Sunday, May 30, 2010

தெரியுமா?

உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்.பூமியில் கால் படாமல் வானில் ஆகாய விமானத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தால் நம் கீழே உலகம் நம்மை விட்டுச் சுற்றுமா?
சுற்றாது.பூமிக்கு மேலே சில கிலோமீட்டர்  வரை  காற்றழுத்த மண்டலம் உண்டு.அந்த மண்டலமும் பூமியோடு சேர்ந்து சுற்றுகிறது.எனவே காற்றழுத்த மண்டலத்தில் இருப்பவர்களும் (பூமியில் கால் படாமல் இருந்தாலும)பூமியோடு சேர்ந்து சுற்றத் தான் செய்வர்.
**********
நம் முகத்தில் யாராவது பளாரென்று  அடித்தால் நாம் நட்சத்திரங்கள்  பறப்பதாக  உணருகிறோம் அல்லவா?சிலர் இதைப் பூச்சி பறப்பது போல்  இருப்பதாகச் சொல்கிறார்கள்.இது ஏன்?
கண் நரம்பு ,பொதுவாகக் கண்ணில் விழும்  ஒளிக் குறிகளைத் தான் மூளைக்கு எடுத்துச் செல்லும்.ஆனால் வலி போன்ற பாதிப்புகளை,அந்த நரம்பு மூளைக்கு உணர்த்தும் போதும்,மூளை,அதை ஒளிக் குறிப்பாகவே,பழக்கம் காரணமாக எடுத்துக் கொள்கிறது.அதனால் தான்  நம்  உடலில் வலியோ,சூடோ ஏற்படும் போது நாம் பூச்சிகள் அல்லது நட்சத்திரங்கள் பறப்பதாக உணர்கிறோம்.
**********
பனிக்  கட்டியைப் பார்த்தால் அதைச் சுற்றிப் புகை வருகிறதே?ஏன்?எப்படி?
அந்தப் புகை பனிக்  கட்டியிலிருந்து வருவதில்லை. பனிக்கட்டியைச் சுற்றி காற்றில் நீராவி இருக்கிறது.ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.பனிக்கட்டியின் குளிர்ச்சி நீராவியைக் குளிர்வித்து மிக நுண்ணிய நீர்த் திவலையாக மாற்றுகிறது.அது தான் புகை மாதிரி தெரிகிறது.இன்னும் சொல்லப் போனால் அதுவும் ஒரு வகை மேகம் தான்.
**********
நெற்றிப் பொட்டில் அடித்தால் மரணம் சம்பவிப்பது ஏன்?
நெற்றிப்பொட்டுப் பகுதி மற்ற பகுதிகளை விட வலிமை குறைந்தது.அடியால் அது பாதிக்கப் படும் போது தலைக்குள் மண்டையோடு முழுவதும் வியாபித்திருக்கும் மூளை அதிர்கிறது.மரணம் அளவுக்கு அப்பதிப்பு போகிறது.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விளக்கம்

தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது  ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
                                                                                        பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
                         உண்மையே பேசுபவர்கள்.
                         இனிமையாகப் பேசுபவர்கள்.
                         அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
                               நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
                               நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
                                                            ---ஆதி சங்கரர்.
                                                      (ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கை

தமிழில் 'கை'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!

'கை'கொடுத்தான்.
'கை' கூடி வர வேண்டும்.
'கை' ரொம்ப தாராளம் அவனுக்கு.
கையைக் கடித்து விட்டது.
கையோடு கையாய்
உள்ளங்கை நெல்லிக்கனி.
கை சுத்தமில்லைஅவனுக்கு.
அவனைக் கை கழுவித் தொலை.
கையால் ஆகாதவன்.
கை விட்டு விட்டான்.
எச்சிற்கையால் காக்காய் கூட விரட்ட மாட்டான்.
கையாடல்செய்து விட்டான்.
கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.
ஒரு கை குறையுது.
அடிக்கிற கை தான் அணைக்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல்....
கை மேல் பலன்.
கை நாட்டுப் பேர்வழி.
கையை நனச்சிட்டு வந்தான்.
கையைப் பிடித்தான்.
கை வைக்காதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

துர்நாற்றம்

ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக்  கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.
கொஞ்ச  நேரம்  ஆனவுடன்  கதவு  தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.
ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, May 27, 2010

பெருக்க வேண்டும்

கி.வா.ஜ வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந்தாள்.ஆள் கொஞ்சம் பருமன்.ஒரு நாள் கி.வா.ஜ.,ஒரு நண்பருடன் தரையில் அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.''என்ன இது?விசாலம் பெருக்க வேண்டும்.நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!''என்றார் கி.வா.ஜ.வின் மனைவி.''விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?''என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குத்துச்சண்டை

தன எதிரியை நன்றாக உதைக்க எண்ணி ஒருவன் குத்துச்சண்டை பழகவிரும்பினான்.முதல் நாள் பாடம் படிக்குமுன் அவன் உடம்பில் ஏகப்பட்ட குத்துக்கள் விழுந்தன.அடுத்த நாள் அவன் குருவிடம் சொன்னான்,''எனது எதிரியை நையப் புடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்.இப்போது அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன்.நாளை என் எதிரியை இங்கே அனுப்புகிறேன்.அவனுக்கு மீதியை நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கெளரவம்

நெப்போலியன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி பேசும் போது,''ரஷ்யாவில் நாங்கள் சண்டை போடுவது என்றால் அது கௌரவத்திற்காகவே,''அடுத்துப் பேசிய நெப்போலியன்,''அது உண்மை தான் அம்மணி!இல்லாத ஒன்றிற்காகத்தானே எல்லோரும் சண்டையிடுவார்கள்,''என்று சொன்னாராம்.

நீங்கள் யார்?
சார்லஸ் லாம்ப் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தார்.கூட்டத்தினர்,''ஷ்ஷ்ஷ்.....'' என்று ஓசைப் படுத்தினார்கள்.லாம்ப் கூட்டத்தைப் பார்த்து,''பாம்பு,வாத்து,முட்டாள் மூவரும் தான் இம்மாதிரி ஒலி எழுப்புவது உண்டு.மேடைக்கு வந்து நீங்கள் யார் என்பதை அறிமுகப் படுத்திக் கொள்கிறீர்களா?என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோம்பேறி

ஒரு ஊரில் ஒரு கெட்டிக்கார சோம்பேறி இருந்தான்.அவன் எந்த வேலையும் தான் செய்யாது,மற்றவர்கள் மூலமே செய்து கொள்வான்.
ஒரு சமயம் அவன் தன தோட்டத்தில் ஒரு புதிய கிணறு தோண்ட விரும்பினான்.சில அடி தூரம் அவன் தானே தோண்டி விட்டு மேலே ஏறி வந்து தன வேட்டியையும் முண்டாசையும் அவிழ்த்துப் பள்ளத்தருகே வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
அவன் போன பின் அந்தப் பக்கம் வந்த கிராம மக்கள் பாதி தோண்டப்பட்ட கிணற்றோரம் அவன் துணிகளைப் பார்த்து விட்டு உள்ளே எட்டிப் பார்த்து ஒருவரும் இல்லாததால் அவனை மண் சரிந்து மூடி விட்டது என்றெண்ணி  எல்லோரும் கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.தண்ணீர் தென்படும் வரை தோண்டியும் உடல் கிடைக்காததால் எல்லோரும் வீடு திரும்பினர். சிரமப்படாமல் தன கிணறு முழுக்கத் தொண்டப்பட்டதைக் கண்டு அந்தக் கெட்டிக்காரச் சோம்பேறி மகிழ்ச்சி அடைந்தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, May 26, 2010

அயிரை மீன்

ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தள்ளாதவன்

கி.வா.ஜ.வும் அவர் நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர்.வழியில் கார் நின்று விட்டது.;;சரி,இறங்கித் தள்ளுங்கள்,''என்றார் ஓட்டுனர் கி.வா.ஜ.வும் இறங்கித் தள்ளச் சென்ற போது மரியாதை காரணமாக ''நீங்கள் சும்மா இருங்கள்,''என்றார் காரின் சொந்தக்காரர்.கி.வா.ஜ.,கேட்டார்,''ஏன்,நான் தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இலைகள்

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம்                   --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை           ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை                        ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை                   --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள்  --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள்          --மடல் 
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள்            --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள்          --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள்             --கீரை 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, May 25, 2010

பந்தயம்

ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.''கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.''அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?'என்று கேட்டார்.அவனோ,''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,''என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான். புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,''என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.உடன் பதில் வந்தது.''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே  உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விந்தை எண்

2519  ஒரு விந்தையான எண்
இதை 9   ஆல் வகுத்தால் 8   மீதி வரும்.
இதை 8    ஆல் வகுத்தால்  7    மீதி வரும்

இதை7    ஆல் வகுத்தால்6    மீதி வரும்
இதை 6    ஆல் வகுத்தால் 5    மீதி வரும்
இதை5    ஆல் வகுத்தால்4    மீதி வரும்
இதை4    ஆல் வகுத்தால்3    மீதி வரும்
இதை3    ஆல் வகுத்தால் 2   மீதி வரும்
இதை2    ஆல் வகுத்தால்1    மீதி வரும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சம்மதம்

அந்தரே என்பவர் இலங்கைமன்னரின் அரசவை விகடகவி.அந்தரே ஒரு முறை மன்னரைப் பழி வாங்க எண்ணினார்.அரசருக்குச் சொந்தமான வயலில் நெல் அறுவடை ஆரம்பம் ஆகியது.வைக்கோலையும் நெல்லையும் பிரிக்க காளை மாடுகள் தேவைப்பட்டன.அந்தரேயைக் கூப்பிட்டுமன்னர்,''நூறு காளைகளுக்குச் சொல்லி விடு,''என்று சொல்லி விட்டார்.மறு நாள் காலை மன்னரும் மற்றவர்களும்  காளைகளுக்காகக் காத்திருந்தனர்.ஆனால் காளைகள் வரவில்லை.மன்னர் அந்தரேயைக் கூப்பிட்டு காரணம் கேட்க, அந்தரே ,''நானே நேரே போய்,காலையில்வந்து விட வேண்டும் என்று நூறு காளைகளிடம் சொல்லி விட்டு வந்தேன்.அவை கூட வருவதாகத் தலையையும் காதுகளையும் ஆட்டி சம்மதித்தன.ஆனால் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.''என்றாரே பார்க்கலாம்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, May 24, 2010

கூச்சல்

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான சார்லஸ் லாம்ப்,முதல் முதலாக நாடகம் ஒன்றை எழுதி முடித்தார்.நாடகம் நடந்தது.கூடியிருந்த மக்களுக்கு நாடகம் பிடிக்க வில்லை.கூச்சலிட்டனர்.கூட்டத்தினர் கூச்சலிட்ட போது சார்லஸ் லாம்பும் சேர்ந்து கூச்சலிட்டார்.கூட இருந்த நண்பர்,''நீங்களும் ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?''என்று கேட்டார்.லாம்ப் கூறினார்,''இல்லாவிடில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் நான் தான் என்று கண்டு பிடித்து உதைத்திருப்பார்களே?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மிருகம்

வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி; ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு;தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி; சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்; பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன்  கழுதை;தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
                                                       --மகா கவி பாரதியார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மூளை

ஒரு பெரிய வழக்கு. அதில் சி.ஆர்.தாஸ்,நார்ட்டன் துரை ஆகியோர் எதிர் எதிர் வழக்கறிஞர்கள்.ஒரு முறை சி.ஆர்.தாஸ் வாதம் செய்து கொண்டிருக்கையில் நார்ட்டன் எழுந்து துடுக்காக,''மிஸ்டர் தாஸ்!ரொம்பப் பேச வேண்டாம்.உம்மை என் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வேன்,''என்றார்.உடனே தாஸ்,    ''அப்படிச் செய்தால் உம்முடைய தலையில் இருப்பதை விட உமது பாக்கெட்டுக்குள் அதிக மூளை இருக்கும்.''என்றாராம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தண்டனை

பிரெஞ்சுக்காரரான வால்டேர் ஒருமுறை நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.அப்போது இங்கிலாந்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மனோநிலை மக்களிடம் இருந்தது.ஒரு நாள்  அவர்ஒரு தெரு ஓரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் கூட்டமாய் அவ்வழியே வந்தனர்.வால்டேரைப் பார்த்தவுடன்,''அதோ,ஒரு பிரெஞ்சுக்காரன் போகிறான்.அவனைத் தூக்கிலிடுங்கள்,''என்று கத்திக் கொண்டே அவரை சூழ்ந்து கொண்டனர்.வால்டேர்  அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''இங்கிலாந்தின் பெருமக்களே!நான் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் ஒரு பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே பெரிய தண்டனை என்று நான் எண்ணுகிறேன்.இந்தத் தண்டனை போதாதா?இதற்கு மேலும் ஒரு தண்டனை அவசியம் என்று நினைக்கிறீர்களா?''அவருடைய சமயோசிதமான பதிலைக் கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.அவர் த்ங்குமிடத்திற்குப் பத்திரமாக அழைத்து சென்றார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, May 22, 2010

ஏழு ஜாடி தங்கம்

கவலையில்லாத மனிதன் ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் புல்வெளிகளிலேஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் திரிவான்.அவனுக்கென்று ஒரே ஒரு  துண்டு  தவிர வேறு உடமைகள் கிடையாது.கவலையில்லாத அவனைக் கண்டு சைத்தானுக்குக் கவலை உண்டாயிற்று.அவனுக்குக் கவலை உண்டாக்க முடிவு செய்தது.ஒரு நாள் பகலில் அவன் ஒரு மரத்தடியில் ஆனந்தமாகப் படுத்திருந்த போது சைத்தான்,அசரீரியாகச் சொன்னது,''மனிதனே,நீ படுத்திருக்கும் இடத்திற்கு கீழே ஏழு  ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது.அதையெடுத்துச் சென்று மகிழ்வுடன் இரு.''முதலில் அக்கறை காட்டாத அம்மனிதன் பிறகு அசரீரி உண்மையானது தானா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்து தோண்டிப் பார்க்கையில் எழு ஜாடிகள் தென்பட்டன.ஆர்வமுடன் அவற்றை எடுத்துப் பார்த்ததில் ஆறு ஜாடி முழுக்கவும்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிலும் தங்கக் காசுகள் இருந்தன.அவனுக்கு தங்கக் காசுகளைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஆனால் ஏழாவது ஜாடியில் பாதி அளவே தங்கம் இருந்தது அவனுக்கு  வருத்தத்தைத் தந்தது.உடனே அவன் ஒரு முடிவு செய்தான்.கடுமையாகப் பாடுபட்டுச் சம்பாதித்தேனும் அந்த ஏழாவது ஜாடியைத் தங்கக் காசுகளால் நிரப்ப வேண்டும் என்று எண்ணி அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.சம்பாதித்த பணத்தை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான் பல காலம் உழைத்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.அவனுடைய மகிழ்ச்சி,ஆனந்தமான பாடல்கள்,ஆட்டபாட்டங்கள் எல்லாம் அவனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவன் இப்போது கவலையே உருவானவனாக இருந்தான்.சைத்தான் அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்.அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு துறவி அவனுடைய சமீப கால மாற்றங்களைக் கண்டு அவனிடம் கேட்டார்,''எங்கே போயிற்று உன் சந்தோசமெல்லாம்?அந்த ஏழு   ஜாடி தங்கம் உனக்குக் கிடைத்ததா?''அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவருக்கு இது எப்படித் தெரிந்தது என்று வினவினான்.துறவி சொன்னார்,''இதற்கு முன் இந்த ஜாடிகளை எடுத்தவர்கள் கதி இவ்வாறே ஆயிற்று.மேலும் இந்த ஏழாவது ஜாடி இறந்த ஒரு பேராசைக்காரனின் மண்டை  ஓட்டில் செய்யப்பட்டது.அதை நிரப்ப யாராலும் முடியாது.முதலில் அந்த எழு ஜாடிகளையும் தூக்கி எறிந்து விட்டு முன் போல் ஆனந்தமாக வாழ்வாயாக!''
பணத்தின்குணமே  அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே  தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கணக்குப்பாடம்

கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான்.அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார்.உடல் நடுங்க மகன் சொன்னான்,''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே,நீங்கள் பார்க்கவில்லையா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-8

ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.
வீழ்ச்சி அடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.
**********
வெற்றி தலைக்கும் ,தோல்வி இதயத்திற்கும்
செல்லாது பார்த்துக்கொள்.
**********
காலம் என்பது........
நம்பிக்கைகளின் தொட்டில்;
ஆசைகளின் கல்லறை;
முட்டாள்களுக்குக் கற்றுத் தரும் குரு.
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்.
**********
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
**********
இளமையாக இருக்கும் போது ரோஜா மலர்கள் மேல் படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மேல் படுக்க நேரிடும்.
**********
செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்;
ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது.
**********
பரவசத்தோடு பார்;எல்லாம் பரவசமாகும்!
எல்லாமே பார்க்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
**********
பயம் எப்போதும் எலியைக் கூடப் புலியாகக் காட்டும்.
**********
மனிதனுடைய பெரிய பிரச்சினை அடுத்த மனிதன் தான்.
கூடவே இருந்தாலும் பிடிக்காது;இல்லாவிட்டாலும் பயம்.
**********
தன கோபத்துக்கு மரியாதை இல்லை என்று தெரிந்தால்
யாரும் கோபப் படுவதில்லை.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, May 20, 2010

துறவறம்

ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

லைலா மஜ்னு

லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில்  மஜ்னு என்றால்  பைத்தியம் என்று பொருள்.அவனுடைய இயற்பெயர்  கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள்.லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது.கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர்.இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ஆசைப்பட்டார்.லைலாவைப் பார்த்த மன்னர் கயசை வரவழைத்து,''இந்தப்பெண் அப்படி ஒன்றும் அழகாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ இல்லையே!நீ ஏன் அவள் பின் பைத்தியமாகத் திரிகிறாய்?உனக்கு இவளைவிட எல்லா வகையிலும் சிறந்த பெண்ணைப் பார்த்து உனக்கு நான் கல்யாணம் செய்து வைக்கிறேன்.''என்று சொன்னார்.கயஸ் சொன்னான்,''லைலாவின் அழகை கயஷின்கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும்.வேறு கண்களுக்கு அவளின் அழகும் பெருமையும் தெரியாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, May 19, 2010

அதிக விலை

பாலஸ்தீன நாட்டுக்கு ஒருவர் உல்லாசப் பயணம் சென்றார்.அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது.இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை.படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.இருபதுடாலர் என்று அவன் சொன்னான்.இந்த தொகை மிகவும் அதிகம் என்று வாதிட்டார்,பயணி.''அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.''என்றான் படகோட்டி.'நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்.'என்றார் பயணி.''ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார்,தெரியுமா?''என்று கேட்டான் படகோட்டி.''.படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால்,நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!''என்று ஒரு  போடு போட்டார் பயணி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அழைப்பு

வயதான மனிதன் ஒருவன்,காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது,முடியவில்லை.நொந்து போய்,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?எமதர்மா!எமதர்மா,''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,'அப்பனே,என்னை நீ அழைத்த காரணம் என்ன?'என்று கேட்டான்.திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்,''என்றாராம்.உயிர் என்றால் யாருக்கும் வெல்லக்கட்டி தானே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, May 12, 2010

பொன் மொழிகள் -5

எல்லாம் வேடிக்கை தான்!நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை.
*********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
*********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது
பலவீனமான கொள்கையின் அறிகுறி.
*********
சுண்டெலி பூனையைப் பார்த்து சிரித்தால்
பக்கத்திலே அதற்கு ஒரு வளை இருக்கிறது என்று பொருள்.
*********
காசு வாங்காமல்,எதுவும் உனக்குக் கிடைத்தால்
அதற்கு உண்டான விலை இன்னமும்
வசூலிக்கப் படவில்லை என்பது தான் பொருள்.
********
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நம்மைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில்,நாம் குழந்தைகளாக இருந்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் பெரியவர்களாக இருந்ததில்லை.
********
வாழ்க்கையில் பயம் இருக்கலாம்.ஆனால்
பயமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது.
********
படுக்கைக்கு செல்லும் முன் செருப்புக்களோடு உன்
மனக் கவலைகளையும் வீட்டுக்கு வெளியே ஏறி.
********
இளமையாக இருக்கிறீர்களே என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால்,உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
********
''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்றுகேட்பார்கள்
.ஆனால்
புகழ்ந்து பேசுவதைத்தான் விரும்புவார்கள்.
********
பணம் என்பது ஆறாவது அறிவு .
அது இல்லாவிடில் ஐந்தறிவும்வீண்தான்.
********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையே
உள்ள இடைவெளி.
********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான்
எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலை தான் கொல்லும்
********
பொறாமையை நீ துணைக்கு அழைத்தால் முதலில்
அது உன் எதிரியை நெஞ்சில் அடிக்கும்.
பின் உன்னையே வயிற்றில் அடிக்கும்.
********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
********
மனிதர்கள் மோசமானவர்கள்.அபாயம் நீங்கியவுடன்
அவர்கள் ஆண்டவனை உடனடியாக மறந்து விடுகிறார்கள்.
********
சிறிது காலமே வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி அழகு.
********
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொது அழுபவன் தெம்பற்றவன்.
அழுகையிலிருந்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவன் நெஞ்சுரமுள்ளவன்.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க சொல் வந்து விட்டால்
முன்னால் சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதைவிட
இல்லை என்று மறுப்பதோ,அவமானப்படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்கு பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன;முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, May 1, 2010

பட்டாம் பூச்சி

வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என குருவிடம் சீடன் கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.''பரவாயில்லை,நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி தானே கிடைக்கும்,''என்றார் குரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net