Tuesday, June 8, 2010

தாமதம்

சாலையின் நடுவில் பெயிண்ட் கொடு போட ஒருவர் நியமிக்கப் பட்டார்.முதல் நாள் ஐந்து கிலோமீட்டர் தூரமும்,இரண்டாம் நாள் மூன்று கிலோமீட்டர்தூரமும்,மூன்றாம் நாள் ஒரு கிலோ மீட்டர் தூரமும் அவர் பெயிண்ட் கொடு போட்டார்.நாளுக்கு நாள் வேலை தாமதமாவதைக் கண்ட அதிகாரி,அந்த ஆள் மீது நம்பிக்கை இருந்த போதும் கூப்பிட்டுக் கண்டித்தார். பெயிண்டும் கையுமாக நின்ற அந்த வேலையாள் சொன்னார்,''அதை ஏன் கேக்குறீங்க?நானும் நாளுக்கு நாள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தான் உழைக்கிறேன்.ஆனால் பெயிண்ட் டப்பா இருக்கிற தூரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதே!ஒவ்வொரு தடவையும் இவ்வளவு தூரம் போய் பிரஷ்ஷில் தொட்டுக் கொண்டு வர வேண்டியிருக்கிறதே!அதுதான் காரணம்.''அதிகாரிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆடிப்பெருக்கு

ஆடி பதினெட்டு அன்று அதிகாலை.காவிரியின் கரையிலிருந்த ஒரு மரம்,காவிரியைப் பார்த்து,''நீ ஏன்இன்று இப்படிப் பெருக்கெடுத்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது.காவிரி சொன்னது,''பொழுது விடிந்ததும் பாவங்களைப் போக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பயங்கரமான பாவிகள் எல்லாம் என்னிடம் ஓடி வரப் போகிறார்கள்.அவர்கள்வருவதற்கு முன் தப்பித்து விட வேண்டும் என்று தான் நான் பயந்து ஓடுகிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முதன்மையான பரிசு

பகைவனுக்கு        --மன்னிப்பு.
நண்பனுக்கு           --இதயம்
குழந்தைக்கு           --நன்னடத்தை
தந்தைக்கு               --மரியாதை.
தாய்க்கு                   --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும்       --தாராள மனப்பான்மை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கறுப்பு ஆடு

மூன்று விஞ்ஞானிகள் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.வழியில் வயலில் ஒருகறுப்பு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
முதல் விஞ்ஞானி; இந்த கிராமத்தில் எல்லா ஆடுகளும் கறுப்பாக இருக்கும் போலிருக்கிறது.
இரண்டாம் விஞ்ஞானி; அதெப்படிச் சொல்ல முடியும்?இங்கிருக்கும் ஆடுகளில் சில கறுப்பு என்ற முடிவுக்கு வேண்டுமானால் நாம் வரலாம்.
மூன்றாம் விஞ்ஞானி; இந்த கிராமத்தில் இந்த ஆட்டின் நாம் காணும் ஒரு பக்கம் நிச்சயம் கறுப்பு என்று உறுதியாகச் சொல்லலாம்.
மெத்தப் படித்தால் இப்படித்தான்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net