Wednesday, November 3, 2010

மாரடைப்பை கண்டறிவது எப்படி?

நெஞ்சுவலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறியப்படுகிறது.
இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):
* இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால்தான் இதயம் சீராக இயங்குகிறது.
* ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், இத்தகைய மின்அலைகள் இதயத்தின் மேல்பாகத்தில் இருந்து அடிப்பாகம் வரை சீராக, முறையாக பரவுகிறது.
* இவ்வாறு இதயத்தில் பலபாகங்களில் ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், உருவாகும் மின்அலைகளை ஒரு இயந்திரத்தின் உதவியால் ஒரு தாளில் பதிவு செய்வதே இ.சி.ஜி., எனப்படுகிறது.
* மாரடைப்பு வருவோருக்கு இத்தகைய மின்அலைகளின் பதிவில் மாற்றங்கள் ஏற்படும்.
* அத்தகைய மாற்றங்களை வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா, எப்போது ஏற்பட்டது, இதயத்தின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
ரத்தப் பரிசோதனைகள்:
* மாரடைப்பு ஏற்படும்போது இருதய தசையின் எந்தப் பாகத்தில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்பகுதி சில மணி நேரங்களில் செயலிழக்கிறது.
* இவ்வாறு செயலிழந்த தசைப் பகுதியில் இருந்து புரதச் சத்து கலந்த பலவகை ரசாயன பொருட்கள் கசிந்து ரத்தத்தில் கலக்கின்றன.
* மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று நாட்கள் வரை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமான ரசாயனப் பொருள் கசிந்து ரத்தத்தில் கலக்கிறது.
* ரத்தத்தில் இவ்வாறு கலக்கும் ரசாயன பொருட்களின் அளவை வைத்து மாரடைப்பு உறுதி செய்யப்படுகிறது.
* மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நேரம், மாரடைப்பின் அளவு, இத்தகைய மாரடைப்பால் பின்னாளில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பவை பற்றியும் ஓரளவு துல்லியமாக கணிக்கலாம்.
* மாரடைப்பின்போது பொதுவாக ரத்தத்தில் பின்வரும் ரசாயனப் பொருட்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
1) Myoglobin, 2) Troponin.
கொரனரி ஆஞ்சியோகிராம்:
இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த "எக்ஸ் ரே' தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்பு உள்ளது, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் எளிதாக பலூன் முறை மூலம் சரிப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என்பவற்றை கண்டறியலாம்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவது எப்படி?
*பொதுவாக இது எந்தச் சிக்கலோ, பக்கவிளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனை.
* மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் மூலமாகவோ, வலது அல்லது இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக்குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக்குழாய்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
* இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம்.
* இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும்.
எக்கோ கார்டியோ கிராம்:
* இதுவும் ஒரு எளிதான, வலி ஏதும் இல்லாத பரிசோதனையே. பொதுவாக இது மாரடைப்பை கண்டுபிடிக்கத் தேவையான கட்டாய பரிசோதனை அல்ல.
* ஆனால் சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழும்போது இ.சி.ஜி., பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கலாம்.
* குறிப்பாக மாரடைப்பு இதயத்தின் பின்பாகத்தில் ஏற்படும்போது, இ.சி.ஜி.,யில் எந்த மாற்றமும் தோன்றாமல் இருக்கலாம்.
* இத்தகைய சூழலில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* இப்பரிசோதனையில் இடதுபுற மார்பு பகுதியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் முறைமூலம், இருதய தசையின் எல்லா பாகங்களின் செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறியலாம்.
* மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாகத்தின் செயல்பாடு குறைந்திருப்பதை இப்பரிசோதனையில் கண்டறிந்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதன் அளவையும் உறுதி செய்யலாம்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்கலாம் வாங்க.!!!

இளமைத் துள்ளலுடன் ஜோக்ஸ் ::::::

தத்துவம்
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்று தான் சாப்பிடணும்.
------------------------------------------------------------------------

தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்
ராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க பீச்-க்கு போறதா சொன்னியே! என்ன ஆச்சு?

கீதா: அட! அத ஏண்டி கேக்குறா? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!

ராதா: ஏன்! என்ன ஆச்சு?

கீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி!

ராதா: ஹா! ஹா! ஹா!
------------------------------------------------------------------------

முத்தம்
கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன டிம தானே?

மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம். அவுஸ் ஓனருக்கு 250 முத்தம் கொடுத்துடுறேன் என்ன? ஓ.கே. தானே?

கணவன்: ???
------------------------------------------------------------------------

தொலைக்காட்சி விளம்பரம்
வரும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு...உங்கள் அபிமான தொலைக்காட்சியில்...அற்புதமான ஹாலிவுட் திரைப்படம்... தமிழில்

சிலந்தி அண்ணாச்சி (Spiderman)

உங்களின் விடுமுறை நாளை குதூகலமாக கொண்டாட ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு

சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படம்

"அம்மாச்சி திரும்ப வந்தாச்சு" (Mummy Returns)

முற்றிலும் தமிழில்...

காணத்தவறாதீர்கள்!!!
------------------------------------------------------------------------

வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம்
பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்க

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?

விருந்தினர்: ???
------------------------------------------------------------------------

எதிர்பதம்
Subramaniyan "Saw"my-யின் எதிர்பதம் என்ன?

Subramaniyan "did not" see me
------------------------------------------------------------------------

"இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க"
"எப்படி சொல்ற?"

"பாருங்க! குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?"

"நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net