Wednesday, January 5, 2011

திருட்டு

கடைத் தெருவுக்கு தன் புது சைக்கிளுடன் வந்த ஒருவர்,தன சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு சைக்கிளைப் பற்றிய நினைவே இல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.அந்த சைக்கிளுக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லை.
மறுநாள் காலை திடீரென அவருக்கு சைக்கிள் ஞாபகம் வந்தது.கடைத்தெருவுக்கு ஓடோடிச் சென்றார்.சைக்கிள் நிச்சயம் திருடு போயிருக்கும் என்று நினைத்தார்.என்ன ஆச்சரியம்!சைக்கிள் அவர் விட்டுச் சென்ற இடத்திலே பத்திரமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்ல விரைந்தார்.இறைவனை வழிபட்டு வெளியே வந்து பார்த்தால் சைக்கிள் திருட்டு  போயிருந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment