Wednesday, January 19, 2011

குறிப்பு

ஒரு கிராமத்தில்ஒரு வைத்தியன் எந்த நோயாளியின் வீட்டிற்கு வைத்தியத்திற்குப் போனாலும் அந்த வீட்டு ஜன்னலில் ஒரு சிறு கல்லை எடுத்து வைத்து விட்டுத்தான் மருந்து கொடுப்பான்.''என்னிடம் மருந்து சாப்பிடும் நோயாளி கல்லால் அடித்தாலும் சாக மாட்டான் என்பதற்கு அடையாளமாகத்தான் இப்படிக் கல்லை வைக்கிறேன் ''என்று கூறுவான்.ஒரு முறை ஒரு நோயாளி இறந்து விட்டான்.நோயாளியின் தாயார் வைத்தியரிடம் சண்டைக்குப் போனாள்.''நீங்கள் கல் வைத்தும் என் மகன் இறந்து போய் விட்டானே!''''உங்கள் வீட்டு ஜன்னலில் கல் வைத்ததன் பொருள் என்னவென்றால்,உங்கள் மகன் உங்கள்தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விடுவான்,பிழைக்க மாட்டான் என்று குறிப்பிடத்தான் கல்லை வைத்தேன்.''என்றான் சாமர்த்தியசாலியான வைத்தியன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment