Thursday, January 13, 2011

புத்திமதி

மசூதியிலிருந்து ஒரு ஞானி திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஒரு குடிகாரன் கையில் ஒரு இசைக் கருவியுடன் வழியில் போவோர் வருவோரை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான்.ஞானி அவனுக்குப் புத்திமதி சொல்ல,அவன் தனது இசைக் கருவியினால் அவர் தலையில் அடித்தான்.அவர் தலையும் உடைந்தது.இசைக்  கருவியும் உடைந்தது.
மறுநாள் காலை ஞானி அந்தக் குடிகாரனுக்கு சில இனிப்புப் பண்டங்களும் கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தார்.கூடவே ஒரு சிறு குறிப்பு;
''உங்களுடைய இசைக் கருவி உடைய என் தலை காரணமாக இருந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.இத்துடன் அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு புதிய இசைக் கருவி வாங்கிக் கொள்ளவும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment