Sunday, January 10, 2010

வழுக்கை

''தென்னை மரத்துக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்.எப்படி?''என்று திரு.கி.வா.ஜகன்னாதனிடம்நண்பர் வினவினார்.
''தென்னை மரத்தில் காய்க்கும் தேங்காயில் இளமையில் வழுக்கை இருக்கும்.மனிதனுக்கு முதுமையில் தான் வழுக்கை வரும்.''என்று அழகாகப் பதில் சொன்னார் கி.வா.ஜ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முத்து எங்கே?

நதிக்கரையில் இருந்த ஞானியைப் பார்க்க பெரிய கூட்டம்.பெரிய பணக்காரர் ஒருவர் பொறுமையின்றிக் காத்திருந்து தன முறை வந்த போது,தான் பணக்காரன் என்பதை உணர்த்த இரண்டு விலை உயர்ந்த முத்துக்களைக் கொடுத்தார்.ஞானி அதை வாங்கிப் பார்த்து விட்டு அதில் ஒன்றை நதியில் நழுவ விட்டார்.முத்து நதியில் விழுந்து விட்டது.பணக்காரர் அதிர்ச்சியடைந்து முத்தைத் தேட ஆரம்பித்தார்.கிடைக்கவில்லை.ஞானியிடம் வந்தார்.''அந்த முத்து எங்கே விழுந்தது என்று காட்டுங்கள்.''என்று அவரிடம் கேட்டார்.ஞானி இன்னொரு முத்தையும் நதிக்குள் வீசி,''இந்த முத்து விழுந்த இடத்தில் தான் முதல் முத்தும் விழுந்தது.''என்று மிக அமைதியாகக் கூறி விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net