Thursday, July 15, 2010

நல்ல முடிவு

ஒரு இளைஞனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு ஒன்று வந்தது.அந்த   வேலை மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்ற காரணத்தால் அவனுக்கு அந்த வேலையை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டது.முடிவு சொல்ல ஒரு நாள் அவகாசம் கேட்டுவிட்டு தன் தாயிடம் கருத்துக் கேட்கச் சென்றான்.தாய் படிப்பு அறிவு இல்லாதவள்.அவன் சொன்ன முழு விபரங்களையும் கேட்டு விட்டு அவள் சொன்னாள்,''நீ சொன்ன விஷயங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை.அனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.ஒவ்வொரு நாள் காலையிலும் உன்னை நான் தூக்கத்திலிருந்து எழுப்ப வரும் போது நீ நிம்மதியாகத்  தூங்கிக் கொண்டிருப்பாய்.உன்னை எழுப்புவது பெரும்பாடு.அந்த நிலை தொடர வேண்டும்.நான் எழுப்ப வரும் போது நீ உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பதைக் காணநான் சகித்துக் கொள்ள . மாட்டேன்.இறுதி முடிவு எடுக்க வேண்டியது நீ தான்,''இதைச் சொல்லிவிட்டு  தாய் அங்கிருந்து வெளியேறினாள்.இளைஞன் தனக்குள் சொல்லிக் கொண்டான்,'எனக்கு நல்ல முடிவு கிடைத்துவிட்டது.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net