Monday, January 10, 2011

அபிப்பிராயம்

ஒரு சிறந்த ஓவியன்.அழகான  மனித ஓவியம் ஒன்றை வரைந்து வைத்திருந்தான்.வருவோர் போவோர் அனைவரும் அந்த ஓவியத்தை ரசித்துப் பார்த்துச் சென்றனர்.ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அங்கு வந்து ஓவியத்தை கவனமுடன் பார்த்தான்.பின்னர் ஓவியனிடம் சென்று,''இதில் ஒரு குறை இருக்கிறது.அதை  நான் சொல்லலாமா?''என்று கேட்டான்.ஓவியர் சம்மதிக்கவே அவன் சொன்னான்,''தங்கள் ஓவியத்தில் இருக்கும் மனிதனின் செருப்பு சரியாக வரையப்பட வில்லை,''என்று கூறி அது எப்படி இருக்க வேண்டும் என்பதனை விளக்கி சொன்னான். ஓவியரும் அவன் சொல்லுவதை உன்னிப்பாகக் கவனித்து அந்த ஓவியத்தில் தேவையான மாற்றங்கள் செய்தான்.அடுத்து அந்தத் தொழிலாளி,''உங்கள் ஓவியத்தில் கண் இமைகள் சரியாக வரையப்படவில்லை,''என்றான். ஓவியர் அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் செருப்பு தைப்பதிலே  வல்லுநர்.அதனால் அது சம்பந்தமாக நீங்கள் சொன்ன மாற்றங்களை செய்தேன்.அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.''
உலகில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசினால் பிரச்சினைகள் ஏது?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment