Saturday, February 26, 2011

கொள்ளை நோய்

எகிப்தின் பாலைவனத்தில் அமர்ந்திருந்த ஒரு ஞானி,சுழன்று சுழன்று வீசிய காற்றுக்கிடையில்,'கொள்ளைநோய்'செல்வதைப் பார்த்து,அந்த நோயிடம்,''எங்கு செல்கிறாய்?''என்று கேட்டபோது,'டமாஸ்கசில் ஆயிரம் பேரின் உயிரைப் பறிக்கச் செல்கிறேன்'.ஆனால் டமாஸ்கசில் கொள்ளை நோய்பரவிஇருபதாயிரம்பேர்இறந்தார்கள்..ஞானி,'கொள்ளைநோய்'திரும்பச் செல்வதைப்  பார்த்து,''நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாய்.ஆயிரம் பேர் என்று சொல்லிவிட்டு இருபதாயிரம் பேரை பலி வாங்கியிருக்கிறாய்.''கொள்ளைநோய் சொன்னது,'உண்மையில் என்னால் இறந்தவர்கள் ஆயிரம் பேர் தான்.தாங்களும் இறந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தான் மற்றவர்கள் பலியானார்கள்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment