Monday, January 10, 2011

களைப்பு

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,ஒருமுறை காரில் தன நண்பர்களுடன்  ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.போகும் வழியில் கார் ஒரு புளிய மரத்தில் மோதி  விபத்து ஏற்பட்டது.கார் நசுங்கி அனைவருக்கும் காயம். கலைவாணர் கொஞ்சம் கூடப் பதட்டப் படாமல் அனைவருக்கும் முதலுதவி செய்ய ஏற்பாடு  செய்தார்.ஒருவரை பக்கத்து ஊருக்கு அனுப்பி ஒரு வாடகைக் கார் பிடித்து வரச் சொன்னார்.புளிய மரத்தடியில் ஒரு விரிப்பை விரித்து எல்லோரையும் உட்காரச் சொன்னார்.வெற்றிலை போட்டுக் கொண்டே எல்லோருடனும் சாதாரணமாகச் சிரித்துப் பேச ஆரம்பித்தார்.
அப்போது அந்த வழியே சென்ற சிலர் கலைவாணரை அடையாளம் கண்டு பதட்டத்துடன் வந்து விபத்து பற்றி விசாரித்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்தனர்.கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஒன்னுமில்லீங்க.எல்லோருக்கும் களைப்பாய் இருந்தது.எனவே வண்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.''அந்த நிலையில் வேறு யாராலும் இப்படி நிதானமாகப் பேச முடியுமா?அது தான் கலைவாணர்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment