Wednesday, January 5, 2011

வார்த்தையின் சிறப்பு

ஞானி ஒருவர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொது ஒரு பெண,தன் குழந்தைக்கு உடல் நலம் சரி  இல்லை என்று கூறி,அவர் வந்து குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.ஞானியும் ஆவலுடன் கிராமத்திற்கு வந்தார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.ஞானி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.கூட்டத்தில் இருந்த ஒருவன் ஆவேசமாக,''மருந்து கொடுத்து குணமாகாத இந்தக் குழந்தை இவருடைய பிரார்த்தனையால் மட்டும் குணமாகிவிடுமா?''என்று கேட்டான்.ஞானி உடனே,'நீ ஒன்றும் தெரியாத முட்டாள்.'என்றார்.அவனுக்குஅதுஅவமானமாகப்போய்விட்டது.கோபத்துடன் ஞானியை அடிக்க விரைந்தான்.அப்போது ஞானி அவனிடம் சாந்தமாகச் சொன்னார்,'நான் உன்னை முட்டாள் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கு உனக்கு இவ்வளவு கோபம் உண்டாக்கக் கூடிய தன்மை இருந்தால்.வேறொரு வார்த்தைக்கு ஏன்ஒரு குழந்தையைக் குணமாக்கக் கூடிய தன்மை இருக்காது?'அவன் மௌனமாக அங்கிருந்து வெளியேறினான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாயின் வால்

பண ஆசை பிடித்த ஒருவன்,தன சொல் கேட்கும் பூதம்ஒன்று இருந்தால் தன் ஆசை எல்லாம் நிறைவேறும் எனக் கருதி ஒரு முனிவரை அணுகித் தொந்தரவு செய்ய அவரும்,''நான் உனக்கு அடிமையாய் ஒரு பூதம் தருகிறேன்,ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன சக்தியால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.அவன் ஆணைகளைச்  சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.
இந்த உலகமும் நாயின் வால் போல் தான் உள்ளது.அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும் இன்னும் சரி செய்ய முடியவில்லை...
இது சுவாமி விவேகானந்தர் கூறிய கதை. 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

என் வீடு

முல்லா வீட்டில் இல்லாத பொது திருடன் ஒருவன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடிக் கொண்டு போய் விட்டான்.திருடியது யார் என பொறுமையாய்க் கண்டு பிடித்த முல்லா அத்திருடன் வீட்டுத் திண்ணையில் போய் படுத்துக் கொண்டார்.திருடன் காரணம் கேட்க,''என் பொருட்கள் எங்கிருக்கிறதோ அது தானே என் வீடு?''என்று எதிர்க் கேள்வி கேட்டார் முல்லா.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சொர்க்கம்

வயதான கணவன்.சக்கரை நோய் மற்று பல விதமான நோய்கள் .எனவே மனைவி உணவில் கடும் கட்டுப்பாடு வைத்தாள்.வாய்க்கு இதமாக எதுவும் சாப்பிட முடியவில்லை.இரண்டு பேரும் இறந்ததும் சொர்க்கம்போனார்கள். சொர்க்கத்தில் வகை வகையான உணவு.கணவன் சாப்பிடத் தயங்கினான்.  கடவுள் சொன்னார்,''இங்கு என்ன சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.சும்மா  சாப்பிடுங்கள்.''கணவன் மனைவியிடம் சீறினான்,'அடிப்பாவி கெடுத்தியே,  பூலோகத்தில் என்னை சாப்பிட விடாமல் கெடுத்தாயே?எல்லாம் சாப்பிட்டிருந்தால்,அங்கேயும் ருசியாக சாப்பிட்டு இருந்திருப்பேன்,இங்கேயும் ஐந்தாறு வருடம் முன்னாலேயே வந்து இந்த உணவைஎல்லாம் விரும்பியபடி சாப்பிட்டிருப்பேனே?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எந்த குதிரை?

ஒரு நாள் காலை ஒருவன் மிகப் பதற்றத்துடன் ஒரு டாக்டரிடம் வந்தான்.''டாக்டர்,இன்று காலை தெரியாமல் ஒரு குதிரையை விழுங்கி விட்டேன்.''டாக்டர் கேட்டார்,''என்னப்பா இது,யாராவது குதிரையை விழுங்கு வார்களா ?ஈயை வேண்டுமானால் விழுங்கி இருப்பாய்.''
''என்ன டாக்டர்,குதிரைக்கும் ஈக்கும் வித்தியாசம் தெரியாதவனா நான்?குதிரைவயிற்றில்இருந்துகொண்டுஉதைக்குது.ஏதாவதுஉடனே செய்யுங்கள்.'' என்றான் வந்தவன்.
 மனோதத்துவ ரீதியில் தான் இவரைக் குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்த டாக்டர் ,உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்தார்.தன உதவியாளரைக் கூப்பிட்டு,பக்கத்திலுள்ள குதிரை பயிற்சி நிலையத்திலிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு எடுத்து வந்து நோயாளி இருந்த அறை ஜன்னலுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்ட ஏற்பாடு செய்தார்.மயக்கம் தெளிந்து அவன் எழுந்த போது,டாக்டர்,''இதோ,இந்த குதிரை தான் உன் வயிற்றில் இருந்தது.அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விட்டேன்.இப்போது உனக்கு திருப்தியா?''என்று கேட்டார்.
 ''ஐயையோ டாகடர்.இக்குதிரை பழுப்பு நிறத்தில் அல்லவா இருக்கிறது?நான் விழுங்கிய குதிரை வெள்ளை நிறம்.''என்றான்.டாக்டர் மயங்கி விழுந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தரம்

ஒரு சமயம் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் ஒரு கவிஞரைப் பார்க்க வந்திருந்தார்.கவிஞர் ஒரு தட்டில் சுடச்சுட இட்டிலி கொண்டு வந்து கட்டாயம் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்தினார்.கவிஞரின் வேண்டுகோளுக்காக அழ.வள்ளியப்பா இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்டார். அதைப் பார்த்த கவிஞர்,''என்ன இட்டிலி நன்றாக இல்லையா?''என்று கேட்டார்.அழ.வள்ளியப்பாவோ,'இல்லை...இரண்டாம் தரம்...'என்று இழுத்தார். நண்பர் அதிர்ச்சியுற்றார்.உடனே அழ.வள்ளியப்பா,'இல்லை,இல்லை.இட்டிலி முதல்தரம்!நான் தான் இரண்டாம் தரம்.'என்றார்.கவிஞர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.அதைப் புரிந்து கொண்டு அழ.வள்ளியப்பா சொன்னார்,'ஏற்கனவே நண்பர் ஒருவர் வீட்டில் சிற்றுண்டியை முடித்து விட்டேன்.இப்போது நீங்களும் வற்புறுத்தியதால் இரண்டாம் தரமாகச் சாப்பிட நேர்ந்தது.அதைத் தான் சொன்னேன்..'அர்த்தம் புரிந்து கவிஞர் நகைத்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அதிர்ச்சி

மிக அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மாளிகைகளை உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் மன்னனுக்குக் கட்டிக் கொடுத்தான் ஒரு தச்சன்.ஆனால் அவனுக்கு ஒரு வருத்தம்.மன்னர் அவன் வேலைத் திறமை குறித்து ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்து பேசியதில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த தச்சன்  மன்னரிடம் சென்று தான் ஓய்வுபெறப்போவதாகக்கூறினான்.மன்னர்,''அதுஉன் விருப்பம்.ஆனால் அதற்குமுன் எனக்கு ஒரு அழகான மாளிகை கட்டிக் கொடுத்து விடு.''என்று சொன்னார்.வேறு வழியின்றி விருப்பமில்லாமல் ஏனோ தானோவென்று வேலை செய்து முடித்தான்.மன்னர் வந்து பார்த்து விட்டு,''இவ்வளவு தானா?இன்னும் வேலைப் பாடு இருக்கிறதா?''என்று வினவ,'இனி செய்வதற்கு ஒன்றுமில்லை,'என்றான் தச்சன்.மன்னர் மறுநாள் அவனை சபைக்கு வரச்செய்து,அவனைப் புகழ்ந்து பேசி,அவன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு  தனது பரிசாக அவன் புதிதாகக் கட்டிய வீட்டையே அவனுக்குப் பரிசாகத் தந்தார்.தச்சனால் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனது வீட்டைக் கட்டுகிறோம் என்று அறிந்திருந்தால் எவ்வளவு வேலைப்பாடு செய்திருக்கலாம்என்று புலம்பினான்.என்ன செய்வது?அவனது சலிப்பும் அக்கறையின்மையும் அவசரப் புத்தியும் தான் பலன் கிட்டாததன் காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இது சிரிக்க

கர்நாடக சங்கீதத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு பாடகர்.அப்போது முன் வரிசையில் ஒரு அழகான வாலிபர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழகுள்ள துரைஇவர் யாரடி?''என்று பாடினார்.அடுத்து ஒரு குள்ளமான ரசிகர் ஒருவர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழ  குள்ள துரை இவர் யாரடி?''என்று பிரித்துப் பாடினார்.பின்னர் ஒரு வளர்ந்த வாலிபர் வந்தார்.அவரைப்பார்த்தவுடன்,''அழகுள்ள துரை ஆறடி'' என்று புலவர் ஆளுக்கேற்ற மாதிரி பாடி கை தட்டலைப் பெற்றார்.
**********
பாடகர்  கர்னாடகசங்கீதம் ஒன்றைப் பாடி ஆரம்பித்த போது,எல்லோரும் எழுந்து போக ஆரம்பித்தனர்.காரணம் வேறொன்றுமில்லை.''தூது போனாயே,''என்னும் வரியை,''தூ தூ போ நாயே,'' என்று இழுத்துப் பாடியதால் வந்த வினை.
**********
கடற்கரையில் சிறுவன் அப்பாவிடம் கேட்கிறான்,''அப்பா அவர்யார்?'' 'அவரா,கடலை விற்பவர்.'
''அப்போ,இவ்வளவு பெரிய கடல் அவருக்கு சொந்தமா?''
*********
''வரவர எனக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது.''
'அன்னைக்கு நான் தூரத்தில் போய்க் கொண்டிருந்தேன்.என்னை சரியாய் அடையாளம் தெரிந்து கூப்பிட்டாயே?'
''போகும் போது தானே,எனக்கு வரவரத்தான் கண்ணு தெரியலேன்னு சொன்னேன்.''
**********
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.எலி சொல்லியது,'சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மார்கஸ் அரேலியஸ்

மார்கஸ் அரேலியஸ் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.கிரேக்கத்தின் அரசனாக இருந்த போதும் ஒரு ஞானியாகவே வாழ்ந்தவர்.அவருடைய பொன் மொழிகளில் சில:
*கோபத்தில்  செய்யப்படும் பாவத்தை விட  ஆசையில் செய்யும் பாவமே மிக மோசமானது.
*நமது உடலின் உறுப்புக்களைப் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு சேர்ந்திணைந்து செயல்படவே பிறந்துள்ளோம்.
*ஒரே பீடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஊது பத்திகள் விரைவாக சிலவும்  மெதுவாக சிலவும் எரிந்து புகைந்து தணிகின்றன.இறுதியில் தணிந்து மறைதல் என்பது இரண்டுக்கும் ஒரே மாதிரி தானே?
*மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்.நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான்  பேரமைதி கிட்டுகிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.
*உனது வாழ்க்கை முறையை சற்று வசதியாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதைத் தவிர புகழால் வேறு என்ன பயன்?
*உனது புகழுரைகளால் தங்கத்தின் பளபளப்பும் வைரத்தின் ஒளி விடும் தன்மையும் மாறிவிடுமா?
*நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பான்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிடைக்கும்.
*'இது நல்லது,''இது கெட்டது,'என்னும் அவசரத் தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே.
*புற விஷயங்கள் பிரச்சினையே அல்ல.ஆனால் அவற்றைப்  பற்றிய நமது மதிப்பீடுகளே  பிரச்சினை.
*மற்றவர்களின் தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டிராதே.அவற்றை அவர்களிடமே விட்டு விடு.
*செய்பவரைப் பார்க்காது அவரது செயல்களை மட்டும் சீர் தூக்கிப்பார்.
*அச்சத்தின் அடிப்படையில் பிரார்த்தனை செய்யாதே.ஆசை மற்றும் துயரத்தின் பொருட்டாகவும் வேண்டாம்.
*யாரோ என்னை இழிவாகப் பேசுகிறார்கள்.அது அவர்களது பிரச்சினை.மற்றவர்களை இழிவாகப் பேசாதிருப்பது என் கடமை.
*கோபத்திற்கும் துயரத்திற்கும் காரணமான விசயங்களை விட,அந்தக் கோபமும் துயரமும் தான் அதிக இழப்பைத் தருகின்றன.
*மற்றவர்களை நேசிப்பதை விட நம்மை நாமே அதிகம் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஒற்றுமை

சாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு,தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து,இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு   என்றார்.
அவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான்.தந்தை உடனே,''பரவாயில்லை.இதோ பல கம்புகள் உள்ள கட்டு.இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,''என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது.உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,''அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா?தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது.அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை   விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.''
உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில்  தந்தையும் குணமடைந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஓவியம்

ஜென் துறவிகளின் மடாலயத்திற்கு புகழ் பெற்ற சித்திரக்காரன் ஒருவன் வந்தான்.தான் வரைந்த பௌத்த சித்திரங்களைக் கடவுள் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும்,எனவே, தான் கடவுளை விடவும் உயர்ந்தவன் என்ற மமதையுடனும் இறுமாப்புடனும் பேசினான்.அவனை வரவேற்ற மடாலயத்தின் மூத்த துறவி,தானும் ஒரு சிற்பி என்றும்,மற்ற சிற்பங்கள் போலன்றி தன சிற்பம் நிமிடத்துக்கு நிமிடம்உரு மாறக் கூடியது என்றும் அது ஓரிடத்தில் நிற்காமல் இயங்கக் கூடியது என்றும் சொல்ல,சித்திரக்காரனால் நம்ப முடியவில்லை.துறவியும் மறுநாள் காலை அவனுக்குக் காட்டுவதாகக் கூறி அவனை அங்கு தங்கச் செய்தார்.
மறுநாள் காலை துறவி அவனை அழைத்து வந்து காட்டினார்.அங்கு ஒரு பெரிய ஐஸ் கட்டி இருந்தது.''இதுதான் நான் உருவாக்கிய சிற்பம்.இது நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும்.இதைப் போன்ற ஆச்சரியமான சிற்பம் எதையும் நீ பார்த்திருக்க முடியாது.''என்றார்  துறவி. சிறிது நேரத்தில் ஐஸ் உருகித் தண்ணீராய்ஓடியது.துறவி,''பார்த்தாயா?எனது சிற்பம் ஓரிடத்தில் நிற்காமல் ஓடவும் செய்கிறது.''என்றார்.தண்ணீர் சிறிது நேரத்தில் ஆவியாகி விட்டது.''இப்போது என் சிற்பம் பிரபஞ்சத்தில் கலந்து விட்டது.இதை விடப் பெரிய கலைப் படைப்பு என்ன இருக்கிறது?''என்று கேட்டார்.சித்திரக்காரன் மமதை அழிந்து மடாலயத்தில் சீடனாய்ச் சேர்ந்து விட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முதியவர்களுக்காக

இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
                   செய்..
பிறர் தம் வலியும்  வருத்தமும் கேட்கும் கரிசனம் கொஞ்சம் வளரச் செய்.
வெறுமையை பொறுமையாய் ஏற்கச்செய்.
உதடுகள் இருக்க மூடச்செய்.இல்லையெனில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்
                  என் காயங்களையும் வலிகளையும் பிறரிடம் பகிரும் இன்பம்
                  தேடும் என் மனம்.
இத்தனை ஆண்டுகளாக நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்த
                  வாழ்க்கைப் பாடத்தை இப்போதேனும் சரியாகப் புரியச்செய்.
இனிமையாக என்னை இருக்கச்செய்.
நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாலேயே மற்றவர்களை விட அறிவாளி என
                  என்னும் அகந்தை ஓடச்செய்.
சமீபத்தில் நடந்த மாற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை
                  பெருகச்செய்.
உனக்குத் தெரியும் என்று என் முடிவு என...அதுவரை
ஓரிரு நண்பர்களையாவது உலகில் எனக்காக இருக்கச்செய்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சலிப்பு தீர

சலிப்பிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் வெளிவர மிக எளிய வாழ்வியல் முறை,வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதுதான்.
சாப்பிடும் போது ஒரு ரசகுல்லாவின்  சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்.இரண்டு மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை சாப்பிடுவதும் ஒரே ஒரு ரசகுல்லாவை முழு சுவையும் வாயிலே கரைந்து போகும் அளவிற்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே.
சுவையின் உச்சத்தை ஒரே ஒரு முறை ருசித்து விட்டால் ஒருரசகுல்லா போதும்.திருப்தி  கிடைத்துவிடும்.சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால்  பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது.சலிப்பும் கஷ்டமுமே மிஞ்சும்.
நீங்கள் அனுபவத்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும்  நிதானித்து அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.அப்போது 'இன்னும் கொஞ்சம்'என்று தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது.சலிப்பு நெருங்கவே நெருங்காது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாடிக்கையாக

பால் ஷெம்என்பவர் ஒரு சிற்றூரில் ராபியாக (யூத மத போதகர்) இருந்தார்.கிராமத்தில் ஏதாவது துயரம் நேரும்போதெல்லாம் அவர் காட்டுக்குள் போய் ஒரு மரத்தின் அடியில் குறிப்பிட்ட சடங்கைச் செய்து விட்டு பின் கடவுளிடம் வேண்டுவார்.அத்துன்பம் உடனே அவ்வூரை விட்டு அகன்று விடும்.இது வாடிக்கையாக நடந்து வந்தது.
ஒரு நாள் பால் ஷெம் இறந்து விட்டார்.மீண்டும் கிராமத்தில் ஒரு துன்பம் வந்தது.புது ராபிக்குக் கலக்கம் ஏற்பட்டது.அவருக்கு குறிப்பிட்ட அந்த மரமும் இடமும் தெரியாது.இருந்தாலும் காட்டிற்குள் சென்று ஏதோ ஒரு மரத்தடியில் நெருப்பை மூட்டி  சடங்கை செய்து விட்டுக் கடவுளை வேண்டினார்,''என் குரு  வழக்கமாக வந்த இடம் எனக்குத் தெரியாது.ஆனால் உனக்குத் தெரியும்.எனவே சரியான இடத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.என் ஊர் துன்பத்தில் உள்ளது.ஏதாவது பார்த்துச்செய்யும்,''
துன்பம்  போய் விட்டது.இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது.
பின் இந்த ராபியும் ஒரு நாள் இறந்தார்.ஊரில் மறுபடியும் ஒரு துன்பம் வந்தது.புதிய ராபிக்கு நிம்மதி இல்லை.அவருக்கு இடமும்
தெரியாது.வேண்டுதலும்  என்னவெனத்   தெரியாது.சடங்குத் தீயை எப்படி மூட்டுவது என்பதும் தெரியாது.ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நெருப்பு  மூட்டிக்  கடவுளிடம் சொன்னார்,''எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் அனைத்து அறிந்தவர் நீர்.உமக்கு அவை ஏற்கனவே தெரியும்.எனவே எனக்குத் தெரிய வேண்டியதில்லை.தேவையானதைச் செய்யும்,''அவர் கிராமத்திற்குத் திரும்பி வந்த போது கிராமம் துன்பத்திலிருந்து மீண்டது.
பின் அவரும் இறந்தார்.அப்போது கிராமம் ஒரு துன்பத்தில் சிக்கியது.ஊர் மக்கள் புது ராபியிடம் வந்தார்கள்.அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.அவர் கடவுளிடம் சொன்னார்,''நான் எங்கும் போக விரும்பவில்லை.கடவுளே,நீர் எல்லா இடத்திலும் இருக்கிறீர்.எனக்கு எந்த வேண்டுதலும் தெரியாது.எந்த சடங்கும் தெரியாது.அதனால் என்ன?எனக்குத் தெரிந்திருக்கிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை.உமக்கு எல்லாம் தெரியும்.இனி நீர் செய்ய வேண்டியதை செய்யும்.''உடனே பேரிடர் நீங்கியது. இந்தக் கதையை கடவுள் மிகவும் ரசித்தார் என்று சொல்லப்படுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விளையாட்டா?

மதுக் கடையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார் முல்லா.அவர் ஒரு கோழை.ஆனால் மது அவருக்கு துணிச்சலைத் தந்தது.அப்போது அங்கு கொலைகாரன் போல் தோற்றமளித்த ஒருவன்  வந்தான்.சுய நினைவில் இருந்தால் முல்லா அஞ்சி ஓடியிருப்பார்.ஆனால் மதுவின் துணையால் அவருக்கு அறவே அச்சம் இல்லை.அஞ்சாது அவர் அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த முரடன் அவர் காலின் மேல் ஓங்கி மிதித்தான்.முல்லாவுக்குக் கோபம் வந்தது.வெகுண்டெழுந்து கேட்டார்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்?இது வேண்டுமென்றா அல்லது வேடிக்கைகாகவா?''முரடன் ஓங்கி மிதித்ததில் முல்லாவுக்கு போதை இறங்கி விட்டது.சுய நினைவுக்கு வந்து விட்டார்.அந்த இடைவெளிக்குள் முரடனைககேள்விகேட்டுவிட்டார்.அந்தஆள்சொன்னான்,'காரியமாத்தாண்டா,'
முல்லா சொன்னார்,''அப்படிஎன்றால் உங்களுக்கு நன்றி.காரியாமாகத்தான் என்றால் சரி.ஏனெனில் எனக்கு இந்த விளையாட்டெல்லாம் பிடிக்காது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்டனை ஏன்?

ஒரு முனிவர் ஒரு அரசனிடம்மரணத்தை வெல்லும்  அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார்.அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான்.கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.''இறவாக்கனியை உண்டஎன்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது.''என்றான் காவலாளி.'தவறு செய்தவனுக்குத் தண்டனை என்பதை யாராலும் மாற்ற முடியாது.இது சாதாரண பழம்.எப்படி உன் உயிரைக் காக்கும்?' என்று அரசன் கேட்டான்.''சாதாரணமான பழம் என்றால் அதைத் தின்ற எனக்கு நீங்கள் ஏன் மரண தண்டனை அளிக்க வேண்டும்?''என்று காவலாளி வினவினான்.அவனது புத்திக் கூர்மை அரசனை வியக்க வைத்தது.அவனைத் தன மந்திரியாக்கிக் கொண்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தன்னம்பிக்கை

சுவாமி விவேகானந்தர் தன் சீடருடன் ஒரு கோச் வண்டியில் பாரீசில் சென்று கொண்டிருந்தார்.ஒரு இடத்தில் கோச் ஓட்டியவர் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு எதிரே இருந்த வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை அரவணைத்து முத்தம் கொடுத்துப் பின்னர் வந்து வண்டியை இயக்க ஆரம்பித்தார்.சீடர் அக்குழந்தைகள் யாரெனக் கேட்க அவை தன் குழந்தைகள் தாம் என்றார்.அக்குழந்தைகள் மிகவும் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தென் பட்டது பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''நான் இந்த நாட்டிலுள்ள ஒரு பெரிய வங்கியின் சொந்தக் காரன்.வங்கி சமீபத்தில் நொடித்து விட்டது.இருந்த கொஞ்சம் பணத்தில் ஒரு சிறு வீடு வாங்கினேன். யாருக்கும் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை.நானும் என் மனைவியும் உழைப்போம்.என்றாவது ஒரு நாள் எங்கள் வங்கியை மீட்போம்.''விவேகானந்தர் சொன்னார்,'இவர் தான் உண்மையான ஞானி;வேதாந்தி.பெரிய வேதாந்தங்கள் சொல்வதை செயல் படுத்துபவர்.இவரிடம் தான் எவ்வளவு தன்னம்பிக்கை?'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மோகம்

ஜவஹர்லால் நேரு ஒரு நாள் வெளி நாட்டு சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தார்.ஒருவர் கேட்டார்,''வெளி நாட்டுத் துணிகளை தீ வைத்துக் கொளுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் மட்டும் வெளி நாட்டு சிகரெட் மீது மோகம் கொண்டுள்ளீர்களே?''
'நானும் வெளி நாட்டு சிகரெட்டை எரித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.'என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினார் நேரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விலங்குகள்

மனிதனுக்கு ஆறறிவு.விலங்குகளுக்குஐந்தறிவு.எனினும் விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அச்சமின்மை:
விலங்குகள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் தருணங்கள் தவிர வேறு எப்போதும் அச்சப்படுவதில்லை.மனிதன் அச்சப்படாத விசயமே இல்லை.ஒரு சிங்கம் ஒரு மான் கூட்டத்தில் பாய்ந்தால் அவை ஒன்றொன்றும் ஒவ்வொரு திசையில் ஓடும்.ஆனால் சிங்கம் ஒரு மானைப் பிடித்து விட்டால் அடுத்த மானைப் பிடிக்காது.அதனால் மற்ற மான்கள் அதன் பின் அச்சமின்றி நடமாடும்.
தோல்வி கண்டு அஞ்சாமை :
ஒரு பூனை ஒரு  எலியைப் பிடிக்கத் துரத்துகிறது.எலி தப்பி விடுகிறது.பூனை இதைத் தோல்வியாகக் கருதித் துவள்வதில்லை.அது,அடுத்த எலி கிடைக்குமா என்று,சாதாரணமாகத் தேட ஆரம்பித்து விடுகிறது.மனிதன் ஒரு தோல்வி அடைந்தாலே வேதனைப் படுகிறான்;முடங்கி விடுகிறான்.
குழந்தைகளை முறைப்படி வளர்த்தல்:
விலங்குகள் குட்டிகளுக்கு இரை தேடி கொடுக்கின்றன.நடக்கக் கற்றுக் கொடுத்து,ஓடக் கற்றுக் கொடுத்து,பின் அவற்றை சுதந்திரமாக விடுகின்றன.மனிதனோ,மகன்,பேரன் என்று எல்லோரையும் சுமந்து அவர்களை முறையாக வளர்க்காமல் ,அவர்களை சுதந்திரமாய் வாழவும் விடுவதில்லை.
எதிர்  காலம் பற்றி அஞ்சாமை:
ஞானிகள் கூறுவது போல் நிகழ காலத்தில் வாழ்வது விலங்குகள் தான்.அவை நாளைய தினம் பற்றிக் கவலைப் படுவதில்லை.மனிதன் தான்,நாளை என்னவாகும்,வருங்காலம் எப்படி இருக்கும் என்று கவலைப் பட்டு இன்றைய மகிழ்வை இழக்கின்றான்.
வாழு,வாழவிடு:
மிருகங்கள்,தான் நன்றாக வாழ்வதுடன் தன இனத்தையும் நன்கு வாழ விடும்.மிருகங்கள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை,தன இனத்தில் யாரையும் கொலை செய்வதும் இல்லை.மனிதன் தானும் வாழமாட்டான்;மற்றவரையும் வாழ விட மாட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெண்ணின் பெருமை

இயந்திரக் கோளாறில்  சிக்கிய ஹெலிகாப்டரிலிருந்து கயிற்றில் பதினோரு பேர் தொங்கினர்.பத்து ஆண்கள்;ஒரு பெண்.அத்தனை போரையும் கயிறுதாங்காது;யாராவது ஒருவர் கையை விட்டு கீழே விழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.யார் அந்த ஒருவர் என்பது தான் பிரச்சினை.விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பெண் பேசத் துவங்கினாள்,''நான் கயிற்றிலிருந்து குதிக்கப் போகிறேன்.பெண்ணின் பிறப்பே தியாகத்தில் தான் முழுமைபெறுகிறது.கணவனுக்காக,குழந்தைகளுக்காக,...ஏன்?மற்றவர்களுக்காக விட்டுத் தருபவளே பெண்.பலனை எதிர் பாராமல் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே பெண்ணின் பெருமை.''
பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை அந்த பத்துப் பேரிடமிருந்தும் கேட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வறுமை

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே.யைச் சந்திக்க ஒருவர் வந்தார்.''ஐயா, மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய் கொடுங்கள்.நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன்.''என்றார்.'அப்படியா சரி.இப்போதே வாசி,'என்றார் என.எஸ்.கே.வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார்.வாசிப்பில் சுருதி,தாளம்,ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை.
இசையைக் கேட்டுக் கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லி விட்டு நூறு ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து,'நீங்கள் நாதஸ்வரம் வாசிக்கவில்லை.உங்களது வறுமையைத் தான் வாசித்தீர்கள்.நன்றாகக் கற்றுக் கொண்டு பிறகு வந்து வாசியுங்கள்.இப்போது சாப்பிட்டு விட்டுப் போங்கள்.'என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யார் செய்தது?

உலகப் போரில் ஹிட்லர் செய்த அட்டூழியங்களை எல்லாம் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார் பிகாசோ.இதைக் கேள்விப்பட்டு அவற்றைப் பறிமுதல் செய்த ஹிட்லர்,''இதெல்லாம் நீ செய்ததா?''என்று ஓவியங்களைக் காட்டிக் கேட்டார்.'இல்லையில்லை,இதெல்லாம் நீங்கள் செய்ததுதான்.'என்றார் பிகாசோ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்ணீர்

தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார்,
''இதுவே மேலும் குளிர்ந்தால்...?''
'பனிக்கட்டி'என்றான் சீடன்.
''கொதித்தால்...?''
'நீராவி'
ஞானி சொன்னார்,
''மனிதனும் குளிரும் போது திடமாகிறான்.
கொதிக்கும் போது ஆவியாகிறான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன் மொழிகள் -5

எல்லாம் வேடிக்கை தான்!நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை.
*********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
*********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது
பலவீனமான கொள்கையின் அறிகுறி.
*********
சுண்டெலி பூனையைப் பார்த்து சிரித்தால்
பக்கத்திலே அதற்கு ஒரு வளை இருக்கிறது என்று பொருள்.
*********
காசு வாங்காமல்,எதுவும் உனக்குக் கிடைத்தால்
அதற்கு உண்டான விலை இன்னமும்
வசூலிக்கப் படவில்லை என்பது தான் பொருள்.
********
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நம்மைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில்,நாம் குழந்தைகளாக இருந்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் பெரியவர்களாக இருந்ததில்லை.
********
வாழ்க்கையில் பயம் இருக்கலாம்.ஆனால்
பயமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது.
********
படுக்கைக்கு செல்லும் முன் செருப்புக்களோடு உன்
மனக் கவலைகளையும் வீட்டுக்கு வெளியே ஏறி.
********
இளமையாக இருக்கிறீர்களே என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால்,உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
********
''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்றுகேட்பார்கள்.ஆனால்
புகழ்ந்து பேசுவதைத்தான் விரும்புவார்கள்.
********
பணம் என்பது ஆறாவது  அறிவு .       
அது இல்லாவிடில் ஐந்தறிவும்வீண்தான்.
********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையே
உள்ள இடைவெளி.
********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான்
எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலை தான் கொல்லும்
********
பொறாமையை நீ துணைக்கு அழைத்தால் முதலில்
அது உன் எதிரியை நெஞ்சில்  அடிக்கும்.
பின் உன்னையே வயிற்றில் அடிக்கும்.
********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
********
மனிதர்கள் மோசமானவர்கள்.அபாயம் நீங்கியவுடன்
அவர்கள் ஆண்டவனை உடனடியாக மறந்து விடுகிறார்கள்.
********
சிறிது காலமே வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி அழகு.
********
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொது அழுபவன் தெம்பற்றவன்.
அழுகையிலிருந்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவன் நெஞ்சுரமுள்ளவன்.
********
 ஆனால் என்ற வெறுக்கத்தக்க சொல் வந்து விட்டால்
முன்னால் சொன்னது  எல்லாம் வீணாகிவிடும்.அதைவிட
இல்லை என்று மறுப்பதோ,அவமானப்படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்கு பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன;முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குறுக்கீடு

ஒரு பட்டாம் பூச்சி ,தன்  கூட்டிலிருந்து  வெளியே  வர  சற்றே  சிரமப்பட்டுக்  கொண்டிருந்தது .அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் ,அது விரைவில் வெளியே வர உதவி செய்ய நினைத்தார்.உடனே அந்தக்  கூட்டின்  மீது  வேகமாக  ஊதினார்.அதனால் கூடு லேசாக உடைந்து அப்பூச்சி வெளியே இலகுவாக வந்தது.ஆனால் என்ன பரிதாபம்!அது முழுமையான பட்டாம் பூச்சியாக இல்லை.
அடுத்தவர் முன்னேற்றத்தில் குறுக்கிட்டு நீங்கள் விரைவு படுத்த முடியாது.நீங்கள் செய்யும் பேருதவி குறுக்கீட்டைத் தவிர்ப்பது தான்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பண்டிதர்கள்

ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார்.ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து பேசினார்.ஆனால் கூட இருந்த பண்டிதரோ மற்றவரை ஒரு கழுதை என்றார்.பின் முகம் கழுவப் போனவர் வந்ததும் இவர் முகம் கழுவச் சென்றார். இரண்டாமவரைப் பற்றி முதல்வரிடம் பெருமையாகப் பேச 'அவர் ஒன்றும் தெரியாத மாடு,''என்றார்.பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு அருந்த அமர்ந்தனர்.ஒருவர் தட்டில் புல்லும்,மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப் பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர்.தங்களை அவமானப் படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர்.செல்வந்தர் சொன்னார்,''நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள்என்று கருதித் தான் விருந்துக்கு அழைத்தேன்.ஆனால் நீங்கள் யாரென்று உங்கள் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன்.என் மீது ஏன்வீணாய்க் கோபப் படுகிறீர்கள்?''பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அனுபவம்

அனுபவங்கள் வழி காட்ட வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது.அனுபவம் சிறந்த பள்ளி.ஆனால் ஒருவன் அதில் தானே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அறுபது வயதில் ஒருவர் புரிந்து கொண்ட தத்துவங்களை முப்பது வயதுள்ள ஒருவருக்கு ஏன்புரிய வைக்கமுயற்சி செய்ய வேண்டும்?கரையில் நின்று கொண்டு மற்றவர் நீச்சல் அடிப்பதைப் பார்த்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?தண்ணீரில் குதித்து கையைக் காலை அசைத்துத் தானே நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்?பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது  தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

புரிதல்

அநாதை விடுதியில் ஒரு பிச்சைக்காரி அழுது கொண்டிருந்தாள்.''ஏன் அழுகிறாய்?''என்று அங்கே இருந்த பார்வையற்ற மூன்று பெண்கள் கேட்டனர்.
'என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன்.திடீரென இறந்து விட்டது.'என்றாள் பிச்சைக்காரி.''பால் எப்படியிருக்கும்?''எனக் கேட்டாள் ஒரு பார்வையற்ற பெண்.'வெள்ளையாக  இருக்கும்,'என்றார் அங்கிருந்த ஒருவர்.வெள்ளை எப்படி இருக்கும் என அடுத்த பார்வையற்ற பெண் கேட்டாள்.கொக்கு மாதிரி இருக்குமென இன்னொருவர் சொன்னார்.கொக்கு எப்படி இருக்குமென  மூன்றாவது பார்வையற்ற பெண் கேட்டாள்.உடனே ஒரு கொக்கைப் பிடித்து கொண்டு வந்து அந்தப் பெண்களின் கைகளில் கொடுத்தார்கள்.அதைத் தொட்டுப் பார்த்தஅந்த பார்வையற்ற பெண்கள் ''இவ்வளவு பெரிய ஒரு பொருளை குழந்தையின் வாயில் திணித்தால் குழந்தை சாகாமல் என்ன செய்யும்?''
இதைப் போலத் தான் பல சமயங்களில்  பல விசயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம் கருத்துக்களை அள்ளி வீசுகிறோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நினைப்பு

நான் இருபது வயது வாலிபனாகும் வரை அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப் பட்டதில்லை.
அதற்குப்பின் என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட  ஆரம்பித்தேன்.
அறுபது வயதாகிய போது தான் அவர்கள் யாருமே என்னைப்பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திருட்டு

கடைத் தெருவுக்கு தன் புது சைக்கிளுடன் வந்த ஒருவர்,தன சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு சைக்கிளைப் பற்றிய நினைவே இல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.அந்த சைக்கிளுக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லை.
மறுநாள் காலை திடீரென அவருக்கு சைக்கிள் ஞாபகம் வந்தது.கடைத்தெருவுக்கு ஓடோடிச் சென்றார்.சைக்கிள் நிச்சயம் திருடு போயிருக்கும் என்று நினைத்தார்.என்ன ஆச்சரியம்!சைக்கிள் அவர் விட்டுச் சென்ற இடத்திலே பத்திரமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்ல விரைந்தார்.இறைவனை வழிபட்டு வெளியே வந்து பார்த்தால் சைக்கிள் திருட்டு  போயிருந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொடாக்கண்டன்

கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.அவனிடம் கஞ்சனின் மனைவி,''இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,''எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,'அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.'என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.
ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.இப்போது கஞ்சன் வெளியே வந்து,''இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,''என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,''இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?''என்று கேட்க கஞ்சன் சொன்னான்,''நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீ பாதி நான் பாதி

பக்த துக்காராமின் குடும்பம் மிக வறுமையில் வாடியது.ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லை.அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி,சந்தையில் விற்று வரும்படி சொன்னார்.துக்காராமோ சந்தைக்கு செல்லும் வழியிலேயே யார் யார் எல்லாம் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கரும்பை இனாமாகக் கொடுத்து விட்டு ஒரே ஒரு கரும்புடன் வீடு திரும்பினார்.
அதைக் கண்டு அவர் மனைவிக்குக் கடும் கோபம் வந்தது.அவர் அந்தக் கரும்பை பிடுங்கி அவரை ஒரு அடி அடித்தார்.கரும்பு இரண்டாக உடைந்து விட்டது.உடனே துக்காராம் சொன்னார்,''நல்லதாய்ப் போயிற்று.எனக்கு ஒரு பாதி;உனக்கு ஒரு பாதி.சாப்பிடலாம் வா.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முருகா!

தின்றே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரியவர் சாகும் தருவாயில் இருந்தார்.அவர் எந்த கோவிலுக்கும் போனதில்லை.சாகும் நிலையில் மெதுவாக உதட்டை அசைத்து,''மு.........''என்றார்.உறவினர்களுக்கு மகிழ்ச்சி.'அப்படித்தான், முருகன் பெயரைச் சொல்லுங்கள்.'என்றனர்.பெரியவர் கொஞ்சம் சத்தமாக ,''முருக .....''என்றார்.''சபாஷ்,மூன்று எழுத்து வந்து விட்டது.இன்னும் ஒரே எழுத்து தான்,சொல்லுங்கள்.''என்றனர் உறவினர்கள்.பரபரப்புடன் பெரியவர் தன பலம் முழுவதையும் திரட்டி,''முருகமுருக ஒரு தோசை வேண்டும்,''என்றார்.உறவினர்கள் முகத்தில் அசடு வழிந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முறையீடு

ஒரு புலவர் வறுமையில் வாடியதால் பல இடங்களுக்கும் அலைந்து ஒன்றும் கிடைக்காமல் இல்லம் திரும்புகையில் வழியில் ஒரு சிவன் கோவிலைக் கண்டு ஆண்டவனிடம் முறையிடலாம் என்று உள்ளே சென்றார்.அங்கு கோவிலின் சுவற்றில் திருவிளையாடல் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.ஒரு சித்திரம் சிவலிங்கத்தை ஒரு வேடன் காலால் உதைக்கும் ஓவியம்.அடுத்து வேடன் உருவிலிருந்த சிவனை அர்ச்சுனன் அம்பினால் எரியும் காட்சி.அடுத்து பிட்டுக்கு மண் சுமந்த சிவன் பாண்டியனிடம் பிரம்படி வாங்கும் காட்சி.புலவர் சிரித்துக்கொண்டே தனக்குத்தானே பாடினார்,
''வஞ்சகர்பால் நடந்தலைந்த காலால் புண்ணும் 
வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
தீருமென்று சங்கரன் பால் வந்தேனப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும்,வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்,கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பாரென்று காட்டி நின்றான் பரமன் தானே!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ராசி

இந்திய மகாராஜா ஒருவருக்கு ஒரு பெரிய வைரக் கம்பெனி ஒரு பெரிய வைரக்கல்லை விற்க முன் வந்தது.மகாராஜாவுக்கு அது பிடித்து விட்டதால் எவ்வளவு விலையானாலும் வாங்க சம்மதித்து விட்டார்.மகாராஜா மேலும் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி விற்க வந்தவர் சொன்னார்,''இது சாதாரணமான கல் அல்ல.இது பதினாறாம் லூயி மன்னர் அணிந்திருந்ததாக்கும்.,''உடனே மகாராஜா வைரக்கல் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.காரணம் கேட்ட போது காரியதரிசி விளக்கினார்,''பதினாறாம் லூயி பிரெஞ்சுப் புரட்சியின் போது சிரச் சேதம் செய்யப்பட்டு இறந்தவர்.அதனால் இது ராசியில்லாத கல்.''
தேவைக்கு அதிகம் பேசினாலும் சிக்கல் தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திருட்டு

வாரச் சந்தையில் மலிவான விலையில் கழுதை விற்பது முல்லாவின் வழக்கம்.அந்த ஊர்ப் பணக்காரருக்கு முல்லா எப்படி குறைவான விலையில் விற்கிறார் என்பது புரியவில்லை.எனவே அவரிடம் கேட்டார்,''எனக்கோ கழுதை வளர்க்க செலவேதுமில்லை.கழுதைகளைக் கவனிக்க அடிமைகள் இருக்கிறார்கள்.என் விவசாயிகள் கழுதைகளுக்கு உணவைக் கொடுத்து விடுகிறார்கள்.இருந்தும் என்னால் உன் அளவிற்கு என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடியவில்லையே,''முல்லா சொன்னார்,'நீங்கள் உங்கள் கழுதைகளை வளர்ப்பதற்கான உணவையும் உழைப்பையும் திருடுகிறீர்கள்.நானோ கழுதை களையே திருடி விடுகிறேன்.அவ்வளவுதான்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இரு கோடுகள்

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர்.அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்.ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார்,''இதோ பாருங்கள்,இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது?வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான்.பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்,''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆட்டுக்கு இருபது கால்

''கொம்பிலிருக்கும் குரங்குக்கோர் வாலிரண்டு;
கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு-செம்பமலைக்
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டுக்கு இருபது கால்.''
தப்பும் தவறுமாய் இருக்கும் இது ஒரு பாட்டா எனக் கேட்கிறீர்களா? சரியான பதில் தெரிய பதம் பிரித்து குறியீடு போட்டு கீழே உள்ளது போல் எழுத வேண்டும்.
''கொம்பிலிருக்கும் குரங்குக்கு ஓர் வால்;
இரண்டு கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு;
செம்பமலைக் காட்டில் திரியும் கரடிக்கோர் வாய்;
ஐந்து ஆட்டுக்கு இருபது கால்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் -4

தனக்குத் தெரிந்த விசயங்களை மட்டும் மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும்.
                                                     *********
உண்மை கனமானது.எனவே தான் அதை சுமப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.
                                                   *********
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.
                                                  **********
மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
மட்டமான மனிதர்கள்  தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
                                                 *********
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
                                                *********
நல்ல யோசனை எது ,கேட்ட யோசனை எது என்ற வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமானால்.........
உங்களுக்கு எந்த யோசனையுமே தேவையில்லை.
                                                ********
கஷ்ட காலம் வந்து விட்டால்,ஒட்டகத்தின் மீது இருந்தாலும் நாய் கடிக்கத்தான் செய்யும்.
                                                ********
உங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தால் உங்கள் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.
உங்கள் பிள்ளைகள் கெட்டவர்களாக இருந்தால் உங்கள் சொத்து அவர்களுக்குப் பயன்படாது.
                                              **********
உங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது என்றால்
தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
                                               *********
உங்களுக்கு எதை சாப்பிடப் பிடிக்குமோ,அதைசாப்பிடாமல்,
உங்களுக்கு எது நல்லதோ அதை நீங்கள் சாப்பிட ஆரம்பித்தால்
உங்களுக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம்.
                                              **********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சகிப்புத்தன்மை

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி  ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?
ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.
ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
                                                 -----தென்கச்சி சுவாமிநாதன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யாரை மாற்றுவது?

எனது இளம் வயதில் நான் ஒரு புரட்சியாளனாக இருந்தேன்.அந்த சமயத்தில்,''இறைவனே,இந்த உலகத்தை மாற்றுவதற்கு எனக்கு சக்தியைக் கொடு,''என்பதைத் தவிர வேறு எதையும் நான் பிரார்த்தனை செய்ததில்லை.
ஒரே ஒருவரைக்  கூட மாற்ற முடியாமல் எனது வாழ்க்கையின் பாதி காலம் முடிந்து விட்டதை எனது நடு வயதை எட்டிய சமயத்தில் உணர்ந்தேன்.அதனால் எனது பிரார்த்தனையை மாற்றிக் கொண்டேன்.
''இறைவா,என்னிடம் தொடர்பு கொள்பவர்களை எல்லாம் நான் மாற்றுவதற்கு  எனக்கு அருள் புரி.''
இப்போதோ எனக்கு வயதாகி விட்டது.என் நாட்கள் எண்ணப்படுகின்றன.என்னால் யாரையும் மாற்ற முடியவில்லை.இப்போதெல்லாம்,''இறைவா,என்னை நானே மாற்றி கொள்வதற்கு அருள்வாயாக!''என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.ஆரம்பத்திலிருந்தே நான் இப்படிப் பிரார்த்தனை செய்திருந்தால் என் வாழ்க்கையை வீணடித்திருக்க மாட்டேன்.
நான் மாறும்போது உலகம் மாறுகிறது.
                                            ---------சூபி ஞானி பயாஜித்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தவறுகள்

ஒரு பெரியவர் வீட்டில் ஒரு உண்டியல் வைத்திருந்தார்.வீட்டில் யார் தவறு செய்தாலும் அதில் அபராதமாக ஒரு ரூபாய் போட வேண்டும்.பிறகு சேர்ந்த பணத்தை அவ்வப்போது பக்கத்தில் உள்ள கோவிலுக்குக் கொடுத்து விடுவார்.ஒரு சமயம் அவர் இரண்டு மாதம் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.திரும்ப வந்து உண்டியலைப் பார்த்ததில் ஒரு ரூபாய் தான் இருந்தது.அவருக்கு மகிழ்ச்சி.''தேவலையே,இந்த இரண்டு மாதங்களில் ஒரே ஒரு தவறு தான் செய்திருக்கிறீர்கள் போலிருக்கே ,''என்றார்.
மகன்  சொன்னான்,'' இல்லையப்பா,அதில் இருநூறு ரூபாய் சேர்ந்திருந்தது.அதை நான் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்.''என்றான்.
''அது தவறு இல்லையா?''என்று கேட்டார் அப்பா.
'அந்தத் தவறுக்குத்தான்அதில்  ஒரு ரூபாய் போட்டேன்.அதில் இருப்பது நான் போட்ட ஒரு ரூபாய் தான்.'என்றான் பையன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாவ காரியம்

பாவ காரியத்தில் ஈடுபடுவது என்பது, அப்படி ஈடுபட ஆசைப்படுவதையும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையும் விட மோசமானது அல்ல.ஒரு  கண நேர சந்தோசத்திற்காக உடல் அதில் ஈடுபடுவது என்பது வேறு.ஆனால்,அதைப் பற்றி இடைவிடாது மனதாலும் இதயத்தாலும் அசை போட்டுக் கொண்டிருப்பது என்பது முற்றிலும் வேறான விஷயம்.
மற்றவர்களின் பாவங்களை நான் அசை போடும் போதெல்லாம்,அந்தப் பாவிக்கு அந்தப் பாவத்தினால்கிடைக்கும்  சந்தோசத்தை விட  அதை அசை போடும் எனக்கு அதிக சந்தோசம் கிடைக்கிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
                                                  -----அரேபிய சித்தர் அபு ஹசன் புஷன்ஜா

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சரியான உதாரணம்

ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக  உழைத்து  விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான்.இது இந்த நிலையில் எப்படி உயிர் வாழ்கிறது என ஆச்சரியப்பட்டான்.அப்போது ஒரு புலி ஒரு மானை அடித்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்தது.விறகுவெட்டி பயந்து மரத்திலேறி நடந்ததைக் கவனித்தான்.புலி மானை உண்டு சென்ற பின் அது விட்டுச் சென்ற மிச்சத்தை நரி தவழ்ந்து சென்று உண்டது.''இரண்டு கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவு வழங்கும் போதுநமக்கு உணவு கொடுக்க மாட்டாரா?''என்று எண்ணிய அவன் மறுநாள் முதல் விறகு  வெட்டச் செல்லாது வீட்டிலேயே சோம்பிக் கிடந்தான்.ஆனால் அவன் எதிர் பார்த்தது போல் உணவு கிடைக்க வில்லை.காரணம் கேட்டு இறைவனை வணங்கி வேண்டினான்.இறைவன் கூறினான்,'நீ நரியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.புலியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.'

இப்படித்தான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நமக்கு சாதகமான விசயங்களை மட்டும் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்பது நல்லது

''புல்லைத்தின்றால் கண் நன்றாகத் தெரியும்.''
'எப்படிச் சொல்கிறாய்?'
''பாரேன்,எந்த மாடாவது கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கா?''
                                      ********
ஒரு நேர்முக சோதனையில்:
தேர்வர்:இரண்டும் இரண்டும்எவளவு?
முதல்வர்:நான்கு,சார்.
தேர்வர்:சரி நீங்கள் போகலாம் .(அடுத்தவரிடம்)இரண்டும் இரண்டும் எவ்வளவு?
இரண்டாமவர்:நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது தான்.
இரண்டாமவருக்கு வேலை கிடைத்தது.
                                    **********

''என்ன பிரமாதமான பாடகர்!அவர் குரல் அரங்கை நிரப்பி விட்டதே!''
'ஆமாம்,அந்த குரலுக்கு  இடம் கொடுப்பதற்காக  நம்மில் பலர் அரங்கிலிருந்து வெளியில் வரும்படி ஆகி விட்டதே!'
                                       ***********
ஒருவன் தனது கழுதையின் மீது நிறைய சுமை ஏற்றிச் சென்று கொண்டிருந்தான்.கழுதை அங்கங்கே நின்று கொண்டது.அவன் அதை நன்கு அடித்தான்.அதைப் பார்த்த ஒருவர் ,''கழுதையை ஏனப்பா இப்படி அடிக்கிறாய்?என்று கேட்டார்.அவன் பதில் சொல்ல வில்லை.அவன் ஒவ்வொருமுறை அடிக்கும் போதும் ஒவ்வொருவராக அடிக்க வேண்டாம் என்றனர்.அவன் அவர்கள் முன்னாலேயே திடீரென மண்டியிட்டு,'என்னை நீ மன்னிக்க வேண்டும்.உனக்கு சிபாரிசு செய்ய உன் உறவினர் இத்தனை பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது.'என்று கழுதையிடம் சொன்னான்.
                                    *************
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக்  கடினமாக இருந்தது. இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.பைலட்டால்  நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச்  சொன்னார்.அந்த பைத்தியம் சொன்னார்,''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.அவ்வளவுதான்.''
                                             ************
ஒரு தந்தை தன ஐந்து பிள்ளைகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் பெயரை வைத்தார்.அவர்கள் போல் இவர்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவர் ஆசை.ஆண்டுகள் பல கழிந்தபின்,நண்பர் ஒருவர்,தந்தையின் ஆசை நிறைவேறியதா எனக்   கேட்டார். தந்தை சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியே நடந்து கொண்டனர்.'''அப்படியா,மகிழ்ச்சி'என்றார் நண்பர்.
தந்தை சொன்னார்,'ஆமாம் சொத்து பூராத்தையும் சூதாட்டத்திலேயே விட்டுட்டாங்க.'
                                       ************
ஒரு பெண்:என்னய்யா,போன தடவை நீ எடுத்த போட்டோவெல்லாம் அழகாய் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று உனக்கு?இப்போ எடுத்த போட்டோ சகிக்கலையே?
புகைப்படக்காரர்:உண்மை தான் அம்மா.போன தடவை நான் புகைப்படம் எடுத்த போதுஎனக்கு பதினைந்து வருடம் குறைவாக இருந்தது.இன்று எனக்கு வயதாகி விட்டது பாருங்கள்!அது தான் காரணம்.
                                       ***********
சேகரும் சோமுவும் காட்டிற்கு வேட்டையாடப் போனார்கள்.திடீரென பத்தடி தூரத்தில் ஒரு புலி!சேகர் ஓடுவதற்குத் தயாரானான்.''புலியை விட உன்னால் வேகமாக ஓட முடியும் என்று நம்புகிறாயா?என்று கேட்டான் சோமு.'அது அவசியமில்லை.உன்னைவிட வேகமாக ஓடினால் போதுமே!'என்றான்.
                                      *********
மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக் கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருந்தார்கள்,இல்லையா?இன்று அவர்கள் கொடுத்த பொருட்களையெல்லாம் அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து விட்டேன்.
கணவன்:பேஷ்,பேஷ்!
மனைவி:அதில் அம்மிக் குழவியும் ஒன்னு.
                                     ********
மாமியார்:ஏண்டி,மருமகளே!நீ வாங்கி வந்த கற்பூரத்தில் வாசனையே இல்லையே?
மருமகள்:கழுதைக்கு எப்படி மாமி கற்பூர வாசனை தெரியும்?
                                  *********

புதிதாக அமைச்சர் பதவி ஏற்றார் ஒருவர்.அவர் பயன்படுத்த ஒரு கார் அளிக்கப் பட்டிருந்தது.அவர் அந்தக் காரின் டிரைவரிடம்,''நீங்கள் சிறிது நேரம் ஓய்வுஎடுங்கள்.நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.''என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த டிரைவர்,'நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்.ஏனெனில் இது கார்.நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல.கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு.'என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சித்தாந்தம்

மனிதர்கள் இயல்பாலே கொடுமையானவர்கள் அல்லர்.மகிழ்ச்சியிலே இருக்கும் போதோ,ஒரு சித்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருக்கும் போதோ தான் அவர்கள் கொடூரமானவர்களாக மாறி விடுகிறார்கள்.
ஒரு சித்தாந்தத்திற்கு எதிராக இன்னொரு சித்தாந்தம் கிளம்புகிறது.ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு  மதம் போர் முரசு கொட்டுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே அழிந்து போவது மக்கள் தான்.
இயேசுநாதரை சிலுவையில் அறைந்தவர்கள் பிரியமான கணவராகவும்,அன்பான அப்பாக்களாகவும் தான் இருந்திருப்பார்கள்.ஒரு மதத்தை அல்லது ஒரு சித்தாந்தத்தை காப்பாற்றுவதற்காகத்தான் இவர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள்.
தத்தம் மதங்களின் தர்க்க நியாயங்கள் சொல்வதைவிட தங்கள் இதயம் சொல்வதை சமயவாதிகள் பின்பற்றி இருந்தால்,மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை உயிரோடு கொல்லும் கொடூரக் காட்சிகளைப் பார்க்க நேரிட்டிருக்காது.பெண்கள் உடன்கட்டை ஏறி எரிந்து சாம்பலானதையும்,கடவுளின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களில் அப்பாவி மக்கள் கொலை செயப்பட்டதையும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.
பரிவு காட்டுவதற்கு எந்த சித்தாந்தமும் தேவையில்லை.
                                                     --------அந்தோணி  டி மெல்லோ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கடவுளின் கேள்வி

கடவுள்நம்மிடம் கேட்கிறார்:
''நான் இங்கே உன்னுடன் இருக்கிறேன்.ஆனால் நீயோ உன் தலைக்குள் என்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்.உன் நாக்கால் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாய்.உன்னுடைய புத்தகங்களில் என்னைத் தேடிக் கொண்டே இருக்கிறாய்.இவை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு என்னை எப்போது நீ காணப் போகிறாய்?
                                            -----------அந்தோணி டி மெல்லோ எழுதிய பறவையின் கீதம் என்ற புத்தகத்திலிருந்து 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொறுக்கி

பாரதிதாசன் விழா ஒன்றில் அமைச்சர் ஒருவருடன் பங்கு கொண்டார்.அவர் பேசும் பொது,''இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் சரியான பொறுக்கி...''என்று தொடங்கி,அப்படியே நிறுத்திவிட்டு சோடா பருக ஆரம்பித்தார்.மேடையில் இருந்த அமைச்சருக்கோ தர்ம சங்கடம்.அசடு வழிய நெளிந்தார்.கூட்டத்திலோ மெல்லிய சலசலப்பு. கவிஞர் சோடா பருகி முடித்ததும் தொடர்ந்தார்,''..............
எடுத்த ரத்தினங்கள்.''கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இது ரசிக்க

புலவர் ஒருவர் அரசனுடன் விருந்துண்டார்.அப்போது அங்கு அரசி வந்தார்.புலவர்,''தங்கச்சி வந்தியா?''என்று கேட்டார்.புலவர் அரசியை உறவு முறை கொண்டாடுவது அரசனுக்குப் பிடிக்காதலால் புலவரை முறைத்தான்.அதைப் புரிந்து கொண்ட புலவர் உடனே,''உங்கள் தலையில் இருப்பது தங்கச் சிவந்தியா?என்று கேட்டேன்''என்றார் சமயோசிதமாக.
***********
ஒரு புலவர் தன நண்பனைக் காண அவரது இரும்புப் பட்டறைக்குச் சென்றார்.நண்பர் அவரைப் பார்த்து,''வாரும்,இரும்படியும்,''என்றார்.புலவரோ திடீரென இரும்படிக்கச் சொல்கிறாரே எனத் திகைத்தார்.நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் சொன்னது விளங்கவில்லையா?நீர் புலவர் அல்லவா?அதனால் வாரும்,இரும்,படியும் என்றேன்,''என்றார்.
***********
அரசர், புலவர் ஒருவருக்கு பணத்தைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தார்.புலவர் பணத்தை எடுத்துக் கொண்டு கேட்டார்,''பணத்தட்டு யாருக்கு?''பணத்தட்டு என்றால் பணம் இருந்த தட்டு என்றும் பண முடை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.தமக்கே பணமுடை என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்ற எண்ணத்திலரசன் ,'உமக்கே,'என்றாராம்.தட்டை உடனே எடுத்துக் கொண்ட புலவரின் சாமர்த்தியம் எப்படி?
************
புலவர்கள் கூட்டத்திற்கு கடைசியாகத் தாமதமாகக் கடைமடை என்ற ஊரிலிருந்து ஒரு புலவர் வந்தார்.மடாதிபதி அவரை,''வாரும்,கடைமடையரே!''என்று வரவேற்றார்.புலவர் உடனே,'வணக்கம்,மடத்தலைவரே!'என்று பதிலுரைத்தார்.
************
முந்தைய தினம் சுட்ட உளுந்த வடையை கணவனிடம் மனைவி கொடுத்தாள்.கணவன் அதைக் கையில் எடுத்தான்,புட்டான்,இழுத்தான்,திரும்ப ஒட்டினான்,மனைவியிடம் கொடுத்தான்.மனைவி,''என்னங்க,வடை ஊசி இருக்கா?''என்று கேட்டாள்.கணவன்,'ஊசி மட்டும் இல்லை,நூலும் இருக்கு தையலுக்கு உதவுமே என்று தான் திரும்பக் கொடுத்தேன்,'என்றான்.ஊசியும் நூலும் தையலுக்கு உதவும் தானே.தையல் என்றால் பெண் என்ற பொருளும் உண்டு.
************
ஒரு புலவர் சாகக் கிடந்தார்.வைத்தியர்,'இனி அவர் பிழைக்க மாட்டார். பாலைத்துணியில் நனைத்து துளித் துளியாக வாயில் விடுங்கள்,'என்றார்.
அதேபோல் புலவரின் பெண்ணும் கொடுத்தார்.புலவர் முகத்தைச் சுளித்தார்.
''அப்பா,பால் கசக்கிறதா?''என்று மகள் கேட்டார்.புலவர் சிரித்துக்கொண்டே சொன்னார்,'மகளே,பாலும் கசக்கவில்லை,துணியும் கசக்கவில்லை.'துணி கசக்காதலால் (துவைக்காதலால்)அவ்வளவு அழுக்கு!
*************
ஒருவன் நண்பனிடம்,'ஏனப்பா,நானூறு ரூபாய் தருகிறேன் என்றாய்.பின் முன்னூறு தருகிறேன் என்றாய்.அதன் பின் இருநூறு தருகிறேன் என்றாய்.ஆனால் இப்போதோ,வெறும் நூறு ரூபாய் தருகிறாயே,'என்றான்.
நண்பன் சொன்னான்,''நான் எப்போதுமே நூறு ரூபாய் தான் தருவதாகச் சொன்னேன்.நீ தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
நான் நூறு(நான்+நூறு=நானூறு)ரூபாய் தருகிறேன் என்றேன். பின்னர்
முன் நூறு (முன்+நூறு=முன்னூறு)ரூபாய் தருவதாகச் சொன்னபடி கொடுக்கிறேன் என்றேன்.பின்னர் நீ வந்த பொது,இரு,நூறு (இரு+நூறு=இருநூறு)ரூபாய் தருகிறேன் என்றேன்.சொன்னபடி நூறு ரூபாய் தந்தேன்.''
***********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனதின் தந்திரம்

அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு.ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை.அது இயல்பு தானே.எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும் அதன் மீது ஆசை எழுவது இயல்பு.மனம் அப்படித்தான் செயல் படும்.மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு.அது உங்களைத் தூண்டிவிடும்.பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்.
எப்போது எது தடுக்கப் பட்டாலும் அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்.அது ஒரு அழைப்பு போல.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது.அங்கே வேறு யாரும் இல்லை.ஆனால் கதை என்ன சொல்கிறது?சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது.இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்.
சாத்தான் ஒரு பலிகடா தான்.அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு.சாத்தான் தூண்டினான்;மயக்கி ஏமாற்றி விட்டான் என்று சொல்லி விட்டால்,நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா?ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ,தடுக்கப் பட்டதனால்தான்.மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது.ஆனால் கதை அழகானது.
மனமே சாத்தான்.தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு.மனமே பாம்பு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net