Wednesday, February 1, 2012

பொன்மொழிகள்--25

மக்கள் ஒரு அற்பனைச் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்.
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
கெட்ட பழக்கம் முதலில் யாத்ரிகனைப்போல வரும்.
பிறகு விருந்தாளியாகி,இறுதியில் அதுவே முதலாளி ஆகிவிடும்.
**********
முள்,கரண்டி,கத்தி ஆகியவற்றின் துணை கொண்டு உண்பது,மொழி பெயர்ப்பாளரை துணைக்கு வைத்துக் கொண்டு காதலிப்பதற்கு  ஒப்பாகும்.
**********
எந்தப் பொருளையும் மலிவாக வாங்கக் கூடிய நேரம் போன வருடம்.
**********
இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தி அடைவது சரிதான்.
ஆனால் இருக்கிற திறமை போதுமென்று நினைப்பது சரியல்ல.
**********
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
**********
இன்றைய என் பசிக்கு உணவு அளிக்காது பிறகு சொர்க்கத்தைக் கொடுக்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
**********
மிதவாதி என்பவன் யார்?உட்கார்ந்து யோசிப்பவன்.என்ன,உட்காருவது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
**********
உடனடியாகச் சீர்திருத்த வேண்டியது எது?அடுத்த வீட்டுக்காரனின் குணம்.
**********
சீட்டுக்கட்டை சரியாகக் கலைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்,நம் கைக்கு நல்ல சீட்டு கிடைக்கும் வரை.
**********
நீ சொல்வது சரிதான் என்று ஒருவர் என்னிடம் சொன்னால் உடனே அது சரியில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.
**********
ஒரு ஆளையோ,ஒரு தேசத்தையோ,ஒரு கொள்கையையோ வெறுக்க வேண்டும்.அதில்தான் ரொம்பப்பெருக்கு சந்தோசம்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

செப்பு மொழி

காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஆடை கட்டத் துவங்கியபோது.
***********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
**********
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
**********
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
**********
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான்  நிம்மதி.
**********
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும்  தைரியம் வர வேண்டும்.
**********
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,
அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.
**********
,                                                  --கண்ணதாசன்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் --23

11.11.11.இது எனது ஆயிரமாவது இடுகை.இதுவரை எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
*********************************************************************
கடைசி  வார்த்தை  தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
**********
வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
***********
இளமை ஒரு தவறு.
வாலிபம்  ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
**********
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-22

உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.
**********
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
**********
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.
**********
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.
**********
சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
**********
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே.
கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி.
**********
இனிமையாக வாழ முடியாதவர்கள்,இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள்.
**********
வறுமை என்பது பயந்தவரை அடிக்க வரும் போக்கிரி.
ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது பயந்த சாது.
**********
தூங்குபவனை எழுப்புவதற்காக பொழுது இருமுறை விடிவதில்லை.
**********
விருதுகளும் பட்டங்களும் சராசரி மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உயர்ந்த மனிதனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன.
தாழ்ந்த மனிதரால் அவை களங்கப் படுத்தப்படுகின்றன.
**********
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்.
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்துவிடும்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net