Wednesday, January 5, 2011

வறுமை

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே.யைச் சந்திக்க ஒருவர் வந்தார்.''ஐயா, மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய் கொடுங்கள்.நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன்.''என்றார்.'அப்படியா சரி.இப்போதே வாசி,'என்றார் என.எஸ்.கே.வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார்.வாசிப்பில் சுருதி,தாளம்,ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை.
இசையைக் கேட்டுக் கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லி விட்டு நூறு ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து,'நீங்கள் நாதஸ்வரம் வாசிக்கவில்லை.உங்களது வறுமையைத் தான் வாசித்தீர்கள்.நன்றாகக் கற்றுக் கொண்டு பிறகு வந்து வாசியுங்கள்.இப்போது சாப்பிட்டு விட்டுப் போங்கள்.'என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment