Wednesday, January 5, 2011

ஒற்றுமை

சாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு,தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து,இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு   என்றார்.
அவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான்.தந்தை உடனே,''பரவாயில்லை.இதோ பல கம்புகள் உள்ள கட்டு.இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,''என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது.உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,''அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா?தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது.அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை   விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.''
உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில்  தந்தையும் குணமடைந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment