Monday, January 10, 2011

சகோதரி

அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.போரஸ் வெற்றிமுகத்தில் இருந்தார்.ஒரு நாள் மாலை போருக்குப் பின் தன் கூடாரத்தில் இருந்த போது ஒரு பெண்மணி அவரை நோக்கி வந்தார்.அந்தப் பெண் அலெக்சாண்டரின் மனைவி என்பதை அறிந்து கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.அந்தப்பெண்,போரில் தன் கணவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்று வேண்டினாள்.பின் திடீரென ஒரு ரக்ஷாபந்தன் கயிறினைப் போரஸின் கரத்தில் கட்டினாள்.பின் வந்த வழியே  சென்று விட்டாள்.
 மறுநாள் கடுமையான போர் நடந்தது.போரஸ் அலேக்சாண்டரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்ச முனைந்த போது தன் கையிலிருந்த ரக்ஷா பந்தன் கயிறினைக் கவனித்தார்.உடனே ஈட்டியை பின்னோக்கி இழுத்து விட்டுசொன்னார்,''உன் மனைவி என் சகோதரி.அவள் விதவையாகக் கூடாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment