Thursday, January 13, 2011

ஏழு ஜாடி தங்கம்

கவலையில்லாத மனிதன் ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் புல்வெளிகளிலேஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் திரிவான்.அவனுக்கென்று ஒரே ஒரு  துண்டு  தவிர வேறு உடமைகள் கிடையாது.கவலையில்லாத அவனைக் கண்டு சைத்தானுக்குக் கவலை உண்டாயிற்று.அவனுக்குக் கவலை உண்டாக்க முடிவு செய்தது.ஒரு நாள் பகலில் அவன் ஒரு மரத்தடியில் ஆனந்தமாகப் படுத்திருந்த போது சைத்தான்,அசரீரியாகச் சொன்னது,''மனிதனே,நீ படுத்திருக்கும் இடத்திற்கு கீழே ஏழு  ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது.அதையெடுத்துச் சென்று மகிழ்வுடன் இரு.''முதலில் அக்கறை காட்டாத அம்மனிதன் பிறகு அசரீரி உண்மையானது தானா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்து தோண்டிப் பார்க்கையில் எழு ஜாடிகள் தென்பட்டன.ஆர்வமுடன் அவற்றை எடுத்துப் பார்த்ததில் ஆறு ஜாடி முழுக்கவும்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிலும் தங்கக் காசுகள் இருந்தன.அவனுக்கு தங்கக் காசுகளைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஆனால் ஏழாவது ஜாடியில் பாதி அளவே தங்கம் இருந்தது அவனுக்கு  வருத்தத்தைத் தந்தது.உடனே அவன் ஒரு முடிவு செய்தான்.கடுமையாகப் பாடுபட்டுச் சம்பாதித்தேனும் அந்த ஏழாவது ஜாடியைத் தங்கக் காசுகளால் நிரப்ப வேண்டும் என்று எண்ணி அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.சம்பாதித்த பணத்தை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான் பல காலம் உழைத்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.அவனுடைய மகிழ்ச்சி,ஆனந்தமான பாடல்கள்,ஆட்டபாட்டங்கள் எல்லாம் அவனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவன் இப்போது கவலையே உருவானவனாக இருந்தான்.சைத்தான் அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்.அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு துறவி அவனுடைய சமீப கால மாற்றங்களைக் கண்டு அவனிடம் கேட்டார்,''எங்கே போயிற்று உன் சந்தோசமெல்லாம்?அந்த ஏழு   ஜாடி தங்கம் உனக்குக் கிடைத்ததா?''அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவருக்கு இது எப்படித் தெரிந்தது என்று வினவினான்.துறவி சொன்னார்,''இதற்கு முன் இந்த ஜாடிகளை எடுத்தவர்கள் கதி இவ்வாறே ஆயிற்று.மேலும் இந்த ஏழாவது ஜாடி இறந்த ஒரு பேராசைக்காரனின் மண்டை  ஓட்டில் செய்யப்பட்டது.அதை நிரப்ப யாராலும் முடியாது.முதலில் அந்த எழு ஜாடிகளையும் தூக்கி எறிந்து விட்டு முன் போல் ஆனந்தமாக வாழ்வாயாக!''
பணத்தின்குணமே  அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே  தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment