Saturday, February 26, 2011

தொந்தரவா?

ஞானி ஒருவரிடம் விளக்கங்கள் கேட்ட ஒருவன் அடிக்கடி வந்து சந்தேகங்கள் கேட்ட போதெல்லாம் ஞானி விரிவாக விளக்கினார்.அவன் ஞானியிடம்,'ஐயா, நான் உங்களுக்கு ஒரு தொந்தரவாகத் தெரியவில்லையா?'என்று கேட்டான். ஞானி அவனிடம் அங்கிருந்த எரியும் விளக்கொன்றை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றுமாறு கூறினார்.அதன்படி சில விளக்குகளை ஏற்றினார் வந்தவர்.ஞானி கேட்டார்,''முதல் விளக்கிலிருந்து நெருப்பை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றியதால் இந்த விளக்குக்கு நஷ்டம் ஏதாவது உண்டா?'''இல்லை,'என்றார் வந்தவர்.;;அதேபோல நீங்களோ மற்றவர்களோ எத்தனை முறை நாடி வந்தாலும் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.அதனால் தயங்காமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாருங்கள்.''என்றார் ஞானி அன்புடன்.
                                                                     --சூபி கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment