Saturday, February 26, 2011

பென்சில்

பென்சிலில் இருந்து  கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:
பென்சிலை யாராவது கையில் எடுத்துக் கொண்டால் ஒழிய அதனால் பயனில்லை.அதுபோல நாமும் உயர்வான காரியத்திற்காக வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பென்சிலை அடிக்கடி சீவி  கூராக்குவார்கள்.அதுபோல நமது அறிவு தீட்டப்பட வேண்டும்.
பென்சிலின் உள்ளே இருக்கும் ஊக்கு தான் முக்கியமே தவிர வெளியே இருப்பது எதனால் ஆனது என்பது முக்கியமல்ல.அதுபோல நமக்குள்ளே  குடி கொண்டுள்ள அன்பு,மௌனம்,நற்குணம் தான் முக்கியமே தவிர,வெளியிலுள்ள பகட்டும்,படாடோபமும்,கவர்ச்சியும் முக்கியமில்லை.
பென்சிலை உபயோகிக்கும்போது எழுதுபவர்கள் தவறு செய்யலாம்.ஆனால் அதை ரப்பரால் அழித்துத் திருத்தி எழுதலாம்.அதுபோல வாழ்க்கையில்  நாம் தவறுகள் செய்கிறோம்.அவற்றை நாம் திருத்திக் கொள்ளலாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment