனது இசைக் கருவியினால் அவர் தலையில் அடித்தான்.அவர் தலையும் உடைந்தது.இசைக்  கருவியும் உடைந்தது.
மறுநாள் காலை ஞானி அந்தக் குடிகாரனுக்கு சில இனிப்புப் பண்டங்களும் கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தார்.கூடவே ஒரு சிறு குறிப்பு;
''உங்களுடைய இசைக் கருவி உடைய என் தலை காரணமாக இருந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.இத்துடன் அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு புதிய இசைக் கருவி வாங்கிக் கொள்ளவும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தை மேதையாக....

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?
சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு  எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.
**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம்  குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.
**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.
**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.
.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.
**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.
**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.
**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.
**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.
**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.
**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரியுமா?

உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்.பூமியில் கால் படாமல் வானில் ஆகாய விமானத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தால் நம் கீழே உலகம் நம்மை விட்டுச் சுற்றுமா?
சுற்றாது.பூமிக்கு மேலே சில கிலோமீட்டர்  வரை  காற்றழுத்த மண்டலம் உண்டு.அந்த மண்டலமும் பூமியோடு சேர்ந்து சுற்றுகிறது.எனவே காற்றழுத்த மண்டலத்தில் இருப்பவர்களும் (பூமியில் கால் படாமல் இருந்தாலும)பூமியோடு சேர்ந்து சுற்றத் தான் செய்வர்.
**********
நம் முகத்தில் யாராவது பளாரென்று  அடித்தால் நாம் நட்சத்திரங்கள்  பறப்பதாக  உணருகிறோம் அல்லவா?சிலர் இதைப் பூச்சி பறப்பது போல்  இருப்பதாகச் சொல்கிறார்கள்.இது ஏன்?
கண் நரம்பு ,பொதுவாகக் கண்ணில் விழும்  ஒளிக் குறிகளைத் தான் மூளைக்கு எடுத்துச் செல்லும்.ஆனால் வலி போன்ற பாதிப்புகளை,அந்த நரம்பு மூளைக்கு உணர்த்தும் போதும்,மூளை,அதை ஒளிக் குறிப்பாகவே,பழக்கம் காரணமாக எடுத்துக் கொள்கிறது.அதனால் தான்  நம்  உடலில் வலியோ,சூடோ ஏற்படும் போது நாம் பூச்சிகள் அல்லது நட்சத்திரங்கள் பறப்பதாக உணர்கிறோம்.
**********
பனிக்  கட்டியைப் பார்த்தால் அதைச் சுற்றிப் புகை வருகிறதே?ஏன்?எப்படி?
அந்தப் புகை பனிக்  கட்டியிலிருந்து வருவதில்லை. பனிக்கட்டியைச் சுற்றி காற்றில் நீராவி இருக்கிறது.ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.பனிக்கட்டியின் குளிர்ச்சி நீராவியைக் குளிர்வித்து மிக நுண்ணிய நீர்த் திவலையாக மாற்றுகிறது.அது தான் புகை மாதிரி தெரிகிறது.இன்னும் சொல்லப் போனால் அதுவும் ஒரு வகை மேகம் தான்.
**********
நெற்றிப் பொட்டில் அடித்தால் மரணம் சம்பவிப்பது ஏன்?
நெற்றிப்பொட்டுப் பகுதி மற்ற பகுதிகளை விட வலிமை குறைந்தது.அடியால் அது பாதிக்கப் படும் போது தலைக்குள் மண்டையோடு முழுவதும் வியாபித்திருக்கும் மூளை அதிர்கிறது.மரணம் அளவுக்கு அப்பதிப்பு போகிறது.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விளக்கம்

தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது  ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
                                                                                        பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
                         உண்மையே பேசுபவர்கள்.
                         இனிமையாகப் பேசுபவர்கள்.
                         அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
                               நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
                               நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
                                                            ---ஆதி சங்கரர்.
                                                      (ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கை

தமிழில் 'கை'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!

'கை'கொடுத்தான்.
'கை' கூடி வர வேண்டும்.
'கை' ரொம்ப தாராளம் அவனுக்கு.
கையைக் கடித்து விட்டது.
கையோடு கையாய்
உள்ளங்கை நெல்லிக்கனி.
கை சுத்தமில்லைஅவனுக்கு.
அவனைக் கை கழுவித் தொலை.
கையால் ஆகாதவன்.
கை விட்டு விட்டான்.
எச்சிற்கையால் காக்காய் கூட விரட்ட மாட்டான்.
கையாடல்செய்து விட்டான்.
கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.
ஒரு கை குறையுது.
அடிக்கிற கை தான் அணைக்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல்....
கை மேல் பலன்.
கை நாட்டுப் பேர்வழி.
கையை நனச்சிட்டு வந்தான்.
கையைப் பிடித்தான்.
கை வைக்காதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

துர்நாற்றம்

ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக்  கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.
கொஞ்ச  நேரம்  ஆனவுடன்  கதவு  தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.
ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெருக்க வேண்டும்

கி.வா.ஜ வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந்தாள்.ஆள் கொஞ்சம் பருமன்.ஒரு நாள் கி.வா.ஜ.,ஒரு நண்பருடன் தரையில் அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.''என்ன இது?விசாலம் பெருக்க வேண்டும்.நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!''என்றார் கி.வா.ஜ.வின் மனைவி.''விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?''என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குத்துச்சண்டை

தன எதிரியை நன்றாக உதைக்க எண்ணி ஒருவன் குத்துச்சண்டை பழகவிரும்பினான்.முதல் நாள் பாடம் படிக்குமுன் அவன் உடம்பில் ஏகப்பட்ட குத்துக்கள் விழுந்தன.அடுத்த நாள் அவன் குருவிடம் சொன்னான்,''எனது எதிரியை நையப் புடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்.இப்போது அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன்.நாளை என் எதிரியை இங்கே அனுப்புகிறேன்.அவனுக்கு மீதியை நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கெளரவம்

நெப்போலியன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி பேசும் போது,''ரஷ்யாவில் நாங்கள் சண்டை போடுவது என்றால் அது கௌரவத்திற்காகவே,''அடுத்துப் பேசிய நெப்போலியன்,''அது உண்மை தான் அம்மணி!இல்லாத ஒன்றிற்காகத்தானே எல்லோரும் சண்டையிடுவார்கள்,''என்று சொன்னாராம்.

நீங்கள் யார்?
சார்லஸ் லாம்ப் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தார்.கூட்டத்தினர்,''ஷ்ஷ்ஷ்.....'' என்று ஓசைப் படுத்தினார்கள்.லாம்ப் கூட்டத்தைப் பார்த்து,''பாம்பு,வாத்து,முட்டாள் மூவரும் தான் இம்மாதிரி ஒலி எழுப்புவது உண்டு.மேடைக்கு வந்து நீங்கள் யார் என்பதை அறிமுகப் படுத்திக் கொள்கிறீர்களா?என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோம்பேறி

ஒரு ஊரில் ஒரு கெட்டிக்கார சோம்பேறி இருந்தான்.அவன் எந்த வேலையும் தான் செய்யாது,மற்றவர்கள் மூலமே செய்து கொள்வான்.
ஒரு சமயம் அவன் தன தோட்டத்தில் ஒரு புதிய கிணறு தோண்ட விரும்பினான்.சில அடி தூரம் அவன் தானே தோண்டி விட்டு மேலே ஏறி வந்து தன வேட்டியையும் முண்டாசையும் அவிழ்த்துப் பள்ளத்தருகே வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
அவன் போன பின் அந்தப் பக்கம் வந்த கிராம மக்கள் பாதி தோண்டப்பட்ட கிணற்றோரம் அவன் துணிகளைப் பார்த்து விட்டு உள்ளே எட்டிப் பார்த்து ஒருவரும் இல்லாததால் அவனை மண் சரிந்து மூடி விட்டது என்றெண்ணி  எல்லோரும் கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.தண்ணீர் தென்படும் வரை தோண்டியும் உடல் கிடைக்காததால் எல்லோரும் வீடு திரும்பினர். சிரமப்படாமல் தன கிணறு முழுக்கத் தொண்டப்பட்டதைக் கண்டு அந்தக் கெட்டிக்காரச் சோம்பேறி மகிழ்ச்சி அடைந்தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அயிரை மீன்

ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தள்ளாதவன்

கி.வா.ஜ.வும் அவர் நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர்.வழியில் கார் நின்று விட்டது.;;சரி,இறங்கித் தள்ளுங்கள்,''என்றார் ஓட்டுனர் கி.வா.ஜ.வும் இறங்கித் தள்ளச் சென்ற போது மரியாதை காரணமாக ''நீங்கள் சும்மா இருங்கள்,''என்றார் காரின் சொந்தக்காரர்.கி.வா.ஜ.,கேட்டார்,''ஏன்,நான் தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இலைகள்

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம்                   --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை           ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை                        ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை                   --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள்  --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள்          --மடல் 
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள்            --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள்          --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள்             --கீரை 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பந்தயம்

ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.''கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.''அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?'என்று கேட்டார்.அவனோ,''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,''என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான். புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,''என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.உடன் பதில் வந்தது.''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே  உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விந்தை எண்

2519  ஒரு விந்தையான எண்
இதை 9   ஆல் வகுத்தால் 8   மீதி வரும்.
இதை 8    ஆல் வகுத்தால்  7    மீதி வரும்

இதை7    ஆல் வகுத்தால்6    மீதி வரும்
இதை 6    ஆல் வகுத்தால் 5    மீதி வரும்
இதை5    ஆல் வகுத்தால்4    மீதி வரும்
இதை4    ஆல் வகுத்தால்3    மீதி வரும்
இதை3    ஆல் வகுத்தால் 2   மீதி வரும்
இதை2    ஆல் வகுத்தால்1    மீதி வரும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சம்மதம்

அந்தரே என்பவர் இலங்கைமன்னரின் அரசவை விகடகவி.அந்தரே ஒரு முறை மன்னரைப் பழி வாங்க எண்ணினார்.அரசருக்குச் சொந்தமான வயலில் நெல் அறுவடை ஆரம்பம் ஆகியது.வைக்கோலையும் நெல்லையும் பிரிக்க காளை மாடுகள் தேவைப்பட்டன.அந்தரேயைக் கூப்பிட்டுமன்னர்,''நூறு காளைகளுக்குச் சொல்லி விடு,''என்று சொல்லி விட்டார்.மறு நாள் காலை மன்னரும் மற்றவர்களும்  காளைகளுக்காகக் காத்திருந்தனர்.ஆனால் காளைகள் வரவில்லை.மன்னர் அந்தரேயைக் கூப்பிட்டு காரணம் கேட்க, அந்தரே ,''நானே நேரே போய்,காலையில்வந்து விட வேண்டும் என்று நூறு காளைகளிடம் சொல்லி விட்டு வந்தேன்.அவை கூட வருவதாகத் தலையையும் காதுகளையும் ஆட்டி சம்மதித்தன.ஆனால் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.''என்றாரே பார்க்கலாம்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கூச்சல்

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான சார்லஸ் லாம்ப்,முதல் முதலாக நாடகம் ஒன்றை எழுதி முடித்தார்.நாடகம் நடந்தது.கூடியிருந்த மக்களுக்கு நாடகம் பிடிக்க வில்லை.கூச்சலிட்டனர்.கூட்டத்தினர் கூச்சலிட்ட போது சார்லஸ் லாம்பும் சேர்ந்து கூச்சலிட்டார்.கூட இருந்த நண்பர்,''நீங்களும் ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?''என்று கேட்டார்.லாம்ப் கூறினார்,''இல்லாவிடில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் நான் தான் என்று கண்டு பிடித்து உதைத்திருப்பார்களே?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மிருகம்

வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி; ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு;தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி; சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்; பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன்  கழுதை;தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
                                                       --மகா கவி பாரதியார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மூளை

ஒரு பெரிய வழக்கு. அதில் சி.ஆர்.தாஸ்,நார்ட்டன் துரை ஆகியோர் எதிர் எதிர் வழக்கறிஞர்கள்.ஒரு முறை சி.ஆர்.தாஸ் வாதம் செய்து கொண்டிருக்கையில் நார்ட்டன் எழுந்து துடுக்காக,''மிஸ்டர் தாஸ்!ரொம்பப் பேச வேண்டாம்.உம்மை என் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வேன்,''என்றார்.உடனே தாஸ்,    ''அப்படிச் செய்தால் உம்முடைய தலையில் இருப்பதை விட உமது பாக்கெட்டுக்குள் அதிக மூளை இருக்கும்.''என்றாராம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்டனை

பிரெஞ்சுக்காரரான வால்டேர் ஒருமுறை நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.அப்போது இங்கிலாந்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மனோநிலை மக்களிடம் இருந்தது.ஒரு நாள்  அவர்ஒரு தெரு ஓரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் கூட்டமாய் அவ்வழியே வந்தனர்.வால்டேரைப் பார்த்தவுடன்,''அதோ,ஒரு பிரெஞ்சுக்காரன் போகிறான்.அவனைத் தூக்கிலிடுங்கள்,''என்று கத்திக் கொண்டே அவரை சூழ்ந்து கொண்டனர்.வால்டேர்  அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''இங்கிலாந்தின் பெருமக்களே!நான் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் ஒரு பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே பெரிய தண்டனை என்று நான் எண்ணுகிறேன்.இந்தத் தண்டனை போதாதா?இதற்கு மேலும் ஒரு தண்டனை அவசியம் என்று நினைக்கிறீர்களா?''அவருடைய சமயோசிதமான பதிலைக் கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.அவர் த்ங்குமிடத்திற்குப் பத்திரமாக அழைத்து சென்றார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏழு ஜாடி தங்கம்

கவலையில்லாத மனிதன் ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் புல்வெளிகளிலேஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் திரிவான்.அவனுக்கென்று ஒரே ஒரு  துண்டு  தவிர வேறு உடமைகள் கிடையாது.கவலையில்லாத அவனைக் கண்டு சைத்தானுக்குக் கவலை உண்டாயிற்று.அவனுக்குக் கவலை உண்டாக்க முடிவு செய்தது.ஒரு நாள் பகலில் அவன் ஒரு மரத்தடியில் ஆனந்தமாகப் படுத்திருந்த போது சைத்தான்,அசரீரியாகச் சொன்னது,''மனிதனே,நீ படுத்திருக்கும் இடத்திற்கு கீழே ஏழு  ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது.அதையெடுத்துச் சென்று மகிழ்வுடன் இரு.''முதலில் அக்கறை காட்டாத அம்மனிதன் பிறகு அசரீரி உண்மையானது தானா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்து தோண்டிப் பார்க்கையில் எழு ஜாடிகள் தென்பட்டன.ஆர்வமுடன் அவற்றை எடுத்துப் பார்த்ததில் ஆறு ஜாடி முழுக்கவும்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிலும் தங்கக் காசுகள் இருந்தன.அவனுக்கு தங்கக் காசுகளைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஆனால் ஏழாவது ஜாடியில் பாதி அளவே தங்கம் இருந்தது அவனுக்கு  வருத்தத்தைத் தந்தது.உடனே அவன் ஒரு முடிவு செய்தான்.கடுமையாகப் பாடுபட்டுச் சம்பாதித்தேனும் அந்த ஏழாவது ஜாடியைத் தங்கக் காசுகளால் நிரப்ப வேண்டும் என்று எண்ணி அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.சம்பாதித்த பணத்தை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான் பல காலம் உழைத்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.அவனுடைய மகிழ்ச்சி,ஆனந்தமான பாடல்கள்,ஆட்டபாட்டங்கள் எல்லாம் அவனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவன் இப்போது கவலையே உருவானவனாக இருந்தான்.சைத்தான் அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்.அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு துறவி அவனுடைய சமீப கால மாற்றங்களைக் கண்டு அவனிடம் கேட்டார்,''எங்கே போயிற்று உன் சந்தோசமெல்லாம்?அந்த ஏழு   ஜாடி தங்கம் உனக்குக் கிடைத்ததா?''அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவருக்கு இது எப்படித் தெரிந்தது என்று வினவினான்.துறவி சொன்னார்,''இதற்கு முன் இந்த ஜாடிகளை எடுத்தவர்கள் கதி இவ்வாறே ஆயிற்று.மேலும் இந்த ஏழாவது ஜாடி இறந்த ஒரு பேராசைக்காரனின் மண்டை  ஓட்டில் செய்யப்பட்டது.அதை நிரப்ப யாராலும் முடியாது.முதலில் அந்த எழு ஜாடிகளையும் தூக்கி எறிந்து விட்டு முன் போல் ஆனந்தமாக வாழ்வாயாக!''
பணத்தின்குணமே  அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே  தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கணக்குப்பாடம்

கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான்.அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார்.உடல் நடுங்க மகன் சொன்னான்,''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே,நீங்கள் பார்க்கவில்லையா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-8

ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.
வீழ்ச்சி அடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.
**********
வெற்றி தலைக்கும் ,தோல்வி இதயத்திற்கும்
செல்லாது பார்த்துக்கொள்.
**********
காலம் என்பது........
நம்பிக்கைகளின் தொட்டில்;
ஆசைகளின் கல்லறை;
முட்டாள்களுக்குக் கற்றுத் தரும் குரு.
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்.
**********
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
**********
இளமையாக இருக்கும் போது ரோஜா மலர்கள் மேல் படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மேல் படுக்க நேரிடும்.
**********
செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்;
ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது.
**********
பரவசத்தோடு பார்;எல்லாம் பரவசமாகும்!
எல்லாமே பார்க்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
**********
பயம் எப்போதும் எலியைக் கூடப் புலியாகக் காட்டும்.
**********
மனிதனுடைய பெரிய பிரச்சினை அடுத்த மனிதன் தான்.
கூடவே இருந்தாலும் பிடிக்காது;இல்லாவிட்டாலும் பயம்.
**********
தன கோபத்துக்கு மரியாதை இல்லை என்று தெரிந்தால்
யாரும் கோபப் படுவதில்லை.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

துறவறம்

ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

லைலா மஜ்னு

லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில்  மஜ்னு என்றால்  பைத்தியம் என்று பொருள்.அவனுடைய இயற்பெயர்  கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள்.லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது.கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர்.இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ஆசைப்பட்டார்.லைலாவைப் பார்த்த மன்னர் கயசை வரவழைத்து,''இந்தப்பெண் அப்படி ஒன்றும் அழகாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ இல்லையே!நீ ஏன் அவள் பின் பைத்தியமாகத் திரிகிறாய்?உனக்கு இவளைவிட எல்லா வகையிலும் சிறந்த பெண்ணைப் பார்த்து உனக்கு நான் கல்யாணம் செய்து வைக்கிறேன்.''என்று சொன்னார்.கயஸ் சொன்னான்,''லைலாவின் அழகை கயஷின்கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும்.வேறு கண்களுக்கு அவளின் அழகும் பெருமையும் தெரியாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அதிக விலை

பாலஸ்தீன நாட்டுக்கு ஒருவர் உல்லாசப் பயணம் சென்றார்.அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது.இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை.படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.இருபதுடாலர் என்று அவன் சொன்னான்.இந்த தொகை மிகவும் அதிகம் என்று வாதிட்டார்,பயணி.''அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.''என்றான் படகோட்டி.'நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்.'என்றார் பயணி.''ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார்,தெரியுமா?''என்று கேட்டான் படகோட்டி.''.படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால்,நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!''என்று ஒரு  போடு போட்டார் பயணி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அழைப்பு

வயதான மனிதன் ஒருவன்,காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது,முடியவில்லை.நொந்து போய்,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?எமதர்மா!எமதர்மா,''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,'அப்பனே,என்னை நீ அழைத்த காரணம் என்ன?'என்று கேட்டான்.திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்,''என்றாராம்.உயிர் என்றால் யாருக்கும் வெல்லக்கட்டி தானே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முன் முடிவு

வாழ்வில் எந்த விஷயத்தை அணுகும் போதும் நாமே ஒரு முன் முடிவு செய்து கொள்ளாமல் நடுநிலையோடு அணுகுவதுமிக அவசியம். முன் முடிவோடு அணுகும் போது அதன் மீது நமக்கு இருக்கும் உடன்பாடோ,முரண்பாடோ உண்மையைக் காண முடியாமல் நம் கண்களையும் மனதையும் குருடாக்கிவிடும்.''அவரா?அவர் அப்படித்தான் சொல்வார்.''''அதுவா,அது அப்படித்தான் இருக்கும்.''என்று ஒரு முன் முடிவு எடுத்துக் கொண்டுஒரு விஷயத்தை அணுகுபவர்களால் உண்மை நிலையைக்காண முடியாது.முன் முடிவுக்காரர்களிடம் முட்டிக் கொள்வதை நாம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, January 10, 2011

எப்பூடி?

ஒரு கணவன் வடை தின்ன ஆசை கொண்டு,தேவையான பொருட்களை வாங்கி மனைவியிடம் கொடுத்து வடை சுட்டு வைக்கச் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டான்.அவள் நூறு வடை சுட்டாள்.ருசி பார்ப்பதற்காக ஒரு வடையை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள்.வடை மிகவும் ருசியாயிருக்கவே அவளால் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்ந்து சாப்பிட்டாள்.இப்படியே  99 வடைகளை சாப்பிட்டு விட்டாள்.கணவன் வந்ததும்,மீதமிருந்த ஒரு வடையை மட்டும் பயந்து கொண்டே ஒரு தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தாள்.விபரம் அறிந்து கொண்ட கணவன் ஆச்சரியத்துடன்,''அதெப்படி 99 வடைகளை சாப்பிட்டாய்?என்று கேட்டான்.வடையின் ருசியிலிருந்து இன்னும் மீளாத அந்தப்பெண் ,'இப்படித்  தான் தின்றேன்!'என்று கூறிக் கொண்டே மீதமிருந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்று விட்டாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாம்பழம்

ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள்.அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள்.எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார்,''எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும்.''சிறுமி சிறிது நேரம் யோசித்து  விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்,'அம்மா,நீங்களே பகிர்ந்து கொடுங்கள்.உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மீன்

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான்.அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும்இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.'அது எப்படி செயல் படுகிறது ?'என்று கேட்டான்.''சொல்கிறேன்.ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.''என்றான்.வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து  சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும்.அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.''வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான்,'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது.இப்படித்தான் நீ மீன் பிடிப்பாயா?அது சரி,இன்றுஇந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?'மீனவன் சொன்னான்,''இன்று நீ ஆறாவது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உலகம் அழியும்

முல்லாவிடம் ஒரு கொழுத்த ஆடு இருந்தது.சிறுவர்கள்,அதை வெட்டி விருந்து வைக்கச் சொல்லி முல்லாவை நச்சரித்தனர்.முல்லாவிற்கு மனம் இல்லை.சிறிது நாள் போகட்டும் என்றார்.சிறுவர்களோ விடவில்லை.''முல்லா,நாளை உலக அழியப் போவது உனக்குத் தெரியாதா?அதனால் இன்றே விருந்தை வைத்துக் கொள்ளலாம்.''என்றனர். முல்லா உடனே உல்லாசப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்து,அங்கு சென்று ஆட்டை வெட்டினார்.முல்லா சமைக்க ஆரம்பிக்கும் முன் சிறுவர்கள் அங்கிருந்த குளத்தில் குளிக்கப் போனார்கள்.முல்லா சமைக்க ஆரம்பித்தார்.சிறுவர்கள் குளித்து வந்த பின் பார்த்தால்,அவர்களின் ஆடைகளைக் காண வில்லை.முல்லாவிடம் அது பற்றி விசாரித்தனர்.முல்லா சொன்னார்,''அடே,உலகம் நாளை அழியப் போகிறது. உங்களுக்கு ஆடைகள் எதற்கு?எனவே உங்கள் ஆடைகளை அடுப்பில் போட்டு தான் சமையல் செய்தேன்.''முல்லாவை ஏமாற்ற நினைத்த சிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாடோடிப்பாடல்

நாடோடிப்பாடல்கள் மனித உணர்வுகளை அழகாக,தெளிவாகக் காட்டுகின்றன.காதல்,வீரம்,நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியவை.இலக்கண வரம்பை மீறியவை.கற்பனை வளம் கொண்டவை.இதோ,ஒரு பாடல்;

முள்ளு முனையிலே மூணு குளம்   வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத  குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப்  பல்லே இல்லை..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஞாபக சக்தி

அலெக்சாண்டரிடம் இந்தியாவிலிருந்து வரும் போது,நான்கு வேதங்களையும் எடுத்து வருமாறு அவருடைய குரு கேட்டுக் கொண்டார்.யாரிடம் இந்த வேதங்கள் உள்ளன என்று விசாரித்ததில் ஒரு பிராமண குடும்பத்தில் இருப்பதாகவும் அதை அவர்கள் நிச்சயம் தர மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.அலெக்சாண்டர் படையுடன் அந்த வீட்டை சூழ்ந்து கொண்டு  நான்கு வேதங்களையும் கொடுக்காவிடில் வீட்டிற்குத் தீ வைக்கப் போவதாக மிரட்டினார்.குடும்பத் தலைவன்,மறுநாள் காலை தருவதாக வாக்களித்தான்.இரவு குறிப்பிட்ட பிரார்த்தனை செய்த பின் தான் தர முடியும் என்று கூற அவர்களால் தப்பிச் செல்ல முடியாது என்ற நிலையில் அலெக்சாண்டர் அதற்கு ஒத்துக் கொண்டார்.மறுநாள் காலை அலெக்சாண்டர் வீட்டினுள் சென்று பார்த்த போது,நான்கு வேதங்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன.'நீ என்ன செய்கிறாய்?'என்று அவர் வினவ,குடும்பத்தலைவன் சொன்னார்,''இந்த நான்கு வேதங்களும் நெருப்புக்கு இரையாகி விட்டன.இங்கே இருக்கும் நால்வரும் என்னுடைய மகன்கள்.இரவு முழுவதும் இந்த வேதப் புத்தகங்களை நான் படிக்க,அதை இவர்கள் கவனமாகக் கேட்டு  ஞாபகத்தில் வைத்துள்ளனர்.நீங்கள் இவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.''கவனித்துக் கேட்டது அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள  இயலுமா?அலெக்சாண்டரால் நம்ப முடியவில்லை.வேறு சில பிராமணர்களை வரவழைத்து இவர்கள் ஞாபகத்தில்வைத்திருப்பது சரியாக இருக்கிறதா என்பதனை சோதித்துப் பார்த்தார்.அவர்கள் வேதத்தில் உள்ளதை எழுத்துப் பிசகாமல் திரும்பச் சொன்னார்கள்.எப்படிஅவர்களால் அவ்வளவையும் ஞாபகத்தில்  வைத்துக் கொள்ள முடிந்தது?இதன் ரகசியம் இது தான்;உங்கள் ஞாபக சக்தியில் 90% பயனற்றவைகளாக இருக்கின்றன.நீங்கள் குப்பைகளையெல்லாம் மறந்து போகக் கூடிய தகுதி உள்ளவர்களாக இருந்தால்,பிறகு எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி வந்து விடும்.பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.அதனால் அவர்களால் நன்கு வாதங்களை மட்டுமல்ல,அதற்கு மேலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது.
சரியான கற்றுக் கொள்ளலுக்கு சரியான கவனித்தல் முதலில் அவசியம்.சரியான கவனித்தலுக்கு மனதை வெறுமை செய்வது அவசியம்.சரியாக ஞாபகத்தில் கொள்ளுதல் என்றால் தொடர்ந்து அழுக்குகளை,குப்பைகளை வெளியேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.மனத்தைக் குப்பைகளால் நிரப்பாதீர்கள்.உங்கள் மனம் எல்லா இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது.இதனால் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.மனதில் அவ்வளவு ஆசாபாசங்கள் உள்ளன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொடிய நரகம்

ஒருவன் இறந்தபின்,தான் நரகத்தில்  இருப்பதாக உணர்ந்தான்.ஆனால் எல்லோரும் பயமுறுத்தியதை போல்கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகளோ, வேறு எந்த பயங்கரமான் சம்பவங்களோ  இல்லை.அவன்  ஒரு குளிரூட்டப் பட்ட,அழகான வேலைப் பாடுகளுடனும் எல்லா வசதிகளும்  உள்ள ஒரு அறையில் இருந்தான்.ஆனால் அந்த அறையில் வெளியே செல்லும் வழி கிடையாது.அவனுடன் அந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்.கேட்ட ஆசைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப் பட்டன.உடன் இருந்தவர்கள்,ஒரு வயதான பெண்,ஒரு இளம் பெண்,ஒரு இளைஞன்.ஓரிரு நாட்கள் அவர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேசிப் பேசி,இனிப் பேச ஒன்றுமில்லை என்ற நிலை.பேச்சைத் தொடர வழியில்லை.அங்குள்ள விளக்குகளை அணைக்க இயலாது.அவர்கள் உண்டார்கள்;உறங்கினார்கள்.அவர்கள் தனிமையிலும் இல்லை.ஆக அவர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் உண்டாக்குபவர்கள் ஆகிவிட்டார்கள்.திடீரென விழித்துக் கொண்ட மனிதனுக்கு இது தான் நரகம் என்பது தெரிந்தது.அவனுக்கு அங்கே இனி வாழ்வது முடியாத காரியமாய்த் தோன்றியது.மற்ற மூவரின் இருப்பே சுமையாகத் தெரிந்தது.தற்கொலை செய்து கொள்ள வழியில்லை.இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்ட போது,நரகம் அழிவில்லாதது என்று பதில் வந்தது.ஆக, அடுத்தவர் தான் நரகம்.நம்முடைய மதங்கள் சித்தரிக்கும் நரகத்தை விடக் கொடியது.இதற்குப் பதிலாக எண்ணைக் கொப்பரையில் தூக்கி எறியப் பட்டால் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மூடப் பட்ட அறையில் சிலருடன் எப்போதும்  இருப்பது என்பது பெரிய நரகம் தான்!
                                               ---   ஜீன் பால் சார்த்ரே சொன்ன  கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

களைப்பு

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,ஒருமுறை காரில் தன நண்பர்களுடன்  ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.போகும் வழியில் கார் ஒரு புளிய மரத்தில் மோதி  விபத்து ஏற்பட்டது.கார் நசுங்கி அனைவருக்கும் காயம். கலைவாணர் கொஞ்சம் கூடப் பதட்டப் படாமல் அனைவருக்கும் முதலுதவி செய்ய ஏற்பாடு  செய்தார்.ஒருவரை பக்கத்து ஊருக்கு அனுப்பி ஒரு வாடகைக் கார் பிடித்து வரச் சொன்னார்.புளிய மரத்தடியில் ஒரு விரிப்பை விரித்து எல்லோரையும் உட்காரச் சொன்னார்.வெற்றிலை போட்டுக் கொண்டே எல்லோருடனும் சாதாரணமாகச் சிரித்துப் பேச ஆரம்பித்தார்.
அப்போது அந்த வழியே சென்ற சிலர் கலைவாணரை அடையாளம் கண்டு பதட்டத்துடன் வந்து விபத்து பற்றி விசாரித்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்தனர்.கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஒன்னுமில்லீங்க.எல்லோருக்கும் களைப்பாய் இருந்தது.எனவே வண்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.''அந்த நிலையில் வேறு யாராலும் இப்படி நிதானமாகப் பேச முடியுமா?அது தான் கலைவாணர்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிறந்த அறிஞர்

சாக்ரடீசுக்கு சிறையில்நஞ்சு கொடுக்கப் படுவதற்கு முன் டெல்பியிலிருந்த தெய்வீக அசரீரி,அவரை,முழு உலகிலும் மிக அறிவு கொண்டவர் என்று மொழிந்தது.இதைக் கேட்டு மகிழ்வடைந்த பலர் ஏதென்ஸ் சென்று அவரிடம்,''இதுவரை இதுபோல் நடந்தது இல்லை.இதற்கு முன் யாரையும் டெல்பியின் தெய்வ வாக்கு உலகிலேயே சிறந்த அறிஞர் என்று கூறியதில்லை.உங்களைத் தான் சிறந்த அறிஞர் என்று கூறியிருக்கிறது.நீங்கள் தான் உலகின் சிறந்த அறிஞர்.''என்றனர்.
அதற்கு சாக்ரடீஸ் ,''நீங்கள் டெல்பிக்குத் திரும்பச்சென்று,இது நாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும்,இம்முறை அது தவறு செய்து விட்டது என்று அதனிடம் கூற வேண்டும்.ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது.''செய்தி கொண்டு வந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அவர்கள் திரும்பச் சென்று தெய்வ வாக்கிடம்,''சாக்ரடீஸ் இதை மறுக்கிறார்.அவர் உலகிலேயே சிறந்த அறிவாளி இல்லை என்றும் தனக்கு  ஒன்றும் தெரியாது என்றும் கூறுகின்றார்,''என்றனர்.
இங்கே தான் இந்த சம்பவத்தின் அழகே இருக்கிறது.தெய்வ வாக்கு,''அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.இதில் முரண்பாடு எதுவுமில்லை.''என்று கூறியது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தாக்குதல்

அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த குடியிருப்பில் பேசுவது கேட்கவே செய்யும்.ஒரு அடுக்கு மாடி வீட்டில் அனைவரும் ஒரு விஷயத்தைப் பற்றி புதிராக உணர்ந்தனர்.ஒவ்வொரு தம்பதியினரும் சண்டையிட்டுக் கொண்டும் கூச்சலிட்டுக்  கொண்டும் இருக்க,ஒருவர் வீட்டிலிருந்து மட்டும் எப்போதும் சிரிப்பு சப்தம் கேட்க முடிந்தது.ஒரு நாள் விபரம் அறிய அனைவருமொன்று கூடி அவரிடம் கேட்டார்கள்.அவர் சொன்னார்,''என்னை வற்புறுத்தாதீர்கள்.அந்த ரகசியம் அவமானகரமானது.''அனைவரும் மிக வற்புறுத்திக் கேட்க அவர்  சொன்னார்,''என் மனைவி சாமான்களை என் மீது வீசுவாள்.அவள் குறி தவறினால் நான் சிரிப்பேன்.என்னைத் தாக்கி விட்டால்  அவள் சிரிப்பாள்.நான் அவள் தாக்குதலை தவிர்க்க கற்றுக் கொண்டுள்ளேன், அவள் என்னை எப்படித் தாக்குவது என்று கற்றுக் கொள்கிறாள்.''
இருபது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர்,தனது மனைவியிடமிருந்து மண விலக்கு கேட்க,அவர்களது சிரிப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த நீதிபதி,காரணம் கேட்டார்.அவர் சொன்னார்,''அவள் என்னை அடிக்கிறாள்.நான் பலவருடங்களாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.''
நீதிபதி கேட்டார்,''இத்தனைஆண்டுகள் சமாளித்த உனக்கு இன்னும் சில ஆண்டுகள் சமாளிக்க முடியாதா?''
அந்த மனிதர் சொன்னார்,''விஷயம் அதுவல்ல.முதலில் என்னால் அவளுடைய தாக்குதல்களைத் தவிர்க்க முடிந்தது.இப்போது அவள் நன்றாகக் குறி வைக்கிறாள்.கடந்த பத்து ஆண்டுகளாக அவள் மட்டும் தான் சிரிக்கிறாள்.ஆரம்பத்தில் பாதிப் பாதியாக இருந்த பிரச்சினை  இப்போது எனக்கு முழு பாதிப்பாக மாறி விட்டது.என்னால் தாங்க முடியவில்லை.நான் ஒரு முழு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறேன்.இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தாய் மொழி

ராஜா டோஜ்ஜின் தன் அரண்மனையில் அறிஞர்களுக்கு மிக முக்கியத்துவம்  கொடுத்தார்.எனவே காளிதாசர் உட்படப் பல அறிஞர்கள் அங்கே குவிந்திருந்தனர்.ஒரு நாள் அரசவைக்கு வந்த ஒருவன்,தான் முப்பது மொழிகளில் சரளமாகப் பேச வல்லவன் என்றும் அதில் எது அவன் தாய் மொழி என்று கண்டு பிடிக்கும் அறிஞருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகவும்,கண்டுபிடிக்க முடியாவிடில் ஒவ்வொரு அறிஞரும் தலா ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டும் என சவால் விட்டான்.எல்லா அறிஞர்களும் இப்போட்டியில் தோற்றனர்.அவன் எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசியதால் யாராலும் வித்தியாசம் காண இயலவில்லை. காளிதாசர் அவனை மேடைக்கு அழைத்து,அவன் கடைசிப் படியில் ஏறியதும் அவனைப் பிடித்துக் கீழே தள்ளினார்.அவன் படிக்கட்டிக்களில் உருண்ட போது கோபத்தில் கத்தினான்.காளிதாசர் சொன்னார்,''இப்போது எந்த மொழியில் கத்தினாயோ,அது தான் உனது தாய்  மொழி,''என்றார்.அவன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
கோபத்தில் உங்கள் நினைவு உங்கள் வசம் இருப்பதில்லை.மேலும் இது தன் சவாலுக்கு பதில் என்பதை அவன் உணரவில்லை.அவனது மனதின் அடி ஆழத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது அவனது தாய் மொழி தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சகோதரி

அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.போரஸ் வெற்றிமுகத்தில் இருந்தார்.ஒரு நாள் மாலை போருக்குப் பின் தன் கூடாரத்தில் இருந்த போது ஒரு பெண்மணி அவரை நோக்கி வந்தார்.அந்தப் பெண் அலெக்சாண்டரின் மனைவி என்பதை அறிந்து கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.அந்தப்பெண்,போரில் தன் கணவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்று வேண்டினாள்.பின் திடீரென ஒரு ரக்ஷாபந்தன் கயிறினைப் போரஸின் கரத்தில் கட்டினாள்.பின் வந்த வழியே  சென்று விட்டாள்.
 மறுநாள் கடுமையான போர் நடந்தது.போரஸ் அலேக்சாண்டரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்ச முனைந்த போது தன் கையிலிருந்த ரக்ஷா பந்தன் கயிறினைக் கவனித்தார்.உடனே ஈட்டியை பின்னோக்கி இழுத்து விட்டுசொன்னார்,''உன் மனைவி என் சகோதரி.அவள் விதவையாகக் கூடாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வரம்

ஒருவன் சிவ பெருமானை நோக்கி வருடக் கணக்காகத் தவமிருந்தான்.சிவன் அவன் எதிரில் தோன்றி மூன்று வரங்கள் தருவதாகக் கூறினார்.முதல் இரண்டு வெகுமதிகள் அவன் குழப்பத்தால் வீணாயிற்று.மூன்றாவது வரம் என்ன கேட்கலாம் என அவரிடமே வினவினான்.அவர் சொன்னார்,''ஒரே ஒரு விருப்பம்,ஒரே ஒரு ஆசை தான் மதிப்பு வாய்ந்தது.அது தான் ஆசையின்மை.நீ கேட்க வேண்டியது ஆசையின்மையைத்தான்.நீ வேறு எதைக் கேட்டாலும்,அடுத்த கணமே வேறு ஏதாவது வேண்டுமென விரும்புவாய்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பட்டாம் பூச்சி

வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என  குருவிடம்  சீடன்  கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.''பரவாயில்லை,நாம் இந்தத்  தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி  தானே கிடைக்கும்,''என்றார் குரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிண்டல்

நிக்கோலாஸ் என்பவன் 1825 ல் ரஷ்யாவில்  ஜார் மன்னனாக  அரியணை ஏறினான்.அவன் அரியணை ஏறியதும் நாடு முழுக்க,ஐரோப்பிய நாடுகளைப் போல நாகரீகம் கொண்டு வர வேண்டும் என்று கூறி ஒரு கூட்டம் புரட்சியில் ஈடுபட்டது.அந்தக் கூட்டத்தின் தலைவன் ரைலேஎவ் என்பவனை மன்னன் பிடித்து மரண தண்டனை வழங்கினான்.புரட்சியையும் அடக்கினான்.
ரைலேஎவ்  தூக்கு மேடை ஏறினான்.தூக்குக் கயிறு மாட்டப் பட்டது.விசையை அழுத்தும் போது திடீரெனக் கயிறு அறுந்து அவன் கீழே விழுந்தான். ரஷ்யாவில்  அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை உண்டு.இது மாதிரி தூக்கில் இட முடியாத சூழ்நிலை  ஏற்பட்டால் அதைக் கடவுளின் ஆணை என்று கருதி குற்றவாளியை மன்னித்து விட வேண்டும். இதனால் தூக்கிலிருந்து தாம் தப்பி விட்டோம் என்பதை உணர்ந்த ரைலேஎவ்,''பாருங்கள்,,ரஷ்யாவில் ஒரு கயிறைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை.ரஷ்யாவை ஆள்பவர்களுக்கு எதுவுமே தெரியாது.''என்று கேலியாகக் கூறினான்.ரைலேஎவைத்  தூக்கிலிடும் போது நடந்த நிகழ்ச்சியை காவலன் ஒருவன்  மன்னனிடம் போய்ச் சொன்னான்.மன்னனும் நடைமுறை கருதி ரைலேஎவை மன்னிக்கும் ஆணையை தயார் செய்யச் சொன்னான்.அப்போது தற்செயலாக,மன்னன்,காவலனிடம்,''ரைலேஎவ் இது பற்றி ஏதாவது பேசினானா ?''என்று கேட்டான். காவலன் அவன் பேசிய விபரத்தைச் சொல்ல மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே மன்னிப்பு ஆணையை கிழித்தெறிந்தான்.அவனை மீண்டும் தூக்கிலிட உத்தரவிட்டான். மறுநாள் ரைநேஎவ் தூக்கிலிடப்பட்டான்.இம்முறை கயிறு ஒன்றும் ஆகவில்லை
நம் வாயிலிருந்து வார்த்தைகள் ஒரு முறை வெளியே வந்து விட்டால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது.எனவே வார்த்தைகளைக் கவனத்துடன் கையாள வேண்டும்.குறிப்பாகக் கேலி,கிண்டல்  பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.கேலி செய்யும் போது ஏதோவொரு இன்பம் தோன்றும்.ஆனால் அது தற்காலிகமானது.ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நோயின் போது

வேறு எப்போதையும் விட நோயுறும் போது தான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன.வீடு கற்றுத்தர மறந்ததை நோய்ப் படுக்கை கற்றுத் தந்து விடுகிறது.வாழ்வின் அருமையையும், யார் நமக்கு நெருக்கமானவர்கள்,யார் நம்மைப் பயன் படுத்திக் கொண்டவர்கள் என்பது நோயுறும்  போது தான் தெரியத் தொடங்குகிறது.உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. இயல்பாக இருக்கும் போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதேயில்லை.    வலியின் முன்னால் வயதோ,,பணமோ,பேரோ,புகழோ,எதுவும் நிற்பதில்லை. வலி மனிதனை உண்மைக்கு மிக நெருக்கம் ஆக்குகிறது.தன்னைப் பற்றி தான் கொண்டிருந்த அத்தனை பெருமிதங்களையும் ஒரே நிமிடத்தில் கரைத்து அழித்து விடுகிறது.நோய் ஒரு வகையில் நமது உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.
நோயின் போது, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப் பட்டது போலவும்,தன்னை அடியோடு உலகம் மறந்து போகும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.தான் படுக்கையில் இருக்கும் போது மற்றவர்கள் இயல்பாக  இருப்பது  குறித்து நோயாளிக்கு  ஆத்திரம் வருகிறது.தனக்காக மற்றவர்கள் வருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறான்.வாழ்க்கை தன்னைப் புரிய வைப்பதற்குசில  நிகழ்வுகளையும்,தருணங்களையும் ஏற்படுத்துகிறது.உடலில் தோன்றிய நோய் நீங்கக் கூடும்.ஆனால் நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ் நாள் முழுவதும் கூட இருக்கும்.
                                                              __எஸ்.ராமகிருஷ்ணன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சொல்லாதே

ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார் கறுப்பர் இன மக்களிடையே நிறைய சேவைகள் செய்து வந்தார்.மக்கள் அவரை மரியாதையுடன் நடத்தினர்.ஒரு முறை கறுப்புப் பெண் ஒருத்திக்கு வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்க, மக்கள் கொதிப்படைந்தனர்.பாதிரியார் அவர்களை சமாதானம் செய்ய,தலைவனை அழைத்து,ஒரு ஆட்டு மந்தையைக் காட்டினார்.''இதெல்லாம் படைப்பின் வினோதம்.அதோ பார்,அந்த ஆட்டு மந்தையில் அனைத்து ஆடுகளும் வெள்ளையாய் இருக்க  ஒரே ஒரு ஆடு மட்டும் கருப்பாக இருப்பது ஏன்?''தலைவன் தலை குனிந்து,'பாதர்,நீங்க சொல்லவில்லை என்றால்,நானும் சொல்லவில்லை' என்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெற்றி வாகை

'வெற்றி வாகை'சூடினார் என்று வெற்றி பெற்றவர்களைக் குறிப்பிடுகிறார்கள். வெற்றி என்றால் தெரியும்.வாகை என்றால் என்ன?சங்க காலத்தில் போர் புரியும் போது போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு மலர்களை அணிந்து கொள்வது வழக்கம்.இறுதி வெற்றி பெற்றவர் வாகை எனப்படும் மலரைச் சூட்டிக் கொள்வது வழக்கம்.இதற்குத்தான் 'வாகை சூடுதல் என்று பெயர்.
**********
கர்நாடக இசைக்கு அப்பெயர் எப்படி வந்தது?
கர்ணம் என்றால் காது.அடகம் என்றால் இனிமை.காதுக்கு இனிமையான இசை என்று பொருள்.
**********
எந்த முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்ற குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திருட்டு

அண்ணன் தம்பி இருவர் மலையேற்றத்துக்குப் போன இடத்தில் ஒரு கூடாரம் அமைத்து இரவில் தங்கினர்.நள்ளிரவில் தம்பிக்கு விழிப்பு வந்தது.தன அண்ணனை எழுப்பி ,'மேலே வானத்தைப் பார்.என்ன தெரிகிறது?'என்று கேட்டான்.அண்ணன் சொன்னான்,''நட்சத்திரங்கள்''தம்பி சொன்னான்,'அப்படி அலட்சியமாகச் சொல்லக் கூடாது.ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகிறது என்ற நிலையை வைத்து இருளில் கூட நாம் திசையைத் தெரிந்து கொள்ளலாம்.'அண்ணன் சொன்னான்,''உனக்கு என்னென்னவோ  தெரிகிறது.எனக்குப் புரிந்தது ஒன்றே ஒன்று தான்.நட்சத்திரம் தெரிகிறது என்றால் நம் கூடாரத்தையே யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று அர்த்தம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கலங்கிய கண்கள்

1965  பாகிஸ்தான் யுத்தத்தில் பூபிந்தர் சிங் என்ற ராணுவ அதிகாரி அடிபட்டு  மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவரைப் பார்க்க வந்தார்.படுக்கையில் நகர முடியாமல் கிடந்த பூபிந்தரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.''தீரத்துக்கும் துணிச்சலுக்கும்  பெயர் பெற்ற பஞ்சாபியர் எதற்கும்  கலங்க மாட்டார்களே?அப்படிப்பட்ட உங்கள் கண்களில் நீரா!''என்று ஆச்சரியத்துடன் வினவினார் பிரதமர்.அப்போது பூபிந்தர் சிங் சொன்னார்,''நான் சாவுக்காகக் கலங்கவில்லை.நாட்டின் பிரதமர் வந்துள்ளாரே,அவரைப் பார்த்தவுடன் எழுந்து விறைத்து  நின்று கம்பீரமாக ஒரு  சல்யூட் செய்ய இயலவில்லையே என்று தான் எனக்கு வேதனையாக உள்ளது.''
இப்போது கலங்கியது எதற்கும் அஞ்சாத சாஸ்திரியின் கண்கள்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விழும் போது

விடிகாலை சேவல் கூவியது.
'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது.
மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது.
''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே!என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா?எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன்  கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன்.
''எழும் போது தாங்க வருபவன் எல்லாம்
விழும் போது தாங்க வருவதில்லை.''
சூரியன் உணர்ந்து சொல்லியது..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சன்மானம்

கருணையுள்ள மன்னர் ஒருவர் தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் வரும் தூரத்தைக் கணக்கிட்டு சன்மானம் கொடுத்து வந்தார்.அதிகப் பணம் பெற வேண்டும் என்ற ஆசையில் ஒருவன் மன்னரிடம் தான் வைகுண்டத்திலிருந்து வருவதாகக் கூறினான்.மன்னர் அவனுக்கு ஒரே ஒரு பொற்காசு மட்டும் கொடுத்தார்.வந்தவன் வருத்தத்துடன் ,'அய்யா,  வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?'எனக்கேட்டான்.
மன்னர் அமைதியாகச் சொன்னார்,''எனக்குத் தெரிந்து வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது.கஜேந்திரன் என்ற யானை,தன காலை முதலை கடித்த போது,'ஆதிமூலமே,'என்று கூப்பிட்ட போது உடனே பெருமாள் வந்து விட்டார். அப்படியானால் வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தானே இருக்க வேண்டும்?அவ்வளவு பக்கத்தில் இருந்து வந்த உனக்கு ஒரு பொற்காசு கொடுத்ததே அதிகம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்பவன்

தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே  சிரிப்பவன்  பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மேலான வாழ்க்கை

ஒரு நகரத்தின் மதில் பிளவு ஒன்றில் கொத்து மலர்கள் பூத்துக் குலுங்கின.பாதுகாப்பான இடத்தில் அவை அமைந்திருந்ததால் காற்று,புயல்,மழை, வெயில் இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை.
மதிலுக்கு அந்தப் பக்கம்,தரையில் ஒரு ரோஜாப் புதர் இருந்தது.ரோஜாக்களின்  அழகு,மதில்  மேல் இருந்த காட்டு மலர்களின் அழகை மங்க செய்து கொண்டிருந்தன.அவமானப்பட்ட அந்த மலர்கள் கடவுளிடம் ரோஜா மலர்களாக மாற்றும்படி வேண்டிக்கொண்டன.கடவுள் சொன்னார்,''ரோஜாவின் வாழ்க்கை சிரமமானது.புயலடித்தால் வேரோடு ஆடும்.மலர்ந்தால்,பறிக்க வருவார்கள்.இப்போது இருக்கும் பாதுகாப்பான நிலையை ஏன் இழக்க வேண்டும்?''
பக்கத்திலிருந்த வேறு காட்டு மலர்களும் ரோஜாவாகி இன்னல்களை அனுபவிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டன.அனால் அம்மலர்கள் கடவுளிடம் ஒரு நாள் முழுவதுமாவது ரோஜாவாக மாற வேண்டிக்கொண்டன.
கடைசியில் கடவுள் சம்மதித்துவிட்டார்.மலர்கள் ரோஜாவாக மாறிவிட்டன. உடனே சோதனைகளும் சிக்கல்களும் ஆரம்பமாகிவிட்டன.புயலும் மழையும் அதன் வேர்களையே அசைத்தன.பின் வெயில் அதன் இதழ்களைக் காய வைத்து விட்டன.மழை அடித்து,அதை அடியோடு பெயர்த்துக் கீழே தள்ளி விட்டது.அவை எல்லையற்ற துன்பத்தை அனுபவித்தன.
காட்டு மலர்கள் சொல்லின,''நாங்கள் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.முன்பு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது?சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை பழக்கப் பட்டவையாய் இருந்தன.  நம்மால்சமாளிக்க  கூடியவை.இப்போது சிக்கலில் வம்பாக மாட்டிக் கொண்டீர்கள்.''

 மாறிய ரோஜா ஒன்று  சொன்னது,'நீங்கள் மடையர்கள்.பாதுகாப்பான சூழலில் மதில் மேல் காலம் பூராவும் உப்பு சப்பில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் ஆபத்தான சூழலில் ரோஜாவாய் வாழ்வது மேல்.நான் கதிரவனோடு உறவாடினேன்.விண்மீன்களுடன் பேசினேன்.என்   ஆன்மாவை நான் பெற்றேன்.பூரண நிறைவடைந்தேன்.நான் முழுதாக வாழ்ந்து விட்டேன்.இப்போது முழுதாக இறக்கப் போகிறேன்.ஆனால்,உங்கள் வாழ்வு,வாழும் மரணம் மட்டுமே.''
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை,மந்தமான,இருண்ட,செத்துப் போன வாழ்வைக் காட்டிலும் மேலானது.ஒளி மயமானது.
                                                                                          __ஓஷோ

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மணி என்ன?

ஒரு வெளி நாட்டுக்காரர் நம் ஊரைச் சுற்றிப்  பார்க்க வந்தார்.வயல் வழியே செல்கையில் வழியில் படுத்திருந்த கிராமவாசியிடம் ,'மணி என்ன?'என்று கேட்டார்.அவன் அருகில் இருந்த கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்துவிட்டு  'மணி மூன்று 'என்றான்.பயணிக்கு ஒரே ஆச்சரியம்.திரும்பவும் அந்த வழியே வரும்போது அந்த கிராமவாசி சரியாகச் சொல்கிறானா என்பதை அறிய ஒரு கைக் கடிகாரத்துடன் வந்து,'மணி என்ன?'என்று கேட்டார்..அவனும் கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்து,''மணி நான்கு''என்றான். அது சரியாகத் தான் இருந்தது.ஆச்சரியத்துடன் கிராமவாசியிடம்,''கழுதை வாலிலிருந்து  எப்படி சரியான  நேரத்தைக் கண்டுபிடிக்கிறாய்?''என்று கேட்டார்.''தூரத்தில் இருக்கும் மணிக்கூண்டை என் கழுதையின் வால் மறைத்துக் கொண்டிருந்தது.அதனால் வாலைத் தூக்கி மணிக் கூண்டைப் பார்த்து நேரம் சொன்னேன்.''என்றான் அவன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தூசி

தூசியைக் கண்டால் நாம்அருவெறுப்பு அடைகின்றோம். அனால் நம் வாழ்விற்கு தூசியின் பங்கு முக்கியமானது.தூசிஇல்லாவிடில் மழை மேகங்கள் இல்லை.நம் உடலிலும் சட்டையிலும் காற்றின் ஈரம் படிந்து நாம் எப்போதும் நனைந்து கொண்டிருப்போம்.உலகில் பசுமையும் அழகும் குறைந்து எப்போதும் நசநசவென்று ஈரமாக இருக்கும்.மாலை நேரத்தில் பொன்னிறமான கதிரொளியை நாம் கண்டு ரசிக்க முடியாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் --7

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.
**********
பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.
**********
நியாயவான் மக்களின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்;
இரக்கமுள்ளவன் கடவுளின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்.
**********
வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்  மதிப்பைப் பெற முடியும்.
**********
இறைவன் சுமைகளைத் தந்தார்;ஆனால்
தோள்களையும் தந்தாரே.
**********
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
**********
அதிருப்தி களுக்கெல்லாம் பெயர் சுயநலமே.
**********
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.
**********
பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.
**********
''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.
**********
துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;
நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.
**********
முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால்  உலகுக்குத் தெரிவதில்லை.
**********
தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால்  உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.
**********
ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
**********
என்ன நேர்ந்திருந்தாலும் சரி;
எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யார் காசு?

பிச்சைக்காரன் கேட்டான்,''ஏன் சாமி, முன்னாள் பத்து ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள்.அதன் பின் ஐந்து ரூபாய் பிச்சை போட்டீர்கள்.இன்று ஒரு  ரூபாய் போடுகிறீர்களே?அது ஏன்?''இளைஞன் சொன்னான்,'திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன்.அப்போது பத்து ரூபாய் போட்டேன்.திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது.ஐந்து ரூபாய் போட்டேன்.நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா?அது தான் ஒரு ரூபாய் போடுகிறேன்.'பிச்சைக்காரன்  சொன்னான்,''ஏன் சாமி,என் காசை வைத்துக் குடும்பம் நடத்துகிறாயே,உனக்கு வெட்கமாக இல்லை?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எதிர்மறை

சுவர்க்கத்திற்குச் செல்லும் ஆனந்தம் எல்லாம்,நரகத்திற்கு அனுப்பப்பட்டவர்களின் துன்பங்களையும் வேதனையையும் பொறுத்து  அமைகின்றன.சுவர்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகம் என்ற ஒன்று இல்லைஎன்று தெரிந்தால்,அவர்களது மகிழ்ச்சி சட்டெனக் காணாமல் போய் விடும்.அவர்கள் மிகுந்த வேதனை அடைந்து விடுவார்கள்.நரகம் இல்லையென்றால் அவர்கள் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமே!
நரகம் இல்லையென்றால் எல்லாக் குற்றவாளிகளும்,பாவிகளும் சுவர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்?அப்புறம் மகான்கள் எங்கே போவது?ஒழுக்க வாதிகளின் மகிழ்ச்சி ,பாவிகளின் துன்பங்களையே சார்ந்திருக்கிறது. செல்வரின் மகிழ்ச்சி,உண்மையாகவே ஏழைகளின் துன்பத்திலிருந்து தான் முளைக்கிறது.அது பணத்தால் பிறப்பதல்ல.
நல்லவனின் மகிழ்ச்சி,வெறுக்கப்படும் பாவிகளால் உண்டாவது.அது நன்மையால் மட்டும் உண்டானதல்ல.எல்லோரும் நல்லவராகி விட்டால் மகானின் மகிமையும் ஒளியும் மறைந்து போகும்.அவர் சட்டென முக்கியத்துவம் இழந்து விடுவார்.ஒரு வேளை அவர்,பழைய பாவிகளை அழைத்து,தங்கள் பழைய தொழிலைச் செய்யும்படி வேண்டலாம்.
எல்லா ஒழுக்கங்களின் முக்கியத்துவமும் அவற்றின் எதிர்மறையால் உண்டாகின்றன.ஆனால் அவை அவற்றைச்  சார்ந்துள்ளன.முழுமையை ஏற்பவர்,நாம் தீமை என்று சொல்வது தீமையின் மறு எல்லை என்பதையும்,  நன்மை என்பது தீமையின் மறு கோடி என்பதையும் உணர்ந்து கொள்வர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அபிப்பிராயம்

ஒரு சிறந்த ஓவியன்.அழகான  மனித ஓவியம் ஒன்றை வரைந்து வைத்திருந்தான்.வருவோர் போவோர் அனைவரும் அந்த ஓவியத்தை ரசித்துப் பார்த்துச் சென்றனர்.ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அங்கு வந்து ஓவியத்தை கவனமுடன் பார்த்தான்.பின்னர் ஓவியனிடம் சென்று,''இதில் ஒரு குறை இருக்கிறது.அதை  நான் சொல்லலாமா?''என்று கேட்டான்.ஓவியர் சம்மதிக்கவே அவன் சொன்னான்,''தங்கள் ஓவியத்தில் இருக்கும் மனிதனின் செருப்பு சரியாக வரையப்பட வில்லை,''என்று கூறி அது எப்படி இருக்க வேண்டும் என்பதனை விளக்கி சொன்னான். ஓவியரும் அவன் சொல்லுவதை உன்னிப்பாகக் கவனித்து அந்த ஓவியத்தில் தேவையான மாற்றங்கள் செய்தான்.அடுத்து அந்தத் தொழிலாளி,''உங்கள் ஓவியத்தில் கண் இமைகள் சரியாக வரையப்படவில்லை,''என்றான். ஓவியர் அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் செருப்பு தைப்பதிலே  வல்லுநர்.அதனால் அது சம்பந்தமாக நீங்கள் சொன்ன மாற்றங்களை செய்தேன்.அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.''
உலகில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசினால் பிரச்சினைகள் ஏது?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net