Monday, December 20, 2010

உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா?

காத‌ல் எ‌ப்படி வரு‌ம், யா‌ரிட‌ம் வரு‌ம், எ‌‌ங்கு வரு‌ம் எ‌ன்பதெ‌ல்லா‌ம் சொ‌ல்ல முடியாது. காத‌ல் எ‌ன்பத‌ற்கு முத‌லி‌ல் க‌ண் இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். அ‌ப்படி இரு‌க்க ஒருவ‌ர் தனது ந‌ண்பரையே காத‌லி‌ப்ப‌தி‌ல் ம‌ட்டு‌ம் தவறு இரு‌க்க முடியுமா?

பொதுவாக பா‌ர்‌த்தது‌ம் காத‌ல் வரலா‌ம், அ‌ல்லது இ‌ப்படி பே‌சி‌ப் பழ‌கி ந‌ல்ல ந‌ண்ப‌ர்களாக இரு‌‌ப்ப‌வ‌ர்களு‌க்கு இடையே காத‌ல் மலரலா‌ம். ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி நம‌க்கு‌ள் ந‌ட்‌பி‌ற்கு‌ம் மேலாகா ஏதோ ஒ‌ன்று இரு‌க்‌கிறது எ‌ன்பதை உண‌ர்‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன் காதல‌ர்களாக மா‌றியவ‌ர்களு‌ம் உ‌ண்டு.



ஆனா‌ல், ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள் காத‌ல் வருவது ‌மிக‌ப்பெ‌ரிய அவ‌‌ஸ்தை எ‌ன்பது ம‌ட்டு‌ம்‌ ‌நிஜ‌ம். ஒருவ‌ர் தனது ந‌ண்பரை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்றா‌ல், அதை அவ‌ர் உண‌ர்வத‌ற்கே ‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌ம். எ‌ப்போது‌ம் அவருட‌‌ன் ‌நினை‌வி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பது, அவரது பே‌ச்சை‌க் காதுக‌ள் கே‌ட்‌டுக் கொ‌ண்டிரு‌ப்பது போ‌ன்ற உண‌ர்வு, அவரை‌த் த‌விர உலக‌த்‌தி‌ல் யாரையு‌ம் ‌பிடி‌க்காத அள‌வி‌ற்கு போவது வரை தனது ந‌ண்பரை தா‌ன் காத‌லி‌க்‌கிறோ‌ம் எ‌ன்பதை உண‌ரவே ‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

அத‌ற்கு‌ள், அவ‌ர்களது ந‌ட்பு ப‌ற்‌றி அவ‌ர்களு‌க்கு‌ள்ளேயே ஒரு பெருமை வ‌ந்‌திரு‌க்கு‌ம். அ‌ப்போது அவ‌ர்களது ந‌ட்பை‌ப் ப‌ற்‌றி த‌ம்ப‌ட்ட‌ம் அடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள் த‌ங்களை சு‌ற்‌றியு‌ள்ள ந‌ண்‌ப‌ர்க‌ளிட‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், தனது ந‌‌ண்பரை தா‌ன் காத‌லி‌க்‌கிறோ‌ம் எ‌ன்ற எ‌ண்ணமே முத‌லி‌ல் கு‌ற்ற உண‌ர்‌ச்‌சியாக மாறவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. அதையு‌ம் ‌மீ‌றி, அவரு‌ம் த‌ன்னை காத‌லி‌க்‌கிறாரா எ‌ன்பதை ஆராய மனது அலைபாயு‌ம். இத‌ற்‌கிடையே அவ‌ர் வேறு யாரையு‌ம் காத‌லி‌த்து ‌விட‌க் கூடாதே எ‌ன்று‌ம் மன‌ம் பதபதை‌க்கு‌ம்.

நனது ந‌ண்ப‌ர் வேறு யா‌ரிடமாவது பே‌சினா‌ல் முத‌லி‌ல் அ‌தீத ப‌ற்று (பொச‌சி‌வ்ந‌ஸ்) என‌ப்படு‌ம் த‌ன்னுட‌ன் ம‌ட்டுமே பேச வே‌ண்டு‌ம், பழக வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் பொறாமையாகவோ, கோபமாகவோ, வெறு‌ப்பாகவோ‌க் கூட மாறலா‌ம்.

ஒருவ‌ர் த‌ன் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் செ‌ய்ய வே‌ண்டிய ‌விஷயம‌், தனது‌ காதலை வெ‌ளி‌ப்படு‌த்துவது அ‌ல்ல. அவரது மன‌தி‌ல் த‌ன் ‌மீது காத‌ல் ஏ‌ற்படுவத‌ற்கான ‌விதை உ‌ள்ளதா அ‌ல்லது காத‌ல் ‌விதையை‌த் தூவுவத‌ற்கான வா‌ய்‌ப்பு உ‌ள்ளதா எ‌ன்பதுதா‌ன். அத‌ற்கு மு‌ன் வேறு யாரேனு‌ம் காத‌ல் ‌விதையை‌ ‌விதை‌த்து உ‌ள்ளனரா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்வதுதா‌ன் முத‌ல் வேலையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

அவ‌ரது மன‌தி‌ல் காத‌ல் ஏ‌ற்படவே இ‌ல்லை, த‌ன்னை ‌மிகவு‌ம் ந‌ல்ல ந‌ண்பராக ‌நினை‌க்‌கிறா‌‌ர் எ‌ன்று உறு‌தியாக‌த் தெ‌ரி‌ந்த ‌பிறகு, காத‌லி‌க்க வை‌ப்பத‌‌ற்கான வ‌ழிக‌ளி‌ல் ஈடுபடலா‌ம்.

நமது ந‌ட்பை பெ‌ரிதாக ம‌தி‌க்‌கிறா‌ர், த‌ன்னை ஒரு ந‌‌ல்ல ந‌ண்பராக அவ‌ர் ‌நினை‌க்‌கிறா‌ர் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் எ‌ண்‌ணினா‌ல், உ‌ங்களது காத‌ல் முடிவை ‌சில கால‌ம் த‌ள்‌ளி‌ப் போடலா‌ம்.

ஆனா‌ல், நா‌ம் காத‌லி‌க்கு‌ம் ந‌ம் ந‌ண்ப‌ர், வேறு ஒருவரை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்ற ச‌ந்தேகமாவது உ‌ங்களு‌க்கு வ‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் காதலை கட‌லி‌ல் தூ‌க்‌கி‌ப் போட‌த் தய‌ங்க‌க் கூடாது. அத‌ற்கு‌ம் தயாராக இரு‌க்க வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ள் காதலை‌த் தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு வேறு ஏதேனு‌ம் உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த வேலை‌யி‌ல் முழு நேரமு‌ம் ஈடுபடு‌ங்க‌ள். கால‌ம் எதையுமே மா‌ற்று‌ம் ச‌க்‌தி படை‌த்தது. ‌நீ இ‌ல்லாம‌ல் நா‌ன் இ‌ல்லை எ‌ன்று த‌ற்கொலை வரை செ‌ன்றவ‌ர்களை‌க் கூட, வேறு க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு குடு‌ம்ப‌‌ஸ்தனா‌க்கு‌ம் ச‌க்‌தி கால‌த்‌தி‌ற்கு உ‌ண்டு. இ‌ப்படி எ‌ல்லா‌ம் நா‌ம் இரு‌‌ந்‌திரு‌க்‌கிறோமா எ‌ன்று எ‌ண்‌ணி ‌சி‌ரி‌க்க வை‌க்கவு‌ம் இ‌ந்த கால‌த்தா‌ல் முடியு‌ம். அதே கால‌ம் உ‌ங்க‌ள் காதலை மற‌க்க வை‌க்க முடியு‌ம். ஆனா‌ல் உ‌ங்க‌ளு‌க்காக உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர்.

ஒரு வேளை உ‌ங்க‌ள் காதலை ‌நீ‌ங்க‌ள் அவசர‌ப்ப‌ட்டு வெ‌ளி‌ப்படு‌த்‌தி, அவரது மனதை அது பா‌தி‌க்குமானா‌ல், ‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது ஒரு காத‌லியை அ‌ல்ல.. ந‌ல்ல ந‌ண்பரை. ஒரு வேளை ‌நீ‌ங்க‌ள் காதலை வெ‌ளி‌ப்படு‌த்‌தியது‌ம், அது அவரு‌க்கு‌ப் ‌பிடி‌க்கா‌ம‌ல் போனா‌ல், ‌நீ‌ங்க‌ள் இ‌வ்வளவு காலமு‌ம் ந‌ண்பரை‌ப் போல இரு‌ந்தது வெறு‌ம் நடி‌ப்பாக அவரு‌க்கு‌த் தோ‌ன்றலா‌ம். இனா‌ல் உ‌ங்களு‌க்கு இடையே எ‌ந்த ப‌ந்தமு‌ம் இ‌ல்லாமலே‌ப் போகலா‌ம்.

காதலை மன‌தி‌ல் அட‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது கடினமான ‌விஷயமாக இரு‌ந்தாலு‌ம் அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பு பெ‌ரித‌ல்‌ல. உ‌ங்களு‌க்கு எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யிலு‌ம் தோ‌‌ள் கொடு‌க்க உ‌ங்களு‌க்காக ஒரு ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர். அதை ‌விட வேறு எ‌ன்ன வே‌ண்டு‌ம் உலக‌த்‌தி‌ல்?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திருமணத்திற்கு பின் ஆண்களின் குணநலன்களில் மாறுதல்: ஆய்வில் தகவல்

நியூயார்க் :

திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆண்கள், திருமணத்திற்கு பின், அந்த செயல்களை அறவே தவிர்க்கின்றனர். அவர்களிடம் உள்ள முரட்டுத்தனம் மாறி, மென்மையானவர்களாகவும், இனிமையாக பழக கூடியவர்களாகவும் மாறுகின்றனர். பொய் சொல்வதை தவிர்க்கின்றனர். பிறர் தவறு செய்யும் போது, அதை மன்னிக்கும் பக்குவமும் அவர்களிடம் வந்து விடுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற திருமணமாகாத 29 வயது ஆண்களில் 1.3 சதவீதம் பேர் முரட்டுத்தனமாகவும், சமூக விரோத போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தனர். அதே வயதில் திருமணமான 0.8 சதவீதம் பேர் மட்டுமே இந்த குணங்களை கொண்டிருந்தனர். பரம்பரை மற்றும் வளர்ப்பு சூழல் காரணமாகவும் குழந்தையிலிருந்தே முரட்டுதனமான குணங்களை கொண்டிருந்தவர்களும் திருமணத்திற்கு பிறகு மாறுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து, இந்த ஆய்வில் பங்கேற்காத அல்பேனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெயான் கிங் கூறியதாவது: திருமணத்திற்கு பின், ஆண்கள் மாறுகின்றனர் என்பது உண்மை தான் என்றாலும், அதற்கான காரணம் தான் புரியவில்லை. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். முரட்டுத்தனமான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இந்த தொடர்புகளை அவர்கள் துண்டித்து கொள்கின்றனர். எனவே, அவர்களின் குண மாற்றத்தி ற்கு இதுகூட காரணமாக இருக்கலாம். இவ்வாறு ரெயான் கிங் தெரிவித்தார்.

எப்டிலாம் உண்மையா சொல்றாங்க பாருங்க.. பைத்தியம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

காதலை சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்..

சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.



ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.

உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.

கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.

உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.

சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net