Monday, January 10, 2011

கிண்டல்

நிக்கோலாஸ் என்பவன் 1825 ல் ரஷ்யாவில்  ஜார் மன்னனாக  அரியணை ஏறினான்.அவன் அரியணை ஏறியதும் நாடு முழுக்க,ஐரோப்பிய நாடுகளைப் போல நாகரீகம் கொண்டு வர வேண்டும் என்று கூறி ஒரு கூட்டம் புரட்சியில் ஈடுபட்டது.அந்தக் கூட்டத்தின் தலைவன் ரைலேஎவ் என்பவனை மன்னன் பிடித்து மரண தண்டனை வழங்கினான்.புரட்சியையும் அடக்கினான்.
ரைலேஎவ்  தூக்கு மேடை ஏறினான்.தூக்குக் கயிறு மாட்டப் பட்டது.விசையை அழுத்தும் போது திடீரெனக் கயிறு அறுந்து அவன் கீழே விழுந்தான். ரஷ்யாவில்  அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை உண்டு.இது மாதிரி தூக்கில் இட முடியாத சூழ்நிலை  ஏற்பட்டால் அதைக் கடவுளின் ஆணை என்று கருதி குற்றவாளியை மன்னித்து விட வேண்டும். இதனால் தூக்கிலிருந்து தாம் தப்பி விட்டோம் என்பதை உணர்ந்த ரைலேஎவ்,''பாருங்கள்,,ரஷ்யாவில் ஒரு கயிறைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை.ரஷ்யாவை ஆள்பவர்களுக்கு எதுவுமே தெரியாது.''என்று கேலியாகக் கூறினான்.ரைலேஎவைத்  தூக்கிலிடும் போது நடந்த நிகழ்ச்சியை காவலன் ஒருவன்  மன்னனிடம் போய்ச் சொன்னான்.மன்னனும் நடைமுறை கருதி ரைலேஎவை மன்னிக்கும் ஆணையை தயார் செய்யச் சொன்னான்.அப்போது தற்செயலாக,மன்னன்,காவலனிடம்,''ரைலேஎவ் இது பற்றி ஏதாவது பேசினானா ?''என்று கேட்டான். காவலன் அவன் பேசிய விபரத்தைச் சொல்ல மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே மன்னிப்பு ஆணையை கிழித்தெறிந்தான்.அவனை மீண்டும் தூக்கிலிட உத்தரவிட்டான். மறுநாள் ரைநேஎவ் தூக்கிலிடப்பட்டான்.இம்முறை கயிறு ஒன்றும் ஆகவில்லை
நம் வாயிலிருந்து வார்த்தைகள் ஒரு முறை வெளியே வந்து விட்டால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது.எனவே வார்த்தைகளைக் கவனத்துடன் கையாள வேண்டும்.குறிப்பாகக் கேலி,கிண்டல்  பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.கேலி செய்யும் போது ஏதோவொரு இன்பம் தோன்றும்.ஆனால் அது தற்காலிகமானது.ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment