Wednesday, January 19, 2011

பொன்மொழி -10

கசப்புச் சொற்களும்,கடுமையான சொற்களும் சொல்பவன் பக்கத்தில் நியாயமில்லை என்பதைப் பறை சாற்றுகின்றன.
**********
அடுத்தவன் தோள் மீது ஏறி சவாரி செய்பவனுக்கு அடுத்த ஊர் அருகிலிருந்தால் என்ன?தொலைவில் இருந்தால் என்ன?
**********
வாழ்க்கை என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் போது,வாழ்க்கை முடிந்து விடுகிறது.
**********
சகிப்புத்தன்மை என்பது,சமயோசித உணர்வால் அடக்கப்பட்ட கோபமே தவிர வேறொன்றுமில்லை.
**********
நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டு.
நண்பனைத் துறப்பதில் அதை விட நிதானம் காட்டு.
**********
நாணயம் தயாரிக்கப்பட்ட போதே மனித நாணயம் தவறிப் போய்விட்டது.
**********
பொறுமை கசப்பு;ஆனால் அதன் கனி இனிப்பு.
**********
ஒரு பிழையை உணர்ந்து நீங்கள் திருந்த மறுக்கும் போது தான் அது தவறாகிறது.
**********
குழந்தைகளைக் கழுதைகள் ஆகவும் ,ஒன்றுக்கும் மதிப்பில்லாதவராகவும்  நீங்கள் கருதினால்,உங்கள் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று அர்த்தம்.
**********
வெற்றி  என்பது குறிக்கோள் அன்று ;அது ஒரு பயணமே.
**********
வேலை மனிதனைக் கொல்லாது;கவலைதான் கொல்லும்
**********.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment