Saturday, February 26, 2011

சபாஷ்

இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் படையெடுத்து வந்தார்  பாரசீக மன்னர் ஷா அப்பாஸ்.அப்போது ஜகாங்கீர் ஆட்சி காலம்.காந்தகார் வரை வந்துவிட்ட எதிரிப்படைகளை ஜகாங்கீர் படைகள் முறியடித்துவிட்டன.அதை அறிந்ததும் ஜகாங்கிருக்கு ஒரு ஓலைஅனுப்பினார் ஷா.தன படைகள் ஜகாங்கீர் நாட்டின் மீது படையெடுத்தது,தனக்குத் தெரியாமலே நடந்துவிட்டது என்றும் ஜகாங்கிருடன் தன நட்புறவு கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.அது கேட்ட ஜகாங்கீர்,''இது ஷா அப்பாஸ் வேலை,''என்று தன மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.ஆகவே மெச்சத்தக்க காரியத்தை செய்தவர் ஷா அப்பாஸ்.இந்த மாதிரி காரியங்களை யார் செய்தாலும் ,'ஷா அப்பாஸ்,'என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.ஷா அப்பாஸ் என்ற வார்த்தை ஷபாஸ் என்று உருதுவில் மாறி பிறகு சபாஷ் என்று தமிழில் மருவிவிட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment