Thursday, June 9, 2011

ஜோக் - Joke சிரி சிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART - 4 !!!


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி




ணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு
னைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும்



பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?



பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
 பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.



பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்



டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
ண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
 டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..


டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
 பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!

சிரி சிரி சிரிசிரி  சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
 டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.
  
ந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே ?
அதான் கொக்கு நறநற கோழி நறநற ... ன்னு பாடுறாரே !


ன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
  நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .


ருந்தாலும் எதிர்கட்சிக்காரங்க பண்றது ரொம்ப டூ-மச்
ஏன் என்ன ஆச்சு ?
மும்பை எக்ஸ்பிரஸ் படம் சரியா ஓடலைனு ரயில்வே அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களே !
  
னி இங்கு எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிந்தனைகள் !!!

ஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.

வேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.

                         தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தமிழ் நகைச்சுவை !!!

பைத்தியம்

ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?

வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே "பைத்தியமா" இருக்கார்னு.



மரியாதை

அவன் நம்ம வீட்டு வேலைக்காரன் அவனுக்கு மரியாதை தராதே காமாட்சி..

சரிடா...



பாத்திரம்


ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்.


தற்கொலை


படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்...

யார்..வில்லனா? கதாநாயகனா?..

தயாரிப்பாளர்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

காலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )

  புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.

மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.

தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.

பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.

ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.

பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.

அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.

தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரி..சிரி..சிரி..

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

“எதிர் வீட்டு பொண்ணு லீவு டாடி”அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா?
சரி, சரி அந்த கால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.
 நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
வக்கீல்: ????????????

மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க.
 இரண்டவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்- சிங்”குன்னு பேர் வச்சாங்க.
 ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? ”தெரியலையே””சம்- திங்-ராங்”குன்னு.

செல் பேசும் வார்த்தை புரிவதில்லை
காத்திருந்தால் மெசேஜ் வருவதில்லை
ஒரு முறை அனுப்பி மருமுறை அனுப்ப
நான் ஒன்றும் கிருக்கன் இல்லை
எனக்கு பில் கட்ட வழியும் இல்லை
பிகர் இருந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்ப
நெட்வெர்க் கவரேஜ் கிடைப்பதேயில்லை
கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா
பதில் ஒண்ணும் கிடைப்பதில்லை
ஒருமுறை தான் கால் செய்வதினால்
வருகிற பில் அவள் அறிவதில்லை…
இரவினிலும் தினம் பகலினிலும்
கரைகிற பேலன்ஸ் தெரிவதில்லை.
 டைபிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே… முன் அனுபவம் இருக்கா… என்ன ஸ்பீடு ?” ”நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவேன் சார்…!

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?” அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!”

உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செய்திங்க?
உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.

ஒருவர் ரோட்டில் நடந்து சென்ற போது நடு ரோட்டில் கருப்பாக ஏதோ கிடப்பதை கண்டு அதை தன்விரலால் தொட்டு நக்கி பார்த்து “சீ சீ சாணி நல்லவேளை மிதிக்கலை என்று சந்தோசமாக சென்றார்.

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன் தான்.

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை !!!


ஆசிரியர்: ஏண்டா “home work” பண்ணல..?
மாணவன்; சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!

ஆசிரியர்;ரெண்டும் ரெண்டும் சேர்ந்தால் எத்தனை.?
மாணவன்;சார் அசிங்கமா பேசதீங்க, ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால்தான் நல்லது...!


ஆசிரியர்:டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....
மாணவன்;அதுதான் சார் படிக்கவே வெறுப்பா இருக்கு....!


ஐ.டி.காதலன்:அன்பே “சத்தியம்” பண்ணி சொல்லுறேன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..!
 காதலி:விவசாயம் பாக்குற நல்ல மாப்பிள்ளையை எங்கப்பா எனக்கு முடிவு பண்ணிட்டார்...!

 ஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்..பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்.."" ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ""அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!


சர்தார் அமெரிக்காவில் உள்ள "நாசா" வில் வேலைக்கு சேர்ந்தார்..ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது.."சர்வ நாசா"


அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார்..ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார்..சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, " நம்பர் ப்ளேட் பாத்துக்கோ" என்றார்..!!


ஒரு முறை நம்ம மொக்ஸ் அவசர அவசரமா ரோட்டுல போயிக்கிட்டு இருந்தாரு, அந்த நேரத்துல ஒரு காக்கா நடு மண்டையில நச்சுனு "கக்கா" போயிடுச்சி,நம்ம மொக்ஸுக்கு வந்தது பாருங்க கோவம்,"ஏய் காக்கா! உனக்கு அறிவுல்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையான்னு" கத்துனாரு நடு ரோட்டுல....அதுக்கு அந்த‌ காக்கா கேட்டிச்சாம் "அடங் கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜ‌ட்டியில‌ க‌க்கா போவியா"ன்னு....

சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"



டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.


ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
 நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.




courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரி, நகைச்சுவை !!!

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..
சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!
நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!
அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!
கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?
ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..!
ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...
இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே..
என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினிஆயிட்டாங்க..!
இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?
அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?

.........................................................................................

ஒரு இந்தியன், ஒரு சீனன், ஒரு அமெரிக்கன் மூவரும் தங்கள் நாட்டு மருத்துவ முறைதான் உயர்ந்தது என்று வாதிட்டார்கள்.அமெரிக்கன் சொன்னான்.." ஒரு ஆள் கால்லே அடிபட்டு பெரிய காயத்தோட தூக்கிட்டு வந்தாங்க.. ஒரே ஒரு ஊசி தான்..உடனே எழுந்து ஓடினான் ..தெரியுமா..?
சீனன் கூறினான்.. ஒரு ஆளுக்கு கை, கால் ரெண்டு இடத்திலேயும் எலும்பு முறிஞ்சுடுச்சு..அக்கு-பங்சர் முறையிலே வைத்தியம் பார்த்ததும் அவன் டான்ஸ் ஆடினான்..இதுக்கு என்ன சொல்றீங்க..?இந்தியன் சொன்னான்.. இது என்ன பிரமாதம்..? எங்க மாமா மாடு ஓட்டிக்கிட்டு போனப்போ ரயில் மோதிடுச்சு,, மாடும் எங்க மாமாவும் ரெண்டா போயிட்டாங்க..
உடனே மாமாவோட மேல் பகுதியையும், மாட்டோட பின் பகுதியையும் சேர்த்து தைச்சிட்டாங்க..இப்போ மாமா நல்லா நடக்கறார்..அது மட்டுமில்லே..தினம் ரெண்டு லிட்டர் பாலும் தர்றார் !!!!.

.........................................................................................




கழுதை தொலைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான் ஒருவ‌ன்
ஏன்?
ந‌ல்ல வேளை அதில் நான் சவா‌ரி செய்யவில்லை இ‌ல்லை‌ன்னா நானும் தொலைந்து போயிருப்பேனே!’


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தத்துவம் கண்ணா தத்துவம !!!

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,ரயிலேறனும்னா,ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை .

“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி .”- ஜவஹர்லால் நேரு .” நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன் . இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!வடிவேலு : ?!?!

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா !! பொங்கலுக்கு எடுத்ததா?பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது .வடிவேல் : ?!?!

அண்ணே …விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .ஆனா,கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?

நாம 21ஐ ” டுவென்டி ஒன் ” னு சொல்றோம் .31ஐ ” தேர்ட்டி ஒன் “னு சொல்றோம் .41ஐ “ஃபார்டி ஒன் “னு சொல்றோம் .அப்ப ஏன்,11 ஐ மட்டும் “ஒன்ட்டி ஒன் ” னு சொல்லக் கூடாது ?

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?மாணவன் : விடுங்க சார் ! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?ஆசிரியர் : ?!?!இப்படிக்கு ,ரூம் போட்டு , மல்லாக்கப் படுத்து , பயங்கரமாக யோசிப்போர் சங்கம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா ,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .-
  
தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
  
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?-
ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
  
என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ,ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க!
குவாட்டர் கூட வராது !!!
  
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
  
டிசம்பர் 31 க்கும் , ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால் ,
ஜனவரி 1க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் .இதுதான் உலகம் .
  
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும் ...!!


1:இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

2:ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .தத்துவம்

3:தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !(என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம்

4:வாழை மரம் தார் போடும் ,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)தத்துவம்

5:பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா
கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
( டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)தத்துவம்

6:லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும் .

கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா ,திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு ,
பூமிலயும் தண்ணி இருக்கு .
அதுக்காக ,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்' கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால் ...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,
ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,
Rewindலாம் பண்ண முடியாது .

"Tea"க்கும் "Cofee" க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும்.
 "Coffee"ல 2 "e" இருக்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சர்தார்ஜி ஜோக்ஸ் !!!

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...
முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...
சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ? சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...
கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...
அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...
சி.இ.ஓ : ஙயே !!


சர்தார்ஜியும் அவரது காதலியும்...
காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..
சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!


மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?
சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..
மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட்
சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...


சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...
முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...
சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது சர்தார்
2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...


இண்டர்வியூவில்...தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...
சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூருருதேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யாசர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை !!!


கும்பகர்ணனுக்கு பிடித்த மரம் எது?

தூங்கு மூஞ்சி மரம்.



மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.

என்ன?

இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.


மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?

மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.



படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...

எப்படி?

அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!




அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?

ட்ரூ பிஸ்கட்




மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?

நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.




சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!

இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!




போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.

அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.




மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!

அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.


 போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்?

தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்த ரன்.




மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?

போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்



மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?

சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.



மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக் க வந்து கொண்டிருக்கிறான்.

அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம்.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரியுமா உங்களுக்கு ????

" மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா

கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் "

-- ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார் .

இதன் அர்த்தம் தெரியுமா ?

" இது புனிதமான கயிறு . நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது . இதை , நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் . நீ எல்லாவித நலன்களும் , சிறப்புகளும் பெற்று நூறு வயது வாழ்வாயாக !" என்று , மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது .

என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் சார்பாக ஓட்டை குத்திவிட்டு செல்லவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!

ரொம்ப டென்சனா இருக்கீங்களா .... வாங்க கொஞ்சம் சிரிப்போம் ...டென்சன குறைப்போம் .........


பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....

டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?


பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........

டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.



பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...

டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?

பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்....


 டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன் .

நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?

டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..



டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?

பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....



பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..

டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?

பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க...



இனி வீட்ல நடக்குற ஜோக்குங்கள பாருங்கோ

நண்பர் : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?

கணவன் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..


கணவன் : இன்னையில இருந்து என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..

நண்பர் :ஏன் ?

கணவன் : நேத்துதான் என் பொண்டாட்டி மண்டைய போட்டா ...


கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..

மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் ...

 நண்பர் : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?

கணவன் : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..


தோழி ; உன் புருஷன் தொவைக்கும் போது ஏன் நைட்டி போட்டுக்கராரு?

மனைவி : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்......


என்ன சிரிச்சீங்களா டென்ஷன் கொறஞ்சுதா .......இனி நாளைக்கும் கொஞ்சம் சிரிப்போம் ...


நாளை சந்திப்போமா நேயர்களே ......






courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

படித்ததில் பிடித்தது !!!

ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,எப்படியாவது கிடைச்சுரனும்னு.அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது.இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான்.உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ்(pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது,இவன் அதற்கு"இது இல்ல"னு பதிலளித்தான்.உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு "கால்குலேட்டர்(calculator)" மாதிரியான பொருளை கொண்டு வந்து இடுதானா என வினவியது.இப்பவும் மனிதன் "இது இல்ல"னு சொன்னான்.தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது.இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும் அவனிடமே கொடுத்து விடும்.இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு சிரித்தது.மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு? தேவதை சொன்னது" நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன்,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர் காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்"எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதனு சொல்லிட்டு மறைந்தது.மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எனக்குப் பிடித்த சில பொன்மொழிகள் இங்கே !!!


1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்


2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே


3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்


4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா


5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்


6. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்


7. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்


8. அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்


9. தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா


10. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல் !!!

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.


பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் யு.கே.திவாரி கூறும் போது, வைரஸ் மூலம் பரவும் தொற்று நோய்களை "துளசி" மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். இதே போல் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதும் எளிது.

துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் புபேஸ் பட்டேல் கூறும்போது:-

"துளசி" இலைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை தினமும் 2 தடவை சாப்பிட வேண்டும்.

இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக்கிருமியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார்.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரியுமா உங்களுக்கு ??????,

தாமிர நாடு !!!

* பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர்.

* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.

* தாமிர உலோகம் அதிகம் உள்ளதால் ஆங்கிலத்தில் "கன்ட்ரி ஆஃப் காப்பர்' என்று அழைக்கப்படும் நாடு ஜாம்பியா.

* காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு பிரேசில்.

* உலகில் உள்ள மொத்த தேக்கு மரத்தில் மூன்றில் ஒரு பங்கு மியான்மர் நாட்டில் உள்ளது.

* பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் தூரந்த் கோடு.




கிஸô பிரமிடு !!!

எகிப்தின் கிஸôவில் உள்ள பிரமிடு பழமையானது.

இது 137 மீட்டர் உயரமும், 225 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்டமான முக்கோண வடிவில் கட்டப்பட்டு உள்ளது பிரமிடு. இது 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது.

ஒவ்வொரு கல்லும் இரண்டரை டன் எடை கொண்டவை. மொத்தக் கற்களின் எடை 7 மில்லியன் டன்கள் ஆகும்.

 ஒரு லட்சம் வேலை ஆட்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது.




தேசியப் பழம் !!!


* வாசனைத் துறைமுகம் என்று அழைக்கப்படுவது ஹாங்காங் துறைமுகம்.

* இலங்கை தேசியக் கொடியில் உள்ள இலைகள் ஆலமர இலைகள்.

* சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

* தமிழ்ப் புதுக் கவிதையின் முன்னோடி ந.பிச்சமூர்த்தி.

* நம் நாட்டின் தேசியப் பழம், மாம்பழம்.

* அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன்.






இந்திய தேசியப் படை !!!


* 1857-ம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போர் துவங்கியது.

* 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம்.

* 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது.

* 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போர் துவங்கியது.

* 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தது.

* பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டறிந்த முதல் விஞ்ஞானி ஆர்யபட்டா.

* தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞான உலகிற்கு அறிவித்தவர் ஜகதீஷ் சந்திரபோஸ்.

* மாங்கனீஸ் தாதுப் பொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் இரண்டு நாடுகள் சீனா, தென்னாப்ரிக்கா.

* ஈஃபிள் கோபுரத்தைக் கட்டியவர் அலெக்ஸôண்டர் ஈஃபிள்.

* ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் குக்.



சம்பா நடனம் !!!


* நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர் லூயிஸ் ஹென்பின்.

* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா.

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.

* "சார்க்' அமைப்பின் தலைமையகம் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.

* இங்கிலாந்தில் முதல் முறையாக தொழில் புரட்சி நடைபெற்றது.

* சம்பா நடனத்துக்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.




உலகின் மிக அழகான துறைமுகம் !!!

* உலகில் மிக அழகான துறைமுகம் எனப் பெயர் பெற்றது சிட்னி துறைமுகம்.

* பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதனின் பெயர் தாமஸ் ஸ்காட் பால்டுவின். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையின் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ள மணிதான் உலகிலேயே மிகப் பெரிய மணியாகும்.

* கூர்க்கா இன மக்களின் பூர்வீகம் நேபாளம் ஆகும்.

* அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம் என்பதாகும்.

* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜாப் பூ.





courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வேலூர் கோட்டை !!!


* இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது.

* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

* "மில்லினியம் மகாத்மா விருது' கேரளா முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.

* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.

* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பில்கேட்ஸ்... !!!!

வெற்றியாளர்களில் இரண்டு வகை...


உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை...


பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.



பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்। கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.





அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.





பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!





கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து
விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.



துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர்.
உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.


'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்
கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார்.
அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது.
அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்...
இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.


இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!


இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,


தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.


உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!

ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.


என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.


கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.

'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது.
ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது. ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.


இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.


அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.


'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.


இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!


2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்। ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தன்னம்பிக்கை வார்த்தைகள் !!!

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும்.
"வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதிர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள்.
அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே உங்களை வெற்றிபெறச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள்.செயலோடும் தொடங்குங்கள்.சிந்தனை செய்யுங்கள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள்.
உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.
நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல.விடாமுயற்சியினால் தான்.வெற்றியின் இரகசியம் "கடின உழைப்பு" என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்கள்.

நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.மனம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளையும், பிறரது திறமைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்தனைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.
வெற்றி பெறுவோம்' என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்துவிடாது செயலாற்றிக்கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயரவேண்டும் என்று உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங்கள்.
கட்டளையை முழு வேகத்துடனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலிலும் இறங்கிவிடுவீர்கள்.தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது". தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு". வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.

முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும்.வேதனையை மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த நிலையில்தான் நீங்கள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக்கும். பிரச்சனை களுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு 'எப்படி முடிந்தால் சிறப்பாக இருக்கும்' என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழுதினால் நிகழ்காலத்தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த்தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ்வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ' முடிவு இப்படி இருக்க வேண்டும்' என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிராமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டுவந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.

செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். காலத்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் 'வெற்றி வீரனே' என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள்.
நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான்.ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற்றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக்கொண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் எனக்கு துணை கேட்க மாட்டேன். வெற்றியடைய சுயலாபத்தைக் கொடு.
எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு.-தாகூர்நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படுகின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நிமித்தம். முழுமை பெறுவதே அமைதி.-தொல்காப்பியர்
எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்தை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பல்வேறு காரணங்களால் நமக்குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர் காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல்செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று "ஒரு சுயமதிப்பீடு" இல்லாதபோது நம்முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என்னால் முடியும் என்கிற நம்பிக்கையினைப் பெறுகிறபோது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.

ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலும் அத்தனைத் துறைகளிலும் நம்முடைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசியம்.முயற்சிகள் தொடரும்போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. முயற்சி விடாமுயற்சியாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகிறபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.

நான் விரும்பிய துறை கிடைக்கவில்லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணுவது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக்கொள்ளுகிறவன் என்றுதான் கருத வேண்டும்.கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங்களுடைய முழுத்திறமையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங்கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணரலாம்.

தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற்பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத்திலேயே வெற்றியின் அறிகுறியை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவைபோன்ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. மனஉறுதியென்பது நமக்கு நாமே உண்மையோடும்,நம்பிக்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான்.விழுவதில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில்தான், நமது வெற்றியின் ரகசியமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூடிய கதவுகளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்திருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.
பார்க்கின்ற பொருட்களில் மகிழ்ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கின்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழைப்பு எனும் இரயில் வெற்றி அனும் இடத்தை அடைய வேண்டுமானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண்டும்.தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் செயலில் துணிந்து இறங்கமாட்டார்கள்.
ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபிப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது. யாருடைய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத்துக்கு ஒப்பானவர்கள்.
முன்னேற்றப்பாதைக்கு, அகத்தூண்டுதல் ஒரு சதவிகிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .-எடிசன்சுறுசுறுப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதியோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்றமடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.-ஆண்ட்ரு கார்னீகிஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவியை செய்து கொள்கிறோம்.ஒரு இடத்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தான் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டும்.'இன்று' என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது.
அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். 'நாளை' என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.

தோல்வியை சந்திக்க நேரும் போது அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை "பிடிவாதமாக" மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேதனைகளை நினைத்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப் பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கியமாக 'சுய இரக்கம்' என்பது கூடாது.உங்களை யாராவது விரும்பாவிட்டால் அது அவர்களுடைய பிரச்சனை. அது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை.
மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போகும் நேரம் ரொம்பக் குறைவுதான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்.விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியாதது இல்லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை மிகவும் முக்கியமானவராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச்சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.

ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கையே அவனை முழுவேகத்தில் செயல்படவைத்து தடைகளையும் தாண்டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைகளையும் மறக்கவும், கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கையுடன் சிந்தியுங்கள்.வழிபிறக்கும்.

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழி
மனதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலட்சியத்தை அடையும்வரை, நமது மனமும் செயலும் இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன்மூலம் புகழையும் பெறுகிறார்கள்.
மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம்சங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்து வைக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சார்லி சாப்ளின் !!!

ஆளுமைகளை பற்றிய வாசிப்பே சுவாரஸ்யம் தான். அதுவும் நம்மை மயக்கிய, ஆச்சரியப்படுத்திய ஆளுமைகளை பற்றி தெரிந்து கொள்வது இன்னும் சுவாரஸ்யம். அதுவும் அந்த ஆளுமையே தான் வளர்ந்த விதத்தை விளக்கினால்..


அப்படிப்பட்ட ஒரு சுயசரிதை தான் “நான் நடிகனான கதை”. அந்த நபர் நம்மை எல்லாம் சிரிக்க வைத்த, இன்னும் பல ஆண்டுகளாகியும் இளம் சிறார் முதல் முதியவர் வரை பார்த்தவுடன் புன்சிரிப்பை வரவழைக்கும், கடந்த நூற்றாண்டின் மாபெரும் நடிகர், சார்லி சாப்ளின்.அரசியல் ரீதியாக பல சர்ச்சைகள் இருந்தும், ஒரு நடிகனாக, ஒரு சிந்தனையாளனாக, வாழ்வின் அடித்தளத்தில் இருந்து உயர்ந்த இடத்திற்கு சென்று நம்பிக்கை நட்சத்திரமாக விளக்கியவர் சார்லி சாப்ளின் என்பதில் ஐயமே இல்லை எனலாம்.

சார்லி சாப்ளின் தன் கதையினை குழந்தை பருவம் முதல் துவங்குகின்றார்.அவருக்கு நினைவு வரும் போது, அவருடைய தாயும் தந்தையும் பிரிந்துவிட்டு இருந்தார்கள்.
தனக்கும் ஒரு தந்தை இருக்கின்றார் என்பது பிற்காலங்களில் தெரியவருகின்றது. தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். அவருடைய தாய் பற்றி அவர் கூறும் போது தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பது புலனாகின்றது. அடுத்த வேளை உணவிற்கு கூட என்ன வழி என்று தெரியாமல் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்திருக்கின்றது.
பசியின் வலியினை அந்த இளம் பருவத்திலேயே அதிகம் அனுபவித்து இருக்கின்றார்.சார்லிக்கு உற்ற நண்பன், தோழன், துணைவன் அவருடைய அண்ணன் சிட்னி. சிட்னி, தன் தாயின் முதல் கணவருடைய மகன். சார்லி இரண்டாவது கணவரின் மகன்.வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிட்னி சார்லிக்கு துணையாக நிற்கின்றார். இருவரும் அனாதை விடுதியில் படும் வேதனைகள், தாயினை மனநல காப்பகத்தில் விட்டுவிட்டு தனியே இருக்கும் காலங்கள், பணத்திற்காக படும் அல்லல்கள், வேலை தேடி அலையும் நேரங்கள், எல்லா காலகட்டத்திலும் கூடவே இருக்கின்றார் சிட்னி.
பிற்காலத்தில் இவரும் நல்ல நடிகராக விலங்கினார்.சார்லி தன் தாய் மற்றும் சிட்னியுடன் வளர்கின்றார். பின்னர் வருமானம் ஏதும் இல்லாத நிலையில் அனாதை விடுதிக்கு மூவரும் செல்கின்றனர். தாயும் மகன்களும் பிரிந்துவிடுகின்றார்கள். சில காலம் கழித்து மீண்டும் ஒன்று சேர்கின்றார்கள்.
வரும் பணத்திற்கு ஏற்ப வீட்டினை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். பல்வேறு நபர்களையும் நண்பர்களையும் சந்திக்கின்றார்கள். தன் தந்தையுடன் மீண்டும் சேர்கின்றார்கள். இதனிடையில் தன் தாய் மனநலம் குன்றி மனநல காப்பகத்தில் அனுமதிக்கபடுகின்றார். தந்தை மிக்பெரிய நடிகர், அதே சமயம் பெரிய குடிகாரர். அவருடைய இரண்டாம் மனைவி லூசி வீட்டில் வளர்கின்றார்கள்.
சிட்னிக்கும் லூசிக்கும் சரவரவில்லை. தாய் குணமாகி திரும்புகின்றார். தையல் தொழில் செய்து வாழ்கை தொடர்கின்றது. இடையில் ஒருவருடம் சார்லி குழந்தைகள் நாடக குழுவில் சேர்கின்றார். தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர முடியவில்லை, அவருக்கும் படிப்பில் ஆர்வம் அதிகமில்லை. மீண்டும் தாய் மனநலம் காப்பகத்தில் சேர்கின்றார். அண்ணனும் வெளியூர் செல்கின்றார். தனிமை. வறுமை. போராட்டம்.
யாரும் இல்லாத சாலைகளில் பயணம். ஒரு வழியாக நாடக கம்பெனி ஒன்றில் இணைகின்றார். படிப்படியாக முன்னேறுகின்றார். அமெரிக்கா பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது புத்தகம் நிறைவு பெருகின்றது. அதன் பின்னால் நடந்தை கதை உலகமே அறியும்.இந்த புத்தகம் மொழிபெயர்ப்பு புத்தகம் என்பது வாசிக்கும் போது தெரியாத அளவிற்கு மிக எதார்த்தமான வார்தைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர்.
மேலை நாட்டின் சில பழக்க வழக்கங்கள் தான் சில சமயம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. என்ன செய்ய நாம் வளர்ந்துவிட்ட சூழல் அப்படி. சுயசரிதையில் ஒரு பகுதியில் ஒரு வீட்டில் மூன்று சிறுவர்கள் இருப்பார்கள். சார்லி, சிட்னி, மற்றும் நான்கு வயது சிறுவன். இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஆனால் சிட்னி தன் தாயின் முதல் கணவருடைய மகன், அந்த சிறுவன் தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன்.
என்ன இருப்பினும் அது அவர்கள் வாழ்கை முறை. எதை எடுத்துக்கொள்ள வேண்டும் அதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.சார்லி சாப்ளின் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு நடுவே மெல்லிய சோக இழை ஓடும். அனேகமாக எல்லா திரைப்படங்களிலும் இதனை காணலாம். சுயசரிதையில் அதற்கான அடித்தளத்தினை விளக்குகின்றார்.
மாபெரும் நடிகன் உருவான கதை உருக்கமாக, உணர்வு பூர்வமாக இருக்கின்றது. பட்ட காயங்களை எல்லாம் நினைத்து வந்தாமல் தொடந்து போராடு என்பதை உணர்த்துகின்றது. வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதே வெட்கம் என்பதை சொல்லாமல் சொல்கின்றது. எது வெற்றி, எதை நாம் அடைய வேண்டும் என்று நாம் தான் நிச்சயிக்க வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net