Wednesday, January 5, 2011

பண்டிதர்கள்

ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார்.ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து பேசினார்.ஆனால் கூட இருந்த பண்டிதரோ மற்றவரை ஒரு கழுதை என்றார்.பின் முகம் கழுவப் போனவர் வந்ததும் இவர் முகம் கழுவச் சென்றார். இரண்டாமவரைப் பற்றி முதல்வரிடம் பெருமையாகப் பேச 'அவர் ஒன்றும் தெரியாத மாடு,''என்றார்.பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு அருந்த அமர்ந்தனர்.ஒருவர் தட்டில் புல்லும்,மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப் பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர்.தங்களை அவமானப் படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர்.செல்வந்தர் சொன்னார்,''நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள்என்று கருதித் தான் விருந்துக்கு அழைத்தேன்.ஆனால் நீங்கள் யாரென்று உங்கள் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன்.என் மீது ஏன்வீணாய்க் கோபப் படுகிறீர்கள்?''பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment