Sunday, January 2, 2011

பொன் மொழிகள் (3)

உங்களைப் பற்றி நீங்கள் மட்டமாகப் பேசாதீர்கள்.
அதைப் பேசத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே?
********
தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.
********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று
நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி
நினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்
நினைத்துக் கொள்வீர்கள்.
********
மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.
அதனால் விவாதத்தின்பின் யார் மூடன் என்பது
விளங்காமல் போய் விடும்.
********
மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால்
உன் செவியை அடைத்துக்கொள்.
********
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை.
ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்.
*********
ஒருவரின் அவல நிலையைப் பார்த்து சிரிக்கும் போது
நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.
*********
இருளடைந்து கிடக்கிறதே என்று முணுமுணுப்பதை விட
சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேல்.
********
வீணான எண்ணங்கள் நச்சக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.
*********
துயரங்களை எதிர் பார்ப்பவன்,
இரு முறை துயரம் அடைகிறான்.
*********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment