Wednesday, January 19, 2011

உணர்வு

ஒரு பிச்சைக்காரன்,தினசரி பிச்சை எடுக்கும் போது பலர் கேலி செய்தனர்.அவனைத் தாழ்வாகப் பேசினர்.ஏளனம் செய்தனர்.அப்போதெல்லாம் அவனுக்கு மிகவும் அவமானமாகவும் மனம் பாதிக்கவும் செய்தது.அதிர்ஷ்டவசமாக சில நாட்களில் அவன் ஒரு ராஜா ஆகி விட்டான்.உலகின் எல்லா இன்பங்களும் கிடைக்கப் பெற்றன.அப்போது அவன் பழைய பிச்சைக்காரன் போல ஒரு நாள் திரியத் திட்டமிட்டு அவ்வாறே மாறு வேடம் புனைந்து நகருக்குள் சென்று பிச்சை கேட்டான்.இப்போதும் பலர் கேலி செய்தனர்.ஏளனம் செய்தனர்.ஆனால் அவனுக்கு இப்போது அவமான உணர்வு ஏற்படவில்லை.மனம் பாதிக்கப் படவில்லை.ஏனெனில் அவனுடைய உள்ளுணர்வில் தான் ராஜா என்பதும் தனக்கு இந்த தேசமே சொந்தம் என்ற எண்ணங்களும் இருந்தன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment