Wednesday, January 5, 2011

முதியவர்களுக்காக

இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
                   செய்..
பிறர் தம் வலியும்  வருத்தமும் கேட்கும் கரிசனம் கொஞ்சம் வளரச் செய்.
வெறுமையை பொறுமையாய் ஏற்கச்செய்.
உதடுகள் இருக்க மூடச்செய்.இல்லையெனில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்
                  என் காயங்களையும் வலிகளையும் பிறரிடம் பகிரும் இன்பம்
                  தேடும் என் மனம்.
இத்தனை ஆண்டுகளாக நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்த
                  வாழ்க்கைப் பாடத்தை இப்போதேனும் சரியாகப் புரியச்செய்.
இனிமையாக என்னை இருக்கச்செய்.
நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாலேயே மற்றவர்களை விட அறிவாளி என
                  என்னும் அகந்தை ஓடச்செய்.
சமீபத்தில் நடந்த மாற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை
                  பெருகச்செய்.
உனக்குத் தெரியும் என்று என் முடிவு என...அதுவரை
ஓரிரு நண்பர்களையாவது உலகில் எனக்காக இருக்கச்செய்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment