Saturday, March 26, 2011

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் -- 3



மளிகை & நாட்டு மருந்துக் கடைச் சரக்குகள்:


சுக்கு :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றுஞ் செய்கையும், பசித்தீயை தூண்டும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்று வலி, வயிற்றுப்பொருமல், அசீரணம், பேதி, குன்மம், சூலை, வாய்வ முதலியன குணமாகும். சுக்குத்தூளில் திரிகடிப்பிரமாணம் எடுத்து சமன் கற்கண்டு சேர்த்து பாலில் அருந்திவர வாய்வு நீங்கும். சுக்கிற்க்கு உப்பை அரைத்து கவசஞ் செய்து நெருப்பணலில் வாட்டவும். இப்படி 10முறை செய்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1/4முதல் 1/2 வராகனெடை வீதம் அருந்தி வர, வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், அசீரணம், உஷ்ணபேதி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.


மிளகு :- இதற்கு முறைசுர மகற்றி, வாதமகற்றி செய்கையும் உண்டு. இதனால் குளிர்சுரம், வாய்வு, சுரம், அசீரணம், முதலியன குணமாகும். மிளகை இளம் வறுப்பாக வறுத்தி டித்துச் சூரணத்தில் நாலைந்து குன்றினெடை வீதம் சமன் கற்கண்டு தூள் கூட்டிப் பாலில் கொடுத்துவர இருமல், தொண்டை, ரணம், வாய்வு, வயிற்றுவலி, முதலியன குணமாகும். மிளகைத் தனியாகவாவது அல்லது தும்பைப்பூவுடன் சேர்த்தாவது முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வர குளிர்சுரம், முறைச்சுரம் முதலியன குணமாகும்.



திப்பிலி :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றல், கபத்தை சமணப்படுத்துதல் சீரணசக்தியை உண்டாக்கல் முதலிய செய்கையு முண்டு. இதனால் இருமல், தொண்டை, கபக்கட்டு, இரைப்பு நோய், அசீரணம், பேதி, முதலியன குணமாகும். திப்பிலி யை இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்தில் திரிகடிப்பிரமாணம்தேனுடன் சேர்த்து அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு, கபம் முதலியன குணமாகும். திப்பிலியுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்து தேனில் கொடுத்து வர விக்கல், வாந்தி, அரோசகம், அசீரணபேதி, பசியின்மை முதலியன குணமாகும்.




கடுக்காய் :- இது துவர்ப்புச்சுவை யுடையதாக இருப்பினும் மலத்தைப் போக்கும் செய்கையுடையது.இதனால் வாதகப நோய்கள் காமாலை, பெருவயிறு, குன்மம், விரணம் முதலியன குணமாகும். கடுக்காய்த்தோலை குடிநீரிட்டு விரணம், இரத்தமூலம், பெரும்பாடு, வாய், ரணம் முதலிய நோய்களில் அவ்வவ்விடங்களைக் கழுவிவர நல்ல பலனைத் தரும். கடுக்காய்ச் சூரணம் 1/2 வராகனெடை அருந்த மலங்கழியும். கடுக்காய் சூரணத்தில் வேளைக்கு 5முதல் 10 குன்றி வீதம் காலைதோறும் தினம் 1 வேளை சாப்பிட்டு வர உந்திரணம், வயிற்று வலி, மூலம், குன்மம், வாதகப நோய்கள் முதலியன குணமாகும். கற்பமாகவும் பயன் படும்.



நெல்லிக்காய் :- பச்சை நெல்லிக் காய்க்கு குளீச்சி யுண்டாக் கும் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். பச்சை நெல்லிக்காய்ச்சாறுடன் சமன் சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து 2முதல் 4 தேக்கரண்டி வீதம் அருந்தி வர வாந்தி, அரோசகம், இரத்தபித்தம், நீர்சுருக்கு முதலியன குணமாகும். ஒரு தோலா நெல்லிவற்
றலை ஒர் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர பித்தாதிக்கம், உட்சூடு, முதலியன குணமாகும்.



தான்றிக்காய் :- இதற்கு துவர்ப்புச்செய்கையும், கோழைஅகற்றுஞ் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். இதனால் சுவாசம், காசம், இரத்தபித்தம், கீழ்மேகம், முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோல் 1/4 பலம் எடுத்து சூரணித்துச் சமன் சர்க்கரை சேர்த்து நீரிலாவது அல்லது தேனுடனாவது அருந்தி வர உஷ்ண இருமல்,கபக்கட்டு, ரணம், தொண்டை, நீர்சுருக்குபிரமேகம் முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோலைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்துவர வாய் ரணம், பல் வலி முதலியன குணமாகும். விரணங்களை கழுவிவர விரைவில் ஆறும்.



சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்
தீயைத்தூண்டல், சீரண சக்தியை உண்டாக்கல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கையும்உண்டு. இதனால் அசீரணம், அதிசாரம் கிரகணி, பித்தாதிக்கம், முதலியன குணமாகும். சீரகத்தைதனியாக வாவது, அல்லது சிறிது மிளகு சேர்த்தாவது வறுத்து இடித்துச் சூரணித்து1/4 அல்லது1/2 வராகனெடைவீதம் நெய்யில்கொள்ள
மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும். சீரகத்தை இஞ்சிச் சாற்றிலும், பழச் சாற்றிலும், ஊறவைத்து உலர்த்தி இடித்துச்சூரணித்து சமன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக கொண்டு வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடைவீதம் தினம் இரு வேளையாக அருந்திவர பித்தாதிக்கம்,வாந்தி, அரோசகம், அசீணம் முதலியன குணமாகும். சீரகத்தை எண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி வடித்து தலைமுழுகி வர பித்தமயக்கம், நேத்திரரோகம்
தலைபாரம் முதலியன குணமாகும்.



கருஞ்சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், சூதகச் சிக்கலை அகற்றல், கிருமிகளை நாசம் செய்தல் முதலிய செய்கையும்உண்டு. இதனால் கரப்பான், விரணம், வயிற்றுப் பொருமல், கிருமிநோய், குன்மம், சூதகச் சிக்கல் முதலியன குணமாகும். இதனுடன் சமன் சுக்கு சேர்த்து இடித்துச் சூரணித்து 1/4 விராகனெடை வீதம் நீரில் கொடுத்துவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மார்புவலி, குன்மசூலை முதலியன குணமாகும். இதை காடிவிட்டரைத்து கரப்பான், சொறி, சிரங்கு, சர்மபடைகள் முதலியவற்றிற்குப் பூச குணமாகும்.



பெருஞ்சீரகம் :- இதுவே சோம்பு எனப்படும். இதனால்வெட்டை, நீர்சுருக்கு, அசீரணம், வயிற்றுப் பூசம், குன்மம், இருமல் சுவாசம் முதலியன குணமாகும். இதனை இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து 1/4 வராகனெடைவீதம் சமன்சர்க்கரை சேர்த்து அருந்திவரலாம். இதனை குடிநீர் அல்லது தீநிர் செய்தும்
வழங்குவதுண்டு.



இலவங்கம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, வாந்தி, கண்ணோய், பல்வலி முதலியன குணமாகும். இதை நீர்விட்டரைத்து நெற்றியில் தடவ சலதோஷம், நீரேற்றம் தலைபாரம் முதலியன குணமாகும். இதன் ஊறல் குடிநீர் வாந்தி
பேதி முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு. இதன் தைலம் பல்வலிக்குத் தடவ குணத்தைத் தரும். இன்னும் இதனை இருமல், இரைப்பு முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு.



இலவங்கப்பட்டை :- இதற்கு துவர்ப்புச்செய்கை உண்டு.இதனால் பேதி, சீதபேதி, தாதுநட்டம் முதலியன குணமாகும். இதனைத் தனியாகவாவது அல்லது காய்ச்சுக்கட்டியுடன் சேர்த்தாவது சூரணஞ் செய்து கொடுத்துவர பேதி, சீதபேதி, கிரகணி முதலியன குணமாகும்.



ஏலக்காய் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு.இதனால் வாந்தி தாகம், பித்தாதிக்கம், உஷ்ணபேதி முதலியன குணமாகும். ஏலக் காயை சதைத்து நீரிட்டு காய்ச்சி அருந்த தாகம், பித்தம், வாந்தி முதலியன குணமாகும்.



சிறுநாகப்பூ :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,பசித்தீயைத்தூண்டல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, வாய்வு, இருமல், விரணம் முதலியன குணமாகும். இதனை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/4, 1/2 வராகனெடைவீதம் அருந்திவர அசீரணம், பேதி, சீதபேதி, இரத்தமூலம்,பெரும்பாடு, கபத்தோடு கூடிய இருமல் முதலியன குணமாகும்.




வெந்தயம் :- இதற்கு மலத்தைக்கட்டல் , உள் அழலை ஆற்றல், உடலை உரமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, இரத்தபித்தம், பிரமேகம், கணச்சூடு, அஸ்திசுரம் தாது நட்டம் முதலியன குணமாகும். வெந்தயத்தை நீரிலிட்டு வேகவைத்து, தேன் விட்டு கடைந்து அருந்தி வரலாம். இதனால்
மேற்கூறப்பட்ட பலன்கள் உண்டாகும்.



கடுகு :- இதற்கு மேலுக்கு வெப்பமுண்டாக்கி, தடிப்புண்டாக்கி செய்கைகளும்; உள்ளுக்குள் வாந்தி யுண்டாக்கல், சீரணத்தை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பசிமந்தம், வாததோஷம், விக்கல் முதலியன குணமாகும். 1 முதல் 4 வராகனெடைக் கடுகை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வாந்தியாகும். இது வமன சிகிச்சைக்கு பயன்படும். கடுகுத்தூள் 1-2 வராகனெடை ஆழாக்கு வெநீரில் ஊறல் குடிநீராகச் செய்து வடித்துக் கொடுக்க விக்கல் குணமாகும். வாதரோகங்கட்கு
கடுகை அரைத்து பற்றிடுவதுமுண்டு.



ஓமம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவைஅகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக் கட்டல்முதலியசெய்கைகள் உண்டு. இதனால் மந்தம், அசீரணபேதி, வயிற்றுப் பொருமல் முதலியன குணமாகும். ஓமத்துடன் சமன் மிளகு சேர்த்து இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து திரிகடிப் பிரமாணம் வெல்லத்துடன்சேர்த்து அருந்திவர மந்தம், அசீரணபேதி, வயிற்றுவலி முதலியன குணமாகும். ஓமத்துடன் பொடுதலை சேர்த்துக் குடிநீர்செய்து குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சலுக்கு வழங்குவதுண்டு. ஓமத் தீநீர் செய்தும் வழங்குவதுண்டு.





பெருங்காயம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றல், இசிவை யகற்றல், ரிதுவை யுண்டாக்கல் முதலியச் செய்கைக ளுண்டு. இதனால் வயிற்றுப்புசம், அசீரணம், குன்மம், வாதாதிக்கம், சூதகச்சிக்கல், செவிநோய் முதலியன குணமாகும். பெருங்காயத்தை நீர் விட்டரைத்து சீதள சைத்திய வீக்கங்களுக்கு மேலுக்கு பற்றிட குணமாகும். காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக்காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம் முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.




கடுகுரோகணி :- இதற்கு மலத்தைப் போக்கல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாகவாவது அல்லது இதர சரக்குகளுடன் சேர்த்தாவது மலக்கட்டுடன் கூடிய சுரத்திற்குக் குடிநீரிட்டு வழங்குவதுண்டு.



சாதிக்காய் :- இதற்கு முக்கியமாக வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. மற்றும் காமத்தைப் பெருக்கல், உடலுக்கு உரம்தரல் முதலிய செய்கைகளும், அதிக அள்வில் மயக்கத்தை உண்டாக்கும் செய்கையும் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். ஒரு பங்கு சாதிக்காயுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்திடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சமன் சர்க்கரை சேர்த்து அருந்திவர முற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலுக்கு சாதிபத்திரி யென்று பெயர். இதற்கும் சாதிக்காயின் செய்கையே உண்டு. இதையும் சாதிக்காயைப்போலவே பேதி கிரகணி முதலியவைகட்கு வழங்கும் மருந்துகளிலும், தாது விருத்திக்குரிய லேகியங்களிலும் சேர்ப்பதுண்டு.



தாளிசபத்திரி :- இதற்கு கோழையகற்றல், பசித்தீயைத் தூண்டல், மலத்தை கட்டல், உடலுக்கு உரம்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அசீரணபேதி, நாட்பட்ட அதிசாரம், கிரகணி, துர்பலம், நாட்பட்ட இருமல், இரைப்பு, அஸ்திசுரம் முதலியன குணமாகும். இதன் சூரணத்தில் 1/4, 1/2 வராகனெடை வீதம் ஆடாதோடை சுரசத்துடன் சேர்த்து தேன் கூட்டிக் கொடுத்துவரஇருமல், இரைப்பு, கபக்கட்டு முதலியன குணமாகும். தாளிசபத் திரி சூரணத்துடன் சமன் திரிகடுகு சூரணம் சேர்த்து அருந்திவர பசி மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும்.




மாசிக்காய் :- இதற்கு மலத்தைக் கட்டச்செய்தல், விரணத்தை ஆற்றல், உதிரப்போக்கைத்தடுத்தல், உடலுக்கு உரந்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அக்கரம், விரணம், அதிசாரம், உட் சூடு, கணச்சூடு, சீதபேதி முதலியன குணமாகும். உடலுக்கு பலந்தரும். இதனை நீர் விட்டிழைத்து வாய் ரணம், நாசி விரணம், ஆசனவெடிப்பு, மூலவிரணம், தீச்சுட்ட புண் முதலியவைகட்கு மேலுக்குத் தடவிவர விரைவில் குணமாகும். இதன் சூரணத்தில்5-முதல் 10-குன்றி வீதம் தினம் இருவேளையாகக் கொடுத்துவர இரத்தகாசம், இரத்த வாந்தி இரத்தமூத்திரம், பேதி, சீதரத்த பேதி, பெரும்பாடு முதலியன குணமாகும்.



அரத்தை :- இதில் சிற்றரத்தை பேரரத்தை என இருவகைஉண்டு. இவைகளின் குணம் ஏறத்தாழ ஒன்றேயாகும். இதற்கு முக்கியமாக கோழையை அகற்றுஞ் செய்கையும், வெப்பத்தைத் தணிக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் இருமல், ஈளை, கபக்கட்டு, சுரம், வாயு முதலியன குணமாகும். இதன் தனி சூரணம் 1/4- வராகனெடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து நெய் அல்லது தேனில் அருந்திவர இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும்.வாதகப சுரக் குடிநீர்களிலும் இதனைச் சேர்த்து வழங்குவதுண்டு.



அதிமதுரம் :- இதற்கு கோழையகற்றல், உள் அழலைத் தனித்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் இருமல், தாகம் தொண்டைரணம், உடல் காங்கை முதலியன குணமாகும். தனி அதிமதுரச் சூரணம் 5-முதல் 10-குன்றி எடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து சிறிது காய்ச்சிய பாலில் அருந்திவர உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல், தொண்டைரணம், கபக்கட்டு முதலியன குணமாகும்.



அக்கராகாரம் :- இதற்கு உமிழ் நீரைப் பெருக்கல், வெப்பமுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நாவரட்சி, தாகசுரம், ஜன்னிதோஷம் முதலியன குணமாகும். இதில் ஓர் துண்டை வாயிலிட்டு மென்று சுவைத்து வரலாம். அல்லது ஊறல் குடிநீரிட்டும் வழங்கலாம். இதனால் மேற்கண்ட குணங்கள்
ஏற்படும்.



கோஷ்டம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல்வியர்வையைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வாதம், சுரம், இருமல், ஈளை, தோஷசுரம், வீக்கம் முதலியன குணமாகும். இதனைப் பெரும்பாலும் சுரக் குடிநீர்களில் சேர்த்து வழங்குவதுண்டு.



வசம்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், பசித்தீயைத் தூண்டல், முறை சுரத்தை தடுத்தல், கிருமிகளை நாசஞ் செய்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சர்பகீட தாவர விஷங்கள், சுர சன்னிதோஷம், மாந்தக் க்ழிச்சல், மலக்கிருமி முதலியன குணமாகும். வசம்பை ஊறல் குடிநீரிட்டுக் கொடுக்க குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சல், முறை சுரம் முதலியன குணமாகும். இதைச் சுட்டுக் கரியாக்கி ஆமணக்கு நெய்யில் குழைத்து குழந்தைகளின் அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல்,வயிற்றுவலி முதலியன குணமாகும். வசம்பிற்கு மஞ்சளை அரைத் துக் கவசமிட்டு கருகும்படி சுட்டுக் கரியாக்கித் தேனில் கொடுத்து வர நேர்வாளத்தினால் ஏற்பட்ட நிற்காதபேதி, வாந்தி, வயிற்று வலி முதலியன குணமாகும்.



அதிவிடயம் :- இதற்கு மலத்தைக் கட்டல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சுரம், முறைசுரம், பேதி முதலியன குணமாகும். இதன் தனிச்சூரணம் 1/4-1/2 வராகனெடை வீதம் தேனில் வழங்கலாம். அல்லது இதனைத் தனியாகவாவது அல்லதுமற்றச் சரக்குகளுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு வழங்குவதுண்டு. இது பேதியுடன் கூடிய சுரத்திற்குச் சிறந்தது.



அமுக்குராக் கிழங்கு :- இதற்கு காமத்தைப் பெருக்கல், உடலைத் தேற்றல், பலந்தரல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வாத நோய்கள், வீக்கம், தாதுநட்டம், பலயீனம் முதலியன குணமாகும். இதைப் பாலில் வேகவைத்து இடித்துச் சூரணத்துச் சமன் சர்க்கரை சேர்த்து 1/2 -1 வராகனெடை நெய்யில் அருந்திவர
மேற்கூறப்பட்ட குணங்கள் உண்டாகும்.



அபினி :- இதற்கு மலத்தைக் கட்டல், வேதனைகளைத் தனித்தல், இசிவகற்றல், நித்திரையை உண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வயிற்றுவலி, பேதி, வாந்தி, இரைப்பு, இருமல், காதுநோய், இசிவு, நித்திரையின்மை முதலியன குணமாகும். ஒருஉச்சிக்கரண்டி நல்லெண்ணெயில் பயறளவு அபின்கூட்டி எரித்து 2-துளி காதில் விட காது வலி குணமாகும். ஒரு ஜாதிக்காயைத் துளைத்து அதனுள் ஒரு குன்றி அபினியைச்செலுத்தி, துளைவாய்க்கு சாதிக்காய் தூளையே போட்டு அடைத்து, நெய்விளக்கின் சுடரில்,காய் வேகுமட்டும் சுட்டெடுத்து அரைத்து சிறு உளுந்தளவு மாத்திரைகள் செய்து கொடுத்துவர அசீரணபேதி, அதிசாரம், கிரகணி முதலியன குணமாகும்.




கஞ்சா :- இதற்கு இசிவகற்றல், வேதனையைத் தணித்தல்,நித்திரையுண்டாக்கல், காமத்தைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் தாது விருத்திக்குரிய லேகியங்களிலும், கிரகணி, பெரும்பாடு போன்ற நோய்கட்குரிய மருந்துகளிலும் சேர்த்து வழங்குவதுண்டு.





வெட்பாலை :- இதற்கு துவர்ப்புச் செய்கையுண்டு. இதனால் பேதி, சீதபேதி முதலியன குணமாகும். வெட்பாலையரிசி அல்லது பட்டையைக் குடிநீரிட்டாவது அல்லது இடித்துச் சூரணமாகவாவது வழங்க பேதி, சீதபேதி முதலியன குணமாவதுடன், சுரத்திற்குப்பின் காணும் உடல் இளைப்பு முதலியன நீங்கி உடலுக்கு உரத்தையுந் தரும்.





நேர்வாளம் :- இதற்கு பேதியை உண்டுபண்ணுஞ் செய்கையுண்டு. இதனால் மலக்கட்டு, வாதரோகம், விஷம், குன்மம், சூலை முதலியன குணமாகும். இது துர்பலமுள்ளவர், வயது முதிர்ந்தவர், கருப்பிணிகள், பித்த நோயுள்ளவர் முதலியவர்கட்குச் சிறந்ததல்ல.
இதனைத் தனியாக வழங்குவதில்லை. பேதியாகும் மருந்துகளில் சேர்த்து வழங்கப்படும். இதை மருந்துகளில் சேர்க்கும் முன் முறைப்படி நன்கு சுத்திசெய்து சேர்க்கவேண்டும். இன்றேல் சில துர்குணங்களை யுண்டாக்கும்.



நிலாவாரை :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கையுண்டு. இதனால் நாட்பட்ட மலச்சிக்கல், மூலவாயு, குன்மம், சுரம் முதலியன குணமாகும். இது சிறு குழந்தைகள், மெலிந்தவர், முதிர்ந்தவர், கருப்பிணிகள் முதலியவர்கட்கும் வழங்கப் பயன் படும். இதன் சூரணத்தை பாலில் பிட்டவியலாக அவித்தெடுத்து வழங்க சூடு செய்யாமல் மலத்தை கழிக்கும். இதன் சூரணத்தில் 1/4 முதல் 1/2 வராகனெடை வீதம் தனியாகவாவது அல்லது ஒரு தோலா குல்கந்துடனாவது சேர்த்து இரவு படுக்கைக்குப் போகும் போது அருந்திவர, மலச்சிக்கல் குணமாகும்.



இன்னும் இத்துடன் சுக்கு, மிளகு, ஓமம் வாய்விளங்கம், இந்துப்பு இவைகளைச் சமனெடையாகச் சேர்த்திடித்துச் சூரணித்து வேளைக்கு 1-2 வராக னெடை வீதம் கொடுத்துவரலாம். அல்லது 1 பலம் நிலாவாரை யுடன், 1 வராகனெடை சுக்குத்தூள் சேர்த்து ஆழாக்கு வெந்நீரில் ஊறல் குடிநீராகச் செய்து 1/4,1/2 ஆழாக்கு வீதம் சிறிது இந்துப்புச் சேர்த்து வழங்கி வரலாம். இதனால் வயிற்றுப்புசம், வயிற்றுவலி, மலபந்தம், வாய்வு, கைகால் கீல்களின் பிடிப்பு முதலியன குணமாகும்.




சிவதைவேர் :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கையுண்டு. இதனால் பழையமலம், மேல்நோக்கும் வாய்வு, பித்தவாத தொந்தம், பாலகிரக தோஷம் முதலியன குணமாகும். இதை வழங்குவதற்கு முன்பு சுத்தி செய்துக்கொள்ளவேண்டும். அதாவது இதன் நடுநரம்பை நீக்கிப் பாலில் பிட்டவியலாகச் செய்தெடுத்துக்கொள்வதாம். இது பாலர்கட்குக் காணும் மாந்தம், தோஷம், மலச்சிக்கல் முதலிய பிணிகட்கு வழங்கச் சிறந்த சரக்காகும்.



இதன் தனிச் சூரணம் 1/4 1/2 வராகனெடை வீதம் தனியாகவாவது அல்லது அத்துடன் சமன் இந்துப்பு சேர்த்தாவது வழங்க நன்கு பேதியாகும். அல்லது சுத்தி செய்த சிவதைவேர்ச் சூரணம் 4-தோலாவுடன் திப்பிலிச்சூரணம் 1-தோலா சேர்த்து, இவைகட்குச் சமனெடை சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு, இதில் வேளைக்கு 10-20 குன்றி எடை வீதம் கொடுத்துவர மலசிக்கல் நீங்கும். வயிற்றுவலி, மலாசயக் கிருமி முதலியவைகளும் குண
மாகும்.



கரியபோளம் :- இதனை மூசாம்பரம் எனவுங் கூறுவர். இதற்கு பேதியை உண்டாக்கல், ருதுவை யுண்டாக்கல், பசித்தீயைத் தூண்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் மேகசூலை, வீக்கம், வயிற்றுவலி, குன்மம், சூதகச்சிக்கல் முதலியன குணமாகும். இதில் 1-முதல் 3-குன்றி எடை கொடுக்க மலத்தைப்போக்கும் இத்துடன் சமன் காயம் சேர்த்து தேன் விட்டுஅரைத்து வேளைக்கு 2 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர சூதகச்சிக்கல் சூதக வயிற்றுவலி முதலியன குணமாகும். இதை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, கீல்வாயு, விரதவீக்கம், மேகக்கட்டி முதலியவை
கட்கு பற்றிட்டு வர குணமாகும்.



கழற்ச்சி :- இதன் விதை, வேர்பட்டை இவைகட்கு இசிவையகற்றல், முறை சுரத்தை தடுத்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் அண்டவாதம், வயிற்றுவலி, சூலை, சுரம் முதலியன குணமாகும். இதன் வேர்பட்டையை சூரம் 5-7 1/2 குன்றி எடை வீதம் கொடுத்து வர முறை சுரம் முதலியன குணமாகும். இதில் வேளைக்கு 10-15 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர அண்டவாய்வு, வயிற்றுவலி, சுரம் முதலியன குணமாகும். கழற்ச்சிப் பருப்பை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, அண்ட வீக்கத்திற்க்கு மேலுக்குப் பற்றிட்டு வர அண்ட வீக்கம் குணமாகும்.



சடமாஞ்சி :- இதற்கு இசிவையகற்றல், கோழயை அகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் காசம், இரைப்பு, இரத்த பித்தம், சுரம் முதலியன குணமாகும். இதன் சூரணம் 2 வராகனெடை எடுத்து ஆழாக்கு வெந்நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து 2அல்லது3 வேளையாக கொடுத்து வர சூதகச்சன்னி, வலிமூர்ச்சை, சுரம் முதலியன குணமாகும்.



சேராங்கொட்டை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ்செய்கையும், உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு, மேகவிரணம், கிரந்தி, குட்டம், காணாக்கடிவிஷம், வாத ரோகம், குன்மம் முதலியன குணமாகும். இதனைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் இதரச்சரக்குகளுடன் சேர்த்து,வல்ல்லாததி லேகியம், முதலியன செய்து வழங்குவதுண்டு, இதனால்
மேற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். ஆனால் இதனை முறைப் படி நன்கு சுத்தி செய்து மருந்துகளில் சேர்க்க வேண்டும்.


பறங்கிச்சக்கை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ் செய்கையும்,உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு சர்மவியாதிகள், மேக விரணம்,குட்டம், கடி விஷம், வாதப்பிணிகள், நீரிழிவு, தகம் முதலியன குணமாகும். பறங்கிச்சக்கைகளின் மேல் தோலை நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி ஓர் கோப்பையிலிட்டு மூழ்க வல்லாரைச்சாறு விட்டு 10 நாள் இரவியில் வைத்து, முற்றுலர்ந்த பின்பு இடித்துச் சூரணித்து வேளைக்குத் திரிகடிப் பிரமாணம் தினம் இரு வேளையாக அருந்திவர மேற்கூறப்பட்ட நோய்கள் குணமாகும்.


நன்னாரிவேர் :- இதற்கு சிறுநீரை பெருக்கல், உள் அழலை ஆற்றல், உடலைத்தேற்றல், இரத்தத்தை சுத்திசெய்தல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பித்தாதிக்கம், உட்சூடு, மதுமேகம் தாகம், சொறி சிரங்கு, கிரந்திமுதலிய மேகப்பிணிகள், நீர்ச்சுருக்கு முதலியன குணமாகும். நன்னாரி வேர்ப்பட்டையை உலர்த்தி இடித்துச் சூரணித்து வேளைக்கு 1/2-1 விராகனெடை வீதம் சமன் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலில் அருந்திவர மேற்கூறிய பிணிகள்குணமாகும். இன்னும் இதனைக் குடிநீராய்ச்செய்து பால் சேர்த்து அருந்தி வரலாம். மணப்பாகு செய்தும் வழங்குவதுண்டு.



***


நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் -- 1
நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் -- 2
நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் -- 3


***

நன்றி தமிழ்மெடிகிளைன் தளம்.
http://health.hosuronline.com/TamilMedicine/c1_4.asp

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் -- 2




காய்கள் & கனிகள்:



அத்திக்காய் :- இதனால் பிரமேகம், வெட்டை, விரணம்,சூலை முதலியன நீங்கும், மலங்கழியும்.

அவரைப்பிஞ்சு :- இது இரவு போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும்,திரிதோஷத்திற்கும்
பத்திய உணவாகும்.

கத்திரிப்பிஞ்சு :- பித்தம், கபம் நீங்கும், காயாக இருப்பின் சிறிது உஷ்ணத்தைத்தரும்.

கொத்தவரை :- இது அபத்திய உணவாகும், மருந்தை முறிக்கும்,பித்தாதிக்கம், பித்தவாயு, கபம்
முதலிவைகளை உண்டாக்கும்.

சுண்டைக்காய் :- கைப்பு சுவையுள்ள காயால் , மார்புச்சளி, கிருமிநோய், வாதாதிக்கம் முதலியன
குணமாகும். இதன் வற்றல் சீதபேதி,கிரகணி இவைகட்கு நன்று.

சுரைக்காய் :- இதனால் வாதபித்தம், மார்புநோய், புலிகநோய் முதலியன உண்டாகும். பத்தியத்
திற்காகாது. சீதளமென்பர்.

பூசனிக்காய்:- இது உஷ்ணாதிக்கம்,மிகு பித்தம் இவைகளை நீக்கும். கபத்தையும் பசியையும்
உண்டாக்கும். உடலுக்கு வன்மை தரும்.

பாகற்காய் :- இதனால் கிருமி நோய்,திரிதோஷகோபம், பாதரசதோஷம் முதலியன குணமாகும்.
விரேசனத்தையுண்டாக்கும்.

பீர்க்கங்காய் :- இதனால் பித்தமும், சீதளமும் அதிகரிக்கும்.

புடலங்காய் :- இதனால் பித்தம், கபம், சுக்கிலம் இவைகள் அதிகரிக்கும்.

முருங்கைக்காய் :- இதனால் கபம் நீங்கும். விந்து கட்டும், பத்திய உணவாம்.

வாழைக்காய் :- இதனால் வாந்தி பித்தம் பேதி இவைகள் குணமாகும் இரத்த விரித்தியையும் பலமும் உண்டாகும். வாதம் மிகும்.

வெண்டைக்காய் :- இதனால் அதிசாரம் , கிரகணி, சீதபேதி, முதலியன குணமாகும். விந்து கட்டும்
கபவாதம் உண்டாகும்.

கலியாண பூசணிக்காய் :- உட்காய்ச்சல், பித்தம், மூத்திரகிரிச்சரம்,அஸ்திதாதுகதசுரம், இடுமருந்
து தோஷம் முதலியன போம் வாதம் மிகும்.

வாழைப்பழம் :- இதனால் பாண்டு பித்தப்பிணிகள் முதலியன தீரும். அதிகமாக உண்ணில் மந்தத்
தை உண்டாக்கும். மலத்தைப்போக்கும்.

பலாப்பழம் :- இதனால் வாதபித்த கபப்பிணிகள் யாவும் உண்டாகும். மிக்க உஷ்ணத்தையும், கரப்
பானையும் உண்டாக்கும்.

மாம்பழம் :- இதனால் சொரி, சிரங்கு , கரப்பான், சீதபேதி, வயிற்றுவலி முதலியன உண்டாகும்.
பசிதீபனம் மட்டாகும்.

மாதுழம்பழம் :- இதனால், வாந்தி, கபம், விக்கல், தாகம், மாந்தம், சுரம், உஷ்ணாதிக்கம், பித்தாதிக்
கம்,இரத்தக்குறைவு, முதலியன நீங்கும். மலத்தைக்கட்டும்.

உலர்ந்ததிராட்சைப்பழம் :- இது மேக அழலையை தணிக்கும். மலத்தை இளக்கும், உதிரப்பெருக்
கையுண்டாக்கும்.

ஆழ்வள்ளிக்கிழங்கு :- இதனால் வாதாதிக்கம் ,திரிதோஷதொந்தம், குன்மம்,மந்தம், அக்கினி
முதலியனஉண்டாகும்.

உருளைக்கிழங்கு :- இது பலத்தை தரும். வாய்வைக்கண்டிக்கும், மந்தத்தையுண்டாக்கும்.

காராக்கருணைக்கிழங்கு :- இதனால் வாதநோய், இரத்தமூலம், அக்கினிமந்தம் முதலியன
குணமாகும். பத்திய உணவாம்.

சேப்பங்கிழங்கு :- இது கபத்தை விரித்திசெய்யும், மருந்தின் குணத்தை கெடுக்கும்.

இஞ்சி :- இதனால் சந்நிசுரம், வாந்தி, பேதி,சூலை, வாதாதிக்கம்,காசம்போம், பசிதீபனத்தையும்,
ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

மஞ்சள் :- இதனால் தலைவலி, ஜலதோஷம், வலி, வீக்கம், வாந்தி,விரணம் முதலியன போம், பசி
தீபனமும், புருஷ வசியமும் உண்டாகும்.

முள்ளங்கி :- இதனால் குன்மம்,சூலை, குடல்வாதம், வாய்வு,கரப்பான், மூலகடுப்பு,கபம், முதலியன
குணமாகும். பசிதீபனமும், சிறுநீரையும் அதிகரிக்கும்.

வாழைக்கிழங்குஅல்லதுதண்டு :- இது சிறுநீரைப்பெருக்கும், கல்லடைப்பு, மகோதரம், மூத்திரக்
கிரிச்சரம், சோபை முதலிய நோய்கட்கு சிறந்தது.

வெங்காயம் :- இது தேக உஷ்ணம், மூலம், இரத்தபித்தநோய், சிரங்கு முதலியன குணமாகும்.

ஆல்பகோராப்பழம் :- இது உஷ்ணத்தையும், பித்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும். மலத்தை
இளக்கும்.

இளநீர் :- இது சூட்டைத்தணிக்கும்,சிறுநீரைப்பெருக்கும், பித்தகோபத்தையும்,கபாதிக்கத்தையும்
அடக்கும்.

எலுமிச்சம்பழம் :- இதனால் பித்தாதிக்கம், பைத்தியம்,கண்ணோய், வாந்தி, தாகம், பசியின்மை,
அஜீரணம், பேதி முதலியன குணமாகும்.

பழம்புளி :- பழைய புழியினால், திரிதோஷம்,வாதநோய், சூலை, வாந்தி, உஷ்ணாதிக்கம் முதலியன
குணமாகும்.

பிரண்டை :- பசிமந்தம், அஜீரணம் , சூன்மம், அதிசாரம், கபதோஷம், இரத்தமூலம், முதலியன
குணமாகும்.

பச்சைமிளைகாய் :- இதனால் வாதாதிக்கம், துத்திரோகம், இடுப்புவலி, சீதள சைத்தியம்,
முதலியன குணமாகும்.

விழாம்பழம் :- விழாம்பழத்தினால் சுவாசம்,காசம், பித்தாதிக்கம், பித்ததாகம், முதலியன குணமாகும்.
பசிதீபனமுண்டாகும்.

வெள்ளைப்பூண்டு :- இதனால் வாதம், சன்னிபாதம், கபாதிக்கம், சீதபேதி, நீரேற்றம், முதலியன
குணமாகும்.

கரும்பு :- கரும்பின் சாற்றால் வாய்க்குமட்டல், வாந்தி,விக்கல், பித்தநோய்கள்முதலியன குணமாகும்.

சர்க்கரை :- இதனால் பித்ததோஷம், வமனம், அரோசகம், குணமாகும். கபத்தை இளக்கும். மருந்து
களுக்கு சிறந்த அனுபானமாகும்.

கற்கண்டு : - இதனால் கபதோஷம், வாந்தி, காசம், வெப்பம் முதலியன குணமாகும்.

பனங்கற்கண்டு : - இதனால் வெப்பம், மூத்திரகிரிச்சரம்,உஷ்ணதாகம் முதலியன குணமாகும்.

பனைவெல்லம் :- இதனால் குன்மம், வாந்தி, அரோசகம், திரிதோஷதொந்தம். முதலியன குணமாகும்.



***




மூலிகைப்பொருட்கள்:



ஆடாதோடை :- இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், இசிவை அகற்றுஞ்செய்கையுமுண்டுஇதனால் இருமல், இரைப்பு, இரத்தபித்தம் முதலியன குணமாகும். இதன் இலைச்சுரம் 1/2 தேக்கரண்டிவீதம் தேன்கூட்டிகுடுக்க, இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும். ஆடாதோடையுடன்சிறிது திப்பிலி அதிமதுரம், சிற்றரத்தை முதலியவைகளை சேர்த்து முறைப்படி குடிநீரிட்டும் வழங்க மேற்கூய நோய்கள் குணமாகும்.



ஆமணக்கு இலை :- இதற்கு வாதத்தை அடக்குஞ் செய்கையும், பாலைப்பெருக்கும்செய்கையுமுண்டு, இந்த இலையை குறுக்கு அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி கீல்வாயு, வாதரத்த வீக்கம், இவைகட்கு ஒற்றிடமிட்டு வரகுணமாகும். ஆமணக்கு இலையை ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஸ்தனங்களில் வைத்துக்கட்ட பாற்சுரப்பு உண்டாகும்.



துளசி :- இதற்கு கோழையை அகற்றுங்குணமுண்டு. இதனால் இருமல், இரைப்பு, சலதோஷம்,மார்புச்சளி முதலியன குணமாகும்.

இதன் இலையை சரசம் செய்து குழந்தைகளுக்கு 10 துளி வீதமும், பெரியவர்களுக்கு 1/2தேக்கரண்டிவீதமும் தேன்சேர்த்து கொடுத்துவர மேற்கூய பிணிகள் குணமாகும். மற்றும் இது கோரோசனமாத்திரை கஸ்தூரி மாத்திரை முதலிய கபபிணிகட்கு வழங்கும் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாகும்.



கண்டங்கத்திரி :- இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், சிறு நீரைஅகற்றுஞ்செய்கையு
முண்டு. இதனால் சுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாறு 1/2 முதல் 1தேக்கரண்டிவீதம் கொடுத்துவர காசம், சுவாசம் கபகட்டு முதலியன குணமாகும். இதன் சமூலத்தைகுடிநீரிட்டு கொடுக்க கபசுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும்.



கரிசாலை :- இது உடலைத்தேற்றும், இதில் இரும்புச்சத்து உள்ளது. இதனால் பாண்டு, சோபை, காமாலை, காசம், முதலியன குணமாகும். கரிசாலை இலையுடன் சமன்மிளகு சேர்த்து அரைத்து 1-2 சுண்டக்காய் அளவு மோரில் கொடுத்துவர பாண்டு, சோபை, காமாலை, காசம், முதலியன குணமாகும். கரிசாலை சாற்றுடன் சமன் நல்லெண்ணெய்கூட்டிப்பதமுறக்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு 1 தேக்கரண்டிவீதம் உண்டு வர காசம் குணமாகும். கரிசாலை சாற்றுடன் சமன் நெல்லிக்காய்ச்சாறும் நல்லெண்ணெய்சேர்த்துப்பதமுறக்காய்ச்சி வடித்து முடித்தைலமாக வழங்கி வர உடல் காங்கை, கண்ணெரிச்சல், கண்காசம், செவிநோய் முதலியன குணமாகும். இதன் இலைக்கற்கத்தைகற்பமாகவும் உண்பதுண்டு.



கீழ்காய் நெல்லி :- இதற்கு துவர்ப்பு, குளிர்ச்சி செய்கைகள் உண்டு. இதனால் தாதுவெப்பம், பிரமேகம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தை அரைத்து கொட்டைப்பாக்களவு தினம் இருவேளை மூன்று நாள் உப்பில்லாப்பத்தியத்துடன் கொடுத்துவர காமாலை குணமாகும். மற்றும்இதனால் வெள்ளை வெட்டை, பெரும்பாடு முதலியவைகளும் குணமாகும். இதன் கற்கத்தைல்லெண்ணெயிலிட்டு தைலமாகக்காய்ச்சி முடித்தைலமாக வழங்க பித்தாதிக்கம், விழிநோய்கள்முதலியன குணமாகும்.



குப்பைமேனி :- இதற்கு வமனத்தை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும் செய்கையும் குடலிலுள்ள கிருமிகளைக்கொலிலுஞ்செய்கையும் உண்டு. இதனால் கபாதிக்கம், சர்வவிஷம், புண்,முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றில் குழந்தைகட்கு 1 தேக்கரண்டிவீதமும், பெரியவர்களுக்கு 1/2 அவுன்சு வீதமும் கொடுக்க பேதியாகும். மலக்கிருமிகளை வெளிப்படுத்தும். இருமலைத்தணிக்கும். இலையை உலர்த்தி சூரணித்து 10 குன்றி எடை வீதம் தேனில் கொடுத்துவர இருமல்,இரைப்பு, கபாதிக்கம் முதலியன குணமாகும். இதன் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும்.



உத்தாமணி :- இதற்கு வமனத்தை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும் செய்கையுமுண்டு, இதனால் கபகட்டு, சுவாசம், மாந்தம், மலக்கிருமி முதலியன குணமாகும். இதன் சாற்றில் 1/2 தேக்கரண்டியாவது அல்லது இதன் குடிநீரில் சங்களவையாது குழந்தைகட்கு கொடுக்க வாஎதியாகி கோழை வெளிப்படும். இருமல் சுவாசகாசம் முதலியன குணமாகும். இன்னும் இது வயிற்றிலுள்ளமலக்கிருமிகளை வெளியாக்கி, மந்தத்தை நீக்கி, தீபனத்தையுண்டக்கும். இதன் இலைசாற்றுடன் சிறிதுஉப்பும், வசம்பு சுட்டசாம்பலும் சேர்த்து கருக்கியாழமாகசெய்து குழந்தைகளுக்கு காணும் அள்ளுமாந்தம், அசீரணபேதி முதலியவைகட்கு வழங்குவதுண்டு.



ஊமத்தை :- இதற்கு இசிவகற்றி வேதனாசாந்தினி செய்கைகளுண்டு, இதனால் கட்டி, விரணம்நஞ்சுகளின் விஷம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காயெண்ணெய்சேர்த்து காய்ச்சி இரண்டொரு துளி வீதம் காதில் துளித்துவர காது வலி குணமாகும். இன்னும் இத்தைலத்தை விரணங்களுக்கும் மேற் பூசிவர விரைவில் ஆறும். இலையை ஆமணக்கெண்ணெய்விட்டு வதக்கியாவது அல்லது அரிசிமாவுடன் சேர்த்து களிபோல் கிளறியாவது வித்திரிகட்டிகள்,வாதவீக்கம் இவைகளுக்கு வைத்துக்கட்ட, அல்லது ஒற்றிடமிட குணமாகும். இதன் இலை அல்லது பூவைப்பொடித்து புகைப்பிடிக்க சுவாசகாசம் குணமாகும்.




எருக்கு :- இதற்கு சுரமகற்றி, கபஹரகாரி, புழுக்கொல்லி, முதலிய செய்கையுமுண்டு. இதனால்முறைசுரம், கபநோய், கிருமிநோய், வாதநோய், பாம்புவிஷம் , எலிவிஷம் , முதலியன குணமாகும்.இலையை வதக்கி கட்டிகளுக்கு வைத்துக்கட்ட, பழுத்துடையும். வாதநோய், வலிவீக்கம்இவைகளுக்கு ஒற்றிடமிடலாம். இதன் பூவுடன்சமன் எடை அளவு மிளகு சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரைகளை செய்து கொடுக்க சுவாசகாசம் முறைசுரம் முதலியன குணமாகும். எருக்கம்பாலுடன் சமன் எண்ணெய் சேர்த்து தைலமாககாய்ச்சி வாதகுடச்சல், இசிவு முதலியவைகட்குப்பூசிப்பிடிக்க குணமாகும்.



சீந்தில் :- இதற்கு முறை சுரமகற்றி, பித்தமகற்றி, உடல்தேற்றி முதலிய செய்கையுமுண்டு. இதனால் சுரம், ரத்தம், இரத்தபித்தம், மேகம் முதலியன குணமாகும். இதனை தனியாகவாவது அல்லதுபேய்புடல், பற்பாடகம், கோரைக்கிழங்கு முதலியவற்றுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு கொடுக்கமுறைசுரம், பித்தசுரம் முதலியன குணமாகும்.இதன் முற்றின கொடியினின்று ' சீந்திர்சர்கரை 'என்ற சத்து தயாரிப்பதுண்டு. இதில் வேளைக்கு 2முதல்5 குன்றி வீதம் பாலில் கொடுத்துவர சுரம், உட்சுரம், பித்தாதிக்கம், காமாலை, மதுமேகம், மூத்திரப்பிணிகள், சுரங்களுக்குப்பின்காணும் உடற்சோர்வு முதலியன குணமாகும்.



சித்திரமூலம் :- இதனால் மேகநோய்கள் வாதநோய்கள் , குன்மம் முதலியன குணமாகும். இதன்வேர்பட்டையை பால் விட்டு அரைத்து கற்கம் சிறு இலந்தைவிதைப்பிரமாணம் தினம் ஒரு வேளைவெள்ளாட்டுப்பாலில் கலந்து 5அல்லது7 நாள் பத்தியத்துடன் அருந்திவர மூலம்,கிரந்தி,அரையாப்புபுரையோடும்,விரணம், மேகசூலை முதலியன குணமாகும். சித்திரமூலவேர்பட்டையை பச்சையாகஎடுத்து அரைத்து எண்ணெயிலிட்டு காய்ச்சி முடித்தைலமாக உபயோகிக்க தலைபாரம், நீர்பீநசம், வாதப்பிணிகள் முதலியன குணமாகும்.



நாயுருவி :- இதனால் மந்தம், அதிசாரம், கபநோய், உதிரச்சிக்கல், குன்மம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாறு அல்லது குடிநீர் வயிற்றுவலி, குன்மம் இவைகட்கு வழங்கப்படும். இதன்வேர் சூரணத்துடன் மிளகுச்சூரணம் அல்லது திப்பிலி சூரணத்துடன் சேர்த்து தேனில் அருந்தஇருமல் தீரும். விதை கற்கத்தை அரிசி கழுவியநீரில் கரைத்து அருந்திவர இரத்தமூலம், அதிசாரம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தைச்சுட்டு சாம்பலாக்கி 5 குன்றி எடை வீதம் வெல்லத்தில் கொடுக்க உதிரச்சிக்கலை நீக்கும்.




துத்தி :- இதற்கு மலத்தை இளக்கல், உள்ளழலை முதலிய செய்கையுமுண்டு. இதனால் மூலம்,கட்டி, முதலியன குணமாகும். இதன் இலையை சமைத்தாவது அல்லது குடிநீரிட்டாவது, மூலச்சூடுமலைச்சிக்கல் முதலியன குணமாகும். இலையை ஆமணக்கெண்ணெய்விட்டு வதக்கி மூலத்திற்குஒற்றிடமிட்டு, அவ்விடத்திலேயேகட்டி வர வேதனை தணியும். இதன் இலைச்சாற்றுடன் பச்சரிசிமாவு சேர்த்து களி கிளறி கட்டிகளுக்குவைத்துகட்ட பழுத்துடையும்.



வல்லாரை :- இதற்கு உடலைத்தேற்றல், உடலுக்குப்பலந்தருதல்,மேகப்பிணிகளை விலக்கல்,முதலிய செய்கையும் உண்டு.இதனால் பித்தம், மேகநோய், குஷ்டம், மூலை, நரம்பு, பலவீனம்ஞாபகசக்திகுறைவு முதலியன குணமாகும். இதன் இலைச்சூரணம் 2முதல்5 குன்றி எடை வீதம்ஒரு மண்டலம் அருந்த சர்மவியாதிகள், மேகநோய்கள், பைத்தியம், ஆரம்பகுட்டம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் நெய்சேர்த்து கிருதமாக காய்ச்சி அருந்திவர நரம்பு பலவீனம், ஞாபகசக்திகுறைவு ,கணமாந்தம், இளைப்பு முதலியன குணமாகும்.



காக்கட்டான் :- இதற்கு மலத்தைப்போக்கல், சிறுநீரை பெருக்கல் முதலிய செய்கையும் உண்டு.இதனால் மலக்கட்டு, மலக்கிருமி, பிரமேகம், யானைக்கால்வாதம் முதலியன குணமாகும். இதன்விதையை இளவறுப்பாய் வறுத்திடித்துச்சூரணஞ்செய்து 15-20 குன்றியளவு கொடுக்க நன்றாக பேதியாகும். இதன் வேர் கற்கம் சிறு கழற்சியளவு அல்லது வேரை ஊறல் குடிநீராகவும் செய்து வழங்கலாம். இதனால் பேதியாவதுடன் யானைக்கால், சுரம், வாதம்,வாதாதிக்கம், மலக்கிருமி முதலிய நோய்கள் குணமாகும்.



புங்கு :- இதனால் கிரந்தி,புண், சொறி, சிரங்கு, கரப்பான் முதலியநோய்களும், சர்மவியாதிகளும்மேகநோய்களும் குணமாகும். புங்கம் பூவை வறுத்திடித்து சூரணித்து திரிகடிபிரமாணம் தினம் இரு வேளையாக ஒரு மண்டலம் அருந்த மேற்கூறிய நோய்கள் குணமாகும். புங்கம் பாலுடன்தேங்காய்பாலை சேர்த்து தைலபதமாக காய்ச்சி வடித்து விரணங்களின்மேல்தடவி வர விரைவில்ஆறும்.



ஆவாரை :- இதற்கு சங்கோசனகாரி, பலகாரி, முதலிய செய்கையும் உண்டு. இதனால் வெள்ளை,வெட்டை, கிரகணி, உட்சூடு, நீரிழிவு, முதலியன குணமாகும். இதன் உலர்ந்த பூ அல்லது பட்டையை, 1/2 பலம் எடுத்து முறைப்படி குடிநீரிட்டுக்கொடுக்க நீர்சுருக்கு, பிரமேகம், நீரிழிவு,தாகம்,தேக காங்கை ,கிரகணி பெரும்பாடு முதலியன குணமாகும்.



ஆவாரை இலை வேர், பட்டை, பூ, காய் என்ற பஞ்சாங்கங்களையும் சமனெடையாக சூரணித்துகலந்து வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடை வீதம் தினம் இரு வேளையாக அருந்திவர மதுமேகம்முதலியன குணமாகும்.




அவுரி :- இதற்கு கிருமிநாசினி, வெப்பகற்றி நஞ்சகற்றி செய் கைகளுண்டு. இதனால் சுரம், சன்னி, விஷக்கடி தாவரகந்தமூலவிஷம் முதலியன குணமாகும். அவுரி இலை அல்லது வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க எல்லா விஷங்களையும் முறிக்கும். அவுரி வேருடன் சமன்
மிளகு சேர்த்து குடிநீரிட்டு கொடுக்க வாதசுரம் சன்னிபாசுரம் விஷக்கடிகள் அதனாலுண்டான் சுரம் முதலியன குணமாகும்.



இலைக்கள்ளி :- இதற்கு கபஹரகாரி விரேசனகாரி செய்கைகள் உண்டு. இதனால் குழந்தைகட்கு உண்டாகும்கருங்கிரந்தி, செங்கிரந்தி, கபாதிக்கம், மாந்தம்,மலக்கட்டு முதலியன குணமாகும். இதன்இலையை வதக்கிப் பிழிந்தச்சாறு 2-3 துளி காதில்விட காதுவலி குணமாகும். இதன் இலைச்சாற்றை குழந்தைகட்கு அரைத் தேக்கரண்டி வீதம் தாய்ப்பாலில் கொடுக்க இருமல், இரைப்பு, கபக் கட்டு கரப்பான் முதலியன குணமாகும். மலங் கழியும்.



கொடிக்கள்ளி :- இதன் பாலுடன் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி வாதநோயகளுக்கு மேலுக்கு பூசிப்பிடிக்க குணமாகும்.



நொச்சி :- இதன் வேர் குடிநீர் அல்லது வேர் சூரணம் 5-10 குன்றி எடை தேனில் கொடுக்க சுரம், வாதநோய், இசிவு, வாத சுரம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி முடித்தைலமாக வழங்க சிரோபாரம், நீர் கோவை, பீநசம் குணமாகும்.



பொடுதலை :- இதன் இலையை வதக்கி, வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர் சேர்த்துகுடிநீரிட்டு சங்களவு வீதம் குழந்தை கட்கு வழங்க அஜீரணபேதி, மாந்தம், முதலியன குணமாகும். இதன் இலை கற்கத்தை நல்லெண்ணெய்யிலிட்டு சூரியபுடமாக வைத்தெடுத்து மேலுக்கு தடவிவர தலையில் உண்டாகும் பொடுகு, புழு வெட்டு, மயிர் உதிர்தல் முதலியன குணமாகும்.



அம்மாம்பச்சரிசி :- இதன் சமூலத்தை அரைத்து கொட்டைப்பாக்களவு பால் அல்லது மோரில் தினம் ஒரு வேளை வீதம் ஏழு நாள் கொடுக்க, வெள்ளை வெட்டை குணமாகும்.



சிறு பீளை :- இதன் இலைச்சாறு ஒரு அவுன்சு வீதம் கொடுக்க நீரடைப்பு, கல்லடைப்பு பெரும்பாடு முதலியன குணமாகும்.



நல்வேளை :- இதன் இலை கற்கம் அல்லது குடிநீர் கொடுக்க வாதநோய்கள் குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி மேலுக்கு தடவிவர வாதப்பிடிப்பு குடைச்சல் முதலியன குணமாகும்.



வாத நாராயணன் :- இதற்கு இலகு மலகாரி, வாதமரஹாரி செய்கைகள் உண்டு. இதனால் வாதநோய்கள் குணமாகும். இதன் இலையை வாதநோய்க்கு ஒற்றிடமிடப் பயன்படும். மற்றும் இதனைச்சேர்த்து தைலமாக காய்ச்சி வாதநோய்க்கு உள்ளுக்கும் வழங்குவதுண்டு.



தழுதாளை :- இதன் இலையை நீரிட்டுகாய்ச்சி வதவலியுள்ள பாகங்களில் தாரையாக விட்டுவர நோய் குணமாகும். இதன் இலை அல்லது வேரை எணெய்யிலிட்டு காய்ச்சி வாதப் பிடிப்புகளுக்கும் தடவுவதுண்டு.




விழுதியிலை :- இதன் இலையை குடி நீரிட்டு அத்துடன் சிறிது ஆமணக்குநெய் சேர்த்து கொடுக்க பேதியாகி, வாத நீரை வெளிப்படுத்தி, வாதப்பிணிகள் குணமாகும். இதன் இலையை நீரிட்டுகாய்ச்சி வதவலியுள்ள பாகங்களில் விட்டுவர நோய் குணமாகும்.



முட்சங்கன் :- இதன் இலைச்சாறு கோழையை வெளிப்படுத்தி, இருமலை தணிக்கும். இதன் வேரை குடி நீரிட்டு கொடுக்க முறைசுரம், குன்மம், வாதநோய், சோபை குழந்தைகட்கு காணும் மாந்தம், சுரம், இருமல் முதலியன குணமாகும்.



சங்ககுப்பி :- இதன் இலைக் குடிநீர் முறை சுரத்தைக் குணமாக்கும். மற்றும் இதனால் இரத்தம் சுத்தப்பட்டு மேக நோய்கள் குணமாகும்.



அசோகு:- இதன் மரப்பட்டையை இடித்து சாறு எடுத்துதாவது அல்லது குடிநீரிட்டாவது கொடுத்து வர சீத ரத்தபேதி,பெரும்பாடு முதலியன குணமாகும். இது கருப்பைக்கு உரத்தைத்தரும்.



அத்தி :- அத்திப்பிஞ்சை சமைத்துண்ண மூலச்சூடு வயிறுக்கடுப்பு முதலியன தீரும். அத்திப்பட்டையை குடி நீரிட்டு கொடுக்க சீத ரத்தபேதி, பெரும்பாடு பிரமேகம் முதலியன குணமாகும். அத்திப் பழம் மலத்தை இளக்கும்.



இஞ்சி :- இதற்கு வயிற்றுலுள்ள வாயுவை கண்டித்து, பசிதீயையும், ஜீரணத்தையும் உண்டாக்கும் செய்கைகள் உண்டு. இதனால் சுரம்,சந்தி, வாதசோபம், பித்தாதிக்கம், வாந்தி, மயக்கம், அஜீரணம், பேதி, கபம், முதலியன குணமாகும். இஞ்சிச் சாறு அல்லது இஞ்சிக்கற்கத்தில் திப்பிலிச் சூரணத்தி சேர்த்துக் கொடுக்க இருமல், இரைப்பு, குன்மம், அஜீரணப் பேதி, முதலியன குணமாகும். இஞ்சிச் சாறுடன் சமன் பாலும் சர்க்கரையும் சேர்த்து மணப்பாகு செய்து அருந்திவர பித்தாதிக்கம், வாந்தி, அஜீரணம், அரோசகம் முதலியன குணமாகும். இஞ்சிச் சாறுடன்
சமன் பாலும் நல்லெண்ணெய்யும் சேர்த்து தைலமாக காய்ச்சி முடித்தைலமாக உபயோகிக்க நீர், பீனசம், தலைவலி முதலியன குணமாகும்.




எலுமிச்சை :- இதற்கு பித்தனாசினி குளிர்ச்சியுண்டாக்கிசெய்கைகள் உண்டு. இதனால் பித்தமயக்கம், வாந்தி, தாகம் முதலியன குணமாகும். எலுமிச்சம்பழச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நீருடன் கலந்து குடிக்க பித்தமயக்கம், வாந்தி, தாகம் முதலியன குணமாகும். சீரகத்தை தேன் விட்டு வறுத்து, அத்துடன் பழச்சாறு சேர்த்து நீர் விட்டு குடிநீரிட்டு வழங்க நேர்வாளம் முதலிய பேதி மருந்துகளினால் ஏற்பட்ட அடங்காத வாந்தியும் பேதியும் குணமாகும்.




தராயிலை :- இதனால் விரணம் கிரந்தி முதலியன குணமாகும். பெண்களுக்குண்டாகும் உதிரச் சிக்கல் நீங்கும். இந்த இலையை அரைத்து கிரந்தி பிளவை கட்டி முதலியவைகட்கு மேலுக்கும் போட்டுவர விரைவில் ஆறும். உலர்ந்த தராயிலையுடன் சமனெடை காட்டுச் சீரகஞ் சேர்த்து இடித்துக் கல்வத்திலிட்டு வெள்ளாட்டுப்பிச்சி நீர் விட்டு நாலைந்து நாட்கள் அரைத்து தேற்றறான் கொட்டைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு 1-மாத்திரை வீதம் தினம் 2-வேளையாக ஒரு மண்டலம் அருந்திவர வெண்குட்டம் குணமாகும்.



பிரமதண்டு :- இதனால் சொறி சிரங்கு, புண், மேகப்பிணிகள் முதலியன தீரும். இதன் இலைச்சாறு 2-முதல் 4-தேக்கரண்டி வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் அருந்திவர மேற்கண்ட நோய்கள் தீரும். இதன் பால் கண்ணோய்கட்கும், வித்து மேக நோய்கட்கும் உதவும்.



இம்பூரல் :- இதனால் இருமல், இர்த்தகாசம், பித்த கோபம், இரத்தவாந்தி முதலியன குணமாகும். இதன் வேரை உலர்த்தி இடித்துச் சூரணித்து திரிகடி பிரமாணம் கற்கண்டு தூள் சேர்த்து தினம் இருவேளையாக பாலில் அருந்திவர மேற்கண்ட நோய்கள் குணமாகும்.



நாவல் :- இதன் பட்டையை சூரணித்தாவது குடிநீரிட்டாவது அருந்திவர சீதபேதி, இரத்தபேதி, பெரும்பாடு முதலியன குணமாகும். இதன் கொட்டையைத் தூள்செய்து கல்வத்திலிட்டு ஆடு தின்னாப்பாளை சாறுவிட்டு இரண்டு மூன்று நாள் அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு 1-மாத்திரை வீதம் தினம் 2-வேளையாக ஒரு மண்டலம் அருந்திவர நீரிழிவு மதுமேகம் குணமாகும்.



நெருஞ்சில் :- இதற்கு சிறுநீரைப் பெருக்குஞ் செய்கையுண்டு. இதனைத் தனியாகவாவது அல்லது நீர்முள்ளி, சுரைக்கொடி, சிறுபிளை போன்ற சரக்குகளுடனாவது சேர்த்து முறைப்படி குடிநீரிட்டுக் கொடுப்பதுண்டு. இதனால் நீர் நன்றாக போவதுடன் நீர்சுருக்கு நீரடைப்பு, கல்லடைப்பு, சோபை, மகோதரம் முதலியன குணமாகும்.


***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் -- 1



நீரின் குணம் :

மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போகும். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவை இயிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று சலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்க்கும். கிணற்று சலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமூத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.



குளிர்ந்தநீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும். இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு ந்ல்லது. காய்ந்து ஆறிய நீரானதுபித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம்முதலிய நோய்கட்குச் சிறந்தது.



உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.


***



அன்னம் கஞ்சி இவைகளின் குணம்:


அரிசியுடன் முறைப்படி நீர் சேர்த்து கொஞ்சங்கூட கஞ்சியில்லாம்ல் வடித்தெடுத்த அன்னத்திற்கு ஒதனமென்று பெயர். இதுவே சாதாரண அன்னமாம். இதனால் விரணயோகம், நேத்திரரோகம், துர்பலம், தைல பாணத்தால் உண்டான தோஷம் முதலியன நீங்கும். தீபன முண்டாகும்.


ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு நீர் விட்டு கஞ்சியை வடிக்காமல் எடுத்த அன்னத்திற்கு விலேபி என்று பெயர். இது தேகத்திற்கு ஆரோக்கியம், பசி பாசனம் முதலியவைகளை உண்டாக்கி கிரகணி முதலியவைகளை போக்கும்.


ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பாகம் நீர் சேர்த்து சிறிது சாதம் தென்படும்படி காய்ச்சிய கஞ்சிக்கு பேயம் என்று பெயர். இது பசி, தாக்ம், ஆயாசம், துர்பலம், சுரம், வாதம் இவைகளை தணித்து பசிதீபனத்தை யுண்டாக்கும்.


ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பங்கு நீர் சேர்த்துக்கொஞ்சங்கூட அன்னம் தெரியாம்ல் சுத்த கஞ்சி சலம்போல் காய்ச்சிய கஞ்சிக்கு மண்டமென்று பெயர். இது தாகம், ஆயாசம், தோஷம் இவைகளை நீக்கும். தாதுவிருத்தி, தீபனம், வியர்வை இவைகளை யுண்டாக்கும். இது மிகவும் மெலிந்தவர்களுக்கும் அதிசார நோயினருக்கும் பயன்படும்.


***




தானியங்கள்:



பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும்.
பத்தியத்திற்குதவாது.

புழுங்கலரிசி :- இது பாலர்முதல் விருத்தர்வரை யாவருக்கும் நோயாளிகட்கும் பொருத்தமான
உணவாகும். பத்தியத்திற்காகும்.

கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமே
கத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.

சோளம்:- ச்ச் தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும் .

கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேதிக
ளுக்கு சிறந்த உணவாகும்.

கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின்
வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி யென்பர்.

கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு முதலியவைகளை
உண்டாக்கும். மருந்தின் குணத்தைக்கெடுக்கும்.

உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம் இடுப்பிற்கு
பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.

துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.
இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும்,
உதவும் என்க.

பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.

பட்டாணி :- இது நூரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால் வாய்வையும்,மந்தத்
தையும், உண்டாக்கும்.

மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தைத்தணிக்கும், மலத்தைப்பெருக்
கும்.

பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும். சுரம்
முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.


***


கீரைகள்

சிறு கீரை :- நீரைப்பிரிக்கும், மருந்தையும் விஷத்தையும் முறிக்கும், சிறிது உஷ்ணத்தை உண்டாக்கும்.

அறு கீரை :- இதனால் வாதமும் கபமும் மட்டாகும், மலம் இளகும், வீரியவிருத்தி முதலியவைக உண்டாக்கும்.

அரைக்கீரை: - இதனால் பித்தம் தணியும் , நீரை வரட்டும்.

அகத்திக் கீரை:- இதனால் பித்தம் தணியும் , மலமும் நீரும் போகும். மருந்தையும் விஷத்தையும் முறிக்குமென்க.

முருங்கைக் கீரை :- பித்தத்தைதணிக்கும். மலத்தை இளக்கும்.

புதியனா :- இதனால் அரோசகம்,வாந்தி, பசியின்மை நீக்கும், ஜீரணசக்தியுண்டாகும்.

கருவேப்பிலை :- இதனால் அரோசகம், பேதி,சுரம், பித்தம், பசி மந்தம் இவைகள் போம்.

கொத்தமல்லிகீரை :- இதனால் அரோசகம், பித்தாதிக்கம், போம், சுக்கிலம் பெருகும்.

துத்திக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், விரணத்தை ஆற்றும்.

சுக்கான்கீரை :- உஷ்ணத்தைதணிக்கும், ஜீரணசக்தியையும், இரத்தசக்தியையும் உண்டாக்கும்.

சிறுபசலைகீரை :- உஷ்ணத்தைதணிக்கும், கபத்தை விருத்திசெய்யும் புணர்ச்சியிச்சையை உண்டாக்கும்.

புளிச்சகீரை :- பித்தம் தணியும் , வீரியவிருத்தியாம்.

சோகிக்கீரை :- வாய்வையும், உதிரச்சிக்கலையும் போக்கி, ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

மணலிக்கீரை :- இது வாத பித்த கப தோஷங்களை தணிப்பதுடன் கிருமிகளை மடியச்செய்யும் பத்தியத்திற்குதவும்.

புளியாரைக்கீரை :- இதனால் உஷ்ணமும், பித்தமும் சமனப்படும்

பொண்ணாங்காணிக்கீரை :- இதனால் உடலில் உஷ்ணம் தணியும்,கண்களுக்கு ஒலியும், உடலுக்கு பலமும் மேனியுமுண்டாகும்.

மணத்தக்காளிக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், வாய்ரணத்தை ஆற்றும். மலத்தை இளக்கும், நீரைப்பிரிக்கும்.

காசினிக்கீரை :- இது இரத்தத்தை சுத்தி செய்வதுடன், இரத்த விரித்தியையும் உண்டாக்கும், மலத்தையும் நீரையும் பிரிக்கும்.

வெந்தயக்கீரை :- இது வயிற்றுவலி, பசிமந்தம், வாதகோபம், உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல் முதலிவைகளையும் போக்கும்.

முள்ளங்கிக்கீரை :நீரைப்பெருக்கும்,பசிதீபனத்தையும்,ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

முளைக்கீரை :- இவைகள் உஷ்ணத்தை தடுத்து நீரைப்பெருக்கும், சீதளமென்பர்.

****

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள்



கழிப்பறைக் கதவின் கைப்பிடியில், பல நூறு பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். கழிப்பறைக்குச் சென்று வந்தபின் கைகளை நன்றாய் சோப்பு போட்டுக் கழுவுவதன் மூலம், பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து தப்பலாம். ஆனால், நாம் அண்மைக்காலமாக அதிகம் பயன்படுத்தும் செல்போன்களில், கழிப்பறைக் கதவின் கைபிடியில் உள்ளதுபோல், பல மடங்கு பாக்டீரியாக்கள் படிந்துள்ளன.


சமீபத்தில், இலண்டனில் பயன்படுத்தப்படும் செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள் குறித்து, ஜிம் பிரான்ஸிஸ் என்ற சுகாதாரத்துறை நிபுணர் ஒரு ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கவையாயிருந்தது. அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட ஆறு கோடி செல்போன்களில், சராசரியாக 25 சதவிகித செல்போன்களில், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாக்டீரியாக்கள் இல்லாத இடமே இல்லை. எனினும், பாதுகாப்பான அளவென்று ஒன்று உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, பல செல்போன்களில், 18 முதல் 39 மடங்கு வரை பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன. இது போதாதென்று. உணவை நஞ்சாக்கும் “இ-கோலி” மற்றும் “ஸ்டெபைலோகாக்கஸ்” போன்ற பாக்டீரியாக்கள் தற்போது செல்போன்களில் குடியிருக்கத் துவங்கிவிட்டன.



ஜிம்மின் ஆராய்ச்சியில், சுவாரசியமான தகவலொன்று உண்டு. அவரின் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட செல்போன்களில், அதிக அளவு பாக்டீரியாக்களை வைத்திருந்தவருக்குத் தீராத வயிற்று வலி இருந்து வந்தது தெரியவந்துள்ளது. ஆய்வின் உபயத்தால், அவருக்கு வயிற்றுவலி தீர்ந்ததோ இல்லையோ, பலருக்கு நோய் வரும் காரணம் செல்போனென்று தெரிந்து கொண்டோம் நாம்.

செல்களைக் கழுவ முடியாது. கைகளை நன்றாய்க் கழுவுங்கள்.

***

நன்றி உணவு உலகம்.
நன்றி சகோதரர் FOOD.


***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உணவும் காய்கறிகளின் தன்மையும்


நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது, புரோட்டீன் உடலை வளர்க்கிறது, கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35% கலோரி உணவை எடுத்துக் கொள்ள வெண்டும். எடை கூட இன்னும் நிரைய உணவு உட்கொள்ள வெண்டும்.


ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மிலி தண்ணீர் பருக வேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.



வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட் களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம் உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும்.


பயிறு வகைகளை 2ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமத்தால் வாயு உண்டாகாது.



• காரமுடைய பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

• ஒரு மாதத்திற்கு 500 மிலிக்கு மிகாமல் எண்ணையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

• ஒரு வாரத்திற்கு 2 முட்டைகளுக்கு மேல் உண்ணக்கூடாது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது. இந்த கொழுப்பு 8 தேக்கரண்டி வெண்ணைக்குச் சமமானது.






உப்பு

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.5 கிராம் அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மேல் சேர்த்துக் கொண்டால் அதிக இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ஊறுகாய், அப்பளம், சட்னி ஆகியவைகளில் உப்பு அதிகமாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமகும்.



ஜீரணம்

மாவுப் பொருட்களின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. மாவுச்சத்து ஜீரணமடைய சுண்ணாம்புச் சத்து ஊடகமாக உள்ளது. மாவுப்பொருட்களை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சரியாக ஜீரணம் ஆகாது.



புரதம் இரைப்பையில் ஜீரணம் அடைய ஆரம்பிக்கிறது. புரதச் சத்து ஜீரணமடைய அமிலம் ஊடகமாக உள்ளது.



பூண்டு



[1] பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

[2] பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.

[3] பூண்டு இரத்த அழுதத்தை கட்டுபடுத்தும்.

[4] இதய தசை மற்றும் இரத்தகுழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.

[5] பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்

[6] குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.

[7] தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.

[8] பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு கொசு,ஈ மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.



இஞ்சி



[1] இஞ்சியில் கால்ஷியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள்

இஞ்சியைத் தவிர்க்க வேண்டும். பித்தத்தை குணமாக்கும்.



புதினா

புதினா கீரை இரத்த சுத்திகரிப்புக்குச் சிறந்த மருந்தாகும். தினமும் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாகி, கரும்புள்ளி மறைகிறது, பருக்கள் வருவது குறைகிறது. முகத்திலுள்ள எண்ணை பசை மறைகிறது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.



வெங்காயம்



வெங்காயம் ஜீரணத்திற்கு நல்லது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். (Allyle Propyle Disulphide) என்ற எண்ணை இருப்பதால் வெங்காயம் காரத்தன்மையோடு உள்ளது. இதயத்திற்கு சக்தியை தருகிறது. நரை முடியைத் தடுக்கும், தலையில் வழுக்கை விழாமல் காக்கும், எலும்புக்கு வலிமை அளிக்கும், பித்த நோய், கண் நோய், வாத நோய்கள் குணமாகும்.



• கத்தரிக்காய், பீட் ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையான கேன்ஸர் நோய்களும் அண்டாது.

• ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல் தடுக்கலாம்.

• நார் சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவைகளை உண்டு வந்தால், நம் உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேரும்.

• தக்காளி, கெட்ச்சப், சிவப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை உண்டால் கண் பார்வை நன்கு தெரியும்.


கத்தரிக்காய்


கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது, சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.


முருங்கக்காய்



முருங்கக்காயில் இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. முர்ங்கக்காயை குழந்தைகள் உண்டால் வயிற்றில் கிருமிகள் அண்டாது. பெரியவர்களுக்கு வாயுக்கோளாரை ஏற்படுத்தும்.



வெண்டைக்காய்



Acetylated, Galeturomic என்ற அமிலங்கள் வெண்டைக்காய்க்கு வழுவழுப்பை ஏற்படுத்துகிறது. பாதி கரையும் நார்ச்த்து, பாதி கரையாத நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ளது. கரையும் நார்ச்சத்து கொலெஸ்டெராலை குறைக்கும். கரையாத நார்ச்சத்து குடலை பாதுகாத்து, குடல் புற்று நோய் வராமல் காக்கும்.



மாங்காய்


மாங்காயில் வைட்டமின் ஏ நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய உண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய்க்கு பசியைத்தூண்டும் தன்மை உள்ளது.



அவரக்காய்


அவரக்காயில் நிறைய புரதம் உள்ளது. இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை நீக்கும்.



அத்திக்காய்


அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. அத்திக்கயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.



பீர்க்கங்காய்


பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைய உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். இரவு உணவில் பீர்க்கங்காயை தவிர்ப்பது நல்லது.



கோவக்காய்


கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.



புடலங்காய்


புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ம்ற்றும் நிறைய புரதம் உள்ளது. தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கல் புடலங்காயை தவிர்ப்பது நல்லது.



பாகற்காய்


பாகற்காயில் பாலிபெப்டைட் என்ற இன்சுலின் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பாகற்காயை நிறைய உண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பாகற்காய் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு பாகற்காய் ஜூஸ் சாப்பிடலாம்.



சுரைக்காய்


சுரைக்காயில் நீர் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவைகள் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். ஆண்மை சக்தி கூடும். இதயத்திற்கு நல்லது.



பூசனிக்காய்


பூசனிக்காயில் கொழுப்பு மற்றும் புரதச் சத்து உள்ளது. நரம்பு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது.



கொத்தவரைக்காய்


கொத்தவரைக்காயில் நார்ச்சத்து உள்ளது. வாயுத்தொல்லையை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.



வாழக்காய்



வாழைக்காயில் வைட்டமின் இ மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லையை உண்டாக்கும்.



வெள்ளரிக்காய்



வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. நன்கு சிறுநீர் கழியும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.



சுண்டக்காய்



சுண்டைக்காயில் வைட்டமின் சி உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கிருமிகள் வராது.



பலாக்காய்


பலாக்காயில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் பலாக்காயை தவிர்க்கலாம். செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்.



களாக்காய்


களாக்காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி உள்ளது. நல்ல பசி உண்டாகும். கண் பார்வை கூடும்.



நெல்லிக்காய்

நெல்லிக்காயில் கால்சியம், செல்லுலோஸ், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிளட் பிரஷர் உள்ளவர்கள் நெல்லிக்காயை உண்ணலாம். நெல்லிக்காயை உண்டால் இளமை கூடும். தலை முடி நன்கு வளரும்.



காரட்


காரட்டில் வைட்டமில் ஏ, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், மற்றும் மெலோனிசைட்ஸ் அன்ற நிறமி அணுக்கள் உள்ளன. காரட் கண் பார்வைக்கு நல்லது.



பீன்ஸ்

பீன்ஸில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. கண் பார்வை தெளிவு பெறும், வாயு, பித்தம் நீங்கும். சருமம் பழபழப்பாகும்.



பீட் ரூட்


பீட்ரூட்டில் குளூகோஸ் உள்ளது. பீட்ரூட் உண்டால் இரத்த சோகை நீங்கும்.



வெள்ளை முள்ளங்கி


வெள்ளை முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாஷியம், கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் சத்து உள்ளது. சிறுநீரக கல் அடைப்பு குணமாகும். உடலுக்கு குளுர்ச்சியைத் தரும்.



சிவப்பு முள்ளங்கி


சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி, கால்ஷியம், கந்தக சத்துக்கள் உள்ளன. சிறுநீரை வெளியேற்றும். அசிடிட்டி உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை உண்டால் குணமாகும்.



காலிஃபிளவர்

காலிஃபிளவரில் இரும்புச்சத்து, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கல் வராமல் இருக்கும், உடல் மெலியும்.



முட்டைக்கோஸ்

முட்டைக்கோசில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. தாது பலம் கூடும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.



நார்த்தங்காய்

நார்த்தங்காயில் சிட்ரஸ் ஆசிட் உள்ளது. வயிற்றுப்புண், அல்சர் உல்ளவர்கள் நார்த்தங்காயை தவிர்க்க வேண்டும். வாயுத்தொல்லையை நீக்கும்.



***


நன்றி யாழ்தளம்.


***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி




கண்டதையெல்லாம் படித்தால் பண்டிதனாகலாம் என்பது பழமொழி. அதற்காக கண்டதைத் தின்றால் உடல் குண்டாகுமே தவிர உடலுக்கு ஆரோக்கியம் தராது.





பொதுவாக உணவுமுறையைப் பொருத்தவரை சைவ உணவுவகைகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.காய்கறிகள், கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்ற விதைகள் அடங்கிய சைவ உணவுகளில் போதிய அளவிற்கு ஊட்டச்சத்துகள் கிடையாது என்ற கவலை இப்போது இல்லை. குறிப்பாக உடலுக்கு தேவையான புரோட்டீனை சைவ உணவுகள் மற்றும் காய்கறிகள் அளிக்கின்றன என்பது தெரிய வந்திருப்பதால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளே கூட வெஜிடேரியன் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள்.



சைவ உணவில் உடலில் ஏற்படும் நோய்களுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்களுக்கான சிகிச்சை இயல்பாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெஜிடேரியன் உணவு முறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு தாவரவகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்தல் நலம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய உணவு ஆய்வுக் கழகம் போன்ற சுகாதார அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.






சைவ உணவு முறையே ஒரு சில நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாகும் என்றும், உடலுக்கு தேவையான பலன்களை அளிக்கக்கூடிய சத்துக்கள் வெஜிடேரியன் உணவுகளில் இருக்கின்றன என்றும் அவை கூறுகின்றன. வெஜிடேரியன்களில் வேறுவேறு வகைகள் உண்டு. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள். இறைச்சி, மீன், கோழி போன்ற பறவைகளின் இறைச்சியையும் அறவே தவிர்ப்பவர்கள் ஒரு ரகம். சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் மீன், கோழி போன்ற ஒரு சிலவற்றை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.



சைவ உணவு முறையைக் கடைபிடிப்பவர்களைப் பொருத்த வரை தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் அடிப்படையில் உள்ளவர்களே அதிகம் எனலாம். எந்தவொரு அசைவ உணவுகளையும் சாப்பிடாதவர்கள் பலர். இறைச்சியை மட்டும் தவிர்ப்பவர்கள் சிலர் என்று செவன்த் டே அன்வென்டிஸ்ட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் சைவ உணவுமுறையைக் கொண்டிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டுள்ளனர். அதாவது அசைவத்தை முற்றிலும் தவிர்த்தோர் ஆரோக்கியமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்:
*
தாவர வகை உணவுகளை எடுத்துக் கொள்வோர் உடல் குண்டாவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். உடல் குண்டாக இருப்பதால் பல்வேறு வகை நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, சில வகை கேன்சர் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிகம். சில நேரங்களில் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாலோ அல்லது காய்கறிகளை அதிகம் உண்பதாலோ உடல் எடை தேவையான அளவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. கொழுப்புச் சத்து குறைவாக எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை குறைந்து காணப்படலாம். அதற்கேற்ப உடல் எடையை சீரான அளவில் வைக்கத் தேவையான ஆகாரங்களை எடுத்துக் கொள்தல் அவசியமாகிறது.


***


இருதய நோய்:

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும். அதே நேரத்தில் சைவ உணவினர் போதிய அளவிற்கு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்தல் அவசியம். கொழுப்பு அளவில் சுமார் 50 முதல் 100 சதவீதம் நார்ச்சத்துள்ள உணவுகளையும் உண்ணுதல் வேண்டும். தாவர உணவுகளில் தேவையான நார்ச்சத்துகள் இருப்பதால், அவை இருதய நோய்களை கட்டுப்படுத்துகின்றன. இருதயத்தின் ஆர்ட்டரி சுவர்களில் தேங்கும் கொழுப்புகளை தாவர வகை உணவுகள் அகற்றுகின்றன.

அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்பதால் சைவர்கள் டென்ஷன் ஆவது குறைகிறது. தவிர சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் சைவ உணவினருக்கு குறைவே.

என்றாலும் சைவ உணவு முறைகளைக் கொண்டிருப்போர் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஈடுகட்ட வேண்டும். புரோட்டீன், விட்டமின் டி மற்றும் பி 12, கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துக்களை உடலுக்கு போதுமான அளவில் வேறு வகையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன்மூலம் அவர்கள் அசைவ உணவுகளில் இருக்கும் அளவிலான சத்துக்களை சமன்படுத்தலாம்.

சைவத்திலேயே விதவிதமான உணவுகளை சாப்பிடுவதுடன் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். பால் பொருட்களைப் பொருத்தவரை குறைவான கொழும்பு கொண்டவையாக இருக்கட்டும்.மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்வை நாம் பெற வேண்டுமானால் வெஜிடேரியன் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவோம்.

***

நன்றி பாரதி.
http://barthee.wordpress.com/



***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை




ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.


***


குழந்தை பிறக்கும் காலம்:

*

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

***

பிறக்கும் குழந்தையின் எடை:

*

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

***

பராமரிப்பில் முக்கியமானவை:

*

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்

***

தாய்ப்பால்:

*

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

***

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:

*

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

***

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

*

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.

***

சில தகவல்கள்.....
*

கொலஸ்ட்ரம்:

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

*

தாய்ப்பால்:

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.


*

ஊட்டும் போது முதலில் வரும் பால்:

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

*

கடைசியில் வரும் பால்:

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

*

தடுப்பூசி:


பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.


***


நன்றி - குமுதம் ஹெல்த்.
நன்றி தமிழரங்கம்.


***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தைகள் பார்வையை பாதுகாக்க :




படிக்கும் போதும் , டிவி பார்க்கும் போதும் நேராக உட்கார்ந்தே பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரை நொடி கண்களை மூடி ஓய்வு எடுக்கவேண்டும் .

சரியான அளவில் வெளிச்சம் இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில் கருவிழி தசைகள் சோர்வடையும் . பொதுவாக படிப்பதற்கு குழல் விளக்கை விட குண்டு பல்பு சிறந்தது என்று ஒரு ஆய்வு கூறுகிறது .

அதி காலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது கண் தசைகள் வலுவிழந்து போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில் போகும் போது படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு அதிகபடியான அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )

***
நன்றி டாக்டர் ராஜ்மோகன்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :



மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்


வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்


வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்






தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்


ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .


துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .


துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .


***

நன்றி டாக்டர் ராஜ்மோகன்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மசாஜ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால். மசாஜ் கிளப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மசாஜ் தரும் பலன்கள் அதிகம் என்கிறார்கள் உடலியக்க நிபுணர்கள்.......

***

அதன் பலன்களை பார்க்கலாம்:



1. சருமம்:( மசாஜால்):

*

சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

***


2. தசைகள்:


தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.





3. இரத்த ஓட்டம்:

*

மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது. ஒட்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தத்தின் திறன் அதிகரித்து, அதன் பயன்
கூடுகிறது.

***


4. நரம்புகள்:


இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென் மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.


***


5. ஜீரண மண்டலம்:


கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய்
எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.


***


6.சிறுநீரக மண்டலம்:

*

சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.



***


7. இதயம்:

*

முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.


***


மசாஜ் செய்யும் முறை:


கை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு
துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம்.

*

அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சி யாகவும் அமையும். சுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம்.
மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப் பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

***

உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை:
*
உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும்.

***


தவிர்க்க வேண்டியவை::
*
காய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது.•

கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது.•

வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. •

சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.


***



வயிற்றுக்கும் மசாஜ் செய்யலாம்:


இருதயம், சுவாசகோசம், வயிறு ஆகிய உறுப்புகளைச் சூழ்ந்துள்ள தசைகள் தன்னிச்சையாக இயங்குபவை. மசாஜ் செய்வதால் அவற்றின் உடனடிப்பலன் எதுவும் ஏற்படாதது போலத் தோன்றலாம். உண்மையில் இதனால் நல்ல பலன்களே விளைகின்றன.

வயிற்றில் மசாஜ் செய்வது ஜீரணத்துக்கு உதவுகிறது. ஜீரண உறுப்புகளின் நரம்புகளில் தாராளமாக ரத்த ஓட்டம் ஏற்படச் செய்து, அழிந்து போன திசுக்களையும் ஜீரணமாகாத உணவுச் சக்கைகளையும் வெளியேற்ற உதவுகிறது.
உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சத்துக்கள் எல்லா உறுப்புக்களையும் சென்றடைவதை விரைவு படுத்துகிறது. உணவுச் சத்துகள் உடலுறுப்புகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே பலவிதமான உணவுகளை உண்கிறோம். சத்துக்கள் உடலுறுப்புகளுக்கு முழுமையாக பயன்பட மசாஜ் உதவுகிறது.

உழைக்கும் போது ஏற்படும் கழிவுப் பொருள்கள் ஓரளவு மீண்டும் சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுவதும் உண்டு. அப்படி மாற்றப்படாதவை உடலின் நிணநீர் அமைப்பிலுள்ள வடிகட்டும் நுட்பமான முறையினால் வெளியேற்றப்பட வேண்டும். சுரக்கும் நிணநீர் பால்போல வெண்மையாக இருக்கும். கழிவுகள் இதில் வந்து போகும் போது, அதிலுள்ள தீங்கிழைக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதற்காக வெள்ளை அணுக்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனாலேயே இவ்வாறு வெள்ளை நிறமாகத் தோன்றுகிறது.

நிணநீர்க் குழாய்கள் உடல் முழுவதும் அமைந்துள்ளன. ஒரு நாளில் உடல் முழுவதும் இரண்டு லிட்டர் நிணநீரை இது சுற்றி வரச் செய்கிறது. இதைச் சுற்றி வரச் செய்வது சுருங்கி விரியும் தசைகள்தான். மசாஜ் செய்யும் போது இப்படி எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது.

நிணநீர்க் கேந்திரங்கள் உடலில் முக்கியமாக ஐந்து இடங்களில் உள்ளன. இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும், மார்பிலும் அவை உள்ளன. முழங்கால்கள், முழங்கைகள், கழுத்தில் சிறிய கேந்திரங்கள் உள்ளன. மார்பு, வயிறு, கை, கால்களை மசாஜ் செய்யும் போது இக்கேந்திரங்களும் விரைந்து செயல்பட தூண்டப்படுகின்றன. நிணநீர் எளிதாகப் பரவி, கழிவுகள் வேகமாக வெளியேற்றப்பட இது உதவுகிறது.

உள்ளங் கையைப் பதித்து வட்டமாகச சுழற்றித் தேய்ப்பதன் மூலமும், தட்டுவதன் மூலமும் தசை அதிகமாகவுள்ள இடங்களில் மெல்லப் பிசைந்து விடுவதன் மூலமும் நிணநீர் செய்யும் வேலையை வேகப்படுத்தலாம். இயல்பாக அது தனது பணியைச் செய்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் மசாஜ் செய்வதால் அது மேலும் தூண்டப்பட்டு அதன் பணி விரைவு படுத்தப்படுகிறது.


***

நன்றி ஈகரை.
நன்றி http://feroos.blogspot. com


***
"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Castor Oil ( விளக்கெண்ணெய் )



பெருஞ்செடிகள் அல்லது குறுமரங்கள் வரிசையில் இடம்பெறும் ஆமணக்கின் தாவரவியல் பெயர் Ricinus communis ஆகும்.

*


இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.

*
கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரிதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். சாம்பல் நிறமான பூச்சுடைய, பத்து அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.

*

எளிதில் உடையக்கூடிய தண்டை உடையது. முட்களுடன் கூடிய காய்கள் காய்க்கும். இவை காய்ந்தால் வெடிக்கும் தன்மையுடையது. பழங்கள் கூர்மையான ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு.

*

கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். 'சித்திரகம்', 'ஏரண்டம்' என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

*

குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும்.

*
ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, 'ஆமணக்கு முத்து', 'ஆமணக்கங் கொட்டை' என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.

*

தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகிறது. விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.

*
இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

*

இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்பு சுவையும், வெப்பத்தன்தையும் கொண்டவை. இலையானது வீக்கம், கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும் தாய்ப்பால் பெருக்கும். வேர், வாத நோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.

*
எண்ணெய் மலமிளக்கும், வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளை தாய் போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

*

விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, 'ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்' என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
*
பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும்போது, பொங்கிவரும் பதநீர் கீழே வடியாமல் தடுக்க, பதநீர் பொங்கும்போது, ஆமணக்கு முத்துகளைப் போடுவர். இதனால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வெளியே பதநீர் வராது.
*
திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.
*
கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும். மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர்.

*
ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையிலேயே இவ்வாறு வளர்க்கின்றனர். யோனா என்ற தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்குப் பயன்படும்படி ஆமணக்குச் செடியை ஆண்டவர் வழங்கியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.
*
ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது, மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது, அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர்.

*
இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரிஸ்' ஆகும். இவ்வழவழப்புத் தன்மை யின் காரணமாகத்தான் பால் கறக்கும்போது, மாட்டின் மடுக்காம்புகளில் விளக்கெண்ணெயைத் தடவுவது வழக்கம். இதனால் மாட்டின் மடுவிலுள்ள காம்புகளில் கீறலோ வடுவோ விழுவது தடுக்கப்படும்.
*
விளக்கெண்ணெயின் வழவழப்புத் தன்மையின் அடிப்படையில் எதிலும் உறுதியான முடிவெடுக்காமல் இருப்போரைக் குறிக்க 'சரியான விளக்கெண்ணெய்' என்னும் சொல்லாட்சி இன்றும் வழக்கிலுள்ளது.



*

கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளையர்கள் அழித்த பின்னர் உழுது ஆமணக்கு விதைத்ததாக வாய்மொழிச் செய்தியுண்டு. இச்செயலை எட்டயபுரம் ஜமீன்தார்தான் நிறைவேற்றினார் என்பதை வம்சமணி தீபிகை என்னும் நூல் குறிப்பிடுகிறது. இதனால் மேற்கூறிய வாய்மொழிச் செய்தி உண்மை யென்பது உறுதியாகிறது. எதிரியின் இருப்பிடத்தை வளமற்ற நிலமாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடே இச்செயல். தன்னை ஒன்றுமல்லாமல் ஆக்க நினைப்பவனை "அவன் கொட்டமுத்து போடுறான்" என்று குமுறும் வழக்கம் தூத்துக்குடி மாவட்டக் கரிசல் வட்டாரத்தில் இன்றும் உண்டு.


***

விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்:

*

நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர்.

*
சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர்.
*
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.

*
இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர்.
*

புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட் பகுதியில் தடவும் எண்ணெயில் விளக்கெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும் எரி பொருளாகவும் பயன்படுகின்றது.





உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.

*
வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது.


*

குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது.

*



ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன. வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும்.

*
இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.



வித்தின் ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள் எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு, நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும்.

*

மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய் அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது.



கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.
விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.


விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.


பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.


குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.

உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை அ‌ல்லது பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணையை குடி‌ப்பது அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌‌ந்த பழ‌க்கமாகு‌ம்.

***

நன்றி அமுதம் தமிழ்களஞ்சியம்.
நன்றி தமிழ்வாணன் .காம்.
நன்றி காலச்சுவடு.காம்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net