Wednesday, January 5, 2011

தன்னம்பிக்கை

சுவாமி விவேகானந்தர் தன் சீடருடன் ஒரு கோச் வண்டியில் பாரீசில் சென்று கொண்டிருந்தார்.ஒரு இடத்தில் கோச் ஓட்டியவர் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு எதிரே இருந்த வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை அரவணைத்து முத்தம் கொடுத்துப் பின்னர் வந்து வண்டியை இயக்க ஆரம்பித்தார்.சீடர் அக்குழந்தைகள் யாரெனக் கேட்க அவை தன் குழந்தைகள் தாம் என்றார்.அக்குழந்தைகள் மிகவும் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தென் பட்டது பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''நான் இந்த நாட்டிலுள்ள ஒரு பெரிய வங்கியின் சொந்தக் காரன்.வங்கி சமீபத்தில் நொடித்து விட்டது.இருந்த கொஞ்சம் பணத்தில் ஒரு சிறு வீடு வாங்கினேன். யாருக்கும் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை.நானும் என் மனைவியும் உழைப்போம்.என்றாவது ஒரு நாள் எங்கள் வங்கியை மீட்போம்.''விவேகானந்தர் சொன்னார்,'இவர் தான் உண்மையான ஞானி;வேதாந்தி.பெரிய வேதாந்தங்கள் சொல்வதை செயல் படுத்துபவர்.இவரிடம் தான் எவ்வளவு தன்னம்பிக்கை?'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment