Wednesday, January 5, 2011

யாரை மாற்றுவது?

எனது இளம் வயதில் நான் ஒரு புரட்சியாளனாக இருந்தேன்.அந்த சமயத்தில்,''இறைவனே,இந்த உலகத்தை மாற்றுவதற்கு எனக்கு சக்தியைக் கொடு,''என்பதைத் தவிர வேறு எதையும் நான் பிரார்த்தனை செய்ததில்லை.
ஒரே ஒருவரைக்  கூட மாற்ற முடியாமல் எனது வாழ்க்கையின் பாதி காலம் முடிந்து விட்டதை எனது நடு வயதை எட்டிய சமயத்தில் உணர்ந்தேன்.அதனால் எனது பிரார்த்தனையை மாற்றிக் கொண்டேன்.
''இறைவா,என்னிடம் தொடர்பு கொள்பவர்களை எல்லாம் நான் மாற்றுவதற்கு  எனக்கு அருள் புரி.''
இப்போதோ எனக்கு வயதாகி விட்டது.என் நாட்கள் எண்ணப்படுகின்றன.என்னால் யாரையும் மாற்ற முடியவில்லை.இப்போதெல்லாம்,''இறைவா,என்னை நானே மாற்றி கொள்வதற்கு அருள்வாயாக!''என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.ஆரம்பத்திலிருந்தே நான் இப்படிப் பிரார்த்தனை செய்திருந்தால் என் வாழ்க்கையை வீணடித்திருக்க மாட்டேன்.
நான் மாறும்போது உலகம் மாறுகிறது.
                                            ---------சூபி ஞானி பயாஜித்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment