Sunday, November 14, 2010

நீங்கள் 30 வயதை கடந்தவரா? அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களா: அவசியம் படியுங்கள்...

வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30 கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று 25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.
இதற்கான காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சங்குமணி கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு, சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது. இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.
"வாக்கிங்' செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக, உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல் உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப் பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம் அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.
தொப்பைக்கு தேவை "குட்பை'  தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது, சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம் சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக செல்லலாம்.  இவ்வாறு கூறினார்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சந்தோஷம்

நமது இலக்கு. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்துக்காகத்தான். வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள்ள சில விஷயங்களை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். தேவையற்ற ஒன்றை சேர்த்திருப்பது அல்லது தேவையான ஒன்று இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி குறைபாட்டுக்கு காரணமாக இருக்கும். எனவே தேவையானதைத் தேட வேண்டும், தேவையற்றதை தள்ளியாக வேண்டும்.
***
நிம்மதியான உறக்கம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமான வழி. உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் தருவது தூக்கம். எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது. தூங்கி எழுந்தால் துக்கம்கூட மாறிவிடும். குழப்பங்களும் நீங்கிவிடும் அந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் தூங்கும் நேரத்தில் உடலில் நடைபெறுகிறது. இரைச்சல் இல்லாத, வெளிச்சம் புகாத அமைதியான அறையில் நிம்மதியாக உறங்குங்கள். ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள், வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.
***
வேலையில் மெனக்கெடாதீர்கள். சிலர் வேலை வேலையென்றும், பணம் பணமென்றும் திரிவார்கள். இதனால் மன அழுத்தம்தான் மிஞ்சும். வேலை என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். அது உங்கள் மகிழ்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
வேலையில் தொடர்ந்து நெருக்கடி இருந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருந்தால் அது வேலையல்ல `கஷ்டம்'. தினமும் 8 மணி நேரம் உழைக்க செலவிட்டால் 8 மணி நேரம் ரிலாக்ஸாக இருங்கள். 8 மணி நேரம் தூங்குங்கள்.
***
துன்பம் வந்துவிட்டால் எல்லோரும் துவண்டு போய் விடுகிறார்கள். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் சந்திக்காத துன்பமே இல்லை. அவரிடம் ஒருமுறை, `நீங்கள் இவ்வளவு துன்பத்துக்கிடையிலும் பெருமளவு சாதித்திருக்கிறீர்ர்களே எப்படி?' என்று கேட்டார்கள்.
அப்போது அவர் `எந்த துன்பமும் மாறிவிடும்' என்று பதிலளித்தார். அதுதான் நிஜம். எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பு. வாழ்வில் இன்பம், துன்பம் எல்லாம் மாறிமாறி வரும். பணமும், புகழும் அப்படித்தான்.
***
தேவையை நிறைவேற்றிக் கொள்ள நீங்களே களம் இறங்குங்கள். உதாரணமாக உங்களுக்கு தேவையானதை மற்றவர்களிடம் சொல்லி வாங்கிவரச் சொல்லவேண்டாம். இப்படிச் செய்வது சுலபம் என்று பலரும் எண்ணுவது உண்டு. ஆனால் அவர்கள் வாங்கி வந்தபிறகு அதில் குறைகள் இருந்தால் உங்களுக்குத்தான் இழப்பு. அதற்காக கோபப்பட்டால் உங்கள் உறவும்கூட பாதிக்கும். எனவே உங்கள் தேவையை நிறைவேற்ற நீங்களே செயல்படுங்கள். விரும்பியதை வாங்குங்கள், செய்யுங்கள், சாப்பிடுங்கள். மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.
***
வற்புறுத்துதலுக்கு இணங்க வேண்டாம். நண்பர்களுடன் கலந்து கொள்ளும் விழாக்களில் மதுப்பழக்கத்தை கற்றவர்கள்தான் ஏராளம். உங்கள் நண்பர்களும் அதுபோல் `சும்மா சாப்பிடு' என்று கூறி வற்புறுத்தலாம். `வா சினிமாவுக்கு போகலாம்', `ஜாலியாக இருக்கலாம்' என்று உங்கள் நேரத்தை வீணடிக்கலாம். எனக்காக இதைச் செய்து கொடு என்று அலைக்கழிக்கலாம். அவை அனாவசியம் என்று உங்களுக்குத் தோன்றினால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அதுதான் உங்கள் மகிழ்ச்சிக்கு கியாரண்டி.
***
உணவுப் பழக்க வழக்கத்தில் ஒழுங்கு முறையை கடைபிடியுங்கள். உணவுக்கட்டுப்பாடு நல்லது. சத்து நிறைந்த உணவை உண்பது உடலுக்கு நலம் சேர்க்கும். கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நலமாக இருந்தால் சந்தோஷமாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள். அதேபோல் இரு வேலைக்கு இடையே சிறிது ஓய்வெடுங்கள். காலை மாலை நேரங்களில் பார்க், பீச்சில் உலாவி வாருங்கள்.
***
குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுங்கள். மகிழ்ச்சிக்கும், பாதுகாப்புக்கும்தான் மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தான். தேவைக்காக மட்டும் சகோதரர்களை நாடுவதும், ஆசைக்காக மட்டும் மனைவியை நாடுவதும் உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்வதாகும்.
உறவுகளிடம் இனிமையாகப் பழகுங்கள். மனைவி, குழந்தைகளை அவ்வப்போது மகிழ்ச்சிப்படுத்துங்கள். சினிமா, சுற்றுலா என்று இன்ப உலா செல்லுங்கள். விளையாட்டு, மகிழ்ச்சி என்று ஜாலியாக இருங்கள். வாழ்வே வசந்தமாக தோன்றும்.
***
ஒரு போதும் விரக்தியாக இருக்காதீர்கள். `எனக்கேன் இந்த சோதனை, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன், செத்துவிடலாம் போலிருக்கு' என்று விரக்தி புலம்பல்களை வெளியிடாதீர்கள். நெருக்கடி வரும்போது சிறிது நேரம் எந்தவித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருங்கள். காலம் சூழலை மாற்றி நிம்மதியை திரும்பச் செய்யும் என்று நம்புங்கள்.
நெருக்கடி நேரத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆலோசனை

நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம் சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எளிய அறிவுரை

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன் முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர் கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முன் முடிவு

வாழ்வில் எந்த விஷயத்தை அணுகும் போதும் நாமே ஒரு முன் முடிவு செய்து கொள்ளாமல் நடுநிலையோடு அணுகுவதுமிக அவசியம். முன் முடிவோடு அணுகும் போது அதன் மீது நமக்கு இருக்கும் உடன்பாடோ,முரண்பாடோ உண்மையைக் காண முடியாமல் நம் கண்களையும் மனதையும் குருடாக்கிவிடும்.''அவரா?அவர் அப்படித்தான் சொல்வார்.''''அதுவா,அது அப்படித்தான் இருக்கும்.''என்று ஒரு முன் முடிவு எடுத்துக் கொண்டுஒரு விஷயத்தை அணுகுபவர்களால் உண்மை நிலையைக்காண முடியாது.முன் முடிவுக்காரர்களிடம் முட்டிக் கொள்வதை நாம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தை மேதையாக....

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?
சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.
**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.
**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.
**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.
.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.
**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.
**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.
**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.
**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.
**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.
**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திட்டி விட்டார்களா?

எவரேனும் திட்டிவிட்டால் உடனே சோகமாகி விடுவதும்,எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டுச் சோம்பி விடுவதும், முடிந்தால் ஏகமாக அழுவதும்,இப்படி அநியாயமாகத் திட்டி விட்டார்களே என்று பொருமுவதும் நம்மில் பலரது இயல்பாய் இருந்து வருகிறது.ஒருவர் திட்டி விட்டால் அதைப் பற்றிக் கொஞ்ச நேரம் சிந்தித்து விட்டு அப்புறம் மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
ஒருவர் திட்டினால் நாம் தவறாக நடந்து கொண்டோமா என நம்மை நாமே மனசாட்சியின் துணையுடன் சிந்திக்க வேண்டும்.ஆம் என்றால் அவர் திட்டியது சரிதான் என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அது உண்மை இல்லாத போதுநாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
முன்பின் தெரியாத ஒருவர் திட்டினால்நம் அருமை தெரியாதவர் என அதைப் புறக்கணிக்க வேண்டும்.மிக வேண்டியவர் திட்டினால் அதன் பின்னே மறைந்திருக்கும் அக்கறையைபெரிது படுத்திப் பார்க்க வேண்டும். தவிர திட்டிய பாணியையும்,திட்டப்பயன் படுத்திய வார்த்தைகளையும் பெரிது படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
தன தாயைப் பற்றித் திட்டியவனை வெட்டி விட்டு எத்தனை பேர் சிறை செல்கிறார்கள்?தன தாயைப் பற்றி நன்கு அறிந்தவன் கொலை செய்யும் அளவுக்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்?
தெரிந்தவர்கள் திட்டினால் பதிலுக்கு மல்லுக்கு நிற்கக் கூடாது.நடந்த சம்பவத்தைப் பற்றி தண்டோரா போட்டு திட்டியவன் காதுக்கு வேறு விதமாகச் செய்தி போய் விடக் கூடாது.திட்டியவர் தணிந்து வருவார்.அப்போது நம் பக்கத்து நியாயம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
இந்த முறையைக் கையாண்டால் நம் மீது அவர்களுக்கு அன்பு வளர நாம் வழி வகுத்து விட்டோம் என்று பொருள்.
--லேனா தமிழ்வாணன்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சலிப்பு தீர

சலிப்பிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் வெளிவர மிக எளிய வாழ்வியல் முறை,வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதுதான்.
சாப்பிடும் போது ஒரு ரசகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்.இரண்டு மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை சாப்பிடுவதும் ஒரே ஒரு ரசகுல்லாவை முழு சுவையும் வாயிலே கரைந்து போகும் அளவிற்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே.
சுவையின் உச்சத்தை ஒரே ஒரு முறை ருசித்து விட்டால் ஒருரசகுல்லா போதும்.திருப்தி கிடைத்துவிடும்.சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால் பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது.சலிப்பும் கஷ்டமுமே மிஞ்சும்.
நீங்கள் அனுபவத்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.அப்போது 'இன்னும் கொஞ்சம்'என்று தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது.சலிப்பு நெருங்கவே நெருங்காது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இரு கோடுகள்

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர்.அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்.ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார்,''இதோ பாருங்கள்,இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது?வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான்.பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்,''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கோபம் தீர

கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு வழிசொல்லுங்கள எனஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.ஞானி சொன்னார்,''ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதேயில்லை.இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ,எனக்கு இது சாதகமா,பாதகமா என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.பாதகம் வரும் என்றால் அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள்.பாதகமில்லை என்றால் அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாகப் பேசி வைத்தால் கூட கோபம் பொங்குகிறது.எனவே உங்களின் கோபம் தர்க்கம் சம்பந்தப்பட்டது.உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள்.கோபம் தன்னால் சரியாகும்.''
பரமஹம்ச நித்யானந்தர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிரச்சினை என்ன?

நீங்கள் சந்தோசமாக இருக்கும் போதும் ,கருணையோடு இருக்கும் போதும் ,தாராளமாக வழங்கும் மன நிலையில் இருக்கும் போதும் உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது.யாராவது குற்றம் செய்ததாக நீங்கள் கருதும் போது,அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது.உண்மையாகச் சொல்லுங்கள்.நீங்கள் செய்தேயிராத ஒரு குற்றத்தையா அவர் செய்து விட்டார்?நம் பிரச்சினை என்ன?நாம் ஒரு குற்றம் செய்தால் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.வேறு யாரும் பொருட்படுத்தக் கூடாது என்று எதிர் பார்ப்போம்.ஆனால் அதையே வேறொருவர் செய்தால் பெரிது படுத்துவோம்.
மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது
----ஞானி ஜாக்கி வாசுதேவ்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நீயாக இரு.

இராம கிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரநாத்தின் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்ததும் அவர் விவேகானந்தர் ஆனார்,என்பதைப் படித்துத் தெரிந்த ஒருவர் வினோபாஜியிடம் சென்று ,''ஐயா,தாங்கள் என் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்தால்,நான் சங்கராச்சாரி ஆகி விடுவேன்.''என்று சொன்னார்.
''நான் ஆக்குவதால் நீ ஆகி விட்டால் ,பிறர் அழிப்பதால்,நீ அழிந்தும் போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் உண்மை மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை ஏதாகிலும் ஆக்கினால்,அப்படி ஆகாதே..''என்று அறிவுறுத்தினார் வினோபாஜி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மகனுக்கு

ஆபிரஹாம் லிங்கன் ,தன மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம்;
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அறத்தின் உரு

மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு.
பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.
கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.
அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.
அவனே அறத்தின் உருவமாவான்.
----நாலடியார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆதாரம்

ஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான நீர் ஓடத்திற்கு வெளியே இருக்க வேண்டுமேயன்றி உள்ளே அன்று.
சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓட்டத்திற்கு வெளியே,அது மிதப்பதற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இனிமையோடு பழக

மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,உங்களைக் குறை கூறுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவரவர்க்கு அவரவர் பிழைப்பைக் கவனிக்கும் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது.உங்களை வெறுத்துக் கொண்டிருக்கவோ குறை கூறவோ அவர்களுக்கு நேரமில்லை.நீங்களாக ஏதாவது கோளாறாக நடந்து கொண்டாலன்றி உங்களைப் பற்றி அவர்கள் ஏன்சிந்திக்கப் போகிறார்கள்?
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உண்மை

உண்மையை யாரும் நம்புவதில்லை.பசும்பாலிலிருந்துதயாரித்த மோரை தெருத்தெருவாக அலைந்து விற்க வேண்டியுள்ளது.ஆனால் கள்உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது.நல்லது மெதுவாகத்தான் விலை போகும்.விரைவில் விற்பதால் கெட்டதுஒரு போதும் நல்லதாகிவிடாது.
உண்மையைப் போன்ற தவம் இல்லை.பொய்யைப் போன்ற பாவம் இல்லை.உண்மையைப் பொய்,நிந்தை ஒன்றும் செய்து விட முடியாது.காலம் அதனை விழுங்கி விட முடியாது.உண்மைக்கு வெற்றி கிடைத்தே தீரும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பேச்சு

உலகத்தைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!பேசி உலகத்தை நீ ஒன்றும் செய்ய முடியாது.
உன்னைப் பற்றி பேசுகிறாயா?
நிறுத்து!உன்னைப்பற்றி நீ பேசினால் யாரும் கேட்டுக் கொண்டிருக்க
மாட்டார்கள்.
உன் அனுபவத்தைப் பற்றி பேசுகிறாயா?
வேண்டாம்!ஒவ்வொருவரும் மூட்டை மூட்டையாக வைத்து
இருப்பார்கள்.உன் பேச்சு செலாவணியாகாது.
பிறருக்கு நன்மை செய்வதைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!செய்!


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொது ஒழுக்கம்

பொது ஒழுக்கம் இல்லாதவர்கள் சமய சொற்பொழிவு செய்யலாமா என்ற கேள்வியை ஒருவர் பரமஹம்ஸரிடம்கேட்டார். அழுக்காக இருக்கும் விளக்குமாறு தானே வீட்டைக் கூட்டி சுத்தமாக்குகிறது ,என்று பதல் அளித்தார் பரமஹம்ஸர்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பணக்கர்வம்

ஒரு தவளையிடம் ஒரு ரூபாய் நாணயம் இருந்தது. அதை பூமிக்கு அடியில் ஒரு பள்ளத்தில் போட்டு வைத்தது. ஒரு நாள் ஒரு யானை அந்தப் பள்ளத்தின் மேலே நடந்து சென்றது. வந்ததே கோபம் தவளைக்கு. பள்ளத்தை விட்டு வெளியே வந்து யானையை உதைக்கக் காலைத்தூக்கியது.'என்ன தைரியம் இருந்தால் என் தலை மேலே நடந்து போவாய்?'என்று மிரட்டியது. பணத்தாலே வரும் கர்வம் இப்படிப்பட்டதுதான் என்று ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொல்கிறார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆலோசனை

நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம் சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குழந்தைகளை அடிக்கலாமா?

குழந்தைகள் தவறு செய்யும்போது அடிக்கலாமா?அடிக்கலாம் என்பதைவிட தண்டிக்கலாம்.குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net