Saturday, February 26, 2011

சுதந்திரம்

புகழ்,கெளரவம்,நேர்மை ஆகியவை ஒரு மனிதனின் சுதந்திரத்தைக் குறைக்கும்.நல்லவர் தவறு செய்வதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.மிகவும் நல்லவர் என்றால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.அப்போது நீங்கள் உங்கள் சுதந்திரத்தை இழக்கிறீர்கள்.உங்கள் நேர்மைச் செயல்களும்,நற்பண்புகளும் ஒரு தங்கக் கூண்டைப்போல உள்ளன.நீங்கள் புன்முறுவல் கூடக் காட்ட முடியாது.உங்கள் செல்வாக்கையும்,கௌரவத்தையும் விடாது தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஓயாது கவலைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்.இது உங்கள் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாகிவிடுகிறது.செல்வாக்கைத் தக்க வைக்க நல்லவராக இருப்பது பயனற்றது.செல்வாக்கும் கௌரவமும்  வாழ்க்கையில் வறுமையைவிட அதிகத் துயர் தரும்.விவேகிகள் செல்வாக்கும் புகழும் பெற்றிருந்தாலும் கூட அவை எதுவும் தனக்கு இல்லாததுபோல வாழ்வர்.ஒரு குழந்தையைப்போல இந்த உலகை ஒரு கனவாக,ஒரு வேடிக்கையாகக் கருதினால் சுதந்திரத்தை இழக்காது இருக்கலாம்.
                                           ---ஸ்ரீ ரவிசங்கர்ஜி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment