Showing posts with label தெரியுமா?. Show all posts
Showing posts with label தெரியுமா?. Show all posts

Tuesday, March 8, 2011

ஜம்ஜம்

மக்கா சென்று வரும் இஸ்லாமிய சகோதரர்கள் புனித நீரான ஜம்ஜம் நீரைக் கொண்டு வருவது வழக்கம்.ஜம்ஜம் என்ற பெயர் எப்படி வந்தது?
தீர்க்கதரிசி இப்ராஹீமுக்கு தொண்ணூறு வயதில் அவரது இளைய மனைவி ஹாஜகா மூலம் இஸ்மாயில் பிறந்தார்.இறைவனின் கட்டளையை ஏற்று கைக்குழந்தையையும் தாயையும் நெடுந்தொலைவிலிருந்த தண்ணீர் இல்லாத,புல் பூண்டு முளைக்காத,மக்கள் அற்ற பாலைவனத்திற்கு இட்டுச்சென்று தனியே விட்டுவிட்டுத் திரும்பினார்.தனியே விடப்பட்ட தாய்க்கும்,மகனுக்கும் கொண்டு வந்த உணவும்,நீரும் ஒரு நாள் தீர்ந்தது.குழந்தை தண்ணீருக்காக அழுதது.அன்னை பதைபதைப்புடன் நீரைத் தேடினார்.சப்பா,மர்வா என்ற இரண்டு குன்றுகளுக்கிடையே ஏழு முறை விறுவிறுக்க ஓடினார்.குழந்தை தரையில் உதைத்துக் கொண்டிருந்த இடத்தில் திடீரென தண்ணீர் பொங்கி ஓடியது.இறையருளை உணர்ந்த அன்னையின் வாய்,''ஜம்ஜம்''என்றது.ஜம்ஜம் என்றால் போதும்,போதும் என்று பொருள்.வற்றாத நீர்வளம் ஏற்பட்டதால்,மக்கள் அங்கு குடியேறி,பின்பு அது மக்கா பெருநகராகிவிட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நார்சிசம்

நார்சிசம் (naarcissim) என்ற சொல் கிரேக்க புராணத்தில் இடம் பெற்ற ஒருவனின் பெயரிலிருந்து வந்தது.ஆற்று தெய்வத்தின் மகன் நார்சிசஸ் என்பவன்.இவன் தன்னை நேசித்து பிறரை வெறுத்ததன் காரணமாக கடவுளால் தண்டிக்கப் பட்டான்.ஓடும் நீரோடை ஒன்றில் தன உருவம் கண்டு தன்னையே மோகித்து தன உருவத்தைத் தழுவ முயன்று முடியாமல் செத்துப் போனான் நார்சிசஸ் அதிலிருந்து தன்னையே நேசித்து காதல் கொள்ளும் மனிதர்களை நார்சிஸ்ட் என்பார்கள்.நார்சிசம் ஒரு மனோநிலை.இந்த மனம் கொண்டவர்கள் தன்னை முன்னிட்டே பிறரை எடை போடுவார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மெஷகிசம்

மெஷகிசம் (mesochism):
இந்த வார்த்தை உருவாகக் காரணம் ஒரு ஆஷ்ட்ரிய எழுத்தாளர் பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்தவர்.அவர் பெயர் Count Leepold von socher-masoch(1835-1895) அவர் சின்ன வயதில் ஹன்ட்சா என்ற வாடகைத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.அந்த அம்மா பயங்கரக் கதைகளை சொல்லி வளர்த்ததால்,தன மனம்,உடல் இரண்டிலும் துன்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு அதில் இன்பத்தைக் காணுவது அவருக்கு பழக்கம் ஆகிவிட்டது.அதிலிருந்து தன்னை வருத்திக் கொண்டு அதில் இன்பத்தைக் காணுவதற்கு மெஷகிசம் என்ற பெயர் வந்தது.இது சேடிசத்திற்கு எதிரானதாகும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எகத்தாளம்

''அவன் எவ்வளவு எகத்தாளமாய் பேசுகிறான்?''என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.அது என்ன எகத்தாளம்?
ஆதிதாளம்,அடதாளம்,திரிபுரதாளம்,ஜம்பதாளம்,ரூபகதாளம்,ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று அழைக்கப்படும்.ஒவ்வொரு ராகத்துக்கும் தகுந்த தாளம் வாசிக்க வேண்டும். இந்த ஐந்து தாளங்களையும் சேர்த்து வாசிப்பதற்கு ஏக தாளம் என்று பெயர்.பாடுபவருக்கும்,வாசிப்பவருக்கும் ஒத்து வராமல் போகும்போது வாசிப்பவர் வேண்டுமென்றே ஏக தாளமாக வாசிப்பார்.
அதேபோல கேட்பவரிடம் பதில் சொல்பவன் ஏறுக்கு மாறாகப் பதில் சொல்வதை ஏக தாளம் என்று சொல்லப்பட்டது.இது நாளடைவில் மருவி எகத்தாளம் என்று ஆகிவிட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, March 5, 2011

பொருத்தமான நேரம்

சில ராகங்களுக்கான நேரங்கள்:
காலை --பூபாளம்
உச்சிவேளை --காம்போதி
மாலை --சந்நியாசி,பூர்வ கல்யாணி
நள்ளிரவு --கானடா
மகிழ்ச்சி --மோகனம்,கல்யாணி
துயரம் --முகாரி,சுப பந்துவராளி
சாமி வீதி உலா --நாட்டை
முகூர்த்தம் --நாட்டைக் குறிச்சி
தாலி கட்டியதும் --காபி
தாலாட்டு --ஆனந்த பைரவி
மங்களம் --மத்யமாவதி
மழை பொழிய --அமிர்த வர்ஷினி
வளரும் பயிருக்கு --சாருகேசி

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சேடிசம்

சேடிசம் (sadism)என்ற சொல் Marquis-de-sade என்ற எழுத்தாளரின் பெயரில் இருந்து தோன்றியதாகும்.இவருடைய காலம் 1740-1814 ஆகும்.பிரான்சில் பிரபுக்கள்  குடும்பத்தில் பிறந்தவர் இவர்.பிரெஞ்ச் இலக்கியத்தில் குரூரத்தை சிறப்பித்து எழுதியவர்.பிறர் துன்பம் கண்டு இன்பம் அடைதல் என்ற எண்ணத்திற்கு வக்காலத்து வாங்கியவர். மனிதர்களைக் கீழ்மை
படுத்துவது ,சித்தரவதை,விபரீதமான காரியங்கள்தான் அவருடைய நாவல்களின் முக்கிய அம்சங்களாகும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஓம்சாந்தி

இறைவனை வேதங்கள்  மற்றும் கீர்த்தனைகளால் துதிக்கும்போது இறுதியில் ஓம் சாந்தி:சாந்தி:சாந்தி என்று முடிப்பதைக் காணலாம்.சாந்தி என்றால் அமைதி.சாந்தி என்று மூன்று முறை சொல்வதன் நோக்கம் மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காகச் சொல்லப்படுவதாகும்.
ஆத்யாத்மிகம்:நம்மால்  வரும்  தடை.உடல் நோய்,மனப் பிரச்சினைகள் போன்றவை.
ஆதி பௌதீகம்:பிற உயிர்களால் வரும் தடைகள்.
ஆதி தைவீகம் .இயற்கை சக்திகளால் வரும் தடைகள்.மழை,இடி,தீ போன்றவை.
மூன்று முறை சாந்தி என்று சொல்வதன் மூலம்  நாம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபடுவதாக சொல்லப்படுகிறது. 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தாகம்

நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?
இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன.இவை ஒரே சீரான அளவில் இருக்கும்போது நமக்கு தாகம் எடுப்பதில்லை.இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது.உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது.இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது.அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது.உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது.
**********
இஸ்லாமிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக் கொள்கிறபோது ,''அஸ்ஸலாமு அலைக்கும்''என்பர்.இதன் பொருள்,''உங்களுக்கு எல்லா நலன்களும் அமைதியும் உண்டாகட்டும் என்பதுதான்.
**********
கராத்தே என்றால் வெறும் கை என்று பொருள்.
**********
ஆண்டு மழை 125 மில்லி  மீட்டருக்கும்  குறைவாக உள்ள பகுதிகள் தாம் பாலைவனம் என்று அழைக்கப்படுகின்றன.
**********
மூங்கில் ஒரு வகை புல் இனத்தை சேர்ந்தது.
**********
கி.பி 440 லிருந்துதான் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ல் கொண்டாடப்படுகிறது.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, March 1, 2011

மேகமே,மேகமே

எல்லா மேகங்களும் மழை தருவதில்லை.மேகங்களில் பல விதங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமானவை நான்கு.
மென் பஞ்சியல் முகில்கள் (SIRRUS CLOUDS)
வெண்ணிற முகில்களான இவை பறவைகளின் இறகுகள்போல இருக்கும்.சின்னஞ்சிறு பனிக்கட்டிகளால் ஆன இவை விண்ணில் எட்டு கி.மீட்டர் முதல் பதினோரு கி.மீட்டர் உயரத்தில் உருவாகின்றன.
பாவடி முகில்கள்  (STRATUS CLOUDS)
மழை மூட்டத்திற்கும்,தூறலுக்கும் அறிகுறி இவ்வகை மேகங்கள்.8000 அடி    உயரத்தில் உருவாகுபவை இவை.
திரள்குவிக் கருமுகில்கள் (CUMULUS CLOUDS)
விண்ணில் வெண்ணிறமான மாலைபோலத் தோற்றமளிக்கும் இவற்றின் அடிப்பகுதி பரந்து காணப்படும்.  4000    அடி முதல்  5000     அடி உயரத்தில் உருவாகும்.
மழை முகில்கள் (NIMBO STRATUS CLOUDS)
கருப்பு நிறத்தில் தாழ்வாகக் காணப்படும்.இவ்வகை நமக்கு மழை தருபவை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அல்லேலூயா

மெஸ்ஸையா என்ற இசைக் குழுவினர்,தங்கள் நிகழ்ச்சியை முதல் முதலாக லண்டனில் நடத்தியபோது,அரசரும் அதைக் கேட்க வந்திருந்தார்.அந்த இசைக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தபோது,அரசர் மனம் நெகிழ்ந்து, உணர்ச்சி வசப்பட்டு மரபுகளை மறந்து,அந்த இசைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எழுந்து நின்றார்.அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா பிரபுக்களும் அரசரைப் பின்பற்றி எழுந்து நின்றனர்.இசையை ரசித்துக் கொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் எழுந்து நின்றனர்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து அல்லேலூயா பாடப்படும்போது எழுந்து நிற்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, February 28, 2011

தெரிந்து கொள்ள....

உலகிலேயே மிகச்சிறிய தேசீய கீதம் ஜப்பானுடையது.மொத்தம் நான்கே வரிகள்.ஹைக்கூகவிதை வகையைச் சேர்ந்தது.
**********
நத்தை தன எடையைப்போல அறுபது மடங்கு எடை கொண்ட பொருளை இழுத்துச்செல்லும் சக்தி உடையது.
**********
உலகிலேயே அதிக நீளமான தேசீய கீதம் கிரேக்க நாட்டு கீதம்தான்.இது 128 வரிகள் கொண்டது.
**********
இந்தியாவிற்கு சொந்தமாக 1197 தீவுகள் உள்ளன.இவற்றில் 723 தீவுகள் அரபிக்கடலில் உள்ளன.
**********
பாலைவனம் இல்லாத ஒரே அரபு நாடு லெபனான்.
**********
சிகரெட்டிலுள்ள நிகோடின் நச்சு ரத்தக் குழாயை சுருங்கச் செய்து தோலின் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உணவுச்சத்து கிடைக்காமல் செய்கிறது.எனவே சிகரெட் பிடிப்பவர்களின் தோல் மற்றவர்களைவிட பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது.
**********
கேமரா என்ற இத்தாலியச் சொல்லுக்கு இருட்டறை என்று பொருள்.
**********
கேரம் என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு அடித்துத் தள்ளச் செய்தல் என்று பொருள்.
**********
கிராம்பு என்பது காயோ கனியோ அல்ல;அது ஒரு மரத்தின் மொட்டு.
**********.
நமது உடலில் வேர்க்காத பகுதி நம் உதடு
இரத்தம் பாயாத பகுதி கண்ணின் கரு விழி.
**********
பனிக்கட்டி என்பது உறைந்த தண்ணீரின் படிகங்கள்.இந்தப் படிகங்கள் பல முகங்களைக் கொண்டவை.இந்த முகங்கள் வெளியே உள்ள வெளிச்சத்தைப் பிரதி பலிப்பதனால் தான் பனிக்கட்டி வெள்ளை நிறமாகத் தெரிகிறது.
**********
நமது மூளையில் தூக்கம் வருவதற்கான அறிகுறிகள்தொடங்கியவுடனே இருதயமானது மூச்சு விடும் வேகத்தை சற்றுக் குறைத்துக் கொள்கிறது.இதை ஈடு செய்து மூளைக்கு அதிக இரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாகஉள்ளே இழுக்கப்பட்டு,கரியமில வாயு வெளியேறி,இருதயம் சுருங்கி விரிந்து இரத்தம் சுத்திகரிக்கப்பட வேண்டும்.இதற்கு வசதியாக நமது வாய் அகலத்திறந்து காற்றினை உள்ளே இழுத்துக் கொள்கிறது.அது தான் கொட்டாவி.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சில தகவல்கள்

ஒரு கிலோ பஞ்சை 660 கிலோ மீட்டர் நீளத்திற்கு நூலாகத் திரிக்க முடியும்.
**********
இறை இல்லமான காபா ஒரு கருங்கல் கட்டிடம்.33 முழ நீளமும்,22 முழ அகலமும் உள்ள இந்தக் கட்டிடம் உயர்ந்த கறுப்புத் துணியினால் போர்த்தப்பட்டிருக்கிறது.முதல் மனிதரான ஆதம் இறைவனை வணங்க இந்த ஆலயத்தைக் கட்டினார்.
**********
உலகில் அதிகமாக உபயோகப் படுத்தப்படும் காய்கறி,வெங்காயம்.
**********
எஸ்கிமோ என்றால் பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று பொருள்.அதனால் அவர்கள் தங்களை இனுட் (inuit) என்று சொல்லிக் கொள்கிறார்கள்.அதன் பொருள்,'உண்மையான மனிதர்கள்'.
**********
கிரேக்க புராணப்படி,பண்டோரா என்பவள் தான் முதல் பெண்மணி.ஜீயஸ் கடவுள் ஆணின் கொட்டத்தை அடக்க அவளைப் படைத்தார்.அவர் அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து,''இந்தப் பெட்டிக்குள் உனக்கு தேவையான அத்தனை ஆயுதங்களும் இருக்கின்றன.அதைத் திறந்து பார்க்காதே.எப்போதாவது தேவைப்படும்,''என்றார்.உலகுக்கு வந்தவுடன் பெண்களுக்கே உரிய ஆர்வத்தில் அவள் அதைத் திறக்கிறாள்.உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் முதலில் அந்தப் பெட்டியில் தான் இருந்தன.அதனைத் திறந்தவுடன் அத்தனையும் வெளி வந்து விட்டன.ஒன்றே ஒன்று மட்டும் பெட்டிக்குள் ஒரு மூலையில் ஒட்டி ஒளிந்து கொண்டது.அது நம்பிக்கை.
'இந்தத் துன்பத்தை நாம் கடப்போம்.நல்லது நடக்கும்,'என்கிற நம்பிக்கை தான் நம்மை எந்தப் புயலிலும் வலி நடத்தி செல்லும் .
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, February 26, 2011

சபாஷ்

இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் படையெடுத்து வந்தார்  பாரசீக மன்னர் ஷா அப்பாஸ்.அப்போது ஜகாங்கீர் ஆட்சி காலம்.காந்தகார் வரை வந்துவிட்ட எதிரிப்படைகளை ஜகாங்கீர் படைகள் முறியடித்துவிட்டன.அதை அறிந்ததும் ஜகாங்கிருக்கு ஒரு ஓலைஅனுப்பினார் ஷா.தன படைகள் ஜகாங்கீர் நாட்டின் மீது படையெடுத்தது,தனக்குத் தெரியாமலே நடந்துவிட்டது என்றும் ஜகாங்கிருடன் தன நட்புறவு கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.அது கேட்ட ஜகாங்கீர்,''இது ஷா அப்பாஸ் வேலை,''என்று தன மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.ஆகவே மெச்சத்தக்க காரியத்தை செய்தவர் ஷா அப்பாஸ்.இந்த மாதிரி காரியங்களை யார் செய்தாலும் ,'ஷா அப்பாஸ்,'என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.ஷா அப்பாஸ் என்ற வார்த்தை ஷபாஸ் என்று உருதுவில் மாறி பிறகு சபாஷ் என்று தமிழில் மருவிவிட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பின் தூங்கி முன் எழுபவரா நீங்கள்?மாரடைப்பு வருமாம் ஜாக்கிரதை: அதிகமாக தூங்கினாலும் ஆபத்து தான்

இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும்'என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம்.பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடையவர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.

நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.
பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.
பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?
சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.
ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு!
பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.
வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?
சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.
கவனத்தில் வையுங்கள்:
சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.
சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.
எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.
பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?
நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?
Axe
பெண்களின் ஃபேவரைட்?
ஜோவன் வொய்ட் மஸ்க்
மேக்ஸி  ப்ளூ லேடி



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, February 23, 2011

என்ன சம்பந்தம்?

ஒரு சில பெயர்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.
**சரித்திரப்  புகழ் பெற்ற நூற்றாண்டுப் போர்  116 ஆண்டுகள் நடந்தது.
**ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை நவம்பரில் கொண்டாடுகிறார்கள்.
**விமானத்தில்  இருக்கும் கறுப்புப் பெட்டியின் (black box ) நிறம் ஆரஞ்சு.
**சீன முள் பழம் நியூசிலாந்து நாட்டில் விளைகிறது.
**பனாமா தொப்பி ஈக்வடார் நாட்டில் தயாரிக்கப் படுகிறது.
**ஒட்டகத் தூரிகை (camel brush) அணில்  ரோமத்திலிருந்து  தயாரிக்கப்  படுகிறது **இந்தியன் இங்கின் (indiyan ank) தாயகம் சீனா..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முஸ்லீம்

தமிழில் முஸ்லீம்களுக்கு பல பெயர்கள் உள்ளன.அவை பெரும்பாலும் காரணப் பெயர்களே.
அரேபியாவிலிருந்து மரக்கலங்களில்  வந்தவர்கள்  மரைக்காயர்  என்று  அழைக்கப்பட்டனர்
'இராவுத்'என்ற உருதுச் சொல்லுக்கு குதிரை வீரன் என்று பொருள்.முஸ்லீம்கள் அரேபியாவிலிருந்து குதிரைகளில் வந்ததால் 'இராவுத்தர்கள்'என்று அழைக்கப்பட்டனர்.
'லெப்பை'என்ற அரபுச் சொல்லுக்கு ஆசிரியர் என்று பொருள்.திருக்குர்ரான் சொல்லிக் கொடுத்தவர்கள்.லெப்பைகள் ஆனார்கள்.
துருக்கி நாட்டிலிருந்து வந்தவர்கள் துருக்கியர்.அதுவே மருவி துலுக்கர் ஆயிற்று.
'சகிபா'என்ற அரபுச் சொல்லுக்கு தோழன் என்று பொருள்.நபிகளின் தோழர்கள்,'சாஹிப்'என்று அழைக்கப்பட்டனர்.
பாயி என்ற ஹிந்திச் சொல்லுக்கு சகோதரன் என்று பொருள்.மத வேற்றுமை பாராத பிற மதத்தினர்,முஸ்லீம்களை பாயிஎன்று அழைக்க அது பாய் என்று மருவி விட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, January 19, 2011

கதர்

'கதர்' என்பதுஒரு அரபு மொழிச்சொல்.அதற்கு கெளரவம் என்று பொருள்.சுதந்திரப் போராட்ட வீரரான முகம்மது அலி கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை காந்தியடிகளுக்குப் போர்த்தி,''இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்''என்றார்.அதன் பின் தான் இத்துணிக்கு  கதர் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏன்வருகிறது?

கொட்டாவி,ஏப்பம்,விக்கல்,பொறை,இருமல் இவை ஏன் வருகின்றன?
இவை எல்லாமே நம் உடல் செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகளே.
கொட்டாவி: நமக்குக் களைப்பு ஏற்படும் போதும்,மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல்.
ஏப்பம் : நாம் உண்ட உணவில் அதிகப்படியான புரதப் பொருட்கள் இருந்தாலும்,புளிப்புப் பொருட்கள் இருந்தாலும் இவற்றைச் சிதைக்கும் பொழுது ஏற்படும் வாயுவை வெளியேற்றும் ஒரு செயல்.
விக்கல் :உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல் பட முடியாத போது ஏற்படும் ஒரு சுவாசச் சிக்கல்.
பொறை :உணவுப் பாதையில் செல்ல வேண்டிய உணவு சுவாசப் பாதையில் நுழைந்து பாதை மாறுவதால் ஏற்படும் விளைவு.
இருமல் : சுவாசப் பாதையில் ஏற்படும் ஒரு வித உறுத்தல் இருமலாக வெளி வருகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தலை சுற்றுவது ஏன்?

நாம் வேகமாக சுழன்றாடினால் தலை சுற்றுவது போல் தோன்றுவதேன்?
நம்முடைய காதுகளில் ஒலியின் அதிர்வை அறியும் அங்கவடி எலும்புகள் காது சிப்பியிலுள்ள திரவத்தில் மிதக்கின்றன.இந்தத் திரவப் பகுதியில் ஏற்படும் மெல்லிய ஒலி அலைகளே நாம் செய்திகளைக் கேட்க உதவுகிறது. நாம் வேகமாகச் சுழன்றாடும் போது நம் காதுக்குள் மேலே குறிப்பிட்ட திரவப் பகுதியில் சீரற்ற அலைகள் ஏற்படுகின்றன.இந்த உணர்வுகள் மூளையை அடைந்து நமக்கு ஒரு குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.இதனால் தான் ஒரு சில நொடிகள் நம் தலை சுழலுவது போலவும் நம் உடல் சம நிலை பெறாமல் இருப்பது போலவும் தோன்றுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net