Sunday, November 28, 2010

என் வாழ்க்கை இனிமையாய்..


தனியனாய் இருந்தேன்...
finger art - amazing pics (19).jpg
அவள் வருகை சொர்கத்தின் வாசலாய்..
fingerface2.jpg
காதல் பூத்து குலுங்கியது..
finger-love.jpg
இணை பிரியாமல்..
cuddle,cute,emotion,fingers,funny,happy,smile,spooning-fd7eee9240c5484098420292deebb709_m.jpg
அவளின் அருகாமை சொர்க்கமாய்...
fingers.jpg
அவளின் பிரிவு...சொல்ல தெரியல... வார்த்தை கிடைக்காமல்....
Finger_food-600x450.jpg
மது என் தோழனாக..
funny_finger_art01.jpg
வாழ பிடிக்காமல் ...
creative-finger-art-13.jpg
பாதை தடுமாறியது...
fingerface-mickeyjohnson.jpg
அவள் நினைவுகள் இடையிடையே வந்து செல்ல...
love_fingers_by_Doux_bonbon.jpg
மாயம் நடந்தேறியது...
download_0028.jpg
என் கவலையை கொன்ற நண்பர்கள் என்னோடு...
awkward_finger_friendship_by_BluDee.jpg
என் வாழ்கை பயணத்தில் தோள் கொடுக்க தோழி இருக்கிறாள்...
2246840603_58942426f6.jpg
நான் தனியன் அல்ல நண்பர்களுடன்... சந்தோசமாய்..
19075full.jpg

சந்தோசமாய்..
யோகா :)


-- 


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கடி ஜோக்.

1. பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே! 

புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

2. ஒரு எறும்பு நினைச்சா,
ஆயிரம் யானையை கடிக்கலாம்.

ஆனால்,

ஆயிரம் யானை நினைச்சாலும்,
ஒரு எறும்பை கடிக்க முடியாது!!

3. ராமு: என் மனைவி என்ன செய்தாலும் குத்திக் காட்டுறா...

சோமு: இது எல்லார் வீட்டிலேயும் அன்றாடம் நடக்குற நிகழ்ச்சிதானே...
இதுக்குப் போய் அலுத்துக்குறீங்க!


ராமு:அட நீங்க வேற.. அவ குண்டூசியால குத்துறான்னுல்ல சொல்ல வந்தேன்...

4. ஜோ : என்னோட இ-மெயில் id : sarthaar123@yahoo.com, password: qweasd.

நண் : எதுக்கு பாஸ்வோர்டையும் சொல்றே?

ஜோ :அப்பத்தானே என்னோட லெட்டரை என்னுடைய இமெயிலில் நீ படிக்க முடியும்.

5. டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா...

ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு?

எவ்வளவு தீக்குச்சிய வ‌ச்‌சி ப‌த்த வ‌ச்சாலு‌ம் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே..



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிந்தனைகள்

· மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கிறது.


· உண்மையான சந்தோஷம் என்பது நம்முள்ளே இருக்கும் ஒரு தன்மையால், வாழ்வைப் பற்றிய ஒரு சிந்தனையால் ஏற்படுகிறது. திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே இல்லாவிட்டால், பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும் அது நம்மை மகிழ்விக்காது.

· நல்லவைகள் எதையாவது செய்வது, நல்லவைகள் எதையாவது நேசிப்பது, நல்லவைகள் எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.

· எவ்வளவு முறை தோல்வி பெற்றாலும் நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள். ஒரு காரியத்தை நன்கு செய்ததே அதன் வெகுமதிதான்.

· சந்தோஷம் என்பது பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்துவிடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்தமுடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது.

· தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலியான மனிதன்.

· ஒவ்வொரு தலைமுறையும் பழமை தனக்குத் தந்த புதையலை சந்தோஷமாக அனுபவிக்கிறது. பிறகு புதிய சொத்துக்களை அப்புதையலில் சேர்த்துப் பெரிதாக்கி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குகிறது.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சந்தி சிரிக்கிறது...



அந்தோ பரிதாபம்
அங்கே........ பார்...
அனியாயமொன்றுண்டு
அழுகிறார்கள் கூடிநின்று

அவனும் துரத்தித்துரத்தி
காதல் வலை வீசினானாம்
அவளும் அதில் மயங்கி
ஓடிவிட்டாள் அவன்பின்னே

ஒப்பாரி வைக்கிறார்கள்
பெத்த மனம் கலங்கிறதாம்
எப்படியெல்லாம் வளர்த்த பிள்ளை
ஏனிப்படி ஓடிவிட்டாள்

ஊரில் உள்ளவரெல்லாம்
ஓடிவந்து விசாரிக்க
துக்கம் தொண்டையடைத்து
தாழாமல் அழுகிறாளே....

பரவிய செய்தி கேட்டு
ஊர் முழுதும் சம்பாசனை
தலைகுனிந்த தந்தைமனம்
தரம் கெட்டதாய் அழுகிறது

நகரம் கண்டிராத
கிராமத்தின் தலையெழுத்து
ஒட்ட வீரர்கள்
காலத்துக்குக் காலம் ஓடுகிறார்கள்

அம்மா ஓடினாள் என்று மகளும்
அக்கா ஓடினாள் என்று தங்கையும்
அண்ணன் ஓடினான் என்று தம்பியும்
ஒட்டப்போட்டி நடக்கிறது..

காதலை வெல்வதற்காய்..
ஓடிவிட்ட உங்களைப்பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறதே உலகம்
ஏனதை மறந்து விட்டீர்கள்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net