Saturday, February 26, 2011

போலித்தோற்றம்

முல்லா தன் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்.கழுதை  மிக  வேகமாக  ஓடிக்  கொண்டிருந்தது .அது சந்தை வழியாக சென்று கொண்டிருந்தது.''முல்லா,எங்கே வேகமாகப் போகிறீர்?''என்று வழியில் சிலர் கேட்டனர்.முல்லா சொன்னார்,''என்னைக் கேட்காதீர்கள்.என் கழுதையைக் கேளுங்கள்.''''இது என்ன வேடிக்கையாயிருக்கிறது?''என்று அவர்கள் கேட்டனர்.முல்லா சொன்னார்,''இதில்  வேடிக்கை ஒன்றுமில்லை.இது ஒரு வீம்பு பிடித்த கழுதை.நான் சொல்லும் பாதையில் இது போகாது.முரண்டு பிடிக்கும்.எனவே நான் தனியாக இருக்கும்போது இதை உதைத்து நான் விரும்பும் இடத்துக்குக் ஓட்டிச்  செல்கிறேன்.ஆனால் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் என்னைப் பார்த்து  சிரிக்கிறார்கள். என் கழுதையை என்னாலேயே அடக்க முடியவில்லை என்று கேலி பேசுகிறார்கள்.கூட்டத்தைக் கண்டதும் கழுதையும்  அதிகப் பிடிவாதம் பிடிக்கிறது.இதிலிருந்து ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.கூட்டம் உள்ள இடத்தில் கழுதை போகும் இடத்துக்கே நான் போகிறேன்.தனியாக இருக்கும்போது அதை நான் ஒரு வழி பண்ணி விடுகிறேன்.கூட்டம் இருக்கும் இடத்தில் அதன் போக்கிற்குப் போக விடுவதால்,குறைந்த பட்சம் நான் அதன் எஜமானனாக இருக்கிறேன் என்ற போலித் தோற்றத்தை எல்லோர் முன்னிலையில் ஏற்படுத்திக்  கொள்கிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment