Wednesday, January 5, 2011

முறையீடு

ஒரு புலவர் வறுமையில் வாடியதால் பல இடங்களுக்கும் அலைந்து ஒன்றும் கிடைக்காமல் இல்லம் திரும்புகையில் வழியில் ஒரு சிவன் கோவிலைக் கண்டு ஆண்டவனிடம் முறையிடலாம் என்று உள்ளே சென்றார்.அங்கு கோவிலின் சுவற்றில் திருவிளையாடல் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.ஒரு சித்திரம் சிவலிங்கத்தை ஒரு வேடன் காலால் உதைக்கும் ஓவியம்.அடுத்து வேடன் உருவிலிருந்த சிவனை அர்ச்சுனன் அம்பினால் எரியும் காட்சி.அடுத்து பிட்டுக்கு மண் சுமந்த சிவன் பாண்டியனிடம் பிரம்படி வாங்கும் காட்சி.புலவர் சிரித்துக்கொண்டே தனக்குத்தானே பாடினார்,
''வஞ்சகர்பால் நடந்தலைந்த காலால் புண்ணும் 
வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
தீருமென்று சங்கரன் பால் வந்தேனப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும்,வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்,கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பாரென்று காட்டி நின்றான் பரமன் தானே!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment