Wednesday, January 19, 2011

தந்திரம்

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு,இளைஞர்கள் சிலர்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது.ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,''நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன்.எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,'' என்றார்.இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்!தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!அவர்கள் தினசரி விளையாடினார்கள்.ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான்  கொடுத்தார்.மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.நான்காவது வாரம்,தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.''வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா?இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.''என்று கூறிச் சென்று விட்டனர்.பெரியவருக்கு இப்போது பரம திருப்தி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment