Wednesday, January 19, 2011

எது ஞானம்?

''ஞானத்தில் சிறந்த ஞானம் எது?''என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது. ''இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பது தான்.''என்று ஞானி கூறினார்.;;அந்த ஞானம் தங்களுக்கு எப்படி வந்தது?''என்று கேட்டதற்கு ஞானி சொன்னார்,''கழுதையைப் பார்.உமக்குப் புரியும்.''கேட்டவருக்குப் புரியவில்லை.ஞானி விளக்கினார்,''இந்தக் கழுதை  தினமும் தன முதுகில் கனமான அழுக்கு மூடைகளை ஆற்றுக்குக் காலையில் சுமந்து செல்கிறது.மாலையில் அழுக்கு நீங்கிய துவைத்த துணிகளை ஆற்றிலிருந்து சுமந்து வருகிறது.ஆனால் கழுதை போகும் போது அழுக்கு மூடைகளை சுமந்து செல்கிறோமே என்று வருத்தம் அடைவதும் இல்லை.திரும்பும் போது சுத்தமான துணிகளைச் சுமந்து வருகிறோம் என்று மகிழ்ச்சி அடைவதும் இல்லை.இதைப் பார்த்துத் தான் நான் ஞானம்அடைந்தேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment