Wednesday, January 19, 2011

செய்யாதீர்கள்

அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள்;
அதற்குள் ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.
அழகான உருவங்களுக்கு ஏங்காதீர்கள்;
அங்கே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது.
வறுமையில் வாடுபவர்களைக் கேலி செய்யாதீர்கள்;
அங்கே வாழ்க்கைத்தரம் வணங்கிக் கொண்டிருக்கிறது.
பணக்காரன் வீட்டுப் படிக்கட்டில் ஏறாதீர்கள்;
அங்கே அவமரியாதை காத்துக் கொண்டிருக்கிறது.
மேதைகளை அளவுக்கு மீறிப் புகழாதீர்கள்;
அங்கு மேதைத்தன்மை  அத்தோடு முடிந்து விடுகிறது.
                                                  --கண்ணதாசன்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment