Wednesday, January 5, 2011

பெண்ணின் பெருமை

இயந்திரக் கோளாறில்  சிக்கிய ஹெலிகாப்டரிலிருந்து கயிற்றில் பதினோரு பேர் தொங்கினர்.பத்து ஆண்கள்;ஒரு பெண்.அத்தனை போரையும் கயிறுதாங்காது;யாராவது ஒருவர் கையை விட்டு கீழே விழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.யார் அந்த ஒருவர் என்பது தான் பிரச்சினை.விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பெண் பேசத் துவங்கினாள்,''நான் கயிற்றிலிருந்து குதிக்கப் போகிறேன்.பெண்ணின் பிறப்பே தியாகத்தில் தான் முழுமைபெறுகிறது.கணவனுக்காக,குழந்தைகளுக்காக,...ஏன்?மற்றவர்களுக்காக விட்டுத் தருபவளே பெண்.பலனை எதிர் பாராமல் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே பெண்ணின் பெருமை.''
பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை அந்த பத்துப் பேரிடமிருந்தும் கேட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment