Monday, January 10, 2011

மணி என்ன?

ஒரு வெளி நாட்டுக்காரர் நம் ஊரைச் சுற்றிப்  பார்க்க வந்தார்.வயல் வழியே செல்கையில் வழியில் படுத்திருந்த கிராமவாசியிடம் ,'மணி என்ன?'என்று கேட்டார்.அவன் அருகில் இருந்த கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்துவிட்டு  'மணி மூன்று 'என்றான்.பயணிக்கு ஒரே ஆச்சரியம்.திரும்பவும் அந்த வழியே வரும்போது அந்த கிராமவாசி சரியாகச் சொல்கிறானா என்பதை அறிய ஒரு கைக் கடிகாரத்துடன் வந்து,'மணி என்ன?'என்று கேட்டார்..அவனும் கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்து,''மணி நான்கு''என்றான். அது சரியாகத் தான் இருந்தது.ஆச்சரியத்துடன் கிராமவாசியிடம்,''கழுதை வாலிலிருந்து  எப்படி சரியான  நேரத்தைக் கண்டுபிடிக்கிறாய்?''என்று கேட்டார்.''தூரத்தில் இருக்கும் மணிக்கூண்டை என் கழுதையின் வால் மறைத்துக் கொண்டிருந்தது.அதனால் வாலைத் தூக்கி மணிக் கூண்டைப் பார்த்து நேரம் சொன்னேன்.''என்றான் அவன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment