Wednesday, January 5, 2011

பொன்மொழிகள் -4

தனக்குத் தெரிந்த விசயங்களை மட்டும் மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும்.
                                                     *********
உண்மை கனமானது.எனவே தான் அதை சுமப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.
                                                   *********
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.
                                                  **********
மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
மட்டமான மனிதர்கள்  தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
                                                 *********
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
                                                *********
நல்ல யோசனை எது ,கேட்ட யோசனை எது என்ற வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமானால்.........
உங்களுக்கு எந்த யோசனையுமே தேவையில்லை.
                                                ********
கஷ்ட காலம் வந்து விட்டால்,ஒட்டகத்தின் மீது இருந்தாலும் நாய் கடிக்கத்தான் செய்யும்.
                                                ********
உங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தால் உங்கள் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.
உங்கள் பிள்ளைகள் கெட்டவர்களாக இருந்தால் உங்கள் சொத்து அவர்களுக்குப் பயன்படாது.
                                              **********
உங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது என்றால்
தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
                                               *********
உங்களுக்கு எதை சாப்பிடப் பிடிக்குமோ,அதைசாப்பிடாமல்,
உங்களுக்கு எது நல்லதோ அதை நீங்கள் சாப்பிட ஆரம்பித்தால்
உங்களுக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம்.
                                              **********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment