Monday, March 14, 2011

நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!




நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். ( HDL) கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.
நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
சோம்பலை உதற முடியும்!

காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பாக விழிப்புடன் ஒருவர் பணி புரியவேண்டும் என்றால், அவர் உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இரும்புச் சத்து குறையும்போது உடல் பலவீனம் அடையும். இரும்புச் சத்துதான் ஆக்ஸிஜனை சுமந்து சென்று எல்லா உறுப்புகளுக்கும் விநியோகித்து உடலுக்குச் சக்தியைத் தருகிறது. முக்கியமாக மூளையில் டோப்பாமைன் என்ற இரசாயனப் பொருள் சுரந்தால், மனதும் உடலும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இதற்கும் இரும்புச் சத்துதான் தேவை.
மாதவிலக்கின் போது பெண்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதால் மிகவும் களைப்புடன் இருப்பார்கள். உடற்பயிற்சியின் போதும் இந்தச் சத்து உடலில் குறைகிறது. ஐந்து உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் இரும்புச் சத்து எளிதாகக் கிகிக்கப்படும். உடலும் மனமும் படு சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும்.
சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்


சோர்வை அகற்றும் பழம் எது?

நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!

நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
கருத்தரிக்க வழி!

மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.

மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!

தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது.
இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

அழகைத் தரும் கீரைகள்!

கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
மலச்சிக்கல் தீர!

பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!
மேலும் சில துளிகள்.
1. வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.
2. இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

3. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
நன்றி கே.எஸ். சுப்ரமணியம்.
நன்றி தமிழ்வணன்.காம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொலெஸ்ட்ரோல் - 1




'கொலஸ்ட்ரால்'(Cholesterol) என்றால் என்ன ?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுபோன்ற, கொழுப்பு போன்ற பொருள். மனித உயிர் அனுக்கள் (நீமீறீறீ) உட்பட எல்லா விலங்கு உயிர் அளுக்களிளும் இது இருக்கும். இது உடல் முழுதும், குறை அடர்த்தி லிபோபிரோட்டீன் (LDL)அதிக அடர்த்தி லிபோபிரோட்டீன்(HDL)எனப்படும் லிபோபுரோட்டின்கள் மூலம் எடுத்துக்சொல்லப்படுகிறது. லிஞிலி என்பது அடிக்கடி 'கெட்ட' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு உங்கல் இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும். என்றும் குறிக்கப்படுகிறது. பிஞிலி என்பது வழக்கமாக, 'நல்ல' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு இதயநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் குளிக்கப்படுகிறது. (இரண்டு சொற்களும் இரத்த கொலாஸ்ட்ராலையே குறிக்கும். இவற்றை உணவுப்பொருட்களை நீங்கள் பார்க்க முடியாது) விரும்பத்தக்க (வீபீமீணீறீ) இரத்த கொலாஸ்டிராலின் அளவு 200 mgm/dl (5.17 mmol/l)கு குறைவானதாகும்.

ஏன் கொலாஸ்டிரன் முக்கியமானது ?

உங்கள் உடல், கொலாஸ்டிராலை கீழ்க்கன்டவற்றுக்குப் பயன்படுத்துகிறது:

a. வளர்ச்சிக்கும், உயிர் அனுத்தகளைப் பபழுதுபார்க்கவும்.

b. பித்தப்பை பித்தநிறைச் சுரக்கவும் அதன் வழி உணவுப் பொருட்களில் உள்ள கொழுப்பைச் செரிக்கவும்.

c. ஹார்மோன்களை
உற்பத்தி செய்யவும்.

அளவுக்கதிகமான கொலஸ்டிரால் ஏன் தீங்கானது ?

அளவுக்கதிகமான கொலஸ்டிரால், மற்றும் பிற கொழுப்புகள் தமணிகளின் சுலற்றில் படிந்து அவற்றை கொட்டி படுத்துகின்றன. இதன் விறைவாக:

a. இதய நோய்களும், இதய தடையும் ஏற்படும்.

b. பக்கவாதம் - இதன் விளைவாக பலலீனமும், உடலின் ஒரு பக்கம் செயலிழந்து போகும்.

c. கால்களில் உள்ளதைப்போல பெரிய தமணிகளில் நோய்கள் ஏற்படும்.

உடல் எங்கிருந்து கொலாஸ்டிரலைப் பெறுகிறது ?

i.உங்கள் உணவிலிருக்கும் கொழுப்புப்பொருட்கள், டிரோட்டீன், சர்க்கரை பொருட்களிலிருந்து உங்கள் ஈரல் குலை (றீவீஸ்மீக்ஷீ) யும் பிற இழைமங்களும் உங்களுக்குத் தேவையான கொலாஸ்டிரலைத் தயாரிக்கின்றன.
ii.உணவுசார்ந்த கொலாஸ்டிராலை நீங்கள் விலங்கு அடிப்படையான உணவுப்பொருட்களிலிருந்து பெறுகிறீர்கள் தாவர உணவுகளில் அரிதாக கொலாஸ்டிரால் பெற்றிருக்கும்.

கொலாஸ்டிரலை அளிக்கும் உணவுவகைகள்

a. முட்டைக்கரு
b. ஈரல், மூளை, சிறுநீரகம், குடல், இதயம் முதலான விலங்கு உடற்பகுதிகள்

c. மாமிசம், கோழியுணவு, மீன், இறால், மற்றும் பிற கடல் உணவுகள்

d. அதிக கொழுப்புள்ள பால் உற்பத்திகள்.

உங்கள் உணவில் கொழுப்பு

உணவில் பலவகை கொழுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடல் உடல் நிலையில் வெவ்வேறு தாக்குதல்களை ஏற்படுத்து கின்றன:
1. செறிவான (saturated) கொழுப்பு
இவை பெரும்பாலும் விலங்குகளிநிலிருந்து பெறப் படுகின்றன. தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், தோக்கோ, வெண்ணெய் போன்ற காய்கறி கொழுப்புகளும் சிறந்த ஆதாரங்களாகும் இவை வழக்கமாக தீய கொலஸ்டிரல் மட்டத்தை (LDL) அதிகரிக்கும்.
2. பல் நிறை செறிவூட்ட மில்லாத (poly unsaturated) கொழுப்பு
இவை முக்கியமாக காய்களி ஆதாரமாக கிடைத்து, உடலின் மொத்த கொலாஸ்டிரல் மட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. கூல எண்ணெய் (corn-oil) சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் முதலியலை சில உதாரணங்களாகும். சார்டின்ஸ் (sardines) எனப்படும். பத்னச் இறு கடல் மீண்டும் கானங்கொளுத்தி (mackerel) எனும் மீன் போன்ற சில வகை மீன் களிலும் பல்நிறை செறியூட்ட மில்லாத கொழுப்பு அதிகம் உள்ளது.
3. ஒரே நிறை செறிவூட்டமில்லாத (monounscturcted) கொழுப்பு
ஆலிவ், பட்டாணி, என், மற்றும் கேனோலா (canola) எண்ணைய்களில் இது இரக்கும். இந்தக்கொழுப்புப்பொருட்கள் கொலாஸ்டிராலைக் குறைக்க உதவலாம். ஆய்வுகள், இவை நல்ல கொலாஸ்டிரால் அளவை அதிகரிக்கும் என்றும் காட்டுகின்றன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

நெல்லி (Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது
சித்த மருத்துவத்தில் நெல்லி மரத்தின் அனைத்து ( இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை ) பாகமும் பயன் உள்ளது.
*
இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.
*
அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர்.
*
இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.
*
நெல்லியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
*
பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைஉடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
*
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால்கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
*
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரைநோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய்,தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோதேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.
*
இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.
***
நெல்லிக்கனியின் சிறப்பு
1. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
*
2. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.
*
3. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
*
4. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது.
*
5. இருதய அடைப்பை தடுக்கிறது.
*
6. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
*


7.நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.

*

8. உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

*

9. நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.

*

10. நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

*

11. நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

*

12. நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

*

13. பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

*

14. நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

*

15. உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

*

16. நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

*

17. நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

*

18. நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

*

19. நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

*

20. பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

*

21. நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.

*

22. நெல்லிச்சாறில் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

*

23. நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

*

24. நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

*

25. நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.

*

26. நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொலெஸ்ட்ரோல் - 3



கொலஸ்ட்ரால் பற்றி ஓரள‌வுக்கு தெரிந்து கொண்டு இருப்பிற்கள்.

இனி நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL); தீய கொலெஸ்ட்ரோல் (LDL) பற்றி பார்ப்போம்.
உடலில் உள்ள பல்வேறு விதமான கொழுப்புச் சத்துகள்:

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு விதமான கொழுப்புகள் உள்ளன. டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே!
இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.

கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிபொப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது.
லிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும். அவை:
1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிபோப்ரோட்டின் (LDL)
2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிபோபுரோட்டின் (HDL)

அடர்த்திக் குறைவான லிபோபுரோட்டீன் (LDL):

இது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டு கொழுப்புக் கோடுகளை உற்பத்தி செய்து விடுகிறது.
இந்தக் கொழுப்பு கேடுகள் நாளடைவில் அதிகமதிகம் சேர்ந்து உயரத்திலும் அகலத்திலும் பெருத்த நாறுகளாலான தடுப்புப் பலகைகளைப்போல் மாறிவிடுகின்றன. காலப் போக்கில் இவற்றின் அளவு மேலும் அதிகரிப்பதன் மூலம் இருதயத்தின் பகுதிகளுக்குச் செலுத்தப்படும் இரத்த ஓட்ட வேகத்தைத் தடுத்துவிடுவதனால் மாரடைப்பு (Heart attack) ஏற்படலாம். மூளைக்குச் செலுத்தப்படும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பக்கவாத நோயால் தாக்குதலுக்குள்ளாகலாம்.
அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றியபின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.
அதிக அளவான கொலெஸ்ட்ரோல் எவ்வாறு இருதய நோய்களுக்கு காரணமாகிறது?

நமது உடல் தனக்குத் தேவையான அளவில் கொலெஸ்ட்ரோலைக் கல்லீரலின் இயக்கம் மூலம் தயாரித்துக் கொள்கிறது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர், நாம் மாமிச உணவுகள் உட்கொள்வதன் மூலம் தேவைக்கு அதிகமான அளவில் கொலெஸ்ட்ரோல் உருவாகி, அது இரத்த, தமனிக் குழாய்களின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் தடுப்புப் பலகைகளைப் போல் தங்கிவிடுகிறது. மேலும் இவை சிறிது சிறிதாகச் சேர்ந்து அளவை அதிகப்படுத்தும் வகையில் வளர்வதன் காரணமாக இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது.
இதன் விளைவாகத் தனக்குத் தேவைப் படும் அளவை விடக் குறைவான இரத்தத்தை நமது இருதயம் பெறுகிறது. இரத்தம் நம் உடலில் பயணிக்கும்போது தன்னுடன் இருதயத்திற்குத் தேவையான 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் உயிர்வளியையும் கொண்டு செல்கிறது. நல்ல அளவிலான ஆக்ஸிஜன் கொண்ட இரத்தம் இருதயத்திற்குச் செல்ல இயலவில்லையெனில், 'ஆன்கினா' Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது துண்டிக்கப்பட்டால் அதன் விளைவாகவே heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது.
சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. அளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
கொலெஸ்ட்ரோல் அளவை இரத்தத்தில் அதிகப்படுத்துபவை யாவை?

பல்வேறு காரணிகள் இரத்தத்தில் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகப்படுத்துகின்றன :

- அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
- அதீத உடற்பருமன் (Obesity)
- உடல் இயக்கக் குறைவான பணிகள்
- புகைப் பழக்கம்
- மன அழுத்தங்கள்
- மதுப் பழக்கம்
- சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்
- கருத்தடை மாத்திரைகள் உட்கொள்தல்
- வயோதிகம்
- பாலியல் காரணங்கள் (பெண்கள் குழந்தை பெறும் பருவத்தில் குறைந்த கொலெஸ்ட்ரோல் அளவினைப் பெற்றிருப்பர்).
- தலைமுறை

இரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதன் அறிகுறிகள் என்ன?

பொதுவாக இரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; ஆகையால்தான் அது "அமைதியான உயிர்க்கொல்லி" என்று அறியப்படுகிறது.
இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எவ்வாறு கணக்கிடுவது?

இளைஞர்களும் வயதானவர்களும் தங்கள் இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

இப்பரிசோதனை மூலம் :

இரத்தத்திலுள்ள மொத்த கொலெஸ்ட்ரோல்
LDL (தீய) கொலெஸ்ட்ரோல்
HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்
டிரிக்ளைஸெரைட்ஸ்
ஆகியவற்றின் விபரங்களை அறியலாம்.

நல்ல ஆரோக்கியமான நிலையான கொலெஸ்ட்ரோல் மற்றும் ட்ரிக்ளைஸெரைட்ஸ் அளவுகள் எவை?

1) மொத்த கொலெஸ்ட்ரோலின் இயல்பான அளவு:
200 mg/dl க்கும் குறைவாக (5.2 mmol/L க்கும் குறைவாக)
2) LDL (தீய)கொலெஸ்ட்ரோலின் இயல்பான அளவு:
130 mg/dl க்கும் குறைவாக (3.37 mmol/L க்கும் குறைவாக)
3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோலின் இயல்பான அளவு:
ஆண்கள் : 40-50 mg/dl க்கும் குறைவாக (1.0-1.28 mmol/L க்கும் குறைவாக)
பெண்கள் : 50-60 mg/dl க்கும் குறைவாக (1.28-1.54 mmol/L க்கும் குறைவாக)
4) டிரிக்ளைஸெரைட்ஸின் இயல்பான அளவு :
150 mg/dl க்கும் குறைவாக (1.69 mmol/L க்கும் குறைவாக)

முக்கியமாக இரண்டு விதமான அளவுகோல்கள் மூலம் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்படுகின்றது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் விதம், எடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை. இன்னொன்று, மூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை. உங்களது கொலெஸ்ட்ரோல் பரிசோதனை முடிவை நீங்கள் புரிந்து கொள்வதற்கும் குறிப்பிட்டுச் சொல்வதற்கும் இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து வகைகள் (Fats) யாவை?

திடக் கொழுப்புகள் (saturated):

முக்கியமாக, மாமிச உணவு வகையில் இருந்து திடக் கொழுப்பு வகைகள் கிடைக்கின்றன. தேங்காய் எண்ணெயிலும் பாமாயிலி(Palm oil)லும் அதிக அளவிலான திடக் கொழுப்புகள் உள்ளன. இந்த வகை திடக் கொழுப்புகள்தாம் 'தீய' (LDL) கொலெஸ்ட்ரொலை இரத்தத்தில் அதிகப் படுத்தி, தமனிக் குழாய்களின் உட்சுற்றளவைக் குறுக செய்கிறது; அடைப்புகளையும் ஏற்படுத்துகிறது.

திடக் கொழுப்புகளை உள்ளடக்கிய உணவு வகைகள் : பால், வெண்ணெய், இறைச்சி, பாமாயில், தேங்காய் எண்ணெய், தாவர நெய்.

திரவக் கொழுப்புகள் (1) (polyunsaturated):

எண்ணெய், விதை மற்றும் தானிய உணவுப் பொருட்களிலிருந்து திரவக் கொழுப்புகள் உருவாகின்றன. திரவக் கொழுப்புகள் LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை இரத்தத்திலிருந்து குறைத்து, இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவை. ஆயினும், திரவக் கொழுப்புகள் நம் இரத்தத்தில் கூடிவிட்டாலும் அவை HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலைக் குறைத்து விடக்கூடும். ஆகையால் கீழ்க்காணும் திரவக் கொழுப்பு வகைகளை அதிகமாகவுமில்லாமல் குறைவாகவுமில்லாமல் நடுநிலை அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய் உணவு வகைகள் : சோள எண்ணெய் (Corn oil), சூரியகாந்திப்பூ எண்ணெய் (Sunflower oil), ஸாஃப்பூ (Safflower) எண்ணெய், ஸோயாபீன் எண்ணெய் (Soya been oil).

திரவக் கொழுப்புகள் (2) MonoUnsaturated:

மோனோஅன்ஸேடுரேடெட் எனும் திரவக் கொழுப்புகள் தானிய வகைகளில் அதிகம் கிடைக்கின்றன. பொலிஅன்ஸேடுரேடெட் கொழுப்பு வகைகள் பேன்றே மொனோஅன்ஸேடுரேடெட் கொழுப்புகளும் இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவையாகும். ஏனெனில் அவை நம் இரத்தத்திலுள்ள LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை குறைத்து HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் இவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ளவேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய்/தானிய உணவு வகைகள் : ஓலிவம் எனும் ஜைத்தூன் எண்ணெய், கனோலா canola எண்ணெய், பாதாம், முந்திரி, வேர்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை.
அமிலக் கொழுப்பு:

ஒமேகா-3 (Omega 3 acids) எனும் கொழுப்பு அமிலங்கள் இன்னொரு வகை பொலிஅன்ஸேடுரேடெட் கொழுப்புவகை ஆகும். இவை முக்கியமாக மீன் எண்ணெயில் கிடைக்கின்றன. இவையும் இருதய நோய்கள் உருவாவதைக் குறைப்பவையாகும்.

அமிலக் கொழுப்பு மீன் வகைகள் : TUNA (ஐலா/கும்பலா) KING FISH (வஞ்சிரம்/ஐகுரா), SALMON கெண்டை, SARDINES சூடை/மத்தி போன்ற மீன்கள்.

நீரகக் கொழுப்பு (Hydrogenated):

பொலிஅன்ஸெடுரேடெட் அல்லது மொனொ அன்ஸேடுரேடெட் கொழுப்புகளுடன் கலந்து நீரகக் கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நீரகக் கொழுப்பு, திடநிலைக்கு மாற்றம் பெறுகிறது. இந்த முறை மூலம் அன்ஸேடுரேடெட் கொழுப்புகளை ஸேடுரேடெட் கொழுப்புகளாக அது மாற்றுகிறது. அவசர (fast food) உணவுகளில் நீரகக் கொழுப்பு உபயோகிக்கப் படுகின்றது.
'கொலெஸ்ட்ரோல்' அளவைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்டவற்றை முறையாகக் கடைபிடிப்பது, நமது இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுபாட்டில் வைக்கைவும் இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.
சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல்:

ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்
மாமிசத்திலுள்ள தோல்கள் மற்றும் கொழுப்பை, சமைப்பதற்கு முன்னர் நீக்கிவிட வேண்டும்


வாரமிருமுறையேனும் மீன் உண்ண வேண்டும்
எண்ணெய்யில் பொறித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.



மொனொஅன்ஸெடுரேடுட் எண்ணெய் மற்றும் பொலி அன்ஸேடுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.

டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.
வெண்ணையைத் தவிர்த்து, திரவநிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.

முட்டையின் மஞ்சட்கருப் பகுதியை உண்பதைத் தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்புணவைத் தவிர்க்க உதவும்.

இனிப்புணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.



தவறாத உடற் பயிற்சி:

ஒவ்வொருவரும் போதிய உடல் அசைவு ஏற்படும் வகையிலான பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அதனால் நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL) அதிகரிக்கும்; தீய கொலெஸ்ட்ரோல் (LDL) குறையும்; அளவுக்கு அதிகமான உடலின் எடையைக் குறைக்கவும் உதவும்.

உடற் பயிற்சியை மெதுவாகத் துவக்கி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். தினமும் தொடர்ந்து உடற் பயிற்சி செய்வதைக் குறிக்கோளாகவே கொள்ள வேண்டும்.

தினமும் முப்பது நிமிடங்களாவது உடலசைவுடைய பயிற்சிகளைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அவை நடுத்தரமான பயிற்சிகளாக இருத்தல் வேண்டும். அந்தப் பயிற்சிகள், நாம் சாதாரணமாக சுவாசிப்பதைவிட சற்று வேகமாக நம்மை சுவாசிக்கச் செய்ய வேண்டும். உதாரணமாக வேகமாக நடக்கும்போது மூச்சு ஏறுவதைப்போல். அதே நேரம் மிகவும் அதிகமாக மூச்சுத் திணரும் வகையிலும் இருக்கக் கூடாது. நம்மால் பேச இயலும் விதத்தில் இருக்க வேண்டும்.

பயிற்சிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு இருக்க வேண்டியது அவசியமில்லை. ஒரு நாளில் ஒன்றுக்கு மேல் பல முறைகள் - அதாவது இரண்டு மூன்று முறைகள் செய்யலாம். ஒவ்வொரு முறைக்குப் பத்து-பத்து நிமிடங்கள் வீதம் என்றும் செய்யலாம். ஆனால் குறைந்த பட்சம் ஒரு முறைக்குப் 10 நிமிடங்களாவது பயிற்சி செய்ய முயல வேண்டும்.

நமக்கு விருப்பமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைச் செய்யும்போது சலிப்பு ஏற்படாத விதத்தில் இருக்க வேண்டும். கொலஸ்ட்ரோலைக் குறைப்பதற்கான சிறந்த பயிற்சிச் செயல்கள் நம் கால்(களின் நரம்பு)களை உபயோகிக்கக் கூடியதே. கால் நரம்புகள் வேகமாகச் செயல்படும்போது, நமக்கு அதிகமான அளவில் ஆக்ஸிஜென்(Oxygen) தேவை ஏற்படுகிறது, ஆகையால் இருதயம் வேகமாக இயங்கி இதை நிறைவு செய்கிறது. அவ்வாறு செயல்படுவதால் இருதயம் உறுதியாகி, மிகவும் சீரான முறையில் இயங்க வழி பிறக்கிறது. உதாரணம் சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி செய்தல் போன்றவை.

எந்த உடற்பயிற்சியையும் தொடங்கும் முன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

புகைப் பழக்கத்தைக் கைவிடுதல்:

புகைப் பழக்கம் இருதய நோய்கள் மற்றும் இதர கேடுகளின் அபாயத்தை இரட்டிக்கச் செய்கிறது. இது நல்ல கொலெஸ்ட்ரொலை (HDL) குறைக்கிறது. தீய கொலெஸ்ட்ரொலை (LDL) அதிகரிக்கிறது. புகைபிடித்தல் நுரையீரல் புற்று நோய் (lung cancer) ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் புகைப் பழக்கத்தை முழுமையாகக் கைவிடுதல்.

தாம் புகைக்காவிடினும் புகைப்பவர்கள் புகைக்கும் புகையை சுவாசிக்கும் மறைமுகப் புகைபிடித்தல் (Passive smoking) என்பதும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதே. குறிப்பாக, பெரியவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தினால் குழந்தைகள் இந்தப் பாதிப்புக்கு ஆளாகி, பல்வேறு நோய்களால் தாக்கப்படுகின்றனர். இருமல், நிமோனியா மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் சாத்தியங்களுடன் வாலிபப் பருவத்தைத் தாண்டியவுடன் இருதய நோய்களின் தாக்குதல் அபாயமும் உள்ளது.

புகைக்கும் பழக்கமுடைய பெண்கள், அல்லது மறைமுகப் புகைபிடித்தல் சூழலுக்கு ஆளாகும் பெண்கள் கருச்சிதைவு, குறைப்பிரசவம், குறைந்த எடைக் குழந்தைகள் பெறும் அபாயம் போன்றவற்றுக்கு உள்ளாகிறார்கள்.

புகைப் பழக்கம் உள்ளவர்கள், தங்கள் உடல்நல ஆலோசகரை(குடும்ப மருத்துவரை)ச் சந்தித்து, புகைத்தலை நிறுத்திடும் ஆலோசனைத் திட்டத்தைப் பெற்றுப் பயனடைந்து கொள்ளவது சாலச் சிறந்தது.

புகைப் பழக்கம் உள்ளவர்கள், அதைக் கைவிடுவது என்பது ஒன்றுதான் அவர்களது உடல் நலத்தைப் பாதுகாக்கும் வழியில் அவர்கள் எடுக்கும் முக்கியத் தீர்வாகும்.



மன அழுத்தத்தைக் (stress) கட்டுப்படுத்துதல்:

மன அழுத்தம் என்பது காலப்போக்கில் கொலெஸ்ட்ரோல் அளவினைக் கூட்டுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத்தம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது தங்கள் மனதை நிலைப்படுத்திட கொழுப்புகள் கலந்துள்ள நொறுக்குத்தீனி கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அவற்றில் உள்ள அதிக அளவிலான திடமான (saturated fats) கொழுப்புகள் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.



மருத்துவம்

கொலெஸ்ட்ரோலைப் போதிய அளவு குறைத்திட மேற்கண்ட வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன. இங்குக் கூறப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிதாக இருக்கும்.

இவற்றுள் எதுவும் பயனளிக்காத நிலையில் உள்ளவர்கள், தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். அவருடைய ஆலோசனையில் மாற்றமின்றி அவர் தருகின்ற மருந்துகளை அதே அளவில் உட்கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

உணவு வகையில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு அட்டவணை



உணவு வகைகள் - கொலெஸ்ட்ரோல் (mg /100gm)

மூளை - 2000
முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) - 550
சிறுநீரகம் (Kidney) - 375
கல்லீரல் (Liver) - 300
வெண்ணெய் - 500
சிப்பி மீன் (Oyster) - 200
லோப்ஸ்டெர் - 200
இறால் (Shrimp) - 170
இருதயம் - 150
மாட்டு இறைச்சி - 75
இளம் ஆட்டிறைச்சி (Lamb) - 70
ஆட்டிறைச்சி (Mutton) -- 65
கோழியிறைச்சி - 62
பாலாடைக் கட்டி (chedder cheese) - 100
குழைவான பாலாடைக்கட்டி (cheese Spread) - 70
பனீர் (cottage cheese) - 15
Margarine (2/3 விலங்கினக் கொழுப்பு, 1/3 தாவர கொழுப்பு) - 65
மயோனஸ் (1 மேசைக் கரண்டி) - 10
ஐஸ் கிரீம் - 45
நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை) - 34
நிறைக் கொழுப்புப் பால்பொடி (1 குவளை) - 85
கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை) - 5
பிரெட் - 1
ஸ்போஞ்ச் கேக் - 130
சாக்லேட் பால் - 90

தேவையான அளவில் உள்ள கொலஸ்ட்ரால் எவ்வளவுக் கேவ்வளவு உடலுக்கு இன்றியமையாததாக உள்ளதோ அதேபோல அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே அத்தகைய உடல்நலக் கேடுகளை விளைவிக்கும் காரணிகளாக இங்கு நாம் பட்டியலிட்டுள்ள அதிக ஓய்வு, புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களைத் தவிர்த்தும் நல்ல தேர்ந்த உணவுப் பழக்க முறைகள்- உடற்பயிற்சிகளைப் பேணியும், கொலஸ்ட்ரால் மூலம் உருவாகும் தீங்குகளைத் தவிர்த்துக் கொள்வோம்



நன்றி சிங்கை மருத்துவம்.
நன்றி சத்திய மார்கம்.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=922&Itemid=278

http://www.cgh.com.sg/library/tamil_heart_loweringcholesterol.asp.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொலெஸ்ட்ரோல் - 2

உங்கள் இரத்த கொலஸ்டிரால் அழலைக் குறைத்தல்

உஙக்ள் உண்ணும் பழக்கத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கீழே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன:



1. உங்கள் எடையைக் கவனியுங்கள்



a. உங்கள் எடை கூடினால் குறையுங்கள்.



b. வாரத்தியுடு மூன்று முறையாவது, சீராக உடற்பயிற்சி செய்யுங்கள்.




2. குறைந்த கொழுப்புப்பொருட்களை (முக்கியமாக விலங்கு கொழுப்புகளை உண்ணுங்கள்



a. கொழுப்புப் பொருட்களை கொள்ளையக் குறையுங்கள் 1 ரிரீ கொழுப்பு / எண்ணைய் = 9 காலேரிகள்.



b. குறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளைத் தேர்ந்தெடுங்கள். நிறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளுக்கும் வெண்ணெய்க்கும் பதிலாக, செயற்கை வெண்ணொயைப் பயன்படுத்துங்கள்.




c. சாக்லேட்டுக்கள், ஐஸ்கிரீம்களை உண்ணுதலைக் குறைக்கவும்.





3. உங்கள் உட்கொள்ளும் காலோரிகளைப் பரிசீலியுங்கள்



a. கொழுப்பில்லாத இறைக்கிகளை மட்டும் உண்ணுங்கள். கோழி, வாத்து முதலியவற்றின் கொழுப்பையும், தோலையும் நீக்கிவிடுங்கள்.




b. சில முட்டைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வப்போது, இறால், நண்டை உண்ணுங்கள். ஈரல் மற்றும் பிற விலக்கு அவயவங்களை உண்ணுவதைத்தலிகுங்கள்.




4. வாரத்திற்கு ஒரு முறை என்று பொரிக்கப்பட்ட (fried)உணவு என்று குறைத்துக் கொள்ளுங்கள்



உங்கள் உணவுப்பொருட்களை எண்ணொயில் பொரித்தலைக் காட்டிலும், அவித்தல், வேகலைத்தல், நெருப்பில் வாட்டுதல் , சுடுதல், வதக்கல் இப்படி செய்யலாம்.




5. தேங்காய் பால் நிறைந்த உணவுப்பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ளுங்கள்.



உதாரணம் : நசிலெமக் (Nasilemak), லக்ஷ£ (laksa), லாண்டாங்க (lontong), லொடெ (lodeh), கூட்டு, காயா (kaya)




6. கீழ்க்கண்டவைற்றை அதிகமாக உண்ணுங்கள்




a. நாளுக்கு இரண்டு அல்லது அதற்கும் அதிகமான வேளைகளில் பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.
b. தானியங்கள், புல்லரிசி (oats), கைக்குத்தல் அரிசி, ரொட்டி, பிஸ்கட்.



c. உலர்ந்த அவரை, பட்டாணி, மொச்சை, முழுகடலையை உபயோகியுங்கள். அவற்றுள் கரையும் நார் பொருட்கள் அதிகமாக உள்ளது. இவை குடலில் கொடுப்புப்பொருட்கள் கலக்குமாறு செய்து கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.




7. அளவோடு கீழ்க்ண்டவைற்றை உண்பவர்கள்;



a. உப்பும், உப்பு உணவுப் பொருட்களும்.



b. மதுவகைகள், குடித்தே தீரவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கோப்பையோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.


c. சர்க்கைரை கலந்த உணவுப்பொருட்கள்



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

புளோரைடு பேஸ்ட்’ குழந்தைகளுக்கு ஆபத்து !


தற்ப்போது குழந்தைகளுக்கு விதவிதமான பேஸ்ட்டு வருகிரது. அவைகள் ஆரோகியம் தான சற்று சிந்தியிங்கள். ஒரு வெப் தளத்தில் வெளி வந்த நல்ல தகவல்.




எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.



அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும்.




உங்கள் பற்களும் முத்துப் போல் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…




பிரஷ்ஷில் பேஸ்ட் வைக்கும்போது பிரஷ் முழுவதும் வைக்க வேண்டிய அவசியமில்லை. பாதி அளவு வைத்தால் போதுமானது. அந்தந்த நேரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு பேஸ்ட்டைப் பயன்படுத்தாமல், தொடர்ந்து தரமான பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.



பல் துலக்கும் போது, கண்ணாடி முன்னால் நின்று மேல்வரிசைப் பற்களை கீழ்வரிசைப் பற்களுடன் ஒட்டாமல் லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு (ஒரு விரல் அளவுக்கு) துலக்க வேண்டும்.




பற்களைச் சேர்த்து வைத்து துலக்கும்போது, பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே ஒட்டிக்கொண்டு விடும். பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு துலக்கும்போது உணவுத் துகள்கள், படலங்கள் வாய்க்குள் சென்றுவிடும். பின்னர் வாய் கொப்பளிக்கும்போது அவை வெளியேறி விடும்.



பற்களைத் துலக்க ஆரம்பிக்கும்பொழுது, முதலில் கடைவாய்ப் பற்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வதால், மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த திருப்தி கிடைக்கும்.


மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும்.


மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுவது நல்லது.



பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த பேஸ்ட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.



நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, டங்க் கிளீனருக்குப் பதிலாக, பிரஷ்ஷின் குச்சங்களைக் கொண்டே சுத்தம் செய்யலாம். ஏனெனில், டங்க் கிளீனர் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை புண்ணாக்கி விடும்.


காலையில் எழுந்த உடனும், இரவு படுக்கப்போகும் முன்பும் என ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
சிலருடைய பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும். இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு உணவுத் துகள்கள் மற்றும் படலங்களை அகற்றலாம்.



சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குறைவாக சாப்பிட வேண்டும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் பற்சொத்தை ஏற்படும். அதேபோல் அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்தக் கூடாது.



ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு இரண்டு, மூன்று முறை நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.



மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து கொள்வது அவசியம்.



நன்றி vayal .
http://senthilvayal.wordpress.com/2009/12/01/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net