Saturday, February 26, 2011

கட்டிப்போடு

ஞானி ஒருவர் பாலைவனச் சோலை ஒன்றில் சிறிய கூடாரம்   ஒன்றில்   தங்கி இருந்தார்.நெடுந்தொலைவிலிருந்து அவரைக் காண ஒருவன் ஒட்டகத்தில் வந்தான்.கூடாரத்தினுள் வந்ததும் ,
பயணி: உங்களைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளோம்.
ஞானி: எப்படி வந்தாய்?
பயணி: ஒட்டகத்தில்
ஞானி: ஒட்டகம் எங்கே?
பயணி: வெளியில் நிறுத்தி உள்ளேன்.
ஞானி: அதனைக் கட்டிப் போட்டு வைத்தாயா?
பயணி: இல்லை.எனக்கு இறைவனிடம் முழு நம்பிக்கை உண்டு.அவர் பார்த்துக் கொள்வார்.
ஞானி:முட்டாள்,போ,போய் உன் ஒட்டகத்தைக் கட்டிப்போடு.கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு.உன் ஒட்டகத்தைப் பாதுகாக்க அவருக்கு நேரம் இல்லை.
இக்கதை பின்னர் உலகப் புகழ் பெற்ற பொன்மொழி ஆனது.''அல்லாவிடம் பூரண நம்பிக்கை வையுங்கள்;ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப்போட மறவாதீர்.''
                                                                               --சூபி கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment