Saturday, January 8, 2011

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!


**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!


**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!



**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!


**************************************************************************************************************************************************************

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!


**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!



**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!


குறிப்பு : இது கற்பனையே! உண்மை அல்ல.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வழி பிறந்தது.

ஒருவன் தான் கொடுத்த கடனை வாங்கப் பல முறை படையெடுத்தும் கடன்  வாங்கியவன் கொடுக்கவில்லை.ஒரு நாள்,இன்று எப்படியும் வசூலித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவன் வீட்டிற்குச் சென்றான்.கடன் வாங்கியவன்அப்போது மிக மும்மரமாக வீட்டில்  மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தான்.இவன் கடன்  பற்றிக் கேட்டவுடன் அவன் சொன்னான்,''இன்று உன் கடனை அடைக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன்.இதோ பார்,மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்,பழங்கள் பழுத்ததும்  விற்று முதலில் உன் கடனை அடைத்து விடுவேன்.'' கடன் கொடுத்தவன் நொந்து போய் விரக்தியில் சிரித்தான்.கடன் வாங்கினவன் சொன்னான்,''அய்யா முகத்தில் சிரிப்பைப் பார்.பின்னே,சிரிக்க மாட்டாராஎன்ன?அவர் கடன் திரும்பக் கிடைக்கத்தான் வழி பிறந்து விட்டதே!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஒரே பதில்

வள்ளல் ஒருவர் புலவரிடம் வரிசையாக நான்கு கேள்விகள் கேட்டார். புலவர் நான்கு கேள்விகளுக்கும் பதிலாக  ஒரே வரியில்,'திருவேங்கடநாதா,'என்றார்.
அதன் விளக்கம்:
புலவரே,உம்மிடம் இல்லாததென்ன?        ----திரு (செல்வம்)
உம்மிடம் இருப்பதென்ன?                              ----வெம் கடன்
உம சொற்பான்மை என்ன?                             ----நா (நாக்கு)
செய் தொழில்யாது?                                           ----தா(தா,தா என்று வள்ளல்களை 
                                                                                          கேட்பது)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அதிசய சதுரம்

இது   ஒரு   அதிசய சதுரம்.இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ், குறுக்காக  எப்படிக் கூட்டினாலும் 264   வரும்.

          96   11   89   68
          88   69   91   16
          61   86   18   99
          19   98   66   81

அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.

           18   99   86   61
           66   81   98   19
           91   16   69   88
           89   68   11   96

இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

காரணம்

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான  கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால்  அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.கரைக்கு வந்த அவன்  அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
              ----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குளிர்

இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி இருந்தார்.ஒரு சமயம் மலையேறும் குழுவில்  வந்தவர்கள் அவரிடம்.'சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?'என்று கேட்டனர்.''துளசியும் சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது.சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?'' என்று கேட்டார்.'சாப்பிடுகிறோம்.'என்றனர் வந்தவர்கள்.''அப்படியா,இதோ பாரும்மா துளசி,இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''என்றார் சாமியார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயேசு-யூதாஸ்

யாராவது உங்களை அவமரியாதை செய்தால் நீங்கள் பலவீனமாக  உணர்கிறீர்கள்.தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்.எப்படிப் பலி வாங்குவது என்று யோசிக்கத் தொடங்குகிறீர்கள்.அந்த மனிதன் உங்களைக் கைப் பற்றிவிட்டான். இப்போது நீங்கள் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.நாள் கணக்காக,இரவு பகலாக,பல மாதங்களாக,பல வருடங்களாகக் கூட இதை நினைத்துஉங்களால் தூங்க முடியாது.உங்களுக்குக் கெட்ட கனவுகள் வரும்.மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்.மற்றவர்,அது தாய் தகப்பன்,நண்பர்,உறவினர் யாராக இருந்தாலும் உங்களை அவமரியாதை  செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை.அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல்  இருக்கும்.யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள்.இந்தக் காயத்தை வளர விடாதீர்கள்.இது உங்களைக் காயப்படுத்தி விட  அனுமதிக்காதீர்கள்.24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்.என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்.நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள்.ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும்.பிறகு நீங்கள் இதுவரை செய்து கொண்டிருந்த முட்டாள் தனத்தைப் பார்த்து சிரிப்பீர்கள்.வருத்தங்கள்,எதிர்ப்புகள்,பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பீர்கள்.
உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது.உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.நீங்கள் தான் இயேசு..நீங்கள் தான் யூதாஸ்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தர்க்கம்

சீடன் தான் கண்ட பயங்கரமான கனவினை குருவிடம் விளக்கினான்,''நான்  காட்டு வழியே செல்லும் போது எதிரே நான் பார்த்திராத சிறு பிராணி ஒன்று வந்தது.அது என்னை நோக்கி நடந்து வந்தது.நான் பயந்து,அதை விரட்ட,ஒரு சிறு கல்லைத் தூக்கி அதன் மீது எறிந்தேன்.உடனே அது சிறிது பெரிய உருவமாகி என்னை நோக்கி வந்தது.நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து அதனை அடித்தேன்.சிறு பூனை போல இருந்த அது உடனே புலி போல் உருவெடுத்தது.ஓட முடியாத நான்,ஒரு பாறாங்கல்லை எடுத்து அதன் மேல்  எறிந்தேன்.அது யானையை விடப் பெரிய மிருகமாகி என்னை விழுங்க வந்தது. நான் வேகமாக ஓட,அது மலை போல் மாறி என்னை விரட்டியது.அப்போது தான் நான் பயத்தில் அலறி விழித்தேன்.இக்கனவின் பொருள்என்ன குருவே?''
குரு சிரித்தபடி சொன்னார்,''சிறு மிருகமாக இருந்து பெரியதாக மாறியதன் பெயர் தான் தர்க்கம்-விவாதம்.இறுதியில் மிகப் பெரியதாக உன்னை விழுங்க வந்தது அல்லவா?அது போலத்தான் விவாதமும்.சிறு விசயத்திற்காக யாரிடமாவது விவாதிக்கத் துவங்கி விட்டால்,அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய மலையாகி நம்மையே விழுங்கி விடும்.விரோதமே வளரும். எனவே யாரிடமும் எதைக் குறித்தும் விவாதம் செய்யாதே.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கட்டணம்

ஒருவன் உடல் நிலை சரியில்லை என்று டாக்டரைப் பார்க்கச்  சென்றான்.டாக்டர் அவனைப் பரிசீலித்து விட்டு,''சரி,இப்போது நான் சொல்வதை தவறாமல் கடைப்பிடி.நீ ஒரு நாளைக்குப் பத்து மைல் ஓட வேண்டும்.காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.பீர்,கேக் சிகரெட் எதுவும் தொடக்கூடாது........,''இப்படி அவர் நீண்ட நேரம் அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே வந்தவன் எழுந்து கதவை நோக்கிச்  சென்றான்.''நில். என்னுடைய அறிவுரைக்கு நீ கட்டணம் எதுவும் கொடுக்காமல் செல்கிறாயே?'' என்று டாக்டர் கேட்டார்.அவன்,''ரொம்ப நன்றி டாக்டர்,ஆனால் நான் உங்கள் அறிவுரைகளை எடுத்துக் கொள்ளவே இல்லையே!''என்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வரலாறு

ஆங்கிலச் சரித்திர ஆசிரியர் எட்மன்ட் பர்க்,நாற்பது வருட கால முயற்சியில் உலக சரித்திரத்தை எழுதினார்.ஒரு நாள் அவர் வீட்டுக்குப் பின்புறம் பல சாட்சிகளுக்கு நடுவே பட்டப்பகலில் ஒரு கொலை நடந்தது.இவர் அதைக் கேள்விப்பட்டு,பின்னால் ஓடி அங்கிருந்த மக்களிடம் எப்படி ஒருவன் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றான் என்று அதிர்ச்சியுடன் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான் பதில்  சொன்னார்கள்.அவரால்  நம்பவே முடியவில்லை.ஏனெனில் எல்லோர் முன்னிலையிலும் அக்கொலை நடந்தது.ஆனால் அதைப் பற்றி எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்?இப்போது வாழ்க்கையில்  அவர் செய்த தவறு புரிந்தது.உடனே  வீட்டினுள் சென்று தன நாற்பது வருட உழைப்பைத்  தீயிட்டுக் கொளுத்தினார்.அந்த வரலாறு ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து எழுதப்பட்டது.அவர் நினைத்தார்,''இப்போது நடந்த சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்களேவெவ்வேறு மாதிரியாகச் சொல்லும் போது,புத்தரைப் பற்றியோ ஏசுவைப் பற்றியோ நான் சேகரித்த செய்திகள் எவ்வளவு சரியாக இருக்க முடியும்?பல ஆயிரக் கணக்கான வருடங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகள் இப்போது எழுதும் போது எப்படி துல்லியமாக இருக்க முடியும்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ரொம்ப நல்லது

மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள்.
மாக்கி: ஹே டோரா,என்ன ஆச்சரியம்!உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!என்ன சமாச்சாரங்கள்?
டோரா: ஒன்றுமில்லை,உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன்.
மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா!ரொம்ப நல்ல செய்தி தான்!
டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை.அவன் மிகவும் மோசமானவன்.
மாக்கி: என்ன மோசமானவனா?நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை.அவனிடம் நிறைய பணம் இருந்தது.
மாக்கி : பரவாயில்லையே,பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல்.ரொம்ப நல்லது.
டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை.அவன் ஒரு கஞ்சன்.
மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய்.வருத்தமாக இருக்கிறது.
டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை.அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான்.
மாக்கி: சொந்தமாக வீடா!ரொம்ப நல்ல செய்தி தான்.
டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை.அந்த வீடு எரிந்து விட்டது.
மாக்கி: என்ன எரிந்து விட்டதா?கேட்கவே சங்கடமாக இருக்கிறதே?
டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை.அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முத்தம்

பலா மரத்தடியில் படுத்துக் கிடந்த ஒரு கரடியை வேட்டையாட எண்ணி ஒருவன் குறி பார்த்து சுட்டான்.ஆனால் குண்டு குறி தவறி பக்கத்து மரத்தில் பட்டது.கோபத்துடன் அவனைக் கொல்ல வந்த கரடிமனம் மாறி அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பியது.அடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் இதே மாதிரி நடந்தது.நான்காவது நாளும் குறி தவறிய போதுகரடி அமைதியாய் அவனருகில் வந்து,''நான் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுப்பது உனக்குப் பிடிச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே?அதுக்காக ஏன் குறி பார்த்து சுடுகிற மாதிரி நடிக்கிறே?''
********
ஒரு எறும்பும் ஒரு யானையும் காதலித்துக் கல்யாணம் முடித்துக் கொண்டன.அடுத்த நாள் காலை யானை செத்துக் கிடந்தது.எறும்பு அழுதவாறே சொன்னது,''அடப்பாவி,ஒரு நாள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக,என்வாழ் நாளெல்லாம் குழி தோண்ட வச்சிட்டியே,உன்னைப் புதைக்க.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தங்க மனசு

ஒரு பணக்காரன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்.தூரத்தில் இரண்டு  ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க,அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர்.''சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்,''என இருவரையும் அவன்  அழைத்தான்.இருவரும் தன மனைவி,குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என யோசிக்க,ஒரு நிமிடம் யோசித்துவிட்டு  அவர்களையும் வரச்சொல்லி அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.''உங்களுக்குத் தங்கமான மனசு,''என அவர்கள் அனைவரும் வாயாரப் புகழ்ந்தார்கள்.''சந்தோசமா வாங்க,என் பங்களாவைச் சுற்றி மூன்று அடி உயரத்துக்கு நிறையப் புல் வளர்ந்திருக்கு.''
என்றான் அந்த தங்க மனசுக்காரன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பைத்தியம் இல்லை

ஹிட்லர் ஒரு முறை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வருவதாக  இருந்தது.ஹிட்லர் வரும் போது,'ஹிட்லர் வாழ்க,'என்று கூற அனைத்து பைத்தியங்களுக்கும் பயிற்சி கொடுக்கப் பட்டது.அதே போல் அவர் வந்த போது அங்கிருந்த அனைவரும்,'ஹிட்லர் வாழ்க,'என்று கத்தினர்.ஒரே ஒருவர் மட்டும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.ஹிட்லர் அவரிடம் சென்று,''நீ ஏன்ஹிட்லர்வாழ்க என்று ஏன் சொல்லவில்லை?''என்று கேட்டார்.அவர் அமைதியாகச் சொன்னார்,'நான் ஒன்றும் பைத்தியம் இல்லை.நான் ஒரு டாக்டர்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

துயரம்

கல்யாணத்திற்குப் பிறகு அவனை மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்கிறாள்ஒரு பெண்.ஆனால் துயரம் என்னவென்றால்  அவன் கடைசி வரை அவள் எண்ணப்படி மாறுவதே இல்லை.
கல்யாணத்திற்குப் பிறகு அவள் மாற மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.துயரம் என்னவெனில் அவள் தலை கீழாக மாறிவிடுகிறாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏன்,எதற்கு?

தாய் ஒட்டகத்திடம் குட்டி கேட்டது,''அம்மா,எதற்காக நம் கால்கள் நீளமாக இருக்கின்றன?''
தாய்: பாலைவன  மணலில் புதையாமல் நடப்பதற்காகத் தான்.
குட்டி: கண் இமை இவ்வளவு சிறிதாக நிறைய முடியுடன் இருக்கிறதே,அது ஏன்?
தாய்: மணல் புயல் வந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான்.
குட்டி: அது சரி,பின்புறம் ஏன் திமில் இருக்கிறது?
தாய்:அது தண்ணீர் சேமித்துக்கொள்ள.அப்படி இருந்தால்  தான் பாலைவனத்தில் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
குட்டி:நாம் இருக்கும் மிருகக் காட்சியில் தான் பாலைவனமே  இல்லையே?  பிறகு இவை எல்லாம் நமக்கு எதற்கு அம்மா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிரார்த்தனை மொழி

ஒரு துறவி குளத்தின் அருகே இருந்த மர நிழலில் அமர்ந்து தியானம் செய்து  கொண்டிருந்தார்.அப்போது அந்தக் குளத்திலிருந்த தவளைகள் சலசலவென  சப்தம் இட்டுக் கொண்டிருந்தன.துறவி தவளைகளிடம் ,''நான் இங்கு இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது உங்களுக்குத்  தெரியவில்லையா?''என்று கோபமாகக் கேட்டார்.'நாங்களும் எங்கள் மொழியில் பிரார்த்தனைதான் செய்து கொண்டிருக்கிறோம்.'என்றனவாம் தவளைகள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மீன் வலை

ஒரு மன்னனிடம் இருந்த அறிவாளி சாகும்தருவாயில்,''எனக்குப் பதில் அடக்கமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.அடக்கம் தான் ஞானத்தின் அறிகுறி.''என்றார்.அரசனும்தூதர்களை அனுப்பி அடக்கமான ஒருவரை தேடிப் பிடிக்கக் கூறினான்.இதைக்  கேட்ட பணக்காரரான முல்லா,தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து,தூதர்கள் வரும் போதுமீன் வலையை சுமந்து கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டிருந்தார்.தூதர்கள்  கேட்டார்கள்,'நீ பணக்காரனாய் இருந்தும் ஏன்இந்த மீன் வலையை சுமக்கிறாய்?'
முல்லா சொன்னார்,''மீன் பிடித்து தான் பணக்காரன் ஆனேன்.எனக்கு பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில்  நான் எப்போதும் இந்த வலையை தோளில் சுமந்து செல்வது வழக்கம்.''
'பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால்,அவன் தன இறந்த காலத்தை சுத்தமாக துடைத்து விடுவான்.எதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல்
ஒரு புதிய இறந்த காலத்தை உருவாக்கி விடுவான்.ஆனால் இந்த மனிதன்,முல்லா,நிகவும் அடக்கமாக இருக்கிறான்,'என்று தூதர்கள் அரசனிடம் கூறினர்.முல்லா ஞானியாகக் கருதப் பட்டு  வேலையில் அமர்த்தப்பட்டார்.
அவர் வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன் கேட்டான்,'முல்லா,இப்போது உன் வலை எங்கே?'முல்லா சொன்னார்,''மீனை பிடித்தபின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சந்தேகம்

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால்  தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும்  நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து  பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொய்

வேறு தேசத்தைச் சேர்ந்த வேறு மொழி பேசுகிற குற்றவாளிகளைப் பிடித்து வந்தவர்கள்,அவர்களின் குற்றங்களை விளக்கிச் சொல்லச் சொல்ல அரசன்  தண்டனை விதித்துக் கொண்டிருந்தான்.ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க,கைதி அவன் மொழியில் மன்னரை மோசமாகத் திட்டினான்.அவன் சொல்வது புரியாது அருகில் இருந்த அமைச்சரிடம் மன்னன் விளக்கம் கேட்க,மந்திரியும்,''அரசே,கோபத்தை அடக்கி பிறரை மன்னிப்பவர்க்கு சொர்க்கம் உண்டு என்கின்றான்,'என்றார்.அரசர் உடனே மனம் மாறி,தூக்குத் தண்டனையை மாற்றி மன்னித்து விட்டார்.பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அமைச்சர் அரசர் காதில்,''அரசே!இந்த அமைச்சர் உங்களிடம் பொய் சொன்னார்.அந்தக் கைதி உண்மையிலேயே உங்களை மிகவும்   திட்டினான்.''என்றார்.அரசர் புன்னகையோடு அவரிடம் சொன்னார்,''நீங்கள் கூறிய உண்மையை விட அவர் கூறிய பொய் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.'' சமாதானத்தை உண்டாக்கும் பொய் சச்சரவுகள் உண்டாக்கும் மெய்யை
விட மேலானது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் -6

பேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய
ஆடம்பர குணத்தை ஒழிக்க வேண்டும்.
******
வெறும் கைகள் என்பது மூடத்தனம்.
பத்து விரல்கள் என்பது மூலதனம்.
******
பிறரை முகஸ்துதி செய்பவன் அவன்
கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
******
நீங்கள்  கோபம்  கொண்டாலும்
பாவம் செய்யாதிருங்கள்.
******
கோபம் முட்டாள்தனத்தில் தொடங்கி
தவறுக்கு வருந்துவதில் போய் முடிகிறது.
******
யார் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமோ,
அவர்களிடம் தான் அடிக்கடி சினமும் கொள்கிறோம்.
சினம் என்பது தலை கீழான அன்பு.
******
என்னிடம் உதவி பெற்றவன்,அதை மறந்தால்
அது அவன் குற்றம்.ஆனால்
நான் உதவி செய்யா விட்டால்
அது என் குற்றம்.
******
நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்
என்று நாம் உணருகின்ற காலத்தில்
'நீ சொல்வதெல்லாம் தவறு'
என்று சொல்ல நமக்கொரு மகன்
பிறந்து விடுகிறான்.
******
எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும்
அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
******
திறமை என்பது ஒருவனை உயரே கொண்டு போகும்.
நல்ல குணம் தான் அவனை கீழே விழாமல் பாது காக்கும்.
******
ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டு பிடிக்கிறாய்.
செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டு பிடிக்கிறாய்.
******
தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே,
நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
******
சுமப்பதெல்லாம் பாரமுமில்லை;
பாரமாக நினைப்பவை சுமைகளுமில்லை.
******
கெட்ட தந்தை கூடத் தன மகன் கெட்டவனாக
இருக்க விரும்புவதில்லை.
******
சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறித்தனமாய் இருப்பதில்லை.
******

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாக்குவாதம்

வாக்குவாதத்திற்கும் உரையாடலுக்கும் என்ன வேறுபாடு?வாக்குவாதத்தில் நீங்கள் அடுத்தவர் சொல்வதைக் கேட்க நீங்கள் தயாராய் இருப்பதில்லை. ஒரு வேளை நீங்கள் கவனித்தால் கூட அந்த கவனித்தால் தவறாக இருக்கும். உண்மையாகவே நீங்கள் கவனிப்பதில்லை.உங்கள் விவாதத்திற்கு தயார்  செய்து கொண்டிருப்பீர்கள்.அடுத்தவர் பேசிக் கொண்டிருக்கும் போதுநீங்கள் முரண்பாட்டிற்குத் தயாராகிறீர்கள்;உங்கள் வாய்ப்புக்காக,மறுபடி விவாதிப்பதற்காகக் காத்திருக்கிறீர்கள்.உங்களுக்குள் ஏற்கனவே ஒரு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளீர்கள்.ஒரு கோட்பாடைக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் தேடலில் இல்லை;அறியாமையில் இல்லை;வெகுளியாய் இல்லை.ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கிறீர்கள்.சில கோட்பாடுகளை எடுத்துச் சொல்கிறீர்கள்.அவற்றை உண்மை என்று நிரூபிக்க முயல்கிறீர்கள்.வாக்குவாதம் செய்பவர்களால் உரையாடலில் ஈடுபட முடியாது.அவர்களால் மோதிக் கொள்ளத் தான் முடியும்.குழப்பம்  வந்தவுடன் ஒருவரை ஒருவர் எதித்துக் கொள்கின்றனர். இந்த மாதிரியான  விவாதத்தில் நீங்கள் எதையாவது நிரூபித்து விட்டதாக நினைக்கலாம். ஆனால் எதுவுமே நிரூபிக்கப் படுவதில்லை.நீங்கள் அடுத்தவரை அமைதியாக்கி விடலாம்.ஆனால் அவர்களை மாற்றிவிட முடியாது. உங்களால் சமாதானப் படுத்த முடியாது.ஏனெனில் இது ஒரு போர் போன்றது.ஒரு நாகரீகமான போர்.வார்த்தைகளைக் கொண்டு சண்டையிடும் போர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அடுத்தவர் நிலை

ஒன்றுமேஇல்லாத விசயத்திற்கு நீங்கள் கோபப் படுகிறீர்கள்.நீங்கள் கதவைத்  திறக்க முயற்சித்து அது திறக்கவில்லை என்றால் பைத்தியமாகி விடுகிறீர்கள். கடிதம் எழுத முயற்சிக்கும் போது,பேனா நன்றாக எழுதா விட்டால் கோபப்  படுகிறீர்கள்.வேதனை அடைகிறீர்கள்.ஏதோ அந்தப் பேனா வேண்டுமென்றே செய்வதைப் போல்,அந்தப் பேனாவில் யாரோ அமர்ந்து கொண்டு உங்களைத் தொந்தரவு செய்ய முயற்சிப்பதாகக் கூட நினைக்கிறீர்கள்.ஒரு குழந்தை மேஜையை இடித்துக் கொண்டது என்றால் உடனே அந்த மேஜையை அடித்து விடும்.பிறகு அந்த மேஜையை எதிரியாகவே பார்க்கும்.இது தன்னையே முன்னிலைப் படுத்துதல்.ஒரு அறிவாளி இது போல் தன்னையே மையமாக நினைக்க மாட்டான். எப்போதும் அடுத்தவர் நிலையிலிருந்து தான் பார்ப்பான்.கதவு திறக்கவில்லை என்றால் திறக்க முயற்சிப்பான்.அங்கே யாரும் கதவை மூட முயற்சிக்கவில்லை.உங்கள் முயற்சியைத் தடுக்கவில்லை.அந்தக் கதவுடன் சண்டை  போட வேண்டியதில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தட்டிக் கழிக்காதே!

அரசுத் துறையைச் சேர்ந்த ஒருவன் சாலை ஓரத்தில் மூன்று  அடி இடைவெளியில் குழிகள் தோண்டிக் கொண்டே சென்றான்.பின்னால் வந்தவன் மண்ணைப் போட்டுக் குழியை மூடிக் கொண்டே சென்றான்.அதைப் பார்த்த ஒருவர்,''இது என்னப்பா பைத்தியக் காரத் தனமாய்வேலை செய்கிறீர்களே?'' என்று கேட்க,'நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத்தான்  செய்கிறோம்.நாங்கள்  மூன்று பேர்.ஒருவன் குழி தோண்ட வேண்டும். அடுத்தவன் அதில் செடி வைக்க வேண்டும்.மூன்றாவது ஆள் அதன் பின் மண்ணைப் போட்டுக் குழியை மூட வேண்டும்.இன்று செடி வைப்பவன் லீவ்  போட்டு விட்டான்.நாங்கள் இருவரும் போய் அதிகாரியிடம் விபரம் சொன்னோம். அதற்கு அவர்,''ஏதாவது காரணம் சொல்லி வேலையைத் தட்டிக் கழிக்கப் பார்க்காதீர்கள்.போய் உங்கள் வேலையைப் பாருங்கள்,''என்றார். நாங்களும் வந்து எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.'என்றார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கூண்டுக்கிளி

ஆப்பிரிக்கக்  கிளி  ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம்,''என்  ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம்  நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளையைக் கண்டு விபரம் சொல்ல,அது உடனே  கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது.'அடடா,இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,'என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல,அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார்.உடனே அந்தக்  கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர்,''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!''என்றார்.அதற்கு அக்கிளியும்,'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.'என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரித்து வாழ்க!

இது எனது முன்னூறாவது இடுகை.
*************************************
அமைச்சர் ஒருவர் மருத்துவமனை ஒன்றிற்கு வந்து நோயாளிகளின் நலன்,அவர்களுக்குள்ள குறைகள் பற்றிக் கேட்டார்.ஒருநோயாளி சொன்னார்,   ''இங்கு ஒரு குறையும் இல்லை.ஆனால் பொழுது விடிந்தால் வேலையற்றவன் யாராவது வந்து கொண்டே இருக்கிறான்.''
***********
தன வீட்டுத் துன்பங்கள்,அலுவலக இன்னல்கள் பற்றி நண்பரிடம் விவரித்தார் ஒருவர்.நண்பர் கூறினார்,''நல்லவர்களுக்குத்தான் சோதனை வருது.உங்களுக்கு ஏன் தான் இவ்வளவு துன்பம் வருதோ?''
**********
''ஒரு குதிரையோட முகம் வடக்கு நோக்கி இருந்தால்,அதன் வால் எதை   நோக்கி இருக்கும்?''
'தெற்கு நோக்கி.'
''இல்லை,பூமியை நோக்கி இருக்கும்!''
**********
நர்ஸ் ஓடி வந்து டாக்டரிடம்,''டாக்டர்,அந்த நோயாளி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டான்.''
'எப்படி,பிழை ச்சுட்டானா ?'
''ஆமா,நம்ம ஆஸ்பத்திரி சுவர் ஏறிக் குதித்து ஓடிட்டான்.''
**********
நீதிபதி; சாமி தலையிலிருந்த கிரீடத்தை ஏன் திருடினாய்?
திருடன்: சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.அது தான்.
**********
மனைவி: பிச்சைக்காரனுக்கு எவ்வளவு போட்டீர்கள்?
கணவன்: செல்லாத ஒரு ரூபாய் நாணயம் ஒன்று இருந்தது,அதைத் தான்  போட்டேன்.
மனைவி: உங்களுக்கு எப்பவுமே சமர்த்து பத்தாது.செல்லாத ஐம்பது காசு நாணயம் ஒன்று இருந்ததே,அதைப் போட்டிருக்கலாமே?
**********
நண்பர்: குழந்தைகளுக்கு மொட்டை போடத் திருப்பதி போறேன்னு சொன்னீங்க.இப்ப நீங்களும் மொட்டை அடிச்சிட்டு வந்து நிக்கிறீங்களே!
மற்றவர்: அதுவா,ஐந்து மொட்டை அடிச்சா ஒரு மொட்டை இனாம்னு சொன்னான்.அது தான்.
**********
மாமியார்: இங்கே நான் கழுதை மாதிரி கத்திக் கொண்டிருக்கிறேன்.அங்கே  என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே?
மருமகள்: பேப்பரைத் தேடிக்கிட்டிருக்கேன்,மாமி.
**********
அரசியல்வாதி: உங்கள் பத்திரிகையில் என்னைப் பற்றி அயோக்கியன், பொய்யன் என்று எழுதியிருக்கிறீர்களாமே?
ஆசிரியர்: இருக்காது.எல்லோருக்கும் தெரிந்த செய்திகளை நாங்கள் எழுதுவதில்லை.
**********
மகன்: அப்பா,தொலைபேசி...
அப்பா: நீயே பேசித்தொலை.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெறுமானம்

இல்லற ஞானி ஒருவர் இருந்தார்.ஒரு நாள் அவர் மனைவி கோவிலுக்குச் சென்றிருந்த பொது ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டான்.அவர் வீட்டினுள் சென்று பார்த்ததில் உணவுப் பொருட்களோ அரிசியோ எதுவும்  இல்லை.ஆனால் அவர் மனைவி ஒரு தங்க நகையை பார்வையில் படும் இடத்தில் வைத்திருந்தார்.அவர் உடனே அதை எடுத்து பிச்சைக்காரனுக்குப் போட்டு விட்டார்.அவன் மகிழ்ச்சியுடன் சென்ற சிறிது நேரம் கழித்து அவர் மனைவி வீட்டுக்கு வந்தவுடன் நடந்த விபரத்தைக் கூறினார்.அவர் மனைவி உடனே,''ஐயையோ!அது இருபது ஆயிரம் பெறுமான நகை.அதைப் போய் பிச்சைக்காரனுக்குப் போட்டிருக்கிறீர்களே!உடனே ஓடிப் போய் வாங்கி வாருங்கள்.''என்றார்.அவர் உடனே ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரனைக் கண்டு பிடித்துச் சொன்னார்,'அப்பா,நான் தெரியாமல் போட்ட அந்த நகை    இருபது ஆயிரம் ரூபாய் பெறுமாம்.தயவு செய்து அந்தத் தொகைக்குக் குறைவாக யாருக்கும் விற்று விடாதே.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சித்திரவதை

ஒருவன் மன நோய் மருத்துவ மனையில் பத்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றான்.மன நோய் குணமான உணர்வு ஏற்பட்ட பின் அவன் அந்த டாக்டரிடம் சென்று தான் குணமாகி விட்டதாக கூறினான்.டாக்டர் சொன்னார்,   'பத்து ஆண்டுகள் மருத்துவ சிகிச்சையில் இருந்து விட்டாய்.இன்னும் ஒரு பத்து நாட்கள் பொறு.அனைத்து சோதனைகளையும் ஒரு முறை நான் பார்த்து விடுகிறேன்.'பத்து நாள் சோதனைக்குப் பின் அவன் பூரண குணம் அடைந்ததாக சொல்லி அவன் மருத்துவ மனையிலிருந்து செல்லலாம் என டாக்டர் கூறினார்.பின் அவனிடம் மருத்துவ மனையிலிருந்த காலம் பற்றி என்ன நினைப்பதாகக் கேட்டார்.அவன் சொன்னான்,''மன நோயாளியாக இருந்த பத்து ஆண்டுகள் பத்து நாட்கள் போலப் பறந்து விட்டது.குணமான பின் இங்கிருந்த பத்து நாட்கள்,பத்து ஆண்டுகளைக் கழித்தது போல் சித்திரவதைப் படுத்தி விட்டது.''டாக்டரே இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

புன்னகை ஏன்?

ஒரு ஊரில் இறந்து போன மூன்று பேரின் உடல் அடையாளம் காண்பதற்காக  காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.இறந்த மூன்று பேரின் முகத்திலும் சிறு புன்னகை.இதற்கான காரணத்தை அறிய ஒரு அதிகாரி ஆவல் கொண்டு விசாரித்தார்.
ஒரு உடல் ஒரு கருமியுடையது.அவன் மிக்க மகிழ்ச்சியுடன் பணம் எண்ணிக் கொண்டிருந்த போது,மரணம் ஏற்பட்டுள்ளது.அதனால் தான் அந்தப் புன்னகை.
இரண்டாவது உடலுக்குரியவன் ஒரு சூதாடி.அவன் அன்று சூதாடும் போது  வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலி திடீரென வந்து இறந்து விட்டான்.அது தான் அவனுடைய புன்னகைக்குக் காரணம்.
மூன்றாவது ஆள் மின்னல் தாக்கி இறந்துள்ளான்.அவன் முகத்தில் ஏன்  புன்னகை?அவன் ஒரு அரசியல்வாதி.மின்னலின் ஒளியைக் கண்டவுடன்  அவன் யாரோ தன்னை போட்டோ எடுக்கும் போது வந்த ப்ளாஷ் லைட்  என  எண்ணிவிட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யார் உழைப்பு?

ஒரு நாள் தனது சீடர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்  புத்தர் பிரான்.அவர்களை அழைத்து விசாரித்தார்.ஒவ்வொருவரும் தங்களால் தான் புத்த விஹாரப் பணிகள் செம்மையாக நடைபெறுவதாகக் கூறினர்.அவர்களிடம் ஒரு காலிப் பானையைக் கொண்டு வரச் சொன்ன புத்தர், அதில் ஒவ்வொருவரையும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றச்சொன்னார்.அவர்களும் அப்படியே செய்தார்கள்.பானை தண்ணீரால்  நிரம்பியது.''இப்போது சொல்லுங்கள்,யார் கொண்டு வந்து ஊற்றிய தண்ணீரால் பானை நிரம்பியது?''என்று கேட்டார் புத்தர்.பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர் எல்லோரும்.''இது போல் தான் அனைவரது உழைப்பாலும் விஹாரப் பணிகள் செம்மையாக நடக்கின்றன.''என்றார்  புத்தர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாத்தி யோசி

அமெரிக்காவின் நாசா,விண்வெளியில்  மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும்  போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை  இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை.ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து  புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்.நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும்,கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர்.
ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது;''அவர்கள் பென்சிலை உபயோகித்தார்கள்!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆனந்தம்

சீடன் ஒருவன் குருவின் கோபத்திற்கு ஆளான போது,குரு அளித்த சாபத்தினால் பன்றி ஆனான்.பன்றி ஆகுமுன் நண்பர்களிடம்,தான் பன்றியானதும் தன இருப்பிடத்தை குருவின் மூலம் அறிந்து தன்னைக் கொன்று விட வேண்டும் என்றும் தன்னால் அந்த பன்றி பிறப்பைத் தாங்க முடியாது என்றும் கூறினான்.
சாபம் பலித்து விட்டது..சீடர்கள் குரு மகிழ்ச்சியாய் இருக்கும் போது, அவரிடம் விபரம் கேட்டறிந்து குரு சொன்ன இடத்திற்குச் சென்றார்கள். தாயுடன் இருந்த ஆறு குட்டிகளில் சீடனான பன்றிக் குட்டியைக் கண்டுபிடித்து  தடியால் அடிக்கப் போனார்கள்.ஆனால் அந்தக் குட்டியோ ஓட ஆரம்பித்தது.
'நில்லு,நில்லு,நீ சொல்லித்தானே வந்திருக்கிறோம்' என்றனர் சீடர்கள்.
''அப்போது நான் சொல்லியிருக்கலாம்.ஆனால் இப்போது என்னை அடிக்காதீர்கள்.என்னிடம் என் தாயார் எத்தனை அன்பாக இருக்கிறார்!என்ன பட்டானது என் மேனி!.என்னை அடிக்கவே அடிக்காதீர்கள்.''என்ற
பன்றிக்குட்டி நில்லாமல் ஓடியது.
விக்கித்துப் போன சீடர்கள் குருவிடம்நடந்ததைக் கூறினார்கள்.குரு சொன்னார்,''நீங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமல் இருந்தேன்.உங்களுக்கு வேண்டுமானால் பன்றி செய்கின்ற காரியங்கள்  அருவருப்பாய் இருக்கலாம்.ஆனால் அதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதனுடைய ஆனந்தத்தை இல்லாமல் செய்ய நம்மால் முடியுமா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மகிழ்ச்சியும் கவலையும்

மூன்று குதிரை வீரர்கள் ஒரு நாள் இரவு ஒரு பாலைவனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி கேட்டது,''இங்கே இறங்குங்கள். இந்த இடத்திலிருந்து கிடைக்கக் கூடியதை எவ்வளவு எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்லுங்கள்.நாளை காலை நீங்கள் மகிழ்ச்சியும் கவலையும் அடைவீர்கள்.''
வீரர்கள் உடனே கீழே இறங்கி அந்த கடும் இருளில் தடவிப் பார்த்து கிடைத்த கற்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர்.மறு நாள் காலை அவர்கள் அந்தப் பைகளை  எடுத்துப் பார்த்த போது அந்தக் கற்கள் அனைத்தும் வைரமாக இருப்பதைக் கண்டனர்.ஒரு பக்கம் அவர்களுக்கு வைரங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதே சமயம் இன்னும் கொஞ்சம் கொண்டு வராமல் போனோமே என்று வருத்தம்.அசரீரி சொன்னது உண்மையாயிற்று.
வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பெரிய சொத்து.வாலிப வயதில் நாம் படிப்பதன் மூலம் நிறைய நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்கிறோம்..  ஆனால் வயதான பின் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எது கனவு?

ஜென் ஞானி சுவாங் ட்சு ஒரு நாள் காலை எழுந்ததும் தனக்கு ஒரு சந்தேகத்தால் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தீர்த்து வைக்க உதவுமாறும் தன சீடர்களைக்  கேட்டுக் கொண்டார்.சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அப்பாற்பட்ட குருவுக்கே  பிரச்சினையா என்று அவர் சொல்லப் போவதை ஆவலுடன் கேட்கத் தயாராயினர்.
குரு சொன்னார்,''சந்தேகம் மிக சிக்கலானது.நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பட்டாம் பூச்சியாய் மலருக்கு மலர் தாவித் தேன் அருந்திக்   கொண்டிருந்தேன்.''சீடர்களுக்கு திகைப்பு.கனவு எல்லோரும் தானே காண்கிறோம்,இதில் என்ன பிரச்சினை?குரு தொடர்ந்தார்,'' பிரச்சினை அதோடு முடியவில்லை.இன்று காலை கண் விழித்ததும் சுவாங் ட்சு ஆக மாறிவிட்டேன்.விவகாரம் என்னவென்றால்,இப்போது அந்த பட்டாம் பூச்சி  தான் சுவாங் ட்சு ஆகக்  கனவு காண்கிறதா என்பது தான்.ஒரு மனிதன் பட்டாம் பூச்சியாகக் கனவு காண முடியுமென்றால்,பட்டாம் பூச்சியும் மனிதனாகக் கனவு காண முடியுமல்லவா?இப்போது எனக்கு உண்மை நிலை தெரிந்தாக வேண்டும்.நான் சுவாங் ட்சுவா,இல்லை பட்டாம் பூச்சியா?''
சீடர்கள்,''இதற்கு பதில் சொல்ல எங்களுக்கு சக்தி இல்லை.இதுவரை நாங்கள் தூக்கத்தில் காண்பது கனவென்றும்,விழிப்பில் காண்பது நனவென்றும் தான் கருதி வந்தோம்.இப்போது நீங்கள் எங்களைக் குழப்பி விட்டீர்கள்.''என்றனர்.
குரு சொன்னார்,''நீங்கள் கனவு காணும் போது,பகலில் பார்த்ததை எல்லாம் மறந்து விடுகிறீர்கள்.பகலின் நிகழ்ச்சிகளின்போது கனவை மறந்து விடுகிறீர்கள்.பகலில் கனவில் கண்டது கொஞ்சமாவது நினைவுக்கு வரும். ஆனால்,கனவில்,பகலில் கண்டது எதுவுமே  நினைவிற்கு வருவதில்லை.  நினைவு தான் முடிவு எடுக்கும் முக்கிய  அம்சம் என்றால் பகலின் கனவுகளை விட இரவின் கனவுகளே மிகவும் உண்மையாக இருக்கின்றன. ஒருவன்எப்போதும் உறங்கிக் கொண்டே இருந்தால்,தான் காணும் கனவு உண்மை அல்ல என்று எப்படி அறிய முடியும்?ஒவ்வொரு கனவும் காணும் போது உண்மையாகத்தான் தெரிகிறது.''
மரணத் தருவாயில்,ஒருவன் தன கடந்த கால வாழ்வைத் திரும்பப் பார்த்தால்.அது கனவைப் போலத்தான் தோன்றும்.வாழ்ந்தோமா.கனவு காண்கிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆண்கள்

தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன.
7  வயதுக்குக் கீழ்    ---பாலன்
7--10  வயது               ---மீளி
10--14 வயது             ---மறவோன்
14--16 வயது             ---திறலோன்
16  வயது வரை      ---காளை
16--30  வயது            ---விடலை
30 வயதுக்கு மேல் ---முதுமகன்                                

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பூக்கள்

நமது தமிழ் மொழி ஒரு இனிமையான மொழி.இதன் சொல் வழமை தான்  எவ்வளவு சிறப்பாக இருக்கிறது?
பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.
மொக்கு    ---முகப்பு காட்டும் நிலை
மொட்டு   ----மூட்டும் இறுக்க நிலை
அரும்பு    ----அரும்பும்  சூழ்நிலை
முகிழ்       ----முகிழ்த்து வரும் நிலை
மூகை      ----மணம் முகம் காட்டும் நிலை
மலர்         ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர்        ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ               ----வீழும்  நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நிலை மாறும்

ஒரு மன்னன்,யாருமே துணையில்லாத ஒரு சூழ்நிலையில்  ஒரு சிக்கலில்  மாட்டிக்  கொண்டால்  செயல்  படும்  விதம் குறித்து, தன் மந்திரிகளிடம் கேட்டார்.அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதில் அவருக்கு திருப்திகரமாக இல்லை.எனவே ஒரு ஞானியை அணுகிக் கேட்டதில்.அவர் ஒரு சிறு காகிதத்தில் குறிப்பு எழுதிக் கொடுத்து,''இதை இப்போது படிக்கக் கூடாது.உன் மோதிரத்தில் மடித்து வைத்திருந்து அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது எடுத்துப் படி.''என்றார்.
சில மாதங்களில் பக்கத்து நாட்டு அரசன் படை எடுத்து வந்தான். இந்த மன்னன் தோல்வியுற்றதுடன் தனியாக ஓடித் தப்பித்தான்.ஓடி ஓடிக் கடைசியில் ஒரு  மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான்.தன் நிலை குறித்து வருந்திய அரசன்,ஞானி சொன்னது ஞாபகம்வந்து மோதிரத்திற்குள் இருந்த குறிப்பை எடுத்துப் படித்தான்.அதில்,''இந்த நிலை யும்  மாறலாம்,'' என்று  இருந்தது.உடனே அவனுக்கு உற்சாகம் தோன்றியது.பின்னர் நாட்டுக்குள் வந்து தன் படைகளை மீண்டும் திரட்டி,பக்கத்து நாட்டு மன்னனுடன் போரிட்டு வெற்றியடைந்து மீண்டும் தன் நாட்டிற்கு மன்னன் ஆனான்.
மீண்டும் மன்னன் ஆன அவனுக்கு சில மாதங்களில் தான் மிகவும் சிறந்தவன்,யாராலும் அசைக்க முடியாதவன் என்ற  ஆணவம் வரலாயிற்று. அப்போது ஒரு நாள் தற்செயலாக மோதிரத்தினுள் வைத்திருந்த குறிப்பு தவறிக் கீழே விழுந்தது.அதை எடுத்த மன்னன் மீண்டும் படித்தான்,''இந்த நிலையும் மாறலாம்.''மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.அவன் ஆணவம் அப்போதே அழிந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மோதிரம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது,ஒரு ஆங்கிலேய பிரபு மன்னர்  ஒருவரை விருந்துக்கு அழைத்தார்.மன்னர் அழகான விலை உயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார்.ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட மன்னர்  அதை கழற்றி அவரிடம் காண்பித்தார்.பிரபு அதைத் தன விரலில் போட்டுப் பார்த்தார்.பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை.தயங்கியபடியே மன்னர் அதைக் கேட்ட போது பிரபு சொன்னார்,''எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''
சில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு அழைத்தார்.அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின்  மனைவியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். விருந்து முடிந்து பிரபு புறப்படும் போது தன் மனைவியை அழைத்தார்.அப்போது மன்னர் சொன்னார்,''எங்கள் அந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''
பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொடியது

மார்கழிக் குளிரில் புலவர் ஒருவர் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்.அப்போது இன்னொரு புலவர் சால்வையுடன் வந்தார்.முதல் புலவர் சொன்னார்,''பனிக்  காலம் கொடியது,''இரண்டாவது புலவர் சொன்னார்,'பனிக்காலம் நன்று.' முதல்  புலவர் சற்று யோசித்து,''ஆமாம்,பனிக்காலம் நன்று,'என்றார். அருகில்  இருந்தவருக்கு ஒரே குழப்பம்.முதல் புலவர் தன கருத்தை வேகமாக மாற்றிக்  கொண்டதற்கான காரணத்தை வினவினார்.அவர் சொன்னார்,'இருவரும் ஒரே கருத்து தான் கொண்டிருக்கிறோம்.'அருகில் இருந்தவருக்கோ குழப்பம் அதிகரித்தது.குறிப்பறிந்து முதல் புலவர் சொன்னார்,''நான் பனிக்காலம் கொடியது என்றேன்.அவர் பனிக்கு ஆலம் நன்று என்றார்.ஆலம் என்றால் விஷம்.அதாவது பனியைக் காட்டிலும் விஷம் பரவாயில்லை என்கிறார்.அவ்வளவு பனிக்கொடுமை.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சூழ் நிலை

ஒரு தளபதி அடுத்த நாட்டு மீது படையெடுக்க தன வீரர்களுடன் கப்பலில் போய் இறங்கினான்.இறங்கியதும் முதல் வேலையாகத் தாம் வந்த கப்பலைத் தீயிட்டுக் கொளுத்தினான்.படை வீரர்கள் திடுக்கிட்டனர்.தளபதிஅப்போது சொன்னான்,''நாம் நம் எதிரிகளை வென்று அவர்களுடைய கப்பலில் ஊர்  திரும்பலாம்.''வீரர்களுக்கு சூழ்நிலை புரிந்தது.தோல்வி அடைந்தால் ஊர் திரும்பக் கப்பல் இல்லை.எதிரியும் சும்மா விட மாட்டார்கள்.போராடி வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை  என்பதை உணர்ந்து,வெறியுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றனர்.சூழ்நிலையை உருவாக்கியது தளபதி தானே?'சூழ்நிலை சரியில்லை' என்று சிலர் சொல்வார்கள்.சூழ்நிலையை நாம் தான் ஏற்படுத்த வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மீதி

பேருந்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன்,நடத்துனர் பயணச் சீட்டுக்குக் காசு கேட்கையில்,தான் கொண்டு வந்த ஐந்து ரூபாய் காணவில்லை  என்று அழ ஆரம்பித்தான்.இரக்கப்பட்ட நடத்துனர்,அவன் போக வேண்டிய இடம் கேட்டு ரூபாய் மூன்றுக்கான பயணச் சீட்டை பணம் பெற்றுக் கொள்ளாமலேயே கொடுத்து விட்டு நகர்ந்தார்.சிறுவன் மீண்டும் அழுதான் . நடத்துனர் காரணம் கேட்க அவன் கேட்டான்,''மீதி இரண்டு ரூபாய்....?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எடை

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான்.தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உமர் கயாம்

உமர் கயாம் பாரசீகக் கவிஞர்.பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்வைக் கொண்டாடியவர்.அவருடைய பொன் மொழிகளில் சில;
*நன்மையையும் தீமையும் ஒன்றாய் வாழும் இடமாக நம்மைப் படைத்துவிட்டுநாம் செய்யும் தீமைகளுக்கு நம்மை இறைவன் தண்டிப்பது நீதியாகுமா?
*நாம் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டோமா? இதை விட்டு நீங்க வேண்டும் என்று சொன்னோமா?இல்லை.நம்மை எங்கிருந்தோ இவ்வுலகில் தள்ளி,இங்கும் அங்குமாக அலைத்து இழுத்து சிறிதும் ஈவு இரக்கமின்றி நம்மை வெளியே ஏன் தள்ளி விட வேண்டும்?
* ஆசையோடு நீ,நான் என்று அடித்துப் பிடித்து சில நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அவ்வளவே.பின் நீ ஏது?நான் ஏது?
* மரணம் ஒன்றே உறுதி.ஆகவேஉலகில் யார் உயர்ந்தவன்?யார் தாழ்ந்தவன்?
*நமக்கு இருக்கும் நேரம் மிகக் குறைவு.அந்த நேரமும் விரைவாகக் கழிந்து கொண்டிருக்கிறது.வீணாகத் தத்துவ விசாரத்தில் பொழுதைப் போக்கி,வேதனையை வளர்த்துக் கொள்ளாதே.பாவம்,புண்ணியம் என்று பேசிப்பேசிக் கழிவிரக்கத்தில் அழுந்தி மாயாதே.
*இந்த உலகம் ஒரு பாழடைந்த சத்திரம்.இதில் ஏதோ வருகிறோம்.எவ்வளவு ஆற்றலுடையவராயினும் சிறிது நேரம் தான் தங்குகிறோம்.பிறகு எழுந்து போகிறோம்.எங்கே என்றா கேட்கிறாய்?யாருக்குத் தெரியும்?
*வானத்தை நோக்கிக் கை நீட்டித் தொழாதே.அங்கே உள்ளது வெறும் சூனியம் தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்போ சிரிப்பு

ஜப்பானைப் பார்.அமெரிக்காவைப் பார்.சிங்கப்பூரைப்பார் என நீட்டி முழக்கி பேசிக் கொண்டிருந்த பேச்சாளருக்கு ஒரு துண்டுச்சீட்டு வந்தது.''உங்கள் கைக்கெடிகாரத்தையும் பாருங்கள்.''
**********
''வயிறு எரியுது டாக்டர்.''
'பயப்படாதீங்க,பீஸ் கொடுக்கும்போது எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்.'
**********
''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''
'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'
**********
''ஒரு அரசியல்வாதிக்கு எந்த ஸ்டேஜில் மாலை போடக்கூடாது?''
'தெரியலையே!'
''கோமா ஸ்டேஜில்.''
**********
''பூகம்பம் வந்து எங்க தெருவில் எல்லா வீட்டிலும் கிராக் வந்துடிச்சு.ஆனால் எங்க வீட்ல மட்டும் வரல.''
'ஒரே வீட்ல இரண்டு கிராக் இருக்கக் கூடாதுன்னு அதுக்குத் தெரிஞ்சிடுச்சி போலிருக்கு.'
**********
தீவிரவாதி ஒருவனின் பையன் தேர்விலே தவறி விட்டான்.அப்பா கேட்டார்,''தேர்வுக்குப் போனாயே,என்ன ஆயிற்று?''
'பையன் சொன்னான்,'அப்பா.அவர்கள் மூன்று மணி நேரம் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.நான் யார் பையன்?நானா அசருவேன்?கடைசி  வரை எதுவுமே சொல்லவில்லையே!'
**********
''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''
'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'
''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'
'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'
''இன்று தான் இறுதி மேட்ச்.''
**********
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
இங்கே தமிழாசிரியர் யார் என்று கேட்டதற்கு,இவர்தான்,'அடியேன்,'என்றாராம்
**********
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''
'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'
''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''
'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
**********
ஒரு மாணவன்:நீ முட்டாள்.
அடுத்தவன்: இல்லை,நீ தான் முட்டாள்.
ஆசிரியர்:நான் ஒருத்தன் இங்கே இருக்கும் போது அங்கே என்னடா பேசிக்கிட்டிருக்கீங்க?
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாத்து மடையன்

ஒருவன் புதிய காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் தேங்கி  இருந்ததைக் கண்டான்.அருகில் நின்று கொண்டிருந்தவனிடம்,''இங்கு ஆழம் ஒன்றும் அதிகம் இல்லையே?''என்று கேட்டான்.அவன் இல்லைஎன்று சொன்னான்.ஆனால் காரைத் தண்ணீரில் விட்ட சிறிது நேரத்தில் கார் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.காரின் சொந்தக்காரன்,''மடையா,ஆழம் இல்லை என்று சொன்னாயே?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,'எனக்கும் ஒன்றும் புரியவில்லை.என் வாத்துக்கள் இதைக் கடந்து வந்த போது பாதி தானே நனைந்திருந்தன!'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

என்ன வித்தியாசம்?

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம்  கழித்து வெறும் கையுடன்  வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார்.  சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'
புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை  நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
இப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யாருக்கு தாத்தா?

பெயர் தெரியாத ஒரு ராணுவ வீரரின் படம் ஒரு கடையில் விற்பனைக்காகத்   தொங்க  விடப் பட்டிருந்தது.அதை வாங்க விரும்பி ஒருவன் விலை கேட்ட போது,நூறு ரூபாய் என்று கடைக்காரர் சொன்னார்.ஆனால் அவனிடம் தொண்ணூறு ரூபாய் தான் இருந்தது.எனவே அப்படத்தை அவனால் வாங்க முடியவில்லை.இரு நாள் கழித்து நண்பன் ஒருவன் வீட்டிற்குச் சென்ற போது, அந்த வீட்டில் அவன் வாங்க நினைத்த ராணுவ வீரரின் படம் இருக்கவே,அதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.நண்பன் சொன்னான்,''இவர் தான் என் தாத்தா. ராணுவத்தில் பெரிய சேவை செய்தவர்.''இவன் பெரு  மூச்சு விட்டபடியே  நினைத்துக் கொண்டான்,'அன்று மட்டும் என்னிடம் இன்னும் பத்து ரூபாய் இருந்திருந்தால் இன்று இவர் என் தாத்தாவாக இருந்திருப்பார்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொருத்தமானவர்

மதீனாவின் ஆட்சித் தலைவர் உமர் பாரூக்கிற்கு,பரிந்துரைக்கப்பட்ட  இருவருள் ஒருவரை கவர்னர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய பணி.இருவரையும் குறிப்பிட்ட நேரத்தில் தம்மை வந்து சந்திக்க அழைத்தார். முதல் நபர் குறித்த நேரத்தில் வந்தார்,முக மலர்ச்சியுடன் முகமன் கூறினார்.முகம் பொலிவுடன் இருந்தது.இனிமையாகப் பேசினார்.உடைகள் நேர்த்தியாக இருந்தன.இரண்டாம் நபர் சற்றுத் தாமதமாக அரக்கப் பரக்க வந்தார்.அவர் உடைகள் கலைந்திருந்தன.தூசி படிந்திருந்ததைத் தட்டி விட்டுக் கொண்டார்.தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டார்.உடைகள் எளிமையாக இருந்தன.தாமதத்திற்கான காரணத்தை அவர் விளக்கினார்,''வரும் வழியில் ஒரு மூதாட்டியின் கழுதையுடைய ஒரு கால் இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தது.கிழவியால் அதை மீட்க இயலவில்லை.அவளை அந்த நிலையில் விட்டுவிட்டு வர மனமில்லை.எனவே சிரமப்பட்டு கழுதையை மீட்டுக் கொடுத்து விட்டு வந்ததில் தாமதமாகி விட்டது.''முதலாவதாக வந்தவர் சிரித்துக் கொண்டே கேட்டார்,'உங்களுக்கு எது முக்கியம்?கவர்னர் பதவியா?கழுதையின் காலா?' அப்போது உமரின் குழந்தைகள் ஓடி வந்து அவர் மடியில் விழுந்து விளையாடத் துவங்கின.இரண்டாவது நபர் வெட்கத்துடன் சொன்னார்,'என் வீட்டிலும் நான் சென்றவுடன் என் குழந்தைகளுடன் ஒரே கலாட்டா தான். எல்லோரும் என் மீது வந்து விழுவார்கள்.இப்போது கிளம்பும் போது கூட என் கடைசி மகள் என் அங்கியைப் பிடித்து இழுத்து,கூட வருவேன் என்றாள். அது தான் அங்கி கூடக் கசங்கி விட்டது.'முதல் நபர் இதனைக் கேட்டு வியப்படன்,  ''நான் ஒரு போதும்  இவ்வாறு நடப்பதில்லை.என் குழந்தைகள் என்னைப் பார்த்தவுடன் அடங்கிப்போவார்கள்.என் அருகில் வரவே அஞ்சுவார்கள்.''      உமர் சொன்னார்,''இறைவன் உன் இதயத்திலிருந்து கருணையை எடுத்து  விட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்?ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்.படைப்புகள் மீது கருணை காட்டாதவர் மீது படைப்பாளன் கருணை காட்ட மாட்டான்.''
உமர் பின் புன்னகையுடன் தன் செயலாளரை அழைத்து இரண்டாவது நபருக்குப் பதவி நியமனக் கடிதம் அனுப்பச் சொல்லி உத்தரவிட்டார். முதல்  நபரோ வாயடைத்துப் போனார்.
உமர் சொன்னார்,''தூய்மையான அழகான ஆடைகள்,இனிய பேச்சு,பொலிவான தோற்றம் ஆகியவற்றால் மட்டும் தலைவராகிவிட   முடியாது.பெரும் பதவியை ஏற்பவர்கள் கருணை மிகுந்தவராக,மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டவாராக இருக்க வேண்டும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பத்துக்கால்

பத்துக்கால்  மூன்று  தலை
பார்க்கும் கண்  ஆறு முகம்
இத்தலையில் ஆறு வாய்.
ஈரிரண்டாம் -இத்தனையும்
ஓரிடத்தில்  கண்டேன்!.
உவந்தேன்!களி கூர்ந்தேன்!
யாரிடத்தில் கண்டேன்,பகர்.
                 இப்பாடல் வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியைப் பார்த்துப் பாடப்பட்டது.
பொருள்: உழுது கொண்டிருந்த இரண்டு மாட்டுக்கும் எட்டு  கால்;உழவனுக்கு
இரண்டு கால்;மொத்தம் பத்து கால்.
மாடுகளின் தலை இரண்டு;உழவனின் தலை ஒன்று;மொத்தம் மூன்று தலை.ஆறு கண்கள்.
மாடுகளின் முகம் இரண்டு;உழவனின் முகம் ஒன்று;அப்போது வெயில் ஏறும் நேரம்,எனவே ஏறுமுகம் ஒன்று;ஏர் முகம் ஒன்று;உழுகிற கொழுமுகம் ஒன்று;ஆக மொத்தம் ஆறு முகம்.
மாடுகளின் வாய் இரண்டு;உழவனின் வாய் ஒன்று;கொழு வாய் (கலப்பை நுனி ) ஒன்று ;மொத்தம் நான்கு வாய்.(ஈரிரண்டுநான்கு)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கருமி

ஒரு கஞ்சனிடம் கஞ்சன் என்று எழுதச் சொல்லியதற்கு,கருமி என்று எழுதினானாம்.ஏனென்று கேட்டதற்கு கஞ்சன் என்ற வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள்;கருமி என்ற வார்த்தைக்கோ மூன்று எழுத்துக்கள்  தானே என்றானாம்.
**********
கருமி ஒருவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.தன்னைக் காப்பாற்ற மற்றவர்களைக் கூவி அழைத்தான் அவன் மகன்.தண்ணீருக்குள் இருந்து ஒரு முறை எம்பிப் பார்த்த தந்தை கத்தினான்,''டேய்,அவர்கள் வந்து காப்பாற்றுவதாய் இருந்தால் காப்பாற்றட்டும்;ஆனால் ஐந்து ரூபாய்க்கு மேல் தர ஒத்துக் கொள்ளாதே.''
**********
கஞ்சன் ஒருவனைப் புலி ஒன்று கௌவிக்கொண்டு சென்றது.அவனுடைய மகன் புலிக்குப் பின்னால் ஓடி வந்தான்.வில் அம்புகளோடு புலியை அவன் குறி வைக்கையில் புலியின் வாயிலிருந்து எட்டிப் பார்த்து தந்தை சொன்னான்,''காலைப் பார்த்து அம்பு விடு.புலியின் உடலில் எங்காவது பட்டு தோல் வீணாகி விடப் போகிறது.''
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எது பெரியது?

ஒரு காவல் துறை அதிகாரி,ஒரு காரை நிறுத்தி அதை ஓட்டி வந்தவரிடம் சொன்னார்,''சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்ததற்காக  உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாகக் கொடுக்கிறோம்.''என்றார்.காரை ஓட்டி வந்தவருக்கு மகிழ்ச்சி.அதிகாரி கேட்டார் ,''இந்தப் பணத்தை எப்படி உபயோகப் படுத்தப் போகிறீர்கள்?''அந்த ஆள் சொன்னான்,'முதலில் ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து கார் ஓட்ட லைசென்ஸ் பெறுவேன்.'அப்போது  அருகில் அமர்ந்திருந்த அவன் மனைவி அதிகாரியைப் பார்த்துச் சொன்னாள்,'அவர் பேசுவதைக் கேட்காதீர்கள்.அவர் அதிகம் குடிக்கும் போது இப்படி புத்திசாலி மாதிரி பேசுவார்.'பின் சீட்டிலிருந்த ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்து உளறினான்,'எனக்குத் தெரியும்,நீ இந்த திருடிய காருடன் ரொம்ப தூரம் போக முடியாது என்று.'அதிகாரிக்கு மயக்கமே வந்து விட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net