Wednesday, January 5, 2011

தண்டனை ஏன்?

ஒரு முனிவர் ஒரு அரசனிடம்மரணத்தை வெல்லும்  அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார்.அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான்.கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.''இறவாக்கனியை உண்டஎன்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது.''என்றான் காவலாளி.'தவறு செய்தவனுக்குத் தண்டனை என்பதை யாராலும் மாற்ற முடியாது.இது சாதாரண பழம்.எப்படி உன் உயிரைக் காக்கும்?' என்று அரசன் கேட்டான்.''சாதாரணமான பழம் என்றால் அதைத் தின்ற எனக்கு நீங்கள் ஏன் மரண தண்டனை அளிக்க வேண்டும்?''என்று காவலாளி வினவினான்.அவனது புத்திக் கூர்மை அரசனை வியக்க வைத்தது.அவனைத் தன மந்திரியாக்கிக் கொண்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment