Wednesday, May 12, 2010

பொன் மொழிகள் -5

எல்லாம் வேடிக்கை தான்!நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை.
*********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
*********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது
பலவீனமான கொள்கையின் அறிகுறி.
*********
சுண்டெலி பூனையைப் பார்த்து சிரித்தால்
பக்கத்திலே அதற்கு ஒரு வளை இருக்கிறது என்று பொருள்.
*********
காசு வாங்காமல்,எதுவும் உனக்குக் கிடைத்தால்
அதற்கு உண்டான விலை இன்னமும்
வசூலிக்கப் படவில்லை என்பது தான் பொருள்.
********
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நம்மைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில்,நாம் குழந்தைகளாக இருந்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் பெரியவர்களாக இருந்ததில்லை.
********
வாழ்க்கையில் பயம் இருக்கலாம்.ஆனால்
பயமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது.
********
படுக்கைக்கு செல்லும் முன் செருப்புக்களோடு உன்
மனக் கவலைகளையும் வீட்டுக்கு வெளியே ஏறி.
********
இளமையாக இருக்கிறீர்களே என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால்,உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
********
''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்றுகேட்பார்கள்
.ஆனால்
புகழ்ந்து பேசுவதைத்தான் விரும்புவார்கள்.
********
பணம் என்பது ஆறாவது அறிவு .
அது இல்லாவிடில் ஐந்தறிவும்வீண்தான்.
********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையே
உள்ள இடைவெளி.
********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான்
எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலை தான் கொல்லும்
********
பொறாமையை நீ துணைக்கு அழைத்தால் முதலில்
அது உன் எதிரியை நெஞ்சில் அடிக்கும்.
பின் உன்னையே வயிற்றில் அடிக்கும்.
********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
********
மனிதர்கள் மோசமானவர்கள்.அபாயம் நீங்கியவுடன்
அவர்கள் ஆண்டவனை உடனடியாக மறந்து விடுகிறார்கள்.
********
சிறிது காலமே வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி அழகு.
********
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொது அழுபவன் தெம்பற்றவன்.
அழுகையிலிருந்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவன் நெஞ்சுரமுள்ளவன்.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க சொல் வந்து விட்டால்
முன்னால் சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதைவிட
இல்லை என்று மறுப்பதோ,அவமானப்படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்கு பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன;முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net